என் மலர்tooltip icon

    புதுக்கோட்டை

    • குடிநீரில் மனித கழிவு கலந்த தொட்டியில் இருந்து தண்ணீர் சேகரிக்கப்பட்டு சென்னையில் உள்ள அறிவியல் ஆய்வகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டது.
    • சென்னை தடயவியல் அலுவலகத்தில் குரல் மாதிரி சோதனைக்காக வேங்கைவயல் கிராமத்தை சேர்ந்த 2 பேர் நேரில் ஆஜரானார்கள்.

    புதுக்கோட்டை:

    புதுக்கோட்டை மாவட்டம் வேங்கைவயல் கிராமத்தில் நடந்த ஒரு அவலம் ஒட்டுமொத்த தமிழகத்தையே அதிர்ச்சிக்கு ஆளாக்கியுள்ளது. இந்த கிராமத்தில் உள்ள மேல்நிலை குடிநீர் தேக்க தொட்டியில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 26-ந்தேதி மர்ம நபர்கள் மனித கழிவுகளை கலந்து விட்டு சென்றனர். இதனை பருகிய பலருக்கு உடல் உபாதைகள் ஏற்பட்டன.

    சம்பவம் நடந்த 20 நாட்களாக அங்கு முகாமிட்டு இருந்த தமிழக போலீசார் சுமார் 120 நபர்களிடம் தீவிர விசாரணை நடத்தினர். ஆனாலும் தற்போது வரை இந்த இழிவு செயலில் ஈடுபட்டவர்கள் யாரும் கைது செய்யப்படாததற்கு பல்வேறு அரசியல் கட்சியினர், பொதுநல அமைப்பினர் அரசுக்கு அழுத்தம் கொடுக்க தொடங்கினர்.

    இதுதொடர்பாக தமிழக சட்டசபையிலும் சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வரப்பட்டது. இதற்கு பதில் அளித்து பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனிநபர் ஆணையம் அமைக்கவும் உத்தரவிட்டார். இதில் ஈடுபட்டவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் உறுதியளித்தார்.

    இதற்கிடையே குடிநீர் தொட்டியில் மனித கழிவு கலந்த வழக்கு சி.பி.சி.ஐ.டி. போலீசாருக்கு மாற்றப்பட்டது. மேலும் விசாரணை தொடர்ந்து நடைபெற்று வந்த நிலையில் வேங்கைவயல் கிராமத்திற்கு அரசியல் கட்சி தலைவர்கள் அடுத்தடுத்து படையெடுக்க தொடங்கினர்.

    அதேபோல் போலீசாரின் விசாரணையும் தீவிரமடைந்தது. இதனால் அங்கு வசிக்கும் மக்கள் பல்வேறு இன்னல்களுக்கு ஆளாவதாக புகார்கள் எழுந்தன. இதையடுத்து வேங்கைவயல் கிராமத்தின் நுழைவு பகுதியில் போலீசார் 24 மணி நேரமும் டெண்ட் அமைத்து கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.

    இந்த நிலையில் குடிநீரில் மனித கழிவு கலந்த தொட்டியில் இருந்து தண்ணீர் சேகரிக்கப்பட்டு சென்னையில் உள்ள அறிவியல் ஆய்வகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டது. தொடர்ந்து 4 வாரங்களாக நடத்தப்பட்ட பல்வேறு கட்ட ஆய்வில் குடிநீர் தொட்டியில் கலக்கப்பட்ட மனித கழிவானது 2 ஆண்கள் மற்றும் ஒரு பெண்ணுடையது என்பது கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது.

    அதன் அடிப்படையில் இன்னும் ஒருசில நாட்களில் வேங்கைவயல் கிராமத்தை சேர்ந்த 9 பேர், காவேரி நகர் பகுதியை சேர்ந்த ஒருவர் மற்றும் கீழமுத்துக்குடி கிராமத்தை சேர்ந்த ஒருவர் என மொத்தம் 11 பேருக்கு ரத்த மாதிரி எடுத்து, அதில் டி.என்.ஏ. பரிசோதனை நடத்தப்பட உள்ளது.

    இதற்காக சி.பி.சி.ஐ.டி. போலீசார் புதுக்கோட்டை மாவட்ட வன்கொடுமை தடுப்பு சட்ட போலீசாரிடம் அனுமதி கோரியிருந்தனர். இதுதொடர்பாக புதுக்கோட்டை மகிளா கோர்ட்டு, அரசு ராணியார் மருத்துவக்கல்லூரி மருத்துவமனை பேராசிரியர் தலைமையில் இந்த டி.என்.ஏ. பரிசோதனையை மேற்கொண்டு அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டுள்ளது.

    இதற்கிடையே வேங்கைவயல் பிரச்சினை தொடர்பாக ஆயுதப்படை காவலர் உள்பட 2 பேருக்கு குரல் மாதிரி பரிசோதனை செய்வதற்கான முயற்சியில் சி.பி.சி.ஐ.டி. போலீசார் ஈடுபட்டுள்ளனர். டி.என்.ஏ. பரிசோதனை முடிவில் குடிநீர் தொட்டியில் மனித கழிவு கலந்தவர்கள் யார் என்ற தகவல் வெளியாகும் என்றும், அதன் மூலம் இந்த பிரச்சினையில் பல்வேறு அதிர்ச்சி தகவல்கள் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதன் மூலம் உண்மை குற்றவாளிகளும் கைதாவார்கள்.

    இந்நிலையில் சென்னை தடயவியல் அலுவலகத்தில் குரல் மாதிரி சோதனைக்காக வேங்கைவயல் கிராமத்தை சேர்ந்த முரளி ராஜா, கண்ணதாசன் ஆகியோர் நேரில் ஆஜரானார்கள். இருவரிடமும் குரல் மாதிரி பரிசோதனை நடைபெற்று வருகிறது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • வேங்கைவயல் கிராமத்தில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு குடிநீர் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில் மனித மலம் கலந்த விவகாரம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது.
    • வேங்கைவயல் சம்பவம் தொடர்பாக 11 பேருக்கு டி.என்.ஏ. சோதனை நடத்த புதுக்கோட்டை மகிளா நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

    புதுக்கோட்டை:

    புதுக்கோட்டை மாவட்டம் கீரனூர் அருகேயுள்ள வேங்கைவயல் கிராமத்தில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு குடிநீர் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில் மனித மலம் கலந்த விவகாரம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. இந்த சம்பவம் தொடர்பாக சி.பி.சி.ஐ.டி. போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    இந்த நிலையில் சம்பவம் தொடர்பாக 11 பேருக்கு டி.என்.ஏ. சோதனை நடத்த புதுக்கோட்டை மகிளா நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. இந்த சோதனையை புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி உதவி பேராசிரியர் நடத்தி அறிக்கை தாக்கல் செய்யவேண்டும் என்றும் அந்த உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    குறிப்பாக இந்த டி.என்.ஏ. சோதனை வேங்கைவயல் கிராமத்தை சேர்ந்த 9 பேருக்கும், காவேரி நகர் பகுதியை சேர்ந்த ஒருவருக்கும், கீழமுத்துக்குடி பகுதியைச் சேர்ந்த ஒருவருக்கும் நடத்தப்பட இருக்கிறது. இதற்கான நடவடிக்கைகள் விரைவில் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    • சாராயம் விற்ற 3 பேர் கைது செய்யபட்டனர்
    • அவர்களிடமிருந்து 13½ லிட்டர் எரிசாராயம், 5 செல்போன்கள், மோட்டார் சைக்கிள் உள்ளிட்டவற்றை போலீசார் கைப்பற்றினர்

    புதுக்கோட்ட:

    புதுக்கோட்டை மாவட்ட தனிப்படை போலீசார் ரெகுநாதபுரம் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அங்கு தஞ்சாவூர் மாவட்டம், ஒரத்தநாடு தாலுகா நரங்கியப்பட்டு பகுதியை சேர்ந்த பாரிவள்ளல் (வயது 41), வெட்டிக்காடு தெற்கு தெருவை சேர்ந்த பாஸ்கர் (39), இலுப்பவிடுதி கோவில் தெருவை சேர்ந்த ஞானம் (41) ஆகிய 3 பேர் எரிசாராயத்தை பாட்டிலில் அடைத்து வைத்து விற்பனை செய்து கொண்டிருந்தனர். இதையடுத்து 3 பேரையும் கைது செய்து, 13½ லிட்டர் எரிசாராயம், 5 செல்போன்கள், மோட்டார் சைக்கிள் உள்ளிட்டவற்றை போலீசார் கைப்பற்றினர். பின்னர் 3 பேரையும் ஆலங்குடி மதுவிலக்கு போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர்.




    • புதுக்கோட்டை பா.ஜ.க. பூத்கமிட்டி உறுப்பினர்கள் பட்டியல் வெளியிடபட்டுள்ளது
    • பூத் கமிட்டியில் உள்ளவர்களின் புகைப்படம், வாக்காளர் அடையாள அட்டை, பாஜக உறுப்பினர் எண், கைபேசி எண் ஆகியன பூத் வாரியாக கணிணியில் பதிவேற்றம் செய்யப்பட்டு வருகிறது.

    புதுக்கோட்டை:

    பாஜக நிர்வாகிகள் ஒவ்வொருவரும், அவரவர் வசிக்கும் பகுதிகளில் உள்ள ஐந்து வாக்குச்சாவடிகளை கண்காணிக்க "சக்தி கேந்திர பொறுப்பாளர்" என்ற பெயரில் நியமிக்கப்பட்டுள்ளனர். ஒரு வாக்குச்சாவடிக்கு ஒரு தலைவர், பார்வையாளர், செயலாளர், முகவர் மற்றும் 9 செயற்குழு உறுப்பினர்கள் என்ற வீதத்தில் 13 பேர் கொண்ட பூத் கமிட்டி அமைக்கப்பட்டு வருகிறது. பூத் கமிட்டியில் உள்ளவர்களின் புகைப்படம், வாக்காளர் அடையாள அட்டை, பாஜக உறுப்பினர் எண், கைபேசி எண் ஆகியன பூத் வாரியாக கணிணியில் பதிவேற்றம் செய்யப்பட்டு வருகிறது.

    அதன்படி புதுக்கோட்டை நகரில் திலகர் திடல், வடக்கு ராஜ வீதி, அம்பாள்புரம் அக்கச்சியாவயல், பல்லவன் குளம் சந்து, சீதாபதி பிள்ளையார் கோவில் தெரு, மேல 2, மேல3, தெற்கு 2 ஆகிய பகுதிகளுக்கு உட்பட்ட பூத் எண்கள் 87 முதல் 91 வரையிலான ஐந்து வாக்குச்சாவடிகளுக்கு, 65 உறுப்பினர்கள் கொண்ட புகைப்படத்துடன் கூடிய பூத் கமிட்டி நிர்வாகிகள் பட்டியல் இறுதி செய்யப்பட்டு உள்ளது. இதனை ஆய்வு செய்த புதுக்கோட்டை மேற்கு பாரதிய ஜனதா கட்சியின் மாவட்ட பொது செயலாளர் ஏவிசிசி கணேசன், தமிழ்நாடு பாஜக இணையதளத்தில் பதிவேற்றம் செய்வதற்கான பட்டியலை வழங்கினார். இதனை மாவட்ட தலைவர் விஜயகுமார் ஆலோசனையுடன், புதுக்கோட்டை நகர பாஜக தலைவர் லெட்சுமணன், தரவு மேலாண்மை பிரிவு மாநில செயலாளர் கார்த்திகேயன் பெற்றுக்கொண்டார்.


    • கறம்பக்குடியில் லாட்டரி சீட்டு விற்ற 2 பேர் கைது செய்யபட்டனர்
    • அவர்களிடமிருந்த லாட்டரி சீட்டுகள் மற்றும் ரொக்க பணம் ரூ.5 ஆயிரத்தை போலீசார் பறிமுதல் செய்தனர்

    கறம்பக்குடி:

    புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி பகுதியில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டு விற்கப்படுவதாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்திற்கு தொடர்ந்து புகார் வந்த நிலையில் இருந்தன. இதையடுத்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அறிவுரையின்பேரில் சிறப்பு காவல் படையினர் கறம்பக்குடி பகுதியில் சோதனையில் ஈடுபட்டிருந்தனர். இந்த நிலையில் கறம்பக்குடி அருகே உள்ள சூரக்காடு என்ற கிராமத்தில் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகள் விற்ற சுப்ரமணியன் (வயது 50), சதானந்தன் (48) ஆகிய இருவரை போலீசார் கைது செய்தனர். மேலும் அவர்களிடமிருந்த லாட்டரி சீட்டுகள் மற்றும் ரொக்க பணம் ரூ.5 ஆயிரத்தை பறிமுதல் செய்தனர். இதுகுறித்து கறம்பக்குடி சப்-இன்ஸ்பெக்டர் ஜெயக்குமார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.


    • கந்தர்வகோட்டையில் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது
    • பேரணியை பள்ளி தலைமை ஆசிரியர் பழனி தொடங்கி வைத்து பயிற்சிக்கு தலைமை தாங்கினார்.

    கந்தர்வகோட்டை:

    கந்தர்வகோட்டை அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி தொன்மை பாதுகாப்பு மன்றத்தின் சார்பில் உலக பாரம்பரிய தினத்தை முன்னிட்டு வரலாற்றுச் சின்னங்களை பாதுகாக்க வலியுறுத்தி பேரணியும், சிவன் கோவிலில் உள்ள கல்வெட்டுகளை வாசிப்பதற்கான பயிற்சியும் நடைபெற்றது. பேரணியை பள்ளி தலைமை ஆசிரியர் பழனி தொடங்கி வைத்து பயிற்சிக்கு தலைமை தாங்கினார். பள்ளி உதவி தலைமை ஆசிரியர் தெய்வீகன் அனைவரையும் வரவேற்றார்.

    சிவன் கோவில் குருக்கள் பாலசுப்பிரமணியம், முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் கவிதா சிவா, சிவனடியார் குழுவைச் சேர்ந்த பாலமுருகன், தொல்லியல் ஆர்வலர் ஓய்வு பெற்ற ஆசிரியர் கலியபெருமாள் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நிகழ்ச்சியை தொன்மை பாதுகாப்பு மன்ற ஒருங்கிணைப்பாளர் மணிகண்டன் ஒருங்கிணைத்து கல்வெட்டு வாசிப்பு பயிற்சிகளை மாணவர்களுக்கு வழங்கினார். இதில் நாட்டு நலப்பணித் திட்ட மாவட்ட தொடர்பாளர் சீனிவாசன், ஆசிரியர்கள் சித்ரா தேவி, பாத்திமா, ஐயப்பன், செல்வமணி, சரவணன், தேவி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    • கறம்பக்குடி அருகே குடிநீரின்றி பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்
    • இதனால் சிறிது நேரம் அங்கு போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    கறம்பக்குடி:

    புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி ஒன்றியம் மருதங்கோன் விடுதியில் உள்ள ஆதிதிராவிட குடியிருப்பு பகுதியில் கடந்த சில நாட்களாக குடிநீர் தட்டுப்பாடு உள்ளதாகவும், இதனை சம்பந்தப்பட்ட உள்ளாட்சி பிரதிநிதிகளிடம் கூறி எந்த நடவடிக்கை இல்லாததால் மருதங்கோன் விடுதி நால் ரோட்டில் பெண்கள் காலிக்குடங்களுடன் சாலை மறியலில் ஈடுபட்டனர். தகவல் அறிந்த கறம்பக்குடி காவல் நிலைய போலீசார் மற்றும் ஊராட்சி ஒன்றிய அலுவலர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று குடிநீர் உடனடியாக வழங்க ஏற்பாடு செய்வதாக கூறியதையடுத்து சாலை மறியலில் ஈடுபட்ட பெண்கள் கலைந்து சென்றனர். இதனால் சிறிது நேரம் அங்கு போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    • புதுக்கோட்டை விவசாயிகளுக்கு வேளாண்மை இணை இயக்குனர் ஆலோசனை
    • மகசூல் பாதிக்காதவாறு பயன்படுத்த அறிவுரை

    புதுக்கோட்டை,

    புதுக்கோட்டை மாவட்ட வேளாண்மை இணை இயக்குநர் மா. பெரியசாமி வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளதாவது:-மகசூல் பாதிக்காதவாறு களைக்கொல்லிகளை கவனமாக பயன்படுத்த வேண்டும்.களைக்கொல்லிகளை பொறுத்தவரை களை முளைக்கும் முன் தெளிக்கும் மருந்துகள், களைகள் முளைத்தபின் தெளிக்கும் மருந்துகள் என இரு வகைகளாக உள்ளன. இது மட்டுமல்லாமல் பயிர்களுக்கு உகந்தவாறு தேர்வு திறன் உள்ள களைக்கொல்லிகள் உள்ளன.அனைத்து வகையான பயிர்கள் மற்றும் களைச்செடிகள் ஆகியவற்றை அழிக்கக்கூடிய வகையில் உள்ள களைக்கொல்லிகள் தேர்வு திறனற்ற களைக்கொல்லிகள் எனப்படும். இவற்றை பயன்படுத்தும்போது அதிக கவனம் செலுத்திட வேண்டும்.விவசாயிகள் களைக்கொல்லிகளை தேர்தெடுப்பது என்பது மிகவும் முக்கியமான செயலாகும். இதற்கு சம்பந்தப்பட்ட பூச்சி மருந்து விற்பனை நிலைய பொறுப்பாளர்கள் அல்லது தங்கள் பகுதி விரிவாக்க பணியாளர்கள் ஆகியோரிடம் பரிந்துரை பெற்று கீழ்க்கண்ட வழிமுறைகளையும் கடைபிடித்து களைக்கொல்லிகளை தெளிக்கலாம்.கண் கண்ணாடிகள், முகக்கவசம், கையுறைகள் பாதுகாப்பு உடைகள் மற்றும் உபகரணங்களை அணிந்து மருந்து தெளிக்க வேண்டும். வாங்குவதற்கு முன் களைக்கொல்லிகளின் தரத்தை உறுதிப்படுத்த வேண்டும்.பரிந்துரைக்கப்பட்ட பயிர்களுக்கு ஏற்ப மட்டுமே களைக்கொல்லிகளைப் பயன்படுத்த வேண்டும். களைக்கொல்லிகளை சரியான நேரத்தில், சரியான அளவில் பயன்படுத்த வேண்டும்.வயலில் நிலவும் வறட்சி, ஈரப்பதம் போன்றவற்றை கருத்தில் கொண்டு களைக்கொல்லிகளை இட வேண்டும்.களைக்கொல்லிகள் தெளிக்க நாப்சாக் தெளிப்பான் பயன்படுத்தப்பட வேண்டும். காற்று வீசும் போது களைக்கொல்லிகளைப் பயன்படுத்தக்கூடாது. காற்று அதிகரிக்கும்போது மருந்து தெளிப்பதை நிறுத்தி விட வேண்டும். காலை மற்றும் மாலை வேலைகள் பொதுவாக களைகொல்லி தெளிக்க சிறந்த நேரமாகும். களைக்கொல்லிகளை பயன்படுத்திய பகுதிகளில் நடக்கக் கூடாது. தெளிப்பிற்கு தேவையான அளவு மட்டும் களைக்கொல்லி கலவையினை தயார் செய்ய வேண்டும் என்று அவர் தெரிவித்துள்ளார்.

    • காதல் தோல்வியால் கல்லூரி மாணவர் விபரீத முடிவு
    • போலீசார் உடலை கைப்பற்றி விசாரணை

    கறம்பக்குடி,

    கறம்பக்குடி அருகே உள்ள பந்துவக்கோட்டையை சேர்ந்தவர் சிவஞானம். இவரது மகன் மகேந்திரன் (வயது 18). இவர் கந்தர்வகோட்டை பகுதியில் உள்ள ஒரு தனியார் என்ஜினீயரிங் கல்லூரியில் எலக்ட்ரிக்கல் எலக்ட்ரானிக் பிரிவில் முதலாம் ஆண்டு படித்து வந்தார்.இவர் ஒரு பெண்னை காதலித்ததாக கூறப்படுகிறது. ஆனால் அவரது காதல் தோல்வியில் முடிந்தது. இதனால் மனமுடைந்த மகேந்திரன் சம்பவத்தன்று குளிர்பானத்தில் எலிமருந்தை (விஷம்) கலந்து குடித்து மயங்கினார். இதை கண்ட குடும்பத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி மகேந்திரன் உயிரிழந்தார்.இதுகுறித்து மகேந்திரனின் தந்தை சிவஞானம் ரெகுநாதபுரம் போலீசில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். காதல் தோல்வியால் கல்லூரி மாணவர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

    • தங்கும் வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் குறித்து கேட்டறிந்தார்
    • மாணவர்களுக்கு தரமான உணவு வழங்க அறிவுறுத்தல்

    புதுக்கோட்டை, 

    புதுக்கோட்டை மார்த்தாண்டபுரத்தில், ஆரோக்கிய சிறுமிகள் குழந்தைகள் இல்லத்தினை கலெக்டர் கவிதா ராமு நேற்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். இந்த இல்லத்தில் 1 முதல் 12 -ம் வகுப்பு வரை பயிலும் 25 மாணவிகள் உள்ளனர். இங்கு தங்கும் இடம் வசதி குறித்தும், அடிப்படை வசதிகள் குறித்தும் மாணவிகளிடம் கலெக்டர் கவிதாராமு கேட்டறிந்தார். மேலும் இந்த இல்லத்தில் உள்ள கணினி அறை, நூலகம், சமையலறை உள்ளிட்டவைகளை பார்வையிட்டு, முறையாக பராமரிக்கப்படுகின்றனவா என்பது குறித்தும் ஆய்வு செய்தார்.பின்னர் புதுக்கோட்டை நரிமேடு அருகே உள்ள அன்னை சத்தியா அம்மையார் அரசு குழந்தைகள் காப்பகத்தினை கலெக்டர் கவிதாராமு நேரில் பார்வையிட்டு, மாணவிகளிடம் கல்வி தரம் குறித்து கேட்டறிந்து ஆய்வு செய்தார்.மேலும் இந்த காப்பகத்தில் சமையலறை, படுக்கை அறை, தையல் பயிற்சி நடைபெறும் இடம் உள்ளிட்டவைகளை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். இந்த காப்பகத்தில் 28 மாணவிகள் தங்கி பயின்று வருகின்றனர். மாணவர்களுக்கு தரமான உணவு வழங்க வேண்டும் எனவும், படுக்கை வசதிகள் நல்ல முறையில் பராமரிக்கப்பட வேண்டும் என்றார். மேலும் சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார். இந்நிகழ்வில், குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் தனபால், வட்டாட்சியர் விஜயலெட்சுமி மற்றும் அலுவலர்கள் உடனிருந்தனர்.

    • தேசிய திறனறி தகுதி தேர்வில் வெற்றிபெற்றவர்கள்
    • வெற்றி பெற்றவர்களுக்கு பாராட்டு

    கறம்பக்குடி, 

    புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி ஒன்றியம் செவ்வாய்ப்பட்டி அரசு நடுநிலைப் பள்ளியில் பயின்று வரும் மாணவர்கள் தேசிய திறனறி தகுதி தேர்வு எழுதினர். இதில் 5 மாணவர்கள் வெற்றி பெற்றனர். இதே போல் புதுக்கோட்டைவிடுதி, பாப்பாபட்டி, நைன் கொள்ளை, இலைகடிவிடுதி, முதலிபட்டி ஆகிய ஊர்களில் உள்ள அரசு பள்ளியில் பயின்று வரும் மாணவ, மாணவியர்கள் 18 பேர் தகுதி தேர்வில் வெற்றி பெற்றுள்ளனர். இதில் மாணவி சிவனேகா மாவட்ட அளவில் இரண்டாம் இடத்தைப் பெற்று வெற்றி பெற்றுள்ளார். வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளை வட்டார கல்வி அலுவலர், வள மைய மேற்பார்வையாளர், பள்ளியின் தலைமை ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர்கள், பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர்கள் ஆகியோர் வாழ்த்தினர்.

    • அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்தார்
    • சென்னை தலைமை செயலகத்தில் லோகோவினை வெளியிட்டார்

    புதுக்கோட்டை, 

    புதுக்கோட்டை புத்தாஸ் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு அறக்கட்டளையை விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் துவங்கி வைத்து, லோகவினை வெளியிட்டார், சென்னை தலைமைச் செயலகத்தில் உள்ள அவருடைய அலுவலகத்தில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில், சட்டத்துறை அமைச்சர் ரகுபதி, புதுக்கோட்டை மாவட்ட குத்துச்சண்டை கழக தலைவர் எஸ்.வி.எஸ். ஜெயக்குமார், புத்தாஸ் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு அறக்கட்டளையின் நிறுவனர் சேது.கார்த்திகேயன், மதுரை மாவட்ட குத்துச்சண்டை கழகத்தின் செயலாளர் செழியன்,மதியழகன் மணிமாறன், அறக்கட்டளையின் நிர்வாகிகள், ஹரிகிருஷ்ணன், ஆகாஷ், மணிகண்டன் மாரிமுத்து, சித்தார்த், மணிகண்டன் பிரவீன்,வனிதா, அகிலா,பிரீத்தா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

    ×