என் மலர்
உள்ளூர் செய்திகள்

கறம்பக்குடி அருகே குடிநீரின்றி பொதுமக்கள் சாலை மறியல்
- கறம்பக்குடி அருகே குடிநீரின்றி பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்
- இதனால் சிறிது நேரம் அங்கு போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
கறம்பக்குடி:
புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி ஒன்றியம் மருதங்கோன் விடுதியில் உள்ள ஆதிதிராவிட குடியிருப்பு பகுதியில் கடந்த சில நாட்களாக குடிநீர் தட்டுப்பாடு உள்ளதாகவும், இதனை சம்பந்தப்பட்ட உள்ளாட்சி பிரதிநிதிகளிடம் கூறி எந்த நடவடிக்கை இல்லாததால் மருதங்கோன் விடுதி நால் ரோட்டில் பெண்கள் காலிக்குடங்களுடன் சாலை மறியலில் ஈடுபட்டனர். தகவல் அறிந்த கறம்பக்குடி காவல் நிலைய போலீசார் மற்றும் ஊராட்சி ஒன்றிய அலுவலர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று குடிநீர் உடனடியாக வழங்க ஏற்பாடு செய்வதாக கூறியதையடுத்து சாலை மறியலில் ஈடுபட்ட பெண்கள் கலைந்து சென்றனர். இதனால் சிறிது நேரம் அங்கு போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
Next Story






