என் மலர்tooltip icon

    புதுக்கோட்டை

    • டபேதாரை கௌரவப்படுத்திய கலெக்டர்
    • புதுக்கோட்டை பொதுமக்கள் வெகுவாக பாராட்டு

    புதுக்கோட்டை,

    புதுக்கோட்டை மாவட்ட கலெக்டர் கவிதாராமு டபேதாராக இருந்தவர் அன்பழகன். இவர் மாவட்ட கலெக்டர்கள் உமா மகேஸ்வரி மற்றும் தற்போது செயல்பட்டு வரும் கவிதா ராமு ஆகியோரிடம் பணியாற்றியுள்ளார். இந்நிலையில் பணியிலிருந்து ஓய்வு பெற்ற அன்பழகனை மாவட்ட கலெக்டர் தனது காரில், அவர் அமர்ந்து செல்லும் இடத்தில் அன்பழகனை அமர வைத்து அவர் வீடு உள்ள அடப்பன் வயல் ஒன்றாம் வீதியில் உடன் சென்று வீட்டில் இறக்கி விட்டு அதன் பின்னர் வீட்டில நடைப்பெற்ற விருந்தில் கலந்துக் கொண்டார். அப்போது அன்பழகனுக்கு பரிசுகள் வழங்கி அவரை கௌரவப்படுத்தினார். அன்பழகன் ஓய்வு பெற்றதை முன்னிட்டு மாவட்ட கலெக்டர் தனது காரில் கொண்டு சென்று வீட்டில் விட்டதை புதுக்கோட்டை மக்கள் வெகுவாக பாராட்டினர். 

    • அறந்தாங்கி நகராட்சி பள்ளியில் ஆண்டுவிழா நடைபெற்றது
    • இதில் மாணவ, மாணவிகள் கலந்து கொண்ட கலை நிகழ்ச்சிகள், திருக்குறள் ஒப்புவித்தல், பழமொழி, கவிதை வாசித்தல் போன்ற நிகழ்வுகள் நடைபெற்றது.

    அறந்தாங்கி:

    புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி நகராட்சி தொடக்கப்பள்ளியில் ஆண்டு விழா நடைபெற்றது. பள்ளித் தலைமை ஆசிரியர் ரேணுகா ஏற்பாட்டில் நடைபெற்ற நிகழ்ச்சியில், நகர்மன்றத் தலைவர் ஆனந்த் தலைமை வகித்து விழாவை தொடங்கி வைத்தார். இதில் மாணவ, மாணவிகள் கலந்து கொண்ட கலை நிகழ்ச்சிகள், திருக்குறள் ஒப்புவித்தல், பழமொழி, கவிதை வாசித்தல் போன்ற நிகழ்வுகள் நடைபெற்றது.

    இறுதியில் அனைவருக்கும் பரிசுகள் வழங்கப்பட்டது.நிகழ்ச்சியில் நகர்மன்றத் துணை தலைவர் முத்து, வட்டாரக் கல்வி அலுவலர் நடராஜன், அன்பழகன், நிஸார், வட்டார வள மைய மேற்பார்வையாளர் (பொ) ஸ்ரீதேவி, நகர்மன்ற உறுப்பினர்கள் விஸ்வமூர்த்தி, மங்கையர்கரசி, அசாருதீன், இடைநிலை ஆசிரியர் நிர்மல்சகில்தா உள்ளிட்ட ஆசிரியர்கள் அலுவலர்கள், மாணவ மாணவியர்கள் கலந்து கொண்டனர்.


    • இலுப்பூரில் 17 ஆண்டுகளுக்கு பிறகு ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்றது
    • முன்னாள் அமைச்சர் டாக்டர் விஜயபாஸ்கர் தொடங்கிவைத்தார்

    விராலிமலை:

    புதுக்கோட்டை மாவட்டம், விராலிமலை சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட இலுப்பூரில் பிரசித்தி பெற்ற ஸ்ரீ தரம் தூக்கி பிடாரியம்மன் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவில் திருவிழாவை முன்னிட்டு 17 ஆண்டுகளுக்கு பிறகு ஜல்லிக்கட்டு போட்டி இன்று காலை கோலாகலமாக நடைபெற்றது.முன்னதாக இந்த போட்டியினை முன்னாள் அமைச்சரும், விராலிமலை சட்டமன்ற தொகுதி உறுப்பினருமான டாக்டர். சி.விஜயபாஸ்கர் கொடியசைத்து துவக்கி வைத்தார்.

    இந்த போட்டியில் 850 காளைகளும், 250 மாடுபிடி வீரர்கள் கலந்து கொண்டு கொண்டுள்ளனர்.திருச்சி, மதுரை, அரியலுர், தேனி, பெரம்பலூர், மணப்பாறை, திண்டுக்கல் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களிலிருந்து 850 காளைகள் கலந்து பங்கேற்றுள்ளது. காளைகளுக்கும், காளையர்களுக்கு தமிழக அரசின் வழிகாட்டுதல் படி உரிய மருத்துவ பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்ட பின்னரே களத்தில் அனுமதிக்கப்பட்டனர்.

    இந்த போட்டியில் பங்கேற்கும் அனைத்து காளைகளுக்கும், மாடுபிடி வீரர்களுக்கும் முன்னாள் அமைச்சர் டாக்டர். சி.விஜயபாஸ்கர் சார்பில் அண்டா, சைக்கிள், தங்க நாணயம், உள்ளிட்டவைகள் பரிசாக வழங்கப்பட்டு வருகிறது.அது மட்டுமல்லாமல் விழா குழு சார்பில் கட்டில், பேன், ஹாட்பாக்ஸ் , டைனிங் டேபிள், கிப்ட் பேக் உள்ளிட்டவைகள் வழங்கப்பட்டு வருகிறது. இந்த ஜல்லிக்கட்டு போட்டியை இலுப்பூர் மட்டுமின்றி சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த ஆயிரக்கணக்கானோர் வந்து பார்த்து ரசித்தனர்.

    • புதுக்கோட்டை மாவட்ட நிர்வாகம் குழந்தை திருமணங்களை தடுத்தலில் சிறப்பான பங்ளிப்பை வழங்குகிறது என தேசிய குழந்தைகள் பாதுகாப்பு ஆணைய உறுப்பினர் ஆர்.ஜி.ஆனந்த் பாராட்டினார்
    • தேசிய குழந்தைகள் உரிமை பாதுகாப்பு ஆணையத்தின் சார்பில் முதற்கட்டமாக 5 மாநிலங்களில் உள்ள கூர்நோக்கு இல்லங்களில் 21 இடங்களில் ஆய்வு செய்யப்பட்டது

    புதுக்கோட்டை:

    புதுக்கோட்டை நகர்மன்றம் அருகில் உள்ள அரசு உயர் துவக்கப் பள்ளியினை, மாவட்ட கலெக்டர் கவிதா ராமு முன்னிலையில், தேசிய குழந்தைகள் உரிமை பாதுகாப்பு ஆணையத்தின் உறுப்பினர் ஆர்.ஜி.ஆனந்த் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். இந்த ஆய்வின்போது பள்ளியின் வகுப்பறை கட்டமைப்புகள், அடிப்படை வசதிகள் குறித்தும், கழிப்பறை வசதிகள் நல்ல முறையில் பராமரிக்கப்படுவது குறித்தும் தேசிய குழந்தைகள் உரிமை பாதுகாப்பு ஆணையத்தின் உறுப்பினர் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

    இப்பள்ளியில் கழிப்பறை வசதி தேவைப்படுவதை அறிந்து, மாவட்ட கலெக்டர் 2 நாட்களுக்குள் வசதி ஏற்படுத்தப்படும் என்று தெரிவித்ததற்கு பாராட்டுக்கள் தெரிவித்துக்கொள்கிறேன் என்றும், பள்ளியின் மேம்பாட்டு வசதிக்காக மாவட்ட நிர்வாகத்தின் மூலம் பணிகள் மேற்கொள்ளப்படும் என்றும் ஆர்.ஜி.ஆனந்த் தெரிவித்தார்.அதனைத்தொடர்ந்து, மாவட்ட கலெக்டர் கவிதா ராமு முன்னிலையில், தேசிய குழந்தை உரிமைகள் பாதுகாப்பு ஆணைய உறுப்பினர் ஆர்.ஜி.ஆனந்த், அலுவலர்களுடன் கலந்தாய்வு மேற்கொண்டார்.

    அப்போது அவர் தெரிவித்ததாவது:-தேசிய குழந்தைகள் உரிமை பாதுகாப்பு ஆணையத்தின் சார்பில் முதற்கட்டமாக 5 மாநிலங்களில் உள்ள கூர்நோக்கு இல்லங்களில் 21 இடங்களில் ஆய்வு செய்யப்பட்டது. மேலும் ஒரு குழந்தை தொழிலாளர்கள் கூட இல்லாத நிலையை உருவாக்கும்வகையில் பல்வேறு வகையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதன்படி, புதுக்கோட்டை மாவட்டத்தில் சிறப்பு குழு ஒன்று அமைக்கப்பட்டு, பேருந்து நிலையங்கள், சாலை சிக்னல்களில் குழந்தை தொழிலாளர்கள் குறிந்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

    புதுக்கோட்டை நகர்மன்றம் அருகில் உள்ள அரசு உயர் துவக்கப் பள்ளியில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டு மாணவ, மாணவிகளுக்குத் தேவையான அடிப்படை வசதிகளான இடவசதி மற்றும் கழிப்பறை வசதிகள் போதுமான அளவில் உள்ளனவா என்பது குறித்து ஆய்வு செய்து, அவர்களின் தேவைகளை பூர்த்தி செய்ய நடவடிக்கைகள் மேற்கொ ள்ளப்பட்டு வருகிறது. மேலும் புதுக்கோட்டை மாவட்ட நிர்வாகம் குற்றங்களை தடுத்தல், போஸ்கோ சட்டம், குழந்தை திருமணங்களை தடுத்தல் போன்றவற்றில் சிறப்பான பங்களிப்பை வழங்கி வருகிறது.

    புதுக்கோட்டை மாவட்டத்தை குழந்தை களின் நட்பு மாவட்டமாக முன்னெடுக்கும் வகையில் குழு அமைக்கப்பட்டு, குழந்தைகளின் கல்வி, சுகாதாரம் மேம்பாடு அடையும் வகையில் நடவடிக்கைகள் மேற்கொ ள்ளப்பட்டு வருகிறது.மேலும் கூர்நோக்கு இல்லங்களில் சிறார்களுக்கு மனநல ஆலோசனைகள் வழங்குவதன் மூலம் அவர்கள் குற்ற செயல்களில் ஈடுபடுவது குறைக்கப்படும். குழந்தைகளே தாங்களாக முன்வந்து தங்களுக்கு ஏற்படும் குற்றங்களை புகார் அளிக்கும் வகையில் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.எனவே குழந்தைகளின் மீது தனிகவனம் செலுத்தும் பொழுது அவர்களின் மீதான குற்றங்கள் குறையும் என்றார்.

    இந்நிகழ்வுகளில், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வந்திதா பாண்டே, மாவட்ட வருவாய் அலுவலர் மா.செல்வி, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் நா.கவிதப்பிரியா, கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) து.தங்கவேல், வருவாய் கோட்டாட்சியர்கள் முருகேசன் (புதுக்கோட்டை), குழந்தைசாமி (இலுப்பூர்), மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர் கி.கருணாகரன், உதவி இயக்குநர் (ஊராட்சிகள்) (பொ) பழனிச்சாமி, மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் வசந்தகுமார், நகராட்சி ஆணையர் நாகராஜன், புதுக்கோட்டை வட்டாட்சியர் விஜயலெட்சுமி, குளத்தூர் வட்டாட்சியர் சக்திவேல், பள்ளித்துணை ஆய்வாளர் குருமாரிமுத்து, வேலுச்சாமி மற்றும் அலுவலர்கள் கலந்துகொண்டனர்.

    • புதுக்கோட்டை அரிமளத்தில் உலக பூமி தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது
    • இதில் நூற்றுக்கும் மேறபட்டோர் பங்கேற்றனர்

    புதுக்கோட்டை:

    புதுக்கோட்டையை அடுத்த அரிமளத்தில் உலக பூமி தின தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. இளையோர் அமைப்பை சார்ந்த இளைஞர்கள், சூழலியல் உரிமைக்கான இளையோர் அமைப்பு, புதுக்கோட்டை ரோஸ் நிறுவனம், டி.டி.எச் ரூரல் லிட்டரசி அண்ட் ஹெல்த் புரோகிராம் இணைந்து நடத்திய இந்த பேரணிக்கு இளையோர் அமைப்பின் தலைவர் சத்யா தலைமை தாங்கினார். மாநில ஒருங்கிணைப்பாளர் அகிலா பிளாஸ்டிக் ஒழிப்பு, சுற்றுசூழல் பாதுகாப்பு குறித்து பேசினார்.

    பாடல்கள், ஒயிலாட்டம், பறையாட்டம் ஒலிக்க சுற்றுசூழல் விழிப்புணர்வு கோஷங்களுடன் நடைபெற்ற இந்த பேரணியின் முடிவில், நாடகம் வாயிலாகவும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. அதன் பின்னர் நடைபெற்ற விழிப்புணர்வு கூட்டத்தில், ஜூன் 5ம் தேதி வரை தொடர்ந்து சுற்றுசூழல் பாதுகாப்பு பிரச்சாரத்தை மேற்கொள்வது என்று முடிவு எடுக்கப்பட்டது. டி.டி.எச்.-ன் சிந்தியா இளையோர் அமைப்பு சங்கீதா, பத்மினி, கீர்த்தனா, ரோஸ் நிறுவன விஜயா கலைச்செல்வி, வேலாயுதம், மதுரை செந்தில், பாண்டி உள்ளிட்ட 100க்கும் மேற்பட்டவர்கள் இந்த பிரச்சார பேரணியில் கலந்து கொண்டனர்.


    • கந்தர்வகோட்டை ஆபத் சகாயேஸ்வரர் கோவிலில் முப்பெரும் விழா நடைபெற்றது
    • விழாவை முன்னிட்டு சுவாமி அம்பாள் மற்றும் பரிவார தெய்வங்களுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது.

    கந்தர்வகோட்டை:

    புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை அமராவதி உடனுறை ஆபத் சகாயேஸ்வரர் திருக்கோவிலில் திருவாசகம் முற்றோதல், முதலாம் ஆண்டு நிறைவு விழா, திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர், சுந்தரர், மாணிக்கவாசகர் திருமேனி திருவீதி உலா மற்றும் திருமுறைகள் திருவீதி உலா ஆகிய முப்பெரும் விழா சிறப்பாக நடைபெற்றது.விழாவை முன்னிட்டு சுவாமி அம்பாள் மற்றும் பரிவார தெய்வங்களுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது.

    கோவில் கிழக்கு கோபுரத்திலிருந்து நால்வர் திருமேனிகள் மற்றும் திருமறைகள் அடங்கிய பெட்டிகளை சிவன் அடியார்கள் தங்களின் சிரமேல் வைத்து பக்தி பெருக்குடன் நகரின் முக்கிய வீதிகள் வழியாக கைலாய வாத்தியம் முழங்க திரு வீதிஉலா நடைபெற்றது.திருவீதி உலாவின் போது சிவன் அடியார்களுக்கும், பக்தர்களுக்கும் ஆங்காங்கே பொதுமக்கள் நீர்மோர், இளநீர், பிஸ்கட் உள்ளிட்ட உணவு வழங்கினர். நிகழ்ச்சியில் சென்னை, பட்டுக்கோட்டை, திருச்சி, கந்தர்வகோட்டை சுற்று வட்டார கிராமங்களைச் சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட சிவனடியார்களும், ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்களும் கலந்து கொண்டனர்.விழாவில் கலந்து கொண்ட அனைவருக்கும் காலை மற்றும் மதிய உணவு வழங்கப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை கந்தர்வகோட்டை சிவனடியார்கள், பக்தர்கள் மற்றும் கிராம பொதுமக்கள் செய்திருந்தனர்.


    • வாடிவாசல் வழியாக முதலில் கோவில் காளை அவிழ்த்துவிடப்பட்டது.
    • காளை ஒன்று அருகில் இருந்த மின் கம்பத்தில் இணைக்கப்பட்ட இழுவை கம்பியில் மோதியது.

    புதுக்கோட்டை:

    புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே உள்ள கல்லாலங்குடி முத்துமாரியம்மன் கோவில் திருவிழாவை முன்னிட்டு ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்றது. அரசு விதிகளின்படி நடைபெற்ற இப்போட்டியில் புதுக்கோட்டை மட்டுமின்றி தஞ்சை, திருச்சி மற்றும் சுற்றுவட்டாரங்களில் இருந்து 800 காளைகள் பங்கேற்றன. இதனை அடக்குவதற்கு 300 வீரர்கள் களத்தில் குதித்தனர்.

    வாடிவாசல் வழியாக முதலில் கோவில் காளை அவிழ்த்துவிடப்பட்டது.

    இதனை தொடர்ந்து ஒவ்வொரு காளையாக அவிழ்த்துவிடப்பட்டது. இதில் சில காளைகளை வீரர்கள் மடக்கி பிடித்தனர். சில காளைகள் வீரர்களுக்கு போக்குகாட்டிவிட்டு அங்கிருந்து வெளியே சென்றது.

    அப்படி சென்ற காளை ஒன்று அருகில் இருந்த மின் கம்பத்தில் இணைக்கப்பட்ட இழுவை கம்பியில் மோதியது. அப்போது மின்கம்பிகள் ஒன்றோடு ஒன்று உரசி தீப்பொறிகள் பறந்து பார்வையாளர்கள் மீது விழுந்தது. இதில் 14 பேர் காயங்களுடன் துடித்தனர். அவர்களை அங்கிருந்த டாக்டர்கள் முதல் உதவி செய்து, ஆம்புலன்ஸ் உதவியுடன் அருகில் உள்ள ஆலங்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    ஜல்லிக்கட்டு போட்டியில் நடைபெற்ற சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

    இருப்பினும் ஜல்லிக்கட்டு போட்டி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

    • புதுக்கோட்டை நகராட்சியின் மாதாந்திர சாதாரண கூட்டம் நடைபெற்றது
    • வரி வசூலில் காட்டும் வேகத்தை ஆக்ரமிப்பு அகற்றுவதிலும் காட்ட வேண்டும் என விஜய் மக்கள் இயக்க உறுப்பினர் பர்வேஸ் பேசினார்

    புதுக்கோட்டை:

    புதுக்கோட்டை நகரா ட்சியின் மாதாந்திர சாதாரண கூட்டம் நடை ப்பெற்றது. கூட்டத்திற்கு நகர்மன்ற தலைவர் திலகவதி செந்தில் தலைமை வகித்தார். துணை த்தலைவர் லியாகத்அலி முன்னிலை வகித்தார். ஆணையர் (பொ) சேகரன் மற்றும் அதிகாரிகள் நகர் மன்ற உறுப்பினர்கள் கலந்துக் கொண்டனர். தலைவர் தனது தலைமையுரையில் புதுக்கோட்டை நகராட்சியை மாநகராட்சியாக தரம் உயர்த்துவது குறித்து அரசு அறிவிப்பு வெளியிட்டதற்கும், புதுக்கோட்டை புதிய பேரூந்து நிலையத்தில் கட்டுமான பணிகளுக்கான ரூ.25 கோடி அரசு ஒதுக்கியதற்கும் நன்றி தெரிவித்தார்.

    மேலும் புதுக்கோட்டை நகராட்சி பகுதிகளை தனியார் மூலம் தூய்மை பணிகளை மேற்கொள்ளவிருப்பதால் தூய்மையான நகராட்சியாக மாறும் என்றும் தெரிவித்தார்.விஜய் மக்கள் இயக்க நகர்மன்ற உறுப்பினர் பர்வேஸ் பேசுகையில் அதிகாரிகள் வரி வசூல் செய்வதில் காட்டும் வேகத்தை ஆக்ரமிப்பு அகற்றுவதிலும் காட்ட வேண்டும் என கோரிக்கை வைத்தார்.திமுகவை சேர்ந்த காந்திமதிபிரேம்ஆனந்த் பேசுகையில், எனது வார்டுக்கு பல பணிகள் ஒதுக்க ப்பட்டதாக அறிவிப்போடு மட்டும் உள்ளது.

    எதுவும் நடைமுறைக்கு வரவில்லை. பைப் லைன் கொடுக்கும் ஒப்பந்தகார் யார் எனவே தெரியவில்லை. எனவே கவுன்சிலர்களுக்கு பணிகளை செய்பவர் களை தெரியப்படுத்துங்கள் என்றார்.அதிமுகவை சேர்ந்த செந்தில்குமார் பேசுகையில் கலைஞர் கருணாநிதி அரசு பெண்கள் கல்லூரி எதிரே அமைக்கப்பட்டு வரும் பூங்காவிற்கு சென்ற கூட்டத்தில் கலைஞர் பெயர் வைக்கப்படும் என தெரிவித்தீர்கள். ஆனால் தீர்மானத்தில் கையொப்பம் வாங்கவில்லை. ஆகையால் இந்த கூட்டத்தில் அதை எதிர்க்கிறோம் என்றார். இதே போல் உறுப்பினர் கள் தங்கள் கோரிக்கைகளை எடுத்துரைத்தனர்.


    • மூதாட்டி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்
    • இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து மாரியம்மாள் தற்கொலை செய்து கொண்டதற்கான காரணம் குறித்து விசாரித்து வருகின்றனர்.

    புதுக்கோட்டை:

    புதுக்கோட்டை மச்சுவாடியை சேர்ந்த சிங்காரத்தின் மனைவி மாரியம்மாள்(வயது 60). இவர் உடல் நலம் பாதிக்கப்பட்ட நிலையில் இருந்தார். இந்த நிலையில் நேற்று முன்தினம் வீட்டில் மாரியம்மாள் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து தகவல் அறிந்த கணேஷ்நகர் போலீசார் விரைந்து சென்று அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து மாரியம்மாள் தற்கொலை செய்து கொண்டதற்கான காரணம் குறித்து விசாரித்து வருகின்றனர்.

    • கறம்பக்குடி அருகே வெட்டன்விடுதியில் புதிய கால்நடை மருத்துவமனை கட்ட அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது
    • இதில் எம்.எல்.ஏ. முத்துராஜா கலந்துகொண்டு பூமி பூஜை செய்து பணியை தொடங்கி வைத்தார்

    கறம்பக்குடி:

    புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி ஒன்றியம் கணக்கன் காடு ஊராட்சியில் இயங்கி வந்த கால்நடை மருத்துவமனையின் கட்டிடம் பழுதான நிலையில் இருந்தது. இதனை இடித்து விட்டு புதிய கால்நடை மருத்துவமனை அமைத்து தர வேண்டும் என்று வெட்டன் விடுதி மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமமக்கள் எம்.எல்.ஏ. முத்துராஜாவிடம் கோரிக்கை வைத்தனர்.இந்த கோரிக்கையை ஏற்ற எம்.எல்.ஏ. முத்துராஜா சட்டமன்றத் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து புதிய கால்நடை மருத்துவமனை கட்டுவதற்கு உத்தரவு பிறப்பித்தார்

    . இந்த உத்தரவின் படி வெட்டன் விடுதி கிராமத்தில் ரூ.48 லட்சம் மதிப்பில் புதிய கால்நடை மருத்துவமனை கட்டுவதற்கான அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது.இதில் எம்.எல்.ஏ. முத்துராஜா கலந்துகொண்டு பூமி பூஜை செய்து பணியை தொடங்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் மாவட்ட அறங்காவலர் குழு தலைவரும் கறம்பக்குடி தெற்கு ஒன்றிய செயலாளருமான தவ பாஞ்சாலன், கறம்பக்குடி ஒன்றிய பெருந்தலைவர் மாலா ராஜேந்திர துரை, மாவட்டத் துணைச் செயலாளர் கருப்பையா, ஆணையர் கருணாகரன், சுப்பிரமணியன், ஊராட்சி மன்ற தலைவர் செந்தில்குமார், உள்ளாட்சி பிரதிநிதிகள் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

    • கறம்பக்குடி பகுதிகளில் குற்ற செயல்களை தடுப்பது குறித்த ஆலோசனை கூட்டம் நடைபெற்றது
    • மேலும் குற்ற செயல்களை தடுக்கும் வகையில் பேரூராட்சி பகுதி மற்றும் அனைத்து ஊராட்சி பகுதியிலும் 100 கண்காணிப்பு கேமராக்களை வருகிற 10 ந் தேதிக்குள் பொருத்துவது என்றும் முடிவு செய்யப்பட்டது.

    கறம்பக்குடி:

    புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி போலீஸ் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் சட்டம் ஒழுங்கு மற்றும் குற்ற தடுப்பு நடவடிக்கைகள் குறித்த ஆலோசனை கூட்டம் காவல் நிலையத்தில் கறம்பக்குடி இன்ஸ்பெக்டர் செந்தூர் பாண்டியன் தலைமையில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் கறம்பக்குடி பேரூராட்சி தலைவர் மற்றும் ஒன்றியத்துக்கு உட்பட்ட 39 ஊராட்சி மன்ற தலைவர்களும் கலந்து கொண்டனர்.

    இதில் கறம்பக்குடி பேரூராட்சி நகரப் பகுதிகளில் மற்றும் கிராமப்புற ஊராட்சிகளில் குற்ற செயல்கள் நடைபெறாமல் தடுக்கும் வகையில் பணியாற்றும் போலீசாருக்கு பேரூராட்சி நிர்வாகம், ஊராட்சி மன்ற தலைவர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள் உறுதுணையாக இருக்க வேண்டுமென காவல்துறை சார்பில் வலியுறுத்தப்பட்டது. மேலும் குற்ற செயல்களை தடுக்கும் வகையில் பேரூராட்சி பகுதி மற்றும் அனைத்து ஊராட்சி பகுதியிலும் 100 கண்காணிப்பு கேமராக்களை வருகிற 10 ந் தேதிக்குள் பொருத்துவது என்றும் முடிவு செய்யப்பட்டது.


    • புதுக்கோட்டையில் மாணவ, மாணவிகளுக்கான பேச்சுப்போட்டி நடைபெற்றது
    • அமைச்சர் எஸ்.ரகுபதி தொடங்கி வைத்தார்

    புதுக்கோட்டை:

    புதுக்கோட்டை கலைஞர் கருணாநிதி அரசினர் மகளிர் கலைக்கல்லுரி யில் சிறுபாண்மையினர் ஆணையத்தின் சார்பில் மாணவ, மாணவிகளுக்கான பேச்சுப்போட்டிகளை சட்டம், நீதிமன்றங்கள், சிறைச்சாலை மற்றும் ஊழல் தடுப்பு சட்ட அமைச்சர் எஸ்.ரகுபதி தொடங்கி வைத்து போட்டிகளில் கலந்து கொண்ட மாணவிகளுக்கு பாராட்டு சான்றிதழ் வழங்கினார்.பின்னர் அமைச்சர் பேசும் போது,தமிழ்நாடு முதலமைச்சர் சிறுபா ண்மையினர் நலன் காப்பதற்காக மாநில சிறுபாண்மை நல ஆணை யத்தின் மூலமாக பல்வேறு நலத்திட்டங்களை வழங்கி சிறப்பாக செயல்படுத்தி வருகின்றார்.

    பேச்சுக் கலை என்பது எண்ணங்களை எல்லோரும் ஏற்றுக்கொள்ளும் வகையில் மற்றவர்கள் முன்பாக நல்ல வாதமாக எடுத்துவைப்பதற்கு சமமாகும். மாணவர்கள் ஒவ்வொருவரும் ஒரு ஆற்றல் கொண்டிருப்பா ர்கள். எழுத்தாற்றல், பேச்சாற்றல், இசை, நடனம், ஓவியம் போன்ற பல்வேறு ஆற்றல்களில் ஏதேனும் ஒரு ஆற்றலில் சிறந்தவர்களாக மாணவர்கள் இருப்பார்கள். தங்களிடம் உள்ள ஆற்றலை வளர்த்து கொண்டு எதிர் காலத்தில் சிறந்தவர்களாக, வல்லவர் களாக இந்த நாட்டிற்கு பயன்பட வேண்டும் என வாழ்த்துகிறேன்.

    இவ்வாறு அமைச்சர் தெரிவித்தார்.வருவாய் அலுவலர் மா.செல்வி தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் எம்.எல்.ஏ. முத்துராஜா, பிற்படுத்தப்பட்டோர மற்றும் சிறுபாண்மையினர் நல அலுவலர் அமீர் பாஷா, கல்லூரி முதல்வர் பா.புவனேஸ்வரி சிறுபாண்மையினர் ஆணைய மாவட்ட ஒருங்கிணைப்பாளர் பெனட் அந்தோணிராஜ் மற்றும் அலுவலர்கள் கலந்துகொண்டனர்.





    .




    ×