என் மலர்tooltip icon

    புதுக்கோட்டை

    • புதுக்கோட்டை மாவட்ட பயனாளிகள் இருப்பிடத்திற்கே சென்று சேரும்
    • கலெக்டர் கவிதா ராமு தொடங்கி வைத்தார்

    புதுக்கோட்டை,

    புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியரகத்தில், 'நகல் மின்னணு குடும்ப அட்டைகள் பயனாளிகளுக்கு அஞ்சல் வழியில் வழங்கும் திட்டத்தின்கீழ், கலெக்டர் கவிதா ராமு, தலைமை தபால் நிலைய அலுவலர் லலிதாவிடம் வழங்கினார்.பின்னர் கலெக்டர் தெரிவித்ததாவது. உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர், சட்டமன்றப் பேரவைக் கூட்டத்தில், உணவுப் பொருள் வழங்கல் துறைக்கான மானியக் கோரிக்கையின்போது 'அஞ்சல்வழியாக புதிய மின்னணு குடும்ப அட்டைகளை பயனாளிகளின் இருப்பிடத்திற்கே அனுப்பப்படும்" என்ற அறிக்கையினை வெளியிட்டார்.அதன்படி இந்திய அஞ்சல் துறையினருடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டு, நகல் குடும்ப அட்டையினை ஆன்லைன் முறையில் விண்ணப்பித்துள்ள நகல் குடும்ப அட்டையினை இந்திய அஞ்சல் துறை வாயிலாக அட்டைதாரர்களின் இல்லத்திற்கே நேரடியாக தபால் மூலம் அனுப்புவதற்கு உரிய மென்பொருள் வசதிகள் செய்யப்பட்டு, இத்திட்டமானது இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சரால் அறிமுகப்படுத்தப்பட்டது.இத்திட்டத்தின்கீழ், புதுக்கோட்டை மாவட்டம் மற்றும் வட்டத்தில் ஆன்லைன் முறையில் ரூ.45- அரசுக்கணக்கில் செலுத்திய 472 குடும்ப அட்டைதாரர்களுக்கு நகல் குடும்ப அட்டையினை இந்திய அஞ்சல் துறை வாயிலாக குடும்ப அட்டைதாரர்களின் இல்லத்திற்கே நேரடியாக தபால் மூலம் அனுப்பும் பணி தொடங்கி வைக்கப்பட்டுள்ளது. எனவே இந்த சேவையினை பொதுமக்கள் அனைவரும் பயன்படுத்திக்கொள்ளலாம் என தெரிவித்தார்.இந்நிகழ்வில், வழங்கல் அலுவலர் கணேசன், விற்பனை அலுவலர் நாகநாதன் மற்றும் அலுவலர்கள் பலர் கலந்துகொண்டனர்.

    • புதுக்கோட்டை அய்யங்காடு கிராமத்தில் நடைபெற்றது
    • டீம் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை சார்பில் மருத்துவமுகாம் நடத்தப்பட்டது

    புதுக்கோட்டை,

    முதலமைச்சரின் மருத்துவ காப்பீடு திட்டத்தின் கீழ் நோய் கண்டறியும் மற்றும் காய்ச்சல் சிறப்பு மருத்துவ முகாம், தமிழக முதலமைச்சரின் அறிவுறுத்தலின்படி, டீம் மருத்துவமனை சார்பாக புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி தாலுகா, அய்யங்காடு கிராமத்தில் நடைபெற்றது. டீம் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையின் நிர்வாக இயக்குநர் டாக்டர்.கே.எச்.சலீம் வழிகாட்டுதலின்படி நடைபெற்ற இந்த முகாமிற்கு அய்யங்காடு கிராம பஞ்சாயத்து தலைவர் ரெத்தினம் தலைமை தாங்கினார். வார்டு உறுப்பினர்கள் முன்னிலை வகித்தனர்.தற்போது நிலவி வரும் நோய்த் தொற்று பரவாமல் தடுக்கும் முன்னெச்செரிக்கை பற்றியும் டெங்கு, பன்றிக்காய்ச்சல், இன்ஃபுளுயன்சா போன்ற வைரஸ் காய்ச்சலால் ஏற்படும் சோர்வு, தலைவலி, அதிக உடல் வெப்பம், தொண்டைவலி, உடல்வலி, வாந்தி, வயிறுவலி, எலும்புவலி, மயக்கம் ஆகிய அறிகுறிகள் தென்பட்டால் உடனடியாக அருகில் உள்ள மருத்துவமனைகளை அணுகி பரிசோதனை செய்துகொண்டு முறையாக மருத்துவ ஆலோசனை பெற வேண்டும் என்றும் முகாமில் அறிவுறுத்தப்பட்டது. இக்காலக்கட்டத்தில் குடிநீரை காய்ச்சி பருக வேண்டும். கை, கால்களை சுத்தமாக அடிக்கடி சோப்பு போட்டு கழுவ வேண்டும். சத்துநிறைந்த பழங்கள், காய்கறிகளை உண்ண வேண்டும். அதிக எண்ணெயில் வறுத்து, பொரித்த உணவுகள் உட்கொள்வதை தவிர்க்க வேண்டும். மக்கள் கூட்டம் அதிகம் உள்ள இடங்களில் முககவசம் அணியவும், சிறிதளவு சமூக இடைவெளியுடன் இருந்தால் நோய்த் தொற்றிலிருந்து நம்மை பாதுகாக்கலாம் என்று மருத்துவர் விளக்கி கூறினார். டீம் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையின் இருக்கை மருத்துவர் சூரிய பிரகாஷ் அனைவருக்கும் மருத்துவ பரிசோதனையும், ஆலோசனையும் வழங்கினார். முகாமில் இரத்த அழுத்தம், உயரம், எடை, வெப்பத்தின் அளவு, இரத்த சர்க்கரை அளவு போன்ற மருத்துவ பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டது. இந்த முகாமில் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர். முகாம் ஏற்பாடுகளை டீம் மருத்துவமனையின் பொது மேலாளர் ஜோசப், செவிலியர் கண்காணிப்பாளர் யோகேஸ்வரி மற்றும் மக்கள் தொடர்பு அலுவலர் மதுபாலன் ஆகியோர் செய்திருந்தனர். முடிவில் திட்ட ஒருங்கிணைப்பாளர் பாண்டியராஜ் அனைவருக்கும் நன்றி கூறினார்.

    • ஆடு மேய்த்துக்கொண்டிருந்த போது பாம்பு கடித்தது
    • மருத்துவமனை கொண்டு செல்லும்முன்பே இறந்த பரிதாபம்

    புதுக்கோட்டை.

    இலுப்பூர் அருகே இருந்திராப்பட்டியை சேர்ந்தவர் சுரேஷ் (வயது 35). விவசாயி. இவர் அருகில் உள்ள தன்னங்குடி குளம் அருகே நேற்று முன்தினம் ஆடுமேய்த்து கொண்டிருந்தார். அப்போது சுரேசை பாம்பு கடித்துள்ளது. இதனையடுத்து அவரது உறவினர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக இலுப்பூர் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக மணப்பாறையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து சுரேஷ் மனைவி போதும் பொண்ணு கொடுத்த புகாரின் பேரில், இலுப்பூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • மோட்டார் சைக்கிள் மீது கார் மோதியதில் டெய்லர் பலியானார்
    • இதுகுறித்து கீரமங்கலம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பிச்சை வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

    புதுக்கோட்டை:

    ஆலங்குடி அருகே பனங்குளத்தை சேர்ந்தவர் திருமாறன் (வயது 45). டெய்லர். இவர், மோட்டார் சைக்கிளில் காசிம்புதுப்பேட்டை பஸ் நிறுத்தம் அருகில் சென்று கொண்டிருந்தார். அப்போது எதிரே சிலத்தூர் மாளிகை புஞ்சை பகுதியை சேர்ந்த ராசு மகன் செந்தில்குமார் (35) என்பவர் ஓட்டி வந்த கார், எதிர்பாராதவிதமாக திருமாறன் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் படுகாயமடைந்த அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி திருமாறன் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து திருமாறன் மனைவி ரதி (38) கொடுத்த புகாரின் பேரில், கீரமங்கலம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பிச்சை வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.



    • மோட்டார் சைக்கிளில் இருந்து தவறி விழுந்து வாலிபர் பலியானார்
    • இதுகுறித்து விராலிமலை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    புதுக்கோட்டை:

    விராலிமலை தெற்கு தெருவை சேர்ந்தவர் குமார் மகன் கேசவன் (வயது 22). இவர், விராலிமலை அருகே உள்ள தனியார் கம்பெனியில் வேலை பார்த்து வந்தார். இந்தநிலையில் நேற்று முன்தினம் இரவு கேசவன் தனது மோட்டார் சைக்கிளில் விராலிமலை தெப்பக்குளம் அருகே சென்று கொண்டிருந்தார். அப்போது மோட்டார் சைக்கிள் சாலையோர பள்ளத்தில் எதிர்பாராதவிதமாக இறங்கிய போது, அவர் தவறி கீழே விழுந்தார். இதில் படுகாயமடைந்த அவரை அருகில் உள்ளவர்கள் மீட்டு சிகிச்சைக்காக மணப்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள் கேசவன் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறினர். இதுகுறித்து விராலிமலை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.



    • திருமயம் ஊராட்சியில் கிராம சபை கூட்டம் நடைபெற்றது
    • கூட்டத்திற்கு ஊராட்சி மன்ற தலைவர் சிக்கந்தர் தலைமை தாங்கினார்.

    புதுக்கோட்டை:

    புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் ஊராட்சி ஒன்றியம் திருமயம் ஊராட்சியில் மே தினத்தையொட்டி சிறப்பு கிராம சபை கூட்டம் மணவாளன்கரையில் நடைபெற்றது. கூட்டத்திற்கு ஊராட்சி மன்ற தலைவர் சிக்கந்தர் தலைமை தாங்கினார்.அப்போது அவர் பேசுகையில் ஜல்ஜீவன் திட்டத்தில் நான் ஒப்பந்தகாரரிடம் லஞ்சம் கேட்டதாக ஒரு ஆடியோவை வெளியிட்டனர். அதே போல் யாரோ பேசியதை தனியார் தொலைகாட்சிகளிலும் தவறான அடிப்படையில், ஆதாரமற்ற பொய்யான, தகவலை ஒப்பந்தகாரர்கள் பரப்பி வருகின்றனர்.

    அவர்களுக்கு ஒன்று சொல்கிறேன். ஊராட்சி மன்ற அலுவலகம் தினந்தோறும் காலை 10 மணிக்கு துவங்கி மாலை 5 மணி வரை பொது மக்கள் பிரச்சினைகளை ஆராய்ந்த தீர்த்து வருகிறது. நாங்கள் வருவதற்கு முன்னர்இருந்த ஊராட்சி மன்றம் தற்போது எப்படி உள்ளது என்று 8 குக்கிராமங்களை உள்ளடக்கிய அனை வருக்கும் தெரியும். மேலும் என் மீது ஒரு பி.சி.ஆர். வழக்கு, 65 புகார்மனுக்கள் என அனைத்தையும் பார்த்து வருகிறேன்.

    என் மீது கூறப்பட்ட குற்றச்சாட்டை நிரூபித்தால் இங்கேயே புளியமரத்தில் தூக்குமாட்டி உயிரை விட தயார் என்றார். இந்த பேச்சு கூட்டத்தில் கலந்துகொண்டவர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியது. கூட்டத்தில் கூட்டுறவு சங்க தலைவர் சரவணன், மற்றும் மன்றம் உறுப்பினர்கள், காவல் துறையினர், ஆர்.ஐ., வி.ஏ.ஓ., பொதுமக்கள் ஏராளமானனோர்கலந்துக் கொண்டனர்.

    • அறந்தாங்கி நற்பவளக்குடி ஊராட்சி கிராமசபா கூட்டத்தில் 13 கோரிக்கைகள் மீது விவாதம் நடைபெற்றது
    • கூட்டம் ஊராட்சி மன்றத்தலைவர் சுப மணி மொழியன் தலைமையில் நடைபெற்றது

    அறந்தாங்கி:

    புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே நற்பவளக்குடி ஊராட்சியில் மே 1 உழைப்பாளர் தினத்தை முன்னிட்டு சிறப்பு கிராமசபைக் கூட்டம் நடைபெற்றது. ஊராட்சி மன்றத்தலைவர் சுப மணி மொழியன் தலைமையில் நடைபெற்றக் கூட்டத்தில் அப்பகுதி பொதுமக்கள் கலந்து கொண்டு தங்களது கோரிக்கைகளை முன்வைத்தனர். அப்போது சுத்தமான குடிநீர் விநியோகிப்பது, கிராம வளர்ச்சித் திட்டம், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டம், பிரதம மந்திரி கிராம சாலை திட்டம் உள்ளிட்ட 13 கோரிக்கைகள் மீது விவாதம் நடைபெற்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

    கூட்டத்தில் ஊராட்சி மன்றத் துணைத் தலைவர் சித்ரா, தலைமை ஆசிரியர்கள் சொக்கலிங்கம், வள்ளிக்கண்ணு, ஊராட்சி செயலர் கருப்பையா, ஊராட்சி மன்ற உறுப்பினர்கள் ஆதிமூலம், வீரையா , தேன்மொழி, சித்திரா, நவநீதம், சிஎல்எஃப் கவிதா, சமுதாய வள பயிற்றுனர் விடத்தி, மக்கள் நலப்பணியாளர் ராக்கம்மாள், பணித்தள பொறுப்பாளர் லெட்சுமி உள்ளிட்ட அரசு அலுவலர்கள் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

    • புதுக்கோட்டை திருபுவனவாசலில் மதுபானம் கடையை அகற்ற கோரி பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்
    • சீரான குடிநீர் வழங்கிடவும் வலியுறுத்தல்

    அறந்தாங்கி:

    புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார்கோவில் தாலுகா திருப்புனவாசல் பகுதியில் 150க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. இப்பகுதியில் நீண்ட நாட்களாக குடிநீர் தட்டுப்பாடு நிலவி வருவதாக கூறப்படுகிறது.மேலும் புகழ்பெற்ற மிகவும் பழமை வாய்ந்த சிவாலயங்களில் ஒன்றான விருதபுரீஸ்வரர் ஆலயத் தேர்வீதியில் மதுபானக்கடை ஒன்று செயல்பட்டு வருகிறது. இதனை அகற்ற வலியுறுத்தியும், குடிநீர் வசதி மற்றும் தேர் வீதி சாலைகளை செப்பனிட வலியுறுத்தியும் அப்பகுதி பொதுமக்கள் சம்பந்தப்பட்ட துறை அலுவலகத்தில் பலமுறை மனு அளித்ததாகவும், ஆனால் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது.

    எனவே அப்பகுதி பொதுமக்கள் மற்றும் பாஜக சார்பில் கண்டன ஆர்பாட்டம் நடைபெற்றது. பாஜக சிறுபான்மை அணி தேசிய செயலாளர் வேலூர் இப்ராஹிம் தலைமையில் நடைபெற்ற போராட்டத்தில் பெண்கள் காலிக்குடங்களுடன் கண்டன முழக்கமிட்டனர். அதனை தொடர்ந்து ஊர்வலமாக புறப்பட்ட அவர்கள் ஆலய வாசலுக்கு எதிராக உள்ள மதுபானக் கடையை அகற்ற கோரி கடையை முற்றுகையிட முயன்றனர். அப்போது காவல்துறையினர் பொதுமக்களை தடுத்து நிறுத்தியதையடுத்து ஆத்திரமடைந்த பொதுமக்கள் திடீர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    சுமார் ஒரு மணி நேர போராட்டத்திற்கு பிறகு அதிகாரிகள் அவர்களோடு பேச்சுவார்த்தை நடத்தி எதிர் வருகின்ற 15 தினங்களுக்குள் பொதுமக்கள் கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் என உறுதியளித்தனர்.அதிகாரிகளின் உறுதியளித்ததை தொடர்ந்து தற்காலிகமாக கலைந்து சென்றனர். 15 தினங்களுக்குள் கோரிக்கைகள் நிறைவேற்றாத பட்சத்தில் எதிர் வருகின்ற 18 ம் தேதி அன்று மீண்டும் போராட்டம் நடைபெறும் என்று தெரிவித்தனர். போராட்டத்தில் பாஜக தெற்கு ஒன்றியத் தலைவர் சேகர், மாவட்ட தலைவர் செல்வம் அழகப்பன்,கிழக்கு மாவட்ட பொது செயலாளர் முரளிதரன்,தெற்கு ஒன்றிய பொருளாளர் செல்வ விநாயகம் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

    • கந்தர்வகோட்டை அரசு பள்ளியில் நடைபெற்றது
    • வட்டார கல்வி அலுவலர் கொடியசைத்து தொடங்கி வைத்தார்

    கந்தர்வகோட்டை,

    புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை ஒன்றியத்தில் உள்ள அரசு பள்ளிகளில் மாணவர்களை சேர்க்கை குறித்த வாகன பிரச்சாரம் நடைபெற்றது. அக்கட்சிப்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் நடைபெற்ற மாணவர் சேர்க்கை பிரச்சார வாகனத்தை வட்டார கல்வி அலுவலர் வெங்கடேஸ்வரி கொடியசைத்து தொடங்கி வைத்தார். ஆடல் பாடல், விளையாட்டு செயல்பாடுகள் வாயிலாக பாடங்களை கற்றுக் கொள்ளும் என்னும் எழுத்தும் திட்டம், அனைத்து தொடக்கப் பள்ளிகளிலும் முதலமைச்சரின் காலை உணவு திட்டம், அரசு பள்ளி மாணவர்களுக்கு தொழிற்கல்வியில் 7.5 சதவீதம் இட ஒதுக்கீடு, அரசு பள்ளி மாணவர்களின் உயர்கல்விக்கான புதுமைப்பெண் திட்டத்தின் கீழ் மாதம்தோறும் ஆயிரம் ரூபாய் உதவித்தொகை உள்ளிட்ட பல்வேறு சிறப்பு திட்டங்களை தமிழ்நாடு அரசு செயல்படுத்தி வருகிறது. பெற்றோர்கள் அனைவரும் தங்களுடைய குழந்தைகளை அரசு பள்ளியில் சேர்க்க வேண்டும் என வலியுறுத்தி இந்த பிரச்சாரம் மேற்கொள்ளப்பட்டது. இதில் வட்டார வள மைய மேற்பார்வையாளர் பிரகாஷ், ஆசிரியர் பயிற்றுனர் பாரதிதாசன், சுரேஷ்குமார், இல்லம் தேடி கல்வித் திட்ட ஒருங்கிணைப்பாளர் ரஹமத்துல்லா மற்றும் பள்ளி மேலாண்மைகுழு, பெற்றோர் ஆசிரியர் கழகத்தினர் மற்றும் ஆசிரியர்கள் கலந்து கொண்டனர். முடிவில் தலைமை ஆசிரியர் தமிழ்ச்செல்வி நன்றி கூறினார்.

    • புதுக்கோட்டை கறம்பக்குடியில இலவச யோகா பயிற்சி
    • அமெரிக்க பல்கலைக்கழக பேராசிரியர் பங்கேற்பு

    கறம்பக்குடி

    புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி பல்லவராயர் மணி மண்டபக்குழு மற்றும் பன்னீர் தேவர் அறக்கட்டளை இணைந்து யோகா பயிற்சி பட்டறையை கறம்பக்குடியில் தனியார் மண்டபத்தில் துவங்கினர். நிகழ்ச்சியை பன்னீர் தேவர் அறக்கட்டளையின் செயலாளர் ப கருப்பையா துவங்கி வைத்தார்.. இதில் யோகாவில் முனைவர் பட்டம் பெற்று அமெரிக்காவில் உள்ள கரோலினா பல்கலைக்கழகத்தில் பேராசிரியராக பணியாற்றி வரும் டாக்டர் சுந்தர் பாலசுப்பிரமணியன் கலந்து கொண்டு யோகாவின் பயிற்சி முறை அதன் வகைப்பாடு மற்றும் செயல் விளக்கத்தை எடுத்து கூறினார். மேலும் திருமூலர் எழுதிய திருமந்திர நூலில் உள்ள யோகாவின் வழிமுறை மற்றும் நேர கால அளவுகள் படி பயிற்சியை செய்து காண்பித்து விளக்கினார். இந்த பயிற்சியின் மூலம் மனிதர்களுக்கு உண்டாகும் சுவாசக் கோளாறு ரத்த அழுத்தம் மற்றும் சர்க்கரை நோய் பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் பயிற்சியையும் செய்து காண்பித்தார்.முன்னதாக நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அனைவரையும் வட்டார காங்கிரஸ் கமிட்டி தலைவர் ஞானசேகரன் வரவேற்று பேசினார். இந்நிகழ்ச்சியில் ஓய்வு பெற்ற அலுவலர் சங்கத்தின் மாநிலத் துணைத் தலைவர் சிவ திருமேனிநாதன் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் ராஜ்குமார் புதுக்கோட்டை மாவட்ட சன்மார்க்க சங்க செயலாளர் இரா முத்தையா, ஆசிரியர் அப்பு, தட்சிணாமூர்த்தி, விஜயபாஸ்கர் ஆகியோர் கலந்து கொண்டனர். மேலும் 200க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்டனர் முடிவில் திருமாறன் நன்றி கூறினார்.

    • 120க்கும் மேற்பட்ட மாணவிகள் பயிற்சி
    • 5வது ஆண்டு தகுதிப்பட்டை வழங்கும் விழா

    அறந்தாங்கி,

    ஆவுடையார்கோவில் பகுதியில் தக்ஸ்னாஸ் மார்ஷியஸ் ஆர்ட்ஸ் என்ற அமைப்பின் சார்பில் கராத்தே சிலம்பம் போன்ற பயிற்சிகள் அளிக்கப்பட்டு வருகிறது. இதில் அப்பகுதியை சுற்றியுள்ள 120க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர்கள் பயிற்சி பெற்று வருகின்றனர்.பயிற்சி பெற்று வரும் மாணவ, மாணவியர்களுக்கு ஆண்டுக்கு ஒரு முறை தகுதி பட்டை வழங்கப்படுகிறது. வெள்ளை, மஞ்சள், பச்சை, ஊதா, காவி, கருப்பு ஆகிய நிறங்களில் தகுதியின் அடிப்படையில் தகுதி பட்டை வழங்கப்படுகிறது. அந்த வகையில் 5-வது ஆண்டாக நடைபெற்ற விழாவில் பள்ளித்தாளாளர் அருளரசு தலைமை வகித்தார். தக்ஸ்னாஸ் மார்ஷியஸ் ஆர்ட்ஸ் அமைப்பின் நிறுவனர் பாலசுப்பிரமணியன் முன்னிலை வகித்து தகுதிப்பட்டைகளை வழங்கினார்.

    நிகழ்ச்சியில் பிராங்கோ எடின், தேர்வு நடத்துனர் சண்முகம், ஒன்றியத் தலைமை பயிற்சியாளர் சரவணன், சிறப்பு அழைப்பாளர்கள் சோமசுந்தரம், ராசப்பா, ஆனந்த், ரமேஷ், மாணவ, மாணவிகள் மற்றும் பெற்றோர்கள் கலந்து கொண்டனர்.

    • 14 மொழிகளில் தொகுக்கப்பட்ட பிரதமரின் உரை டிஜிட்டல் புத்தகமாக வெளியீடு
    • ஏவிசிசி கணேசன் முன்னிலையில் டாக்டர் ஆர்.ஜி.ஆனந்த் வெளியிட்டார்

    புதுக்கோட்டை,

    பாரத பிரதமர் நரேந்திர மோடியின் நூறாவது மனதின் குரல் உரையானது, புதுக்கோட்டை திலகர் திடல் ஏவிசிசி பள்ளி வளாகத்தில் நேரடியாக தொலைக்காட்சி மூலம் ஒளிபரப்பப்பட்டது. தேசிய குழந்தைகள் உரிமை பாதுகாப்பு ஆணைய உறுப்பினர் டாக்டர் ஆர்.ஜி.ஆனந்த் தலைமையில் நடைபெற்ற இந்த ஒளிபரப்பு நிகழ்ச்சியில் நூற்றுக்கும் மேற்பட்ட பள்ளி, கல்லூரி மாணவர்கள், தொழிலாளிகள், வியாபாரிகள், சமூக சேவகர்கள் என அனைத்து தரப்பு பொதுமக்களும் கலந்து கொண்டனர். பிரதமரின் நூறாவது உரையாடலுக்கு சிறப்பு சேர்க்கும் வகையில், 14 மொழிகளில் தொகுக்கப்பட்ட பிரதமரின் மன் கி பாத் டிஜிட்டல் புத்தகத்தை பாரதிய ஜனதா கட்சி மாவட்ட பொதுச் செயலாளர் ஏவிசிசி கணேசன் முன்னிலையில், டாக்டர் ஆர்.ஜி.ஆனந்த் வெளியிட்டார். முதல் பிரதியை பாஜக மாவட்ட பார்வையாளர் பழ.செல்வம், நகர தலைவர்கள் லெட்சுமணன், சக்திவேல், அணிப்பிரிவு மாவட்ட தலைவர்கள் சுப்பிரமணியன், மணிராஜன் மற்றும் நகர நிர்வாகிகள் பெற்றுக் கொண்டனர்.

    ×