என் மலர்
பெரம்பலூர்
பெரம்பலூர் லாரி டிரைவர் திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் தாலுகா, பெரும்பாக்கம் இந்திரா நகரை சேர்ந்தவர் சந்திரன். இவரது மகன் சின்னதம்பி (வயது 33), லாரி டிரைவர். இவர் பெரம்பலூர் மாவட்டம், விஜயகோபாலபுரத்தில் உள்ள தனியார் டயர் தொழிற்சாலையில் சரக்கு ஏற்றுவதற்காக நேற்று முன்தினம் மாலை திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் சிறுவாச்சூரில் பெட்ரோல்-டீசல் விற்பனை நிலையம் அருகே லாரியை நிறுத்தி விட்டு காத்திருந்தார்.அப்போது அங்கு வந்த 3 வாலிபர்கள் சின்னதம்பியை அரிவாளை காட்டி மிரட்டி, அவரது சட்டைப்பையில் இருந்த ரூ.1,000-ஐ பறித்து சென்றனர்.இந்த சம்பவம் தொடர்பாக சின்னதம்பி பெரம்பலூர் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில் சின்னதம்பியிடம் பணம் பறித்தது பெரம்பலூர்-ஆலம்பாடி ரோடு, சமத்துவபுரத்தை சேர்ந்த ராஜாவின் மகன் சந்துரு (23), பெரம்பலூர்-ஆலம்பாடி ரோடு, புதிய காலனியை சோ்ந்த தனசேகரின் மகன் விஷ்ணு (19), பாடாலூர் அண்ணா நகரை சேர்ந்த சதக்கத்துல்லாவின் மகன் சாதிக் பாட்சா (22) என்பது தெரியவந்தது.இதையடுத்து தலைமறைவாக இருந்த சந்துரு, விஷ்ணுவை போலீசார் நேற்று கைது செய்து சிறையில் அடைத்தனர். தலைமறைவாக உள்ள சாதிக் பாட்ஷாவை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
- பெரம்பலூர் சிற்பிக்கு பாராட்டு
- விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு 2 இஞ்ச் உயரத்தில் விரிந்த காதுகளுடன் விநாயகர் மர சிற்பம் அழகாக செதுக்கியுள்ளார்
பெரம்பலூர்,-
பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டை தாலுகா அரும்பாவூர் அருகே உள்ளது தழுதாழை கிராமம். இது மரச் சிற்பத்திற்கு பெயர் பெற்றது. இங்கு நூற்றுக்கும் மேற்பட்ட மர சிற்ப கலைஞர்கள் வசித்து வருகின்றனர்.தமிழகத்தின் பிரம்மாண்ட தேர்கள், தெய்வச் சிலைகள், அலங்கார கதவுகள் கலை நயத்துடன் நேர்த்தியாக வடிவமைக்கிறார்கள்.இங்கு உற்பத்தியாகும் சிலைகள் வெளிமாநிலங்களுக்கு மட்டும் அல்லாமல் வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்படுகிறது.கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பு எங்க தயாரித்த மர சிற்பங்கள் அமெரிக்காவின் பாஸ்டன் நகரில் நடந்த கைவினை பொருட்கள் கண்காட்சியில் இடம்பெற்றது.தேக்கு இலுப்பை வாகை மாவலிங்கை மரங்களில் இந்த கலைஞர்களால் செதுக்கப்படும் தெய்வங்களின் சிற்பங்கள் மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது.அரை அடி முதல் ஆறடி உயரமுள்ள சிற்பங்களை வடிவமைக்கின்றனர்.இந்த மாவட்டத்தின் அடையாளமாக திகழும் மரச் சிற்பங்களுக்கு கடந்த 2021ல் மத்திய அரசு புவிசார் குறியீடு வழங்கியது.சமீப காலமாக கையளவு களில் செதுக்கப்படும் கடவுள்கள் சிற்பங்கள் மற்றும் திருவள்ளுவர் சிற்பங்களுக்கு இளைஞர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.தங்களின் இரு சக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்களில் கீர் செயின்களில் சிற்பங்களை மாட்டி விடுகிறார்கள்.இந்த கலைஞர்களில் சாமிநாதன் வயது 37 என்பவர் பூவரசு மரத்தில் கடவுள்கள் சிலைகளை செதுக்கி பாராட்டு பெற்றார்.சமீபத்தில் வெட்கப்படும் ஒரு பெண்ணின் முகத்தை தத்ரூபமாக வடிவமைத்திருந்தார்.அது மட்டுமில்லாமல் ஒன்றே முக்கால் அடியில் கருங்காலி மரத்தில் வராகி அம்மனை வடிவமைத்தார்.விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு அந்த விழாவை வரவேற்கும் விதமாக சாமிநாதன் 2 இஞ்ச் உயரத்தில் விரிந்த காதுகளுடன் அழகாக செதுக்கியுள்ளார்.இதனை பூஜை அறையில் வைத்து வழிபடலாம். மாட்டிக் கொள்ளலாம். 3 நாட்களில் இந்த சிலையை வடிவமைத்ததாக சாமிநாதன் கூறினார்.
- தமிழகத்தின் பிரம்மாண்ட தேர்கள், தெய்வச் சிலைகள், அலங்கார கதவுகள் கலைநயத்துடன் நேர்த்தியாக வடிவமைக்கிறார்கள்.
- சமீபத்தில் வெட்கப்படும் ஒரு பெண்ணின் முகத்தை தத்ரூபமாக வடிவமைத்திருந்தார்.
பெரம்பலூர்:
பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டை தாலுகா அரும்பாவூர் அருகே உள்ளது தழுதாழை கிராமம். இது மரச்சிற்பத்திற்கு பெயர் பெற்றது. இங்கு நூற்றுக்கும் மேற்பட்ட மர சிற்ப கலைஞர்கள் வசித்து வருகின்றனர்.
தமிழகத்தின் பிரம்மாண்ட தேர்கள், தெய்வச் சிலைகள், அலங்கார கதவுகள் கலைநயத்துடன் நேர்த்தியாக வடிவமைக்கிறார்கள்.
இங்கு உற்பத்தியாகும் சிலைகள் வெளிமாநிலங்களுக்கு மட்டும் அல்லாமல் வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்படுகிறது.
கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பு இங்க தயாரித்த மர சிற்பங்கள் அமெரிக்காவின் பாஸ்டன் நகரில் நடந்த கைவினை பொருட்கள் கண்காட்சியில் இடம் பெற்றது.
தேக்கு இலுப்பை வாகை மாவலிங்கை மரங்களில் இந்த கலைஞர்களால் செதுக்கப்படும் தெய்வங்களின் சிற்பங்கள் மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது.
அரை அடி முதல் ஆறடி உயரமுள்ள சிற்பங்களை வடிவமைக்கின்றனர்.
இந்த மாவட்டத்தின் அடையாளமாக திகழும் மரச் சிற்பங்களுக்கு கடந்த 2021ல் மத்திய அரசு புவிசார் குறியீடு வழங்கியது.
சமீப காலமாக கையளவுகளில் செதுக்கப்படும் கடவுள்கள் சிற்பங்கள் மற்றும் திருவள்ளுவர் சிற்பங்களுக்கு இளைஞர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.
தங்களின் இரு சக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்களில் கீ செயின்களில் சிற்பங்களை மாட்டி விடுகிறார்கள்.
இந்த கலைஞர்களில் சாமிநாதன் (வயது 37) என்பவர் பூவரசு மரத்தில் கடவுள்கள் சிலைகளை செதுக்கி பாராட்டு பெற்றார்.
சமீபத்தில் வெட்கப்படும் ஒரு பெண்ணின் முகத்தை தத்ரூபமாக வடிவமைத்திருந்தார்.
அது மட்டுமில்லாமல் ஒன்றே முக்கால் அடியில் கருங்காலி மரத்தில் வராகி அம்மனை வடிவமைத்தார்.
விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு அந்த விழாவை வரவேற்கும் விதமாக சாமிநாதன் 2 இஞ்ச் உயரத்தில் விரிந்த காதுகளுடன் அழகாக செதுக்கியுள்ளார்.
இதனை பூஜை அறையில் வைத்து வழிபடலாம். மாட்டிக்கொள்ளலாம். 3 நாட்களில் இந்த சிலையை வடிவமைத்ததாக சாமிநாதன் கூறினார்.
- பெரம்பலூர் மங்களமேடு, குன்னம் பகுதியில் நாளை மின்நிறுத்தம் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.
- பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதாக உதவி செயற்பொறியாளர் தகவல்
பெரம்பலூர்,
மங்களமேடு: தமிழ்நாடு மின்சார வாரியத்தின் பெரம்பலூர் மாவட்டம், மங்களமேடு துணை மின் நிலையத்தில் நாளை (திங்கட்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறவுள்ளது. எனவே இங்கிருந்து மின்சாரம் வினியோகம் பெறும் பகுதிகளான ரஞ்சன்குடி, பெருமத்தூர், மங்களமேடு, தேவையூர், நகரம், நமையூர், முருக்கன்குடி. சின்னாறு, எறையூர், அயன்பேரையூர், அகரம், வி.களத்தூர், பசும்பலூர், திருவாளந்துறை, பிம்பலூர், மறவநத்தம், தைக்கால், நன்னை, அந்தூர், லெப்பைக்குடிகாடு, திருமாந்துறை, அத்தியூர், பென்னகோணம், சு.ஆடுதுறை, கழனிவாசல், ஒகளூர், குன்னம், வேப்பூர், நன்னை, ஓலைப்பாடி எழுமூர், வாலிகண்டபுரம், மேட்டுப்பாளையம், கே.புதூர் ஆகிய பகுதிகளில் நாளை காலை 9 மணி முதல் பராமரிப்பு பணிகள் முடியும் வரை மின்சாரம் இருக்காது என்று லெப்பைக்குடிகாடு உதவி செயற்பொறியாளர் சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
- சப்-இன்ஸ்பெக்டர் தேர்வு 6 தேர்வு மையங்களில் நடைபெற்றது
- 2584 பேர் தேர்வெழுதிய நிலையில், 571 பேர் தேர்வெழுத வரவில்லை
பெரம்பலூரில்
தமிழக காவல்துறையில் 750 போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்கள் புதிதாக தேர்வு செய்யப்படுவதற்கான எழுத்து தேர்வு தமிழக சீருடை பணியாளர் தேர்வாணையம் மூலம் நேற்று தமிழகம் முழுவதும் நடந்தது. இதில் நேற்று காலையில் முதன்மை எழுத்து தேர்வும், மாலையில் தமிழ் மொழிக்கான தகுதி தேர்வும் நடந்தது. அதன்படி இந்த தேர்வு பெரம்பலூர் மாவட்டத்தில் பெரம்பலூர்-துறையூர் நெடுஞ்சாலையில் உள்ள தனலட்சுமி சீனிவாசன் கல்விக்குழும வளாகத்தில் உள்ள கல்லூரிகளில் 6 தேர்வு மையங்களில் 158 அறைகளில் நடந்தது. இந்த தேர்வினை எழுதுவதற்காக பெரம்பலூர், அரியலூர் உள்ளிட்ட மாவட்டங்களை சேர்ந்த 2,311 ஆண் தேர்வர்களும், 844 பெண் தேர்வர்களும் என மொத்தம் 3,155 பேர் விண்ணப்பித்திருந்தனர்.
காலை, மாலை நடந்த தேர்வினை 1,920 ஆண்களும், 664 பெண்களும் என மொத்தம் 2,584 பேர் எழுதினர். 391 ஆண்களும், 180 பெண்களும் என மொத்தம் 571 பேர் தேர்வு எழுத வரவில்லை. தேர்வினை சென்னை தலைமையிட போலீஸ் ஐ.ஜி. (நலன்) நஜ்மல் ஹோடா, மதுரை மண்டல மது விலக்கு அமலாக்க பிரிவு போலீஸ் சூப்பிரண்டு சுஜீத்குமார் ஆகியோர் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தனர். தேர்வு நடைபெற்ற பகுதியில் பாதுகாப்பு பணியில் மொத்தம் 375 போலீசார் ஈடுபட்டனர்.
- பெரம்பலூரில் பணமோசடியில் ஈடுபட்டவர் கைது செய்யப்பட்டு உள்ளார்
- வீட்டுக்கடன் வாங்கி தருவதாக பலரிடம் மோசடி
பெரம்பலூர்
பெரம்பலூர் பட்டணங்குறிச்சியை சேர்ந்த பரமசிவத்தின் மகன் மணிவேல். இவர் செந்துறை மேலப்பட்டி சிறுகளத்தூரை சேர்ந்த இளவரசனிடம்(வயது 53) அவரது தொழிலை அபிவிருத்தி செய்ய வங்கிக்கடன் வாங்கி தருவதாக கூறி, கடந்த 9.1.2022 அன்று ரூ.80 ஆயிரம் பெற்றுள்ளார். இளவரசன், பார்வதி, பிரியா, ஆண்டாள், ராமச்சந்திரன், ராஜா உள்ளிட்ட 12 பேரிடம் வீட்டுக்கடன் வாங்கி தருவதாக கூறி ரூ.40 ஆயிரம் முதல் ரூ.1 லட்சத்து 70 ஆயிரம் வரை என மொத்தம் ரூ.10 லட்சத்து 70 ஆயிரம் பெற்றுள்ளார். ஆனால் அவர் கூறியபடி கடன் பெற்றுத்தரவில்லை என்று தெரிகிறது. இதனால் தான் ஏமாற்றப்பட்டதை அறிந்த இளவரசன் இது குறித்து அரியலூர் குற்றப்பிரிவு போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் ேபாலீசார் வழக்குப்பதிவு செய்து, அவரை தேடி வந்தனர். இந்நிலையில் அவர் ஈரோடு மாவட்டத்தில் இருப்பதாக தெரியவந்தது. இதையடுத்து அங்கு சென்ற போலீசார், மணிவேலை கைது செய்து விசாரணை மேற்கொண்டனர். பின்னர் அவரை செந்துறை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
- பெரம்பலூரில் நடந்த கூட்டத்தில் தமிழக ஆசிரியர் கூட்டணி மாவட்ட கிளை நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டு உள்ளனர்
- நிர்வாகிகளாக தேர்தெடுக்கப்பட்டவர்களுக்கு சான்றிதழ் வழங்கி பாராட்டு
பெரம்பலூர்,
பெரம்பலூரில் தமிழக ஆசிரியர் கூட்டணி வருவாய் மாவட்ட கிளை நிர்வாகிகள் தேர்தல் நடந்தது. பெரம்பலூர் முத்து நகர் ஊராட்சி ஒன்றிய தொடக்க பள்ளியில் நடந்த நிர்வாகிகள் தேர்வு கூட்டத்திற்கு மாவட்ட தலைவர் இளையராஜா தலைமை வகித்தார். செயலாளர் ராஜ்குமார், பொருளாளர் ராஜா ஆகியோர் முன்னிலை வகித்தனர். கருணாநிதி தேர்தல் ஆணையாளர் அரியலூர் கல்வி மாவட்ட செயலாளர் கருணாநிதி தேர்தல் ஆணையாளராகவும், தேர்தல் இணை ஆணையராக செந்துறை கல்வி மாவட்ட செயலாளர் ராமநாதன் ஆகியோர் பணியாற்றினர். ஐபெட்டோ அகில இந்திய பொதுசெயலாளர் அண்ணாமலை, மாநில தலைவர் நம்பிராஜ் ஆகியோர் சிறப்பு பார்வையாளர்களாக கலந்து கொண்டனர். இந்த தேர்தலில் தமிழக ஆசிரியர் கூட்டணியின் பெரம்பலூர் மாவட்ட தலைவராக செல்வராஜ், மாவட்ட செயலாளராக துரைராஜ் , மாவட்ட பொருளாளராக செல்வதுரை, மாவட்ட மகளிரணி செயலாளராக அமிர்தம், தலைமை நிலைய செயலாளராக துரைராஜ், மாவட்ட துணை தலைவர்களாக சீனிவாசன், மாலாரோஸ்லின், மாவட்ட துணை செயலாளர்களாக சந்திரகுமார், அகிலா, தணிக்கைகுழு உறுப்பினராக முருகேசன், தங்கதுரை ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டனர். பின்னர் தேர்தல் வெற்றிப்பெற்றவர்களுக்கு ஐபெட்டோ பொதுசெயலாளர் அண்ணாமலை சான்றிதழ் வழங்கி பாராட்டி பேசினார்.இதில் சங்க நிர்வாகிகள், ஆசிரியர்கள் பலர் கலந்துகொண்டனர்.
- பெரம்பலூரில் கணவரை சேர்த்து வைக்க கோரி தர்ணாவில் ஈடுபட்ட பெண் மீது தாக்குதல் நடைபெற்றது
- மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டு உள்ளார்
பெரம்பலூர்
பெரம்பலூர் புறநகர் பகுதியான துறைமங்கலம், பங்களா பஸ் நிறுத்தம், பள்ளிவாசல் தெருவை சேர்ந்தவர் வினோத்குமார். சிவில் என்ஜினீயர். இவரது மனைவி மங்கையற்கரசி (வயது 32). இவர்களுக்கு குழந்தை இல்லை. மேலும் அவர்கள் பிரிந்து வாழ்வதாக தெரிகிறது. இதையடுத்து மங்கையற்கரசி பெரம்பலூர்-எளம்பலூர் ரோடு, ரோஸ் நகரில் உள்ள வினோத்குமாரின் தங்கையான செல்வி என்பவரது வீட்டிற்கு சென்று, தனது கணவரை தன்னுடன் சேர்த்து வைக்கக்கோரி திடீரென்று வீட்டின் முன்பு அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டார்.
இதனால் அங்கிருந்தவர்களுடன் வாக்கு வாதம் ஏற்பட்டு உள்ளது. அப்போது மங்கையற்கரசியை கல்லால் தாக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இதில் மங்கையற்கரசியின் தலையின் காயம் ஏற்பட்டு ரத்தம் கொட்டியது.
இதையடுத்து மங்கையற்கரசி பெரம்பலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்ந்தார். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த பெரம்பலூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
- பெரம்பலூர் தனலட்சுமி சீனிவாசன் பல்கலைகழகத்தில் ஓணம் பண்டிகை கொண்டாடப்பட்டது.
- முதல்வர்கள், டீன்கள், பேராசிரியர்கள் மற்றும் மாணவ,மாணவிகள் கலந்து கொண்டனர்
பெரம்பலூர்,
பெரம்பலூர் தனலட்சுமி சீனிவாசன் பல்கலைகழகத்தில் ஓணம் பண்டிகை நேற்று கொண்டாடப்பட்டது.
விழாவிற்கு பல்கலைக்கழக வேந்தர் சீனிவாசன் தலைமை வகித்து பேசுகையில்,அளிக்கிறது. ஓணம் என்பது பண்டிகை மட்டுமல்ல, இது கலாச்சாரம், பாரம்பரியம், ஒற்றுமை மற்றும் ஒற்றுமை உணர்வின் கொண்டாட்டம். கேரள மாநிலத்தில் அபரிமிதமான விளைச்சலைக் கொண்டாடவும், புகழ்பெற்ற மன்னன் மகாபலிக்கு மரியாதை செலுத்தவும் குடும்பங்கள் ஒன்று கூடும் நேரம் இது. ஒன்றுபட்ட சமூகமாக ஒன்றிணைவோம். மன்னன் மகாபலி செய்தது போல், தேவைப்படுபவர்களுக்கு உதவிக்கரம் நீட்டுவோம்.இந்த திருவிழாவானது சடங்குகள், சுவையான விருந்துகள் மற்றும் வண்ணமயமான அலங்காரங்களுடன், வேற்றுமையில் ஒற்றுமையை பறைசாற்றப்படுகிறது. கேரளாவின் "அறுவடைத் திருநாள்" என்று அழைக்கப்படும் ஓணம் பண்டிகையின் அருமை பெருமைகள் பல உண்டு. அதில் குறிப்பாக, ஆவணி மாதத்தின் முதல் நாளன்று, "அத்தப்பூ" கோலம் போட்டு இந்த பண்டிகை சீரும் சிறப்புமாகக் கொண்டாடப்படுகிறது என தெரிவித்தார்.விழாவில் செண்டை மேளம் முழங்க, கதகளி நடனத்துடன், யானை ஊர்வலத்துடன் கலைநிகழ்ச்சிகள், கேரளா பாரம்பரிய நடன நிகழ்ச்சிகள், மாணவிகளின் திருவாதிரை களி நடனம் ஆகியவை நடந்தது. நிகழ்ச்சியில் தனலட்சுமி சீனிவாசன் கல்வி குழும செயலாளர் நீலராஜ், தனலட்சுமி சீனிவாசன் மருத்துவகல்லூரி நிர்வாக இயக்குனர்கள் நிவானி , நிர்மல் மற்றும்முதல்வர்கள், டீன்கள், பேராசிரியர்கள் மற்றும் மாணவ,மாணவிகள் கலந்து கொண்டனர்.
- பெரம்பலூரில் சப்-இன்ஸ்பெக்டர் பணிக்கான எழுத்து தேர்வு நடைபெற்றது
- பெரம்பலூரில் 6 தேர்வு மையங்களில் நடைபெற்றது
பெரம்பலூர்,
தமிழக போலீஸ் துறையில் காலியாக உள்ள சப்-இன்ஸ்பெக்டர் பணியிடங்கள் மற்றும் தீயணைப்பு மீட்பு பணிகள் துறையில் நிலைய அதிகாரி பணியிடங்கள் ஆகியவற்றை நிரப்புவதற்கான தேர்வுகள் சீருடை பணியாளர் தேர்வாணையத்தின் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான தேர்வுகள் இன்று நடைபெற்றது. அதன்படி பெரம்பலூர் மாவட்டத்தில் மேற்கண்ட தேர்வினை எழுத 3 ஆயிரத்து 155 பேர் விண்ணப்பித்துள்ளனர். இவர்களுக்கான தேர்வுகள் பெரம்பலூரில் 6 தேர்வு மையங்களில் இன்று நடைபெற்றது. காலை 10 மணி முதல் 12.30 மணி வரை எழுத்து தேர்வும், மதியம் 3.30 முதல் 5.10 வரை தமிழ் தகுதி தேர்வும் நடைபெற்றது. பெரம்பலூர்-துறையூர் சாலையில் உள்ள தனலட்சுமி சீனிவாசன் கல்லூரியில் 6 தேர்வு மையங்களில், 158 அறைகளில் தேர்வுகள் நடைபெற்றது.
- பெரம்பலூர் கோர்ட் முன்பாக வக்கீல்களை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்
- சட்டங்களின் பெயர்களை ஹிந்தியில் பெயர் மாற்றம் செய்யப்பட்டதை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது
பெரம்பலூர்,
பெரம்பலூர் அட்வகேட் அசோசியேசன் வக்கீல்கள் இந்திய சாட்சிய சட்டம், இந்திய தண்டனை சட்டம், குற்றவியல் விசாரணை முறைச்சட்டம் ஆகிய முப்பெரும் சட்டங்களின் பெயர்களை ஹிந்தியில் பெயர் மாற்றம் செய்து தாக்கல் செய்த மசோதாவை மத்திய அரசு திரும்ப பெற வலியுறுத்தி நேற்று ஒரு நாள் கோர்ட் பணியை புறக்கணிப்பு செய்தனர். இக்கோரிக்கையை நிறைவேற்ற வலியுறுத்தி பெரம்பலூர் கோர்ட் வளாகம் முன்பு சங்க தலைவர் மணிவண்ணன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடத்தினர். இதே கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி பார் அசோசிஷேசன் சார்பில் வக்கீல் பேராமுருகையன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில் வக்கீல்கள் பலர் கலந்துகொண்டனர்.
- அரபு நாட்டில் மூளைக்காய்ச்சல் பாதிக்கப்பட்ட பெரம்பலூர் வாலிபர் சென்னை அழைத்து வந்து சிகிச்சை அளிக்கப்படுகிறது
- தொண்டையில் ஓட்டை போடப்பட்டு அதன் மூலம் திரவ உணவு வழங்கப்படுகின்றன.
பெரம்பலூர்,
பெரம்பலூர் மாவட்டம் லப்பைக்குடிகாடு பகுதியை சேர்ந்தவர் ஷபியுல்லா அப்துல். இவர் கடந்த 2018-ம் ஆண்டில் அரபு நாட்டிற்கு வேலைக்கு சென்றார்.அங்கு தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்த அவர், கடந்த மே மாதம் மூளைக்காய்ச்சலால் பாதிக்கப்பட்டு அதற்கு அங்கேயே சிகிச்சை எடுத்து வந்தார். ஆனால் அவரை மீட்டு தமிழகத்தில் சிகிச்சை அளிக்க வேண்டும் என்று குடும்பதினர் பெரம்பலூர் கலெக்டர் மற்றும் முதல்வர் தனிப்பிரிவிற்கும் கோரிக்கை மனு அளித்தனர்.அதன்பேரில் தமிழக அதிகாரிகள் அங்குள்ள இந்திய தூதரக அதிகாரிகளை தொடர்பு கொண்டு அவர்கள் உதவியுடன் ஷபியுல்லாவை சென்னைக்கு அழைத்து வந்தனர்.விமான நிலையத்தில் தயாராக இருந்த ஆம்புலன்ஸ் மூலம் ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனைக்கு அவர் கொண்டு வரப்பட்டு அவசர சிக்சை பிரிவில் சேர்க்கப்பட்டார். அங்கு அவருக்கு தொடர்ந்து சிகிச்சைகள் அளிக்கப்பட்டு வருகிறது.ஷபியுல்லாவுக்கு தொண்டையில் ஓட்டை போடப்பட்டு அதன் மூலம் திரவ உணவு வழங்கப்படுகின்றன. அவரது உடல் நிலையை டாக்டர்கள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.






