என் மலர்
பெரம்பலூர்
பெரம்பலூர்
பெரம்பலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஷ்யாம்ளா தேவியின் உத்தரவின் பேரில் பெண் போலீசாருக்கும், போலீசாரின் குடும்பங்களை சேர்ந்த பெண்களுக்கும் புற்றுநோய் கண்டறியும் சிறப்பு மருத்துவ முகாம் மாவட்ட ஆயுதப்படை வளாகத்தில் நேற்று நடந்தது. முகாமில் டாக்டர்கள் மற்றும் செவிலியர்கள் பெண் போலீசாருக்கும், போலீசாரின் குடும்பங்களை சேர்ந்த பெண்களுக்கும் உடல் பரிசோதனை, மார்பக புற்றுநோய் கண்டறியும் பரிசோதனையை செய்தனர். முகாமில் 76 பெண் போலீசாரும், 71 போலீசாரின் குடும்பங்களை சேர்ந்த பெண்களும் என மொத்தம் 147 பேர் பயனடைந்தனர்.
பெரம்பலூர்:
பெரம்பலூரில் நெடுஞ்சாலை துறை சாலை பணியாளர் சங்கம் சார்பில் கவன ஈர்ப்பு கோட்ட பொதுக்குழு கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு மாவட்ட தலைவர் ராஜ்குமார் தலைமை வகித்தார். மாவட்ட இணை செயலாளர் மணிவேல், மாவட்ட துணை தலைவர் ராமநாயகம், மாவட்ட இணை செயலாளர் ராஜி, மாநில செயற்குழு உறுப்பினர் சுப்ரமணியன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாநில செயலாளர் பழனிசாமி, மாநில துணை தலைவர் சிங்கராயன், மாவட்ட செயலாளர் சுப்ரமணியன் ஆகியோர் கோரிக்கைகளை விளக்கி கூறி வலியுறுத்தி பேசினர். தொடர்ந்து அரசு ஊழியர்கள் சங்க மாவட்ட தலைவர் குமரிஆனந்தன், கூட்டுறவு ஊழியர் சங்க மாநில துணை தலைவர் சிவக்குமார் உட்பட பலர் பேசினர். கூட்டத்தில் சாலை பணியாளர்களின் 41 மாத பணி நீக்க காலத்தை பணிக்காலமாக முறைப்படுத்தி ஆணை வழங்க வேண்டும், சாலைப் பணியாளர்களின் பணி நீக்க காலம் மற்றும் பணிக்காலத்தில் உயிர் நீத்தவரின் வாரிசுகளுக்கு கருணை அடிப்படையில் பணி நியமனம் விரைந்து வழங்க வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. முன்னதாக மாவட்ட துணை தலைவர் ராஜா வரவேற்றார். முடிவில் மாவட்ட பொருளாளர் கருணாநிதி நன்றி கூறினார்.
பெரம்பலூர்:
பெரம்பலூரில் ஆஷா பணியாளர்கள் சங்க மாவட்ட பேரவை கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு மாவட்ட தலைவர் மகாலட்சுமி தலைமை வகித்தார். கூட்டத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினர் ஞானசேகரன், மாவட்ட செயலாளர் ஜெயராமன் ஆகியோர் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினர். இதில் ஆஷா பணியாளர்களுக்கு கால வரையறை ஊதியம் வழங்க வேண்டும், ஆஷா பணியாளர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும், குறைந்தபட்ச ஊதிய சட்டத்தின்படி மாதம் ரூ.21 ஆயிரம் தொகுப்பூதியம் வழங்க வேண்டும், ஓய்வூதியர்களுக்கு மாதம் ரூ.6 ஆயிரம் வழங்க வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. கூட்டத்தில் புதிய மாவட்ட நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர். மாவட்ட தலைவராக மகாலட்சுமி, மாவட்ட செயலாளராக செல்வாம்பாள், மாவட்ட பொருளாளராக மேகா, மாவட்ட துணை தலைவர்களாக சரிதா, சுமதி, மாவட்ட துணை செயலாளர்களாக அமுதா, ரேவதி ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டனர். இதில் ஆஷா பணியாளர்கள் பலர் கலந்துகொண்டனர்.
- பெரம்பலூர் ஸ்ரீபிரம்மபுரீஸ்வரர் திருக்கோவிலில் மகா சிவராத்திரி விழா நடைபெற்றது
- இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
பெரம்பலூர்:
பெரம்பலூர் ஸ்ரீஅகிலாண்டேஸ்வரி சமேத ஸ்ரீபிரம்மபுரீஸ்வரர் திருக்கோவிலில் மகா சிவராத்திரி மற்றும் சனி மகா பிரதோஷம் விழா நடந்தது. இதை முன்னிட்டு ஈசன் மூலவர் உற்சவர் மற்றும் நந்தியம் பெருமானுக்கும் சிறப்பு அபிஷேகங்கள் நடந்தது. இதில் அறங்காவலர் குழு தலைவர் கலியபெருமாள், தனலட்சுமி சீனிவாசன் குழும இயக்குநர் மணி, முன்னாள் அறங்காவலர் வைத்தீஸ்வரன், உட்பட திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
- அகரம்சீகூர் வாலீஸ்வரர் திருக்கோயிலில் மஹா சிவராத்திரி விழா நடைபெற்றது
- வாலீஸ்வரருக்கு பல்வேறு அபிஷேக பொருட்களால் அபிஷேகம் செய்யப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது
அகரம்சீகூர்:
அகரம்சீகூர் அடுத்து வாலிகண்டபுரம் கிராமத்தில் அமைந்துள்ள வாலாம்பிகை உடனுறை வாலீஸ்வரர் திருக்கோயிலில் மஹா சிவராத்திரிையயொட்டி அருள்மிகு வாலாம்பிகை உடனுறை வாலீஸ்வரருக்கு பல்வேறு அபிஷேக பொருட்களால் அபிஷேகம் செய்யப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. மகா தீபாரதனை நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
- பெரம்பலூர் மாவட்டத்தில் அழகு சாதனவியல், சிகை அலங்காரம் பயிற்சி பெற மாணவர்களுக்கு அழைப்பு விடுக்கபட்டுள்ளது
- பயிற்சியினை வெற்றிக–ரமாக முடிக்கும் மாணவர்களுக்கு ஆரம்பகால மாத சம்பள–மாக ரூ.15 ஆயிரம் முதல் ரூ.20 ஆயிரம் வரை பெற–லாம்.
பெரம்பலூர்
பெரம்பலூர் மாவட்டத்தில் அழகு சாதனவியல் மற்றும் சிகை அலங்காரம் போன்ற பயிற்சி பெற ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் மாணவ, மாணவிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து கலெக்டர் கற்பகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியி–ருப்பதாவது:- தாட்கோ மூலம் பெரம்ப–லூர் மாவட்டத்தில் உள்ள ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் மாணவர்க–ளுக்கு அழகு சாதனவியல் மற்றும் சிகை அலங்காரம் போன்ற பயிற்சியினை வழங்கப்படவுள்ளது. தற்போது சென்னை மகா அழகு கலை பயிற்சி நிலை–யத்தின் மூலமாக புகழ் பெற்ற அழகு நிலையங்களில் பணிபுரியவும் மற்றும் சுய தொழில் தொடங்குவதற்கும் அழகுசாதனவியல் மற்றும் சிகை அலங்காரம் பயிற்சி–யினை தாட்கோ சார்பாக அளிக்கப்படவுள்ளது. பயிற்சியில் ஆதிதிரா–விடர், பழங்குடியினர் இனத்தைச் சார்ந்த பத்தாம் வகுப்பு படித்த 18 முதல் 30 வயது வரை உள்ள மாணாக்கர்கள் விண்ணப்பிக்கலாம். இப்பயிற்சிக்கான கால அளவு 45 நாட்கள் ஆகும். மேலும் சென்னையில் பயிற்சி அளிக்கும் நிறுவனத்தில் தங்கிபடிக்கும் வசதியும், இப்பயிற்சியினை முழு–மையாக முடிக்கும் மாண–வர்களுக்கு இந்திய தேசிய திறன் மேம்பாட்டால் அங்கீகரிக்கப்பட்ட தரச் சான்றிதழ் வழங்கப்படும். பயிற்சியினை பெற்ற–வர்கள் தனியார் அழகு நிலையங்களில் பணிபுரிய 100 சதவீதம் வேலைவாய்ப்பு அளிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. பயிற்சியினை வெற்றிக–ரமாக முடிக்கும் மாணவர்களுக்கு ஆரம்பகால மாத சம்பள–மாக ரூ.15 ஆயிரம் முதல் ரூ.20 ஆயிரம் வரை பெற–லாம். சுய வேலைவாய்ப்பு–திட்டத்தின் கீழ் அழகு சாதனவியல் மற்றும் சிகை அலங்காரம் தொழில் செய்ய தாட்கோ மூலமாக ரூ.2.25 லட்சம் மானியத்துடன் கூடிய ரூ.10 லட்சம் வரை கடன் உதவி வழங்கப்படும். இப்பயிற்சியினை பெற தகுதியுள்ள ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மாணவர்கள் தாட்கோ இணையதளமான www.tahdco.comஎன்ற இணை–யதளத்தில் விண்ணப்பித்து பயிற்சி பெற்று பயன்பெற–லாம் என தெரிவித்துள்ளார்.
- மங்களமேடு-குன்னம் பகுதிகளில் நாளை மின்சாரம் நிறுத்தம் செய்யப்படுகிறது.
- இத்தகவலை உதவி செயற்பொறியாளர் சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
பெரம்பலூர்
பெரம்பலூர் மாவட்டம், மங்களமேடு துணை மின் நிலையத்தில் நாளை (திங்கட்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுகிறது. இதையொட்டி இங்கிருந்து மின்சாரம் வினியோகம் பெறும் ரஞ்சன்குடி, பெருமத்தூர், மங்களமேடு, தேவையூர், நகரம், நமையூர், முருக்கன்குடி, சின்னாறு, எறையூர், அயன் பேரையூர், அகரம், வி.களத்தூர், பசும்பலூர், திருவாளந்துறை, பிம்பலூர், மறவநத்தம், தைக்கால், நன்னை, அந்தூர், லெப்பைக்குடிகாடு, திருமாந்துறை, அத்தியூர், பென்னக்கோணம், சு.ஆடுதுறை, கழனிவாசல், ஒகளூர், குன்னம், வேப்பூர், நன்னை, ஓலைப்பாடி எழுமூர், வாலிகண்டபுரம், மேட்டுப்பாளையம், கே.புதூர் ஆகிய பகுதிகளில் காலை 9 மணி முதல் பராமரிப்பு பணிகள் நிறைவடையும் வரை மின்வினியோகம் இருக்காது என்று லெப்பைக்குடிகாடு உதவி செயற்பொறியாளர் சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
- வக்கீல்கள் கோர்ட்டு புறக்கணிப்பில் ஈடுபட்டனர்.
- இதனால் கோர்ட்டு பணிகள் பாதிக்கப்பட்டன.
பெரம்பலூர்:
பெரம்பலூர் சென்னை ஐகோர்ட்டு வளாகத்தில் கடந்த 2009-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 19-ந்தேதி போலீசார் அத்துமீறி நுழைந்து வக்கீல்கள் மீது தாக்குதல் நடத்தி, வக்கீல்களின் அலுவலகம் மற்றும் வாகனங்களை சேதப்படுத்தினர். இதனை கண்டித்து அந்த தினத்தை ஆண்டுதோறும் வக்கீல்கள் கருப்பு தினமாக அனுசரித்து வருகின்றனர். அதன்படி இந்த ஆண்டு பிப்ரவரி 19-ந்தேதி இன்று (ஞாயிற்றுக்கிழமை) அரசு விடுமுறை நாள் என்பதால் நேற்றே வக்கீல்கள் கருப்பு தினமாக அனுசரித்து, பெரம்பலூர் மாவட்டத்தில் பெரம்பலூர், வேப்பந்தட்டை, குன்னத்தில் உள்ள கோர்ட்டுகளில் வக்கீல்கள் கோர்ட்டு புறக்கணிப்பில் ஈடுபட்டனர். இதனால் கோர்ட்டு பணிகள் பாதிக்கப்பட்டன.
- சிறப்பாக பணிபுரிந்த போலீசாருக்கு பாராட்டு சான்றிதழ் வழங்கப்பட்டது.
- சிறப்பாக பணிபுரிந்த 9 போலீசாருக்கும் மற்றும் 11 ஊர்க்காவல் படையினருக்கும் பாராட்டு சான்றிதழை போலீஸ் சூப்பிரண்டு வழங்கினார்
பெரம்பலூர்
பெரம்பலூர் மாவட்ட மாதாந்திர குற்ற கலந்தாய்வு கூட்டம் போலீஸ் அலுவலகத்தில் நேற்று நடந்தது. இதற்கு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஷ்யாம்ளா தேவி தலைமை தாங்கினார். கூட்டத்தில் அவர் போலீசாரிடையே பெரம்பலூர் மாவட்டத்தில் பதிவு செய்யப்பட்ட குற்ற வழக்குகள் குறித்து ஆய்வு செய்தும், புலன் விசாரணை முடியாமல் நிலுவையில் உள்ள வழக்குகளை விரைவாக முடிக்க என்ன நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்பது குறித்து கலந்தாய்வும், நிலுவையில் உள்ள வழக்குகளை விரைவாக முடிப்பதற்கு ஆலோசனைகளையும் வழங்கி பேசினார். மேலும் கூட்டத்தில் காணொலி காட்சி மூலம் திருச்சி சரக போலீஸ் டி.ஐ.ஜி. சரவண சுந்தர் சமீபத்தில் நடைபெற்ற குற்ற வழக்குகள் மற்றும் கொலை வழக்குகளில் சம்பந்தப்பட்ட எதிரிகளை விரைவில் கைது செய்வது குறித்து போலீசாரிடைேய கலந்தாய்வு நடத்தினார். முடிவில் பெரம்பலூர் மாவட்ட போலீசாரில் கடந்த மாதம் சிறப்பாக பணிபுரிந்த 9 போலீசாருக்கும் மற்றும் 11 ஊர்க்காவல் படையினருக்கும் பாராட்டு சான்றிதழை போலீஸ் சூப்பிரண்டு வழங்கினார். பின்னர் அவர் கடந்த மாதத்தில் பிறந்த நாள் மற்றும் திருமண நாள் கொண்டாடிய 49 போலீசாருக்கு வாழ்த்து மடலை வழங்கினார்.
- படித்த வேலை வாய்ப்பற்ற இளைஞர்கள் தொழில் தொடங்க கடன் பெறலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
- திட்ட மதிப்பீட்டில் 25 சதவீதம் மானியமாக ரூ.1 லட்சத்து 25 ஆயிரம் வரை தமிழக அரசு வழங்கும்.
பெரம்பலூர்
தமிழகத்தில் வேலை வாய்ப்பினை உருவாக்கும் நோக்கத்தின் அடிப்படையிலும், குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களின் வளர்ச்சிக்காகவும் படித்த வேலை வாய்ப்பற்ற இளைஞர்களுக்கான வேலை வாய்ப்பு உருவாக்கும் திட்டத்தின் கீழ் கடன் வழங்கும் திட்டம் தமிழக அரசின் குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை மூலம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. படித்த வேலை வாய்ப்பற்ற இளைஞர்கள் இந்த திட்டத்தின் கீழ் தொழில் தொடங்க வியாபாரம் சார்ந்த தொழில்களுக்கு ரூ.5 லட்சம் வரையில் உள்ள கடன் திட்டங்களுக்கு வங்கியின் மூலம் கடன் பெற மாவட்ட தொழில் மைய பொது மேலாளரை தலைவராகக் கொண்ட தேர்வுக்குழு வங்கிகளுக்கு பரிந்துரை செய்யும். திட்ட மதிப்பீட்டில் 25 சதவீதம் மானியமாக ரூ.1 லட்சத்து 25 ஆயிரம் வரை தமிழக அரசு வழங்கும். இத்திட்டத்தின் கீழ் பயன்பெற குறைந்தபட்சம் 8-ம் வகுப்பு தேர்ச்சி பெற்ற பொதுப்பிரிவினர் 18 முதல் 35 வயது வரையிலும், சிறப்பு பிரிவினர் மற்றும் பெண்கள் 18 முதல் 45 வயது வரையிலும் இருக்கலாம். குடும்ப ஆண்டு வருமானம் ரூ.5 லட்சம் வரை இருக்கலாம். திட்ட மதிப்பீட்டில் பொது பிரிவினர் 10 சதவீதமும், தாழ்த்தப்பட்டோர், பழங்குடியினர், பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர், சிறுபான்மையினர், முன்னாள் ராணுவத்தினர், உடல் ஊனமுற்றோர், மகளிர் மற்றும் திருநங்கைகள் 5 சதவீதமும் தமது பங்காக செலுத்த வேண்டும். மேலும் விவரங்களுக்கு 8925533976, 8925533977 என்ற செல்போன் எண்களிலோ அல்லது பெரம்பலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகம் அருகே உள்ள மாவட்ட தொழில் மைய பொது மேலாளர் அலுவலகத்தை நேரிலோ அணுகலாம் என்று கலெக்டர் கற்பகம் தெரிவித்துள்ளார்.
- கல்வியின் முக்கியத்துவம் குறித்து மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
- காவல் உதவி செயலி குறித்தும் மாணவ-மாணவிகளிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
பெரம்பலூர்
பெரம்பலூர் மாவட்ட போலீசார் சார்பில் கல்வியின் முக்கியத்துவம் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி அனைத்து பள்ளிகளில் நடந்தது. இதில் பள்ளி மாணவ-மாணவிகளிடையே போலீசார் பேசுகையில், இக்கால கட்டத்தில் சமுதாயத்தில் நம்மை அறிமுகப்படுத்தி கொள்ள ஒரு கருவி என்றால் அது கல்வி மட்டும்தான் என்பதை நாம் நன்றாக தெரிந்து கொள்ள வேண்டும். ஏனெனில் இன்று அனைத்து துறைகளிலும் பணிபுரிய கல்வி மட்டுமே அடிப்படை தகுதியாக வைக்கப்பட்டுள்ளது. மேலும் கல்வியால் மேன்மை அடைந்தவரை மட்டுமே இந்த சமுதாயம் மதிக்கும் என்பதை நாம் தெரிந்து கொள்ள வேண்டும். கல்வி பயில ஏதுவான வயது இளமை பருவம் மட்டுமே, இந்த பருவத்தில் நீங்கள் உங்கள் கவனத்தை கல்வியில் செலுத்தினால், நாளை சமுதாயத்தில் நீங்கள் ஒரு முக்கியமான பணியில் உயர் அதிகாரியாக பணிபுரிவீர்கள். எதிர்காலத்தில் நாம் என்னவாக ஆக வேண்டும் என்பதை இன்றே திட்டமிடுங்கள். உங்கள் எதிர்கால கனவினை அடைய இன்றில் இருந்து முயற்சி செய்யுங்கள். எதிர்காலத்தில் கட்டாயம் உங்கள் கனவிற்கு உயிர் கொடுக்கலாம், என்றனர். மேலும் போலீசார் ஒவ்வொரு ேபாலீஸ் நிலையத்திலும் செயல்படும் பெண்கள் உதவி மையம் இலவச தொலைபேசி எண் 181 குறித்தும், குழந்தைகளுக்கு எதிரான குற்றச்சாட்டுக்களை தெரிவிக்க 1098 என்ற இலவச தொலைபேசி எண் குறித்தும், பள்ளி குழந்தைகளின் பாதுகாப்பிற்காக செயல்படும் இலவச உதவி எண் 14417 குறித்தும், காவல் உதவி செயலி குறித்தும் மாணவ-மாணவிகளிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
- கோவிலுக்கு சொந்தமான ரூ.15 லட்சம் நிலம் மீட்கப்பட்டது.
- சுப்பிரமணிய சுவாமி கோவிலுக்கு சொந்தமான 98 சென்ட் நிலத்தை, ஒருவர் ஆக்கிரமித்து விவசாயம் செய்து வந்தார்.
பெரம்பலூர்
பெரம்பலூர் மாவட்டம், ஆலத்தூர் தாலுகா, காரை அருகே உள்ள புதுக்குறிச்சி கிராமத்தில் இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள சுப்பிரமணிய சுவாமி கோவிலுக்கு சொந்தமான 98 சென்ட் நிலத்தை, ஒருவர் ஆக்கிரமித்து விவசாயம் செய்து வந்தார். இது தொடர்பாக இந்து சமய அறநிலையத்துறை பெரம்பலூர் உதவி ஆணையர் லட்சுமணனுக்கு பல்வேறு புகார்கள் வந்தன. இதையடுத்து அவரது உத்தரவின்பேரில், இந்து சமய அறநிலையத்துறை பெரம்பலூர் தனி தாசில்தார் (கோவில் நிலங்கள்) பிரகாசம் முன்னிலையில் ஆலத்தூர் ஆய்வாளர் தமிழரசி, காரை மேற்கு கிராம நிர்வாக அலுவலர் குமார் மற்றும் புதுக்குறிச்சி கிராம மக்கள் ஒத்துழைப்புடன் ரூ.15 லட்சம் மதிப்பிலான மேற்கண்ட கோவில் நிலம் ஆக்கிரமிப்பாளரிடம் இருந்து மீட்கப்பட்டு, அந்த இடத்தில் கோவிலுக்கு சொந்தமான இடம் என்று பதாகை வைக்கப்பட்டது. பெரம்பலூர் மாவட்டத்தில் இந்து சமய அறநிலையத்துறைக்கு உட்பட்ட கோவில்களின் நிலங்களை யாரேனும் ஆக்கிரமிப்பு செய்தால், அவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதிகாரிகள் எச்சரித்தனர்.






