என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
பெரம்பலூர் மாவட்டத்தில் அழகு சாதனவியல், சிகை அலங்காரம் பயிற்சி பெற மாணவர்களுக்கு அழைப்பு
- பெரம்பலூர் மாவட்டத்தில் அழகு சாதனவியல், சிகை அலங்காரம் பயிற்சி பெற மாணவர்களுக்கு அழைப்பு விடுக்கபட்டுள்ளது
- பயிற்சியினை வெற்றிக–ரமாக முடிக்கும் மாணவர்களுக்கு ஆரம்பகால மாத சம்பள–மாக ரூ.15 ஆயிரம் முதல் ரூ.20 ஆயிரம் வரை பெற–லாம்.
பெரம்பலூர்
பெரம்பலூர் மாவட்டத்தில் அழகு சாதனவியல் மற்றும் சிகை அலங்காரம் போன்ற பயிற்சி பெற ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் மாணவ, மாணவிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து கலெக்டர் கற்பகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியி–ருப்பதாவது:- தாட்கோ மூலம் பெரம்ப–லூர் மாவட்டத்தில் உள்ள ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் மாணவர்க–ளுக்கு அழகு சாதனவியல் மற்றும் சிகை அலங்காரம் போன்ற பயிற்சியினை வழங்கப்படவுள்ளது. தற்போது சென்னை மகா அழகு கலை பயிற்சி நிலை–யத்தின் மூலமாக புகழ் பெற்ற அழகு நிலையங்களில் பணிபுரியவும் மற்றும் சுய தொழில் தொடங்குவதற்கும் அழகுசாதனவியல் மற்றும் சிகை அலங்காரம் பயிற்சி–யினை தாட்கோ சார்பாக அளிக்கப்படவுள்ளது. பயிற்சியில் ஆதிதிரா–விடர், பழங்குடியினர் இனத்தைச் சார்ந்த பத்தாம் வகுப்பு படித்த 18 முதல் 30 வயது வரை உள்ள மாணாக்கர்கள் விண்ணப்பிக்கலாம். இப்பயிற்சிக்கான கால அளவு 45 நாட்கள் ஆகும். மேலும் சென்னையில் பயிற்சி அளிக்கும் நிறுவனத்தில் தங்கிபடிக்கும் வசதியும், இப்பயிற்சியினை முழு–மையாக முடிக்கும் மாண–வர்களுக்கு இந்திய தேசிய திறன் மேம்பாட்டால் அங்கீகரிக்கப்பட்ட தரச் சான்றிதழ் வழங்கப்படும். பயிற்சியினை பெற்ற–வர்கள் தனியார் அழகு நிலையங்களில் பணிபுரிய 100 சதவீதம் வேலைவாய்ப்பு அளிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. பயிற்சியினை வெற்றிக–ரமாக முடிக்கும் மாணவர்களுக்கு ஆரம்பகால மாத சம்பள–மாக ரூ.15 ஆயிரம் முதல் ரூ.20 ஆயிரம் வரை பெற–லாம். சுய வேலைவாய்ப்பு–திட்டத்தின் கீழ் அழகு சாதனவியல் மற்றும் சிகை அலங்காரம் தொழில் செய்ய தாட்கோ மூலமாக ரூ.2.25 லட்சம் மானியத்துடன் கூடிய ரூ.10 லட்சம் வரை கடன் உதவி வழங்கப்படும். இப்பயிற்சியினை பெற தகுதியுள்ள ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மாணவர்கள் தாட்கோ இணையதளமான www.tahdco.comஎன்ற இணை–யதளத்தில் விண்ணப்பித்து பயிற்சி பெற்று பயன்பெற–லாம் என தெரிவித்துள்ளார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்