என் மலர்tooltip icon

    நீலகிரி

    • ஊட்டியில் இருந்து 22 கிலோ மீட்டர் தொலையில் பைகாரா படகு இல்லம் மற்றும் நீர் வீழ்ச்சி ஆகியவை உள்ளன.
    • ஒரு புனித நதி என்று உள்ளூர் மக்களால் போற்றப்படுகிறது.

    ஊட்டி,

    ஊட்டியை அடுத்துள்ள பைகாரா அணையில் படகு சவாரி மேற்கொள்ளப்படுகிறது.

    இயற்கை எழில் கொஞ்சும் மலைகளின் நடுவே உள்ள இந்த அணையில் சீறிப் பாய்ந்து செல்லும் படகுகளில் ஏறிச் செல்ல சுற்றுலா பயணிகள் அதிக ஆர்வம் காட்டுகின்ற னர்.

    ஊட்டியில் இருந்து 22 கிலோ மீட்டர் தொலையில் பைகாரா படகு இல்லம் மற்றும் நீர் வீழ்ச்சி ஆகியவை உள்ளன. பைக்காரா பகுதிகளில் இதமான காலநிலை நிலவி வருகிறது.

    நிரம்பித் தளும்பி ரம்மியமாகக் காட்சியளிக்கும் பைக்காரா அணையில் படகு சவாரி செய்ய சுற்றுலாப்பயணிகள் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர்.

    முக்கூர்த்தி மலை உயரத்தில் இருந்து உருவாகும் பைகாரா நதி நீலகிரியின் மூடுபனி உயரங்களைத் துண்டித்து, பசுமையான மலைகள் மற்றும் பள்ளத்தாக்குகளுக்குச் செல்கிறது.

    ஒரு புனித நதி என்று உள்ளூர் மக்களால் போற்றப்படுகிறது. செங்குத்தான சரிவுகளில் பயணிக்கும்போது, பைகாரா அழகான நீர்வீழ்ச்சியாக மாறுகிறது. தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகத்தால் நடத்தப்படும் படகு இல்லம் மூலம் பல்வேறு வாய்ப்புகள் கிடைக்கப்பெற்றுள்ளன.

    இந்த ஏரி ஊட்டியில் சிறந்த படகு சவாரி வசதிகளைக் கொண்டுள்ளது. அமைதியான சூழல், வசீகரிக்கும் காட்சிகள் மற்றும் படகு சவாரி வசதிகளுடன், குடும்பத்துடன் ஒரு நாளைக் கழிக்க ஊட்டியில் பைகாரா ஏரி சரியான இடமாகும்.

    • கேரளா-நீலகிரி மாவட்ட எல்லைச் சோதனைச் சாவடிகளில் கூடுதல் போலீசார் நிறுத்தப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.
    • கூடலூர் வனப்பகுதி தமிழகம், கேரளா, கர்நாடகா ஆகிய 3 மாநில எல்லை பகுதியில் வருவதால் அங்கு கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது.

    ஊட்டி:

    கேரளா மாநிலம் கண்ணூர் மாவட்ட வனப்பகுதியில் அதிரடிப்படை போலீசார் நேற்று ரோந்து சென்றனர். அப்போது மறைந்திருந்த மாவோயிஸ்டுகள் போலீசாரை நோக்கி துப்பாக்கியால் சுட்டனர்.

    அதிரடிப்படை வீரர்களும் துப்பாக்கியால் சுட்டு பதிலடி கொடுத்தனர். இரு தரப்புக்கும் இடையே நீண்டநேரம் துப்பாக்கிச் சண்டை நடந்தது. இதில் மாவோயிஸ்டுகள் சிலர் காயம் அடைந்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து அவர்கள் அங்கிருந்து தப்பிச் சென்று விட்டனர்.

    இதேபோல கடந்த வாரமும் அதிரடிப்படை வீரர்களுக்கும், மாவோயிஸ்டுகளுக்கும் இடையே துப்பாக்கிச் சண்டை நடந்து சிலர் கைது செய்யப்பட்டனர். இவ்வாறு கேரள மாநில எல்லைப்பகுதியில் மாவோயிஸ்டுகள் அச்சுறுத்தல் இருப்பதால் அதனை ஒட்டிய நீலகிரி மாவட்ட போலீசார் உஷார்படுத்தப்பட்டு உள்ளனர்.

    கேரளா-நீலகிரி மாவட்ட எல்லைச் சோதனைச் சாவடிகளில் கூடுதல் போலீசார் நிறுத்தப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள். ஓவேலி, நாடுகாணி, சோலாடி, நம்பியார்குன்னு, பாட்டவயல் ஆகிய சோதனைச் சாவாடிகளில் துப்பாக்கி ஏந்திய போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு உள்ளனர். அவர்கள் கேரளாவில் இருந்து தமிழகத்துக்குள் நுழையும் வாகனங்களை தீவிர சோதனை நடத்தி அனுமதிக்கின்றனர்.

    கூடலூர் வனப்பகுதி தமிழகம், கேரளா, கர்நாடகா ஆகிய 3 மாநில எல்லை பகுதியில் வருவதால் அங்கு கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது. இந்த சோதனைச்சாவடிகளில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சுந்தரவடிவேல் நேற்று நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டு பாதுகாப்பு பணிகளை உஷார்படுத்தினார். பணியில் ஈடுபட்டுள்ள போலீசாருக்கு ஆலோசனைகள் வழங்கினார்.

    • எதிர்பாராதவிதமாக விமலா என்பவரது பங்களா வீட்டுக்குள் சிறுத்தை நுழைந்தது.
    • குட்டி கிருஷ்ணன் மட்டும் தீவிர சிகிச்சைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.

    ஊட்டி:

    நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே புரூக்லேண்ட்ஸ் குடியிருப்பு பகுதியில் நேற்று முன்தினம் அதிகாலை 4 மணியளவில் சிறுத்தை ஒன்று புகுந்தது. தொடர்ந்து ஒரு நாயை துரத்திக்கொண்டு ஓடியது.

    அப்போது எதிர்பாராதவிதமாக விமலா என்பவரது பங்களா வீட்டுக்குள் சிறுத்தை நுழைந்தது. இதை கண்ட அவர் மற்றும் குடும்பத்தினர் அச்சத்தில் உறைந்து போயினர். மேலும் உடனடியாக வீட்டை விட்டு வெளியேறினர்.

    ஆங்காங்கே பட்டாசு வெடிக்கும் சத்தம் கேட்டதால், மிரண்டு போன சிறுத்தை பயத்தில் அங்கேயே பதுங்கியது. உடனே தீயணைப்பு மற்றும் வருவாய் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

    விரைந்து வந்த தீயணைப்பு மற்றும் வருவாய் துறையினர், பங்களா வீட்டுக்குள் பதுங்கி இருந்த சிறுத்தையை விரட்ட முயன்றனர். அவர்கள் மேல் சிறுத்தை பாய்ந்து கடித்து குதறியது. தீயணைப்பு வீரர்கள் முரளி(வயது 56), குட்டி கிருஷ்ணன்(59), கண்ணன்(54), விஜயகுமார்(32), வருவாய் உதவியாளர் சுரேஷ்குமார்(32) உள்பட 6 பேர் படுகாயம் அடைந்தனர்.

    உடனடியாக அவர்களை சக தீயணைப்பு மற்றும் வருவாய் துறையினர் குன்னூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு முதலுதவிக்கு பிறகு ஊட்டி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. அதில் குட்டி கிருஷ்ணன் மட்டும் தீவிர சிகிச்சைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டார். 

    சிறுத்தை புகுந்த பங்களா வீட்டை காணலாம்.

    சிறுத்தை புகுந்த பங்களா வீட்டை காணலாம்.

    இதை அறிந்ததும், முதுமலை புலிகள் காப்பக இயக்குனர் வெங்கடேஷ், இணை இயக்குனர் அருண், கால்நடை டாக்டர் ராஜேஷ்குமார் ஆகியோர் நேரில் வந்து ஆய்வு மேற்கொண்டனர். பின்னர் வனத்துறையினர் கவச உடை அணிந்து வீட்டுக்குள் சென்றனர். அங்கு அவர்கள் 4 இடங்களில் கேமராக்கள் பொருத்தி விடிய விடிய சிறுத்தையை கண்காணிக்கும் பணியில் ஈடுபட்டனர். இதையடுத்து சுமார் 26 மணி நேரத்துக்கு பிறகு நேற்று அதிகாலை 6 மணிக்கு அந்த வீட்டில் இருந்து சிறுத்தை வெளியேறியது. இந்த காட்சி, அங்கு பொருத்தப்பட்டு இருந்த கேமராவில் பதிவாகி இருந்தது. அதன்பின்னரே அனைவரும் நிம்மதி அடைந்தனர்.

    வனப்பகுதியில் இருந்து வீட்டுக்குள் புகுந்த சிறுத்தை ஒரு நாள் முழுவதும் பதுங்கி இருந்து வனத்துறையினருக்கும், வருவாய்த்துறையினருக்கும் போக்கு காட்டிய சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

    • தூய்மை பணியாளர்கள் 150 க்கு மேற்பட்டோர் பணியாற்றி வருகின்றனர்.
    • இதனால் கண்டோன்மெண்ட் பகுதியில் உள்ள 7 வார்டுகளிலும் துப்புரவு பணிகள் பாதிக்கப்பட்டுள்ளன.

    அருவங்காடு,

    குன்னூர் அருகே உள்ள கண்டோன்மென்ட் பகுதி மத்திய ராணுவ கட்டுப்பாட்டின் கீழ் உள்ளது. இப்பகுதிகள் 7 வார்டுகளாக பிரிக்கப்பட்டுள்ளன. இந்த வார்டுகளில் ஒப்பந்த அடிப்படையில் தூய்மை பணியாளர்கள் 150 க்கு மேற்பட்டோர் பணியாற்றி வருகின்றனர்.

    இந்நிலையில் சம்பள உயர்வு கோரி ஒப்பந்த ஊழியர்கள் கோரிக்கை விடுத்ததால் 8 ஊழியர்களை ஒப்பந்ததாரர் பணி நீக்கம் செய்துள்ளார். இதனை கண்டித்து ஒப்பந்த ஊழியர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால் கண்டோன்மெண்ட் பகுதியில் உள்ள 7 வார்டுகளிலும் துப்புரவு பணிகள் பாதிக்கப்பட்டுள்ளன. 

    • தொடா் மழை காரணமாக டால்பின் நோஸ் காட்சிமுனைக்குச் செல்லும் சாலையில் பனி மூட்டம் அதிகமாக உள்ளது.
    • விபத்துகளை தடுக்க போலீசார் அறிவுரை

    ஊட்டி,

    ஊட்டி,குன்னூரில் தொடா்மழை காரணமாக பகல் நேரத்தில் கடும் பனிமூட்டம் நிலவுகிறது. இதனால் குன்னூர் டால்பின் நோஸ் மற்றும் லேம்ஸ்ராக் காட்சிமுனைக்கு வாகனங்களில் செல்வோா் பாதுகாப்பு கருதி வாகனங்களின் முகப்பு விளக்கை எரியவிட்டபடி செல்ல வேண்டும் என போலீசார் அறிவுறுத்தி உள்ளனர்.

    நீலகிரி மாவட்டம், குன்னூரிலிருந்து 12 கிலோ மீட்டர் தொலைவில் டால்பின் நோஸ் மற்றும் லேம்ஸ்ராக் காட்சிமுனை உள்ளது. இப்பகுதிக்குச் செல்லும் வழியில் உயா்ந்த மலைகள், தேயிலைத் தோட்டங்கள் உள்ளன.

    மேகமூட்டத்துக்கு நடுவே அமைந்த டால்பினோஸ் பாறை, இம்மலையின் வலது மற்றும் இடது புறங்களில் உள்ள பரவ சமூட்டும் பள்ளத்தாக்குகள், மறுபக்கத்தில் கேத்தரின் அருவி என பல சுற்றுலாத்தலங்கள் உள்ளதால் இப்பகுதிகளைக் கண்டு ரசிக்க தினமும் ஆயிரக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் வருவது வழக்கம்.

    இந்நிலையில் தொடா் மழை காரணமாக டால்பின் நோஸ் காட்சிமுனைக்குச் செல்லும் சாலையில் பனி மூட்டம் அதிகமாக உள்ளது. இதனால் சாலையில் எதிரே வரும் வாகனங்களைக் கண்டறிந்து வாகனங்களை இயக்குவது சிரமமாக உள்ளதாக வாகன ஓட்டிகள் கூறுகின்றனா்.

    பகல் நேரத்திலும் கடும் பனி மூட்டமாக உள்ளதால் இந்த சாலையில் செல்லும் வாகன ஓட்டிகள் பாதுகாப்பு கருதி வாகனங்களின் முகப்பு விளக்குகளை எரியவிட்டவாறு வாகனத்தை கவனமுடன் இயக்க வேண்டும் என காவல் துறையினா் அறிவுறுத்தியுள்ளனர்.

    ஊட்டி - குன்னூரில் பல பகுதிகள் அடர்ந்த பனி மூட்டமாக காணப்படுவது சுற்றுலாபயணிகளுக்கு மகிழ்ச்சி அளிப்பதாக உள்ளது

    • நிகழ்ச்சியில் மாவட்ட கலெக்டர் அருணா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
    • நிவாரணமுகாமில் தங்கியுள்ள 5 நபர்களுக்கு மக்களை தேடி மருத்துவம் திட்டத்தின் கீழ் மருந்து பெட்டகங்கள் வழங்கப்பட்டது.

    ஊட்டி,

    நீலகிரி மாவட்டம் குன்னூரில் மழையால் பாதிக்கப்பட்ட மேல்பாரத் நகர் பகுதியை அமைச்சர் ராமச்சந்திரன் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டு நிவாரண முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ள பொது மக்களை நேரில் சந்தித்து நிவாரண பொருட்களை வழங்கினார்.

    நிகழ்ச்சியில் மாவட்ட கலெக்டர் அருணா உள்ளிட்டோர் பங்கேற்றனர். தொடர்ந்து அமைச்சர் ராமச்சந்திரன் நிருபர்களிடம் கூறியதாவது:-

    நீலகிரி மாவட்டத்தில் கடந்த 2 நாட்களாக பெய்த மழையின் காரணமாக குன்னூர், கல்குழி மேல்பாரத் நகர் பகுதியில் மண்சரிவு ஏற்பட்டு தடுப்புச்சுவர் மற்றும் நடை பாதை சேதம் அடைந்துள்ளது.

    பொதுமக்களின் பாதுகாப்பு நலன் கருதி அப்பகுதியில் உள்ள 8 குடும்பங்களைச் சேர்ந்த 23 நபர்கள் அருகில் உள்ள நிவாரண முகாமான மேல்பாரத் நகர் சமுதாய கூடத்தில் தங்க வைக்கப்பட்டு அவர்களுக்கு தேவையான அரிசி, சர்க்கரை, பருப்பு உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களும், மளிகை பொருட்களும், போர்வை, பெட்சீட் உள்ளிட்ட அத்தியாவசிய தேவைகளும் மாவட்ட நிர்வாகத்தின் மூலம் வழங்கப்பட்டு வருகிறது.

    மேலும் மருத்துவம் மற்றும் மக்கள் நலவாழ்வுத்துறையின் சார்பில் நிவாரண முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ள பொது மக்களுக்கு உடல் பரிசோதனை மேற்கொள்ளும் வகையில் சிறப்பு மருத்துவ முகாம் அமைக்கப்பட்டு பரிசோதனைகள் மேற் கொள்ளப்பட்டு வருகிறது.

    மழை காரணமாக மேல்பாரத் நகர் பகுதியில் சேதம் அடைந்த தடுப்புச்சுவர் மற்றும் நடை பாதை சீர் செய்வதற்காக தேவையான நடவடிக்கை மேற்கொள்ள சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டு உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

    முன்னதாக அமைச்சர் ராமச்சந்திரன் நிவாரணமுகாமில் தங்கியுள்ள 5 நபர்களுக்கு மக்களை தேடி மருத்துவம் திட்டத்தின் கீழ் மருந்து பெட்டகங்களை வழங்கினார்.

    நிகழ்ச்சியில் குன்னூர் வருவாய் கோட்டாட்சியர் பூஷணகுமார், சுகாதார பணிகள் துணை இயக்குனர் பாலுசாமி, குன்னூர் ஊராட்சி ஒன்றிய தலைவர் சுனிதா நேரு, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் மோகன் குமார மங்கலம், ஆறுமுகம், வட்ட வழங்கல் அலுவலர் வசந்த்குமார், பேரட்டி ஊராட்சி தலைவர் ஜெகதீசுன், துணை தலைவர் சுகுணா உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • தாந்த நாடு கிராமத்தில் 00-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் 100 ஆண்டு வசித்து வருகின்றனர்.
    • பலமுறை அதிகாரிகளை சந்தித்து மனு கொடுத்தும் சாலை சீரமைக்கப்படவில்லை.

    அரவேணு,

    நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகில் உள்ள தாந்த நாடு கிராமம் அமைந்துள்ளது. இங்கு 200-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் 100 ஆண்டு வசித்து வருகின்றனர். இந்த கிராமத்துக்கு செல்லும் சாலை மிகவும் பழுதடைந்து குண்டும், குழியுமாக காட்சி அளிக்கிறது.

    இதனால் சாலையை சீரமைத்து தர வேண்டும் என அவர்கள் பலமுறை அதிகாரிகளை சந்தித்து மனு கொடுத்து விட்டனர். ஆனால் இதுவரை சாலை சீரமைக்கப்படவில்லை. தற்போது மழை பெய்து வருவதால் சாலையில் தண்ணீர் தேங்கி நிற்கிறது.

    எனவே சாலையை சீரமைத்து தர வேண்டும் என அந்த பகுதி மக்கள் வலியுறுத்தி உள்ளனர். இல்லாவிட்டால் கறுப்புக் கொடியேற்றி மறியலில் ஈடுபடப் போவதாக அவர்கள் அறிவித்துள்ளனர்.    

    • பண்ணையில் தடுப்புச்சுவர் மற்றும் மின் பணிகள் போன்ற பணிகள் நடை பெற்று வருகிறது.
    • கலெக்டர் பணிகளை விரைந்து முடித்து பயன்பாட்டிற்கு கொண்டு வருமாறு துறை சார்ந்த அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.

    ஊட்டி,

    நீலகிரி மாவட்டம் குந்தா வட்டம் அவலாஞ்சி டிரவுட் மீன் பண்ணையில் ரூ.2.50 கோடி மதிப்பீட்டில் நவீனமயமாக்கப்பட்டு வரும் பணிகளை மாவட்ட கலெக்டர் அருணா நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

    அவலாஞ்சி பகுதியில் செயல்பட்டு வரும் டிரவுட் மீன் பண்ணையில் மீன் வளம் மற்றும் நீர் வாழ் உயிரின வளர்ப்பு உட்கட்டமைப்பு மேம்பாட்டு நிதியின் கீழ் ரூ.2.50 கோடி மதிப்பீட்டில் நவீனமயமாக்கப்பட்டு வரும் பணிகள் நடைபெற்று வருகிறது.

    இந்த பண்ணையில் 30 மீட்டர் அளவில் இணைப்பு பாலம், சாலை, தடுப்பணை, 9 சினை மீன் தொட்டிகள், டிரவுட் மீன் குஞ்சு பொரிப்பகம், தடுப்புச்சுவர் மற்றும் மின் பணிகள் போன்ற பணிகள் நடை பெற்று வருகிறது.

    இதனை மாவட்ட கலெக்டர் அருணா நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டு பணிகளை விரைந்து முடித்து பயன்பாட்டிற்கு கொண்டு வருமாறு துறை சார்ந்த அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.

    நிகழ்ச்சியில் மீன் வளத்துறை உதவி இயக்குனர் ஜோதி லட்சுமணன், ஊட்டி மீன் துறை ஆய்வாளர் ஷில்பா, மீன் துறை சார் ஆய்வாளர் ஆனந்த் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • பயிற்சியில் விவசாயிகளுக்கு விதைப்பு முதல் அறுவடை வரை ஆறு செயல் முறை விளக்க பயிற்சிகள் வழங்கப்படும்.
    • முன்னோடி விவசாயி ராமதாஸ் கலந்து கொண்டு ஜீவாமிர்தம் தயாரிப்பு குறித்து செயல் விளக்கம் அளித்தார்.

    அரவேணு.

    நீலகிரி மாவட்டம் கோத்தகிரி வட்டாரம் தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறை வேளாண்மை தொழில்நுட்ப மேலாண்மை முகமை ஆத்மா திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு காய்கறி பயிர்களில் ஒருங்கிணைந்த பயிர் மேலாண்மை குறித்த பண்ணை பள்ளி பயிற்சி அரக்கம்பை கிராமத்தில் நடைப்பெற்றது.

    பண்ணைப்பள்ளி பயிற்சியில் விவசாயிகளுக்கு விதைப்பு முதல் அறுவடை வரை ஆறு செயல் முறை விளக்க பயிற்சிகள் வழங்கப்படும். இப்பண்ணை பள்ளியில் கோத்தகிரி வட்டார துணை தோட்டக்கலை அலுவலர் ரமேஷ் கலந்து கொண்டு தோட்டக்கலை துறை மானிய திட்டங்கள் குறித்து விளக்கினார்.

    வேளாண் அறிவியல் நிலைய விஞ்ஞானி சிந்தியா கலந்து கொண்டு காய்கறி சாகுபடி யில் அங்கக இடுபொ ருட்களின் முக்கியத்துவம் குறித்து விளக்கினார். முன்னோடி விவசாயி ராமதாஸ் கலந்து கொண்டு ஜீவாமிர்தம் தயாரிப்பு குறித்து செயல் விளக்கம் அளித்தார்.

    • கடந்த 2 நாட்களில் 5 இடங்களில் மின் கம்பங்கள் மீது மரங்கள் முறிந்து விழுந்ததால் மின்தடை ஏற்பட்டது.
    • தொடர்ந்து மழை பெய்து வருவதால் ஆபத்தான பகுதியில் உள்ள பொதுமக்கள் பாதுகாப்பான பகுதிகளுக்கு செல்ல வேண்டும்

    அருவங்காடு:

    நீலகிரி மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ளது. கடந்த சில நாட்களாக அங்கு பெய்து வரும் மழையால் பல இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டு போக்குவரத்து பாதிக்கப்பட்டு உள்ளது. மலைப்பயிர்களும் நீரில் மூழ்கி உள்ளன.

    குன்னூர் அருகே உள்ள கோலணிமட்டம், முட்டி நாடு, செல்விப் நகர் உள்ளிட்ட கிராமங்களில் அதிகளவில் மலை காய்கறிகளான கேரட், பூண்டு, உருளைக்கிழங்கு, பீட்ரூட் உள்ளிட்டவற்றை பயிரிட்டு இருந்தது.

    கன மழையால் இந்த பகுதியில் உள்ள ஓடையில் அதிக வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு தண்ணீர் விவசாய நிலங்களில் புகுந்தது. இதனால் அங்கு பயிரிடப்பட்டிருந்த பயிர்கள் அனைத்தும் தண்ணீரில் மூழ்கி வீணாகியுள்ளது.

    குன்னூர் அருகே உள்ள சின்ன வண்டிச்சோலை பகுதியில் வசிக்கும் வினோத் குமார் என்பவரின் கார் மீது ராட்சத மரம் விழுந்ததால் கார் முற்றிலும் சேதம் அடைந்தது.

    குன்னூர் அருகே உள்ள பாரத் நகர், கல் குளி பகுதியில் நடைபாதை மற்றும் குடியிருப்புகளில் விரிசல் ஏற்பட்டதால் 7 குடும்பத்தைச் சேர்ந்த 23 பேர் அருகே உள்ள சமுதாய கூடத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். டாப் காலேஜ் பகுதியில் இருந்து பந்துமை வழியாக கோத்தகிரி செல்லும் சாலையில் தொடர்ந்து மண் சரி ஏற்பட்டு வருவதால் இவ்வழித்தடத்தில் போக்குவரத்து முற்றிலும் தடை செய்யப்பட்டுள்ளது.

    குன்னூர் அருகே உள்ள டால்பின் நோஸ் பகுதிக்கு செல்லும் சாலையில் கரன்சி பகுதியில் மின்கம்பத்தின் மீது மரம் விழுந்ததால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. கடந்த 2 நாட்களில் 5 இடங்களில் மின் கம்பங்கள் மீது மரங்கள் முறிந்து விழுந்ததால் மின்தடை ஏற்பட்டது. இதனை உடனடியாக மின்வாரிய ஊழியர்கள் சரி செய்தனர்.

    தொடர்ந்து மழை பெய்து வருவதால் ஆபத்தான பகுதியில் உள்ள பொதுமக்கள் பாதுகாப்பான பகுதிகளுக்கு செல்ல வேண்டும் எனவும், மலைப்பாதையில் வாகனங்களை மிகவும் கவனத்துடன் இயக்க வேண்டும் எனவும் மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தி உள்ளது.

    இன்று காலை 8:30 மணி நிலவரப்படி அதிகபட்சமாக கீழ் கோத்தகிரியில் 57 மில்லி மீட்டரும், கெத்தை பகுதியில் 27 மில்லி மீட்டரும், குன்னூரில் 19 மில்லி மீட்டரும் என மொத்தம் 364 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளது. தொடர் மழை காரணமாக வருவாய்த்துறை, தீயணைப்பு துறை, காவல்துறையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    • குறுகிய நேரத்தில் விடுக்க நடவடிக்கை
    • நீலகிரி எம்.பி ராசா ஏழை-எளியோருக்கு நலத்திட்ட உதவிகள்

    ஊட்டி,

    நீலகிரி மாவட்டம், கோத்தகிரி ஊராட்சி ஒன்றியம், நடுஹட்டி ஊராட்சியில் நடந்த கிராம சபை கூட்டத்தில் நீலகிரி எம்.பி. ஆ.ராசா கலந்துகொண்டார் அப்போது நடுஹட்டி பகுதியில் பஸ்வசதி, பள்ளியில் ஆங்கில வழி கல்வி, நடமாடும் நியாய விலைக்கடை ஆகியவற்றை நிறைவேற்றி தர வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டது.

    இந்த நிலையில் மேற்கண்ட 3 கோரிக்கைகளையும் சுற்றுலா அமைச்சர் கா.ராமச்சந்திரன் குறுகிய காலத்தில் நிறைவேற்றி தந்து உள்ளார். இதற்கான நிகழ்ச்சி நடந்தது.

    இதில் நீலகிரி எம்.பி ராசா கலந்துகொண்டு ஏழை-எளியோருக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

    நிகழ்ச்சியில் கலெக்டர் அருணா, மாவட்ட ஊராட்சி தலைவர் பொன்தோஸ், கோத்தகிரி ஊராட்சி ஒன்றிய தலைவர் ராம்குமார், பொதுகுழு உறுப்பினர் கே.எம்.ராஜிசெல்வம், காளிதாஸ் மற்றும் அரசு அதிகாரிகள், உள்ளாட்சி பிரதிநிதிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • புகைப்பட அட்டையை பெற விண்ணப்பம் பெற வாக்காளர் உதவி மைய செயலி அறிமுகம்
    • குன்னூர் தாசில்தார் கனிசுந்தரம் மற்றும் நகரமன்ற உறுப்பினர்ராஜ்குமார் உள்ளிட்டோர் பங்கேற்பு

    அருவங்காடு,

    பாராளுமன்ற தேர்தலை ஒட்டி நாடு முழுவதும் வாக்காளர்களுக்கு விழிப்புணர்வை தேர்தல் அதிகாரிகள் ஏற்படுத்தி வருகின்றனர் இதன் ஒருபகுதியாக குன்னூர் பஸ் நிலையத்தில் விழிப்புணர்வு பேரணி நடத்தப்பட்டது.

    இதனை ஆர்.டி.ஓ பூரணகுமார் தலைமை தாங்கிகொடித்து வைத்தார். அப்போது பஸ் பயணிகள் மற்றும் பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் துண்டு பிரசுரங்கள் வழங்கப்பட்டன. தொடர்ந்து இருசக்கர வாகன பேரணியும் நடந்தது.

    மேலும் புதிய வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க, ஆண்டுதோறும் வாக்காளர் புகைப்பட அட்டையை பெறுவதற்கான விண்ணப்பம் பெறுவதற்கும் வாக்காளர் உதவி மைய செயலி அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளது.

    விழிப்புணர்வு பேரணியில் பங்கேற்றவர்கள் மாற்றுத்திறனாளிகள் புதிய கைப்பேசி செயலியை அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளதாகவும், இதனை அனைவரும் பதிவிறக்கம் செய்து. பயன்படுத்திக் கொள்ள வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டது.

    நிகழ்ச்சியில் குன்னூர் தாசில்தார் கனிசுந்தரம், தேர்தல் அலுவலர் கோபி, மற்றும் நகரமன்ற உறுப்பினர் ராஜ்குமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

    ×