என் மலர்tooltip icon

    நாமக்கல்

    • கார்த்திக் வீட்டின் அருகில் 12 ஆடுகளை வளர்த்து வருகிறார்.
    • ஆடுகளை மேய்ச்சலுக்காக பட்டியிலிருந்து திறந்துள்ளார். அப்போது அதிலிருந்த 6 ஆடு மர்மமான முறையில் இறந்து கிடந்தன.

    நாமக்கல்:

    நாமக்கல் மாவட்டம் துறையூர் சாலை கூலிப்பட்டியை சேர்ந்தவர் கார்த்திக். இவரது தாய் சரஸ்வதி ரெட்டிபட்டி ஊராட்சி துணை தலைவராக உள்ளார். கார்த்திக் வீட்டின் அருகில் 12 ஆடுகளை வளர்த்து வருகிறார். இந்த நிலையில் இன்று காலை ஆடுகளை மேய்ச்சலுக்காக பட்டியிலிருந்து திறந்துள்ளார். அப்போது அதிலிருந்த 6 ஆடு மர்மமான முறையில் இறந்து கிடந்தன. இதை பார்த்து அதிர்ச்சியடைந்த கார்த்தி நாமக்கல் போலீஸ் நிலையத்தில் இதுகுறித்து புகார் அளித்தார். அதில் மாரியம்மன் கோவில் திருவிழாவில் லைட் கட்டுவதில் ஒரு தரப்புடன் முன்விரோதம் இருப்பதாகவும், அதன் காரணமாக ஆடுகளை கொன்று இருக்கலாம் எனவும், இறந்த ஆடுகளை பிரேத பரிசோதனை செய்ய வேண்டும் என தெரிவித்து உள்ளார். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • எலச்சிபாளையம் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் நூதன முறையில் கொசுவலை பிடித்துக் கொண்டு கொசு பிடிக்கும் போராட்டம் நடைபெற்றது.
    • ஒன்றிய செயலாளர் கே.எஸ். வெங்கடாசலம் போராட்டத்திற்கு தலைமை வகித்தார்.

    திருச்செங்கோடு:

    நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு அருகே எலச்சிபாளையம் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் நூதன முறையில் கொசுவலை பிடித்துக் கொண்டு கொசு பிடிக்கும் போராட்டம் நடைபெற்றது. ஒன்றிய செயலாளர் கே.எஸ். வெங்கடாசலம் போராட்டத்திற்கு தலைமை வகித்தார்.

    அப்போது போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கூறியதாவது:-

    கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு தேசிய நெடுஞ்சாலை சார்பில் இருபுறமும் சாலை அகலப்படுத்தும் பணிகள் நடைபெற்றது. அப்போது எலச்சிபாளையம் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு உள்ள சாக்கடை கால்வாய் தாழ்வான பகுதியில் அமைக்கப்பட்டதால் மழைக்காலங்களில் மழைநீர், சாக்கடை கழிவுநீர் வெளியேறாமல் இங்குள்ள கடைகள், அரசு அலுவலகங்கள் முன்பு குட்டைபோல் தேங்கி நிற்கிறது. இதனால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு கொசுக்கள் உற்பத்தியும் அதிகரித்து உள்ளது. இதுகுறித்து பலமுறை அரசு அதிகாரிகளிடம் முறையிட்டும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படாதால் தற்போது கொசு பிடிக்கும் போராட்டத்தில் ஈடுபட்டு உள்ளோம் என்றனர்.

    இதில் ஒன்றிய கவுன்சிலர் சு.சுரேஷ், மாவட்ட குழு உறுப்பினர் பழனியம்மாள், முன்னால் ஒன்றிய செயலாளர் பி.சுரேஷ், ஒன்றிய குழு உறுப்பினர்கள் மாரிமுத்து, ஈஸ்வரன், கிட்டுசாமி உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    • (தாட்கோ) மூலமாக ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களுக்கு பல்வேறு திறன் அடிப்படையிலான பயிற்சி திட்டங்களை வழங்கி வருகிறது.
    • சென்னையில் உள்ள ஸ்மைல் ஸ்கில் இந்தியா பயிற்சி நிலையத்தின் மூலமாக திறன்பேசி தொழில் நுட்பவியலாளர் பெண்களுக்கும் உற்பத்தி ஊழியர் பயிற்சி ஆண் மற்றும் பெண்களுக்கும் தாட்கோ சார்பாக அளிக்கப்படவுள்ளது.

    நாமக்கல்:

    நாமக்கல் கலெக்டர் டாக்டர் உமா வெளி யிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டுக் கழகம் (தாட்கோ) மூலமாக ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களுக்கு பல்வேறு திறன் அடிப்படையிலான பயிற்சி திட்டங்களை வழங்கி வருகிறது. இதன் அடிப்படையில் தற்போது சென்னையில் உள்ள ஸ்மைல் ஸ்கில் இந்தியா பயிற்சி நிலையத்தின் மூலமாக திறன்பேசி தொழில் நுட்பவியலாளர் பெண்களுக்கும் உற்பத்தி ஊழியர் பயிற்சி ஆண் மற்றும் பெண்களுக்கும் தாட்கோ சார்பாக அளிக்கப்படவுள்ளது.

    இப்பயிற்சியில் சேர ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினராக இருத்தல் வேண்டும். 10-ம் வகுப்பு படித்த 18 முதல் 35 வயது வரை உள்ள மாணவர்கள் விண்ணப்பிக்கலாம். இப்பயிற்சிக்கான கால அளவு 12 நாட்கள் ஆகும். இப்பயிற்சியினை பெற தாட்கோ இணையதளம் www.tahdco.com என்ற முகவரி மூலம் விண்ணப்பிக்கலாம். பயிற்சிக்கான தங்கும் விடுதி மற்றும் பயிற்சிகட்டணம் தாட்கோ வழங்கும். விருப்ப முள்ளவர்கள் இதில் விண்ணப்பம் செய்து பயனடையுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • ஆஞ்சநேயர் கோவில் கும்பாபிஷேக விழா வருகிற 30-ந் தேதி தொடங்கி நவம்பர் 1-ந் தேதி வரை நடைபெற உள்ளது.
    • நாமக்கல் மாவட்டம் மற்றும் பிற மாவட்டங்களை சார்ந்த பொதுமக்கள் பெருமளவில் கலந்து கொள்ள இருப்பதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.

    நாமக்கல்:

    நாமக்கல் மாவட்ட கலெக்டர் உமா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    நாமக்கல் நகரில் உள்ள பிரசித்தி பெற்ற ஆஞ்சநேயர் கோவில் கும்பாபிஷேக விழா வருகிற 30-ந் தேதி தொடங்கி நவம்பர் 1-ந் தேதி வரை நடைபெற உள்ளது. இந்த விழாவில் நாமக்கல் மாவட்டம் மற்றும் பிற மாவட்டங்களை சார்ந்த பொதுமக்கள் பெருமளவில் கலந்து கொள்ள இருப்பதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. எனவே நவம்பர் மாதம் 1-ந் தேதி (புதன்கிழமை) ஒருநாள் மட்டும் நாமக்கல் தாலுகாவில் உள்ள அனைத்து வகை அரசு, அரசு உதவி பெறும், சுயநிதி, மெட்ரிக் மற்றும் சி.பி.எஸ்.இ. தொடக்க, நடுநிலை, உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளுக்கு உள்ளூர் விடுமுறை அளிக்கப்படுகிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

    • நாமக்கல்லில் இருந்து புறப்பட்டு திருச்செங்கோட்டிற்கு சென்று நடைபயணம் மேற்கொள்ள உள்ளார்.
    • ராசிபுரம் தொகுதியில் நடைபயணம் மேற்கொண்டு மக்கள் மத்தியில் அண்ணாமலை பேச உள்ளார்.

    நாமக்கல்:

    தமிழகம் முழுவதும் சட்டமன்ற தொகுதி வாரியாக பா.ஜனதா மாநில தலைவர் அண்ணாமலை 'என் மண் என் மக்கள்' என்ற தலைப்பில் நடைபயணம் மேற்கொண்டு வருகிறார். அதன்படி நேற்று நாமக்கல் மாவட்டத்தில் குமாரபாளையம் சட்டமன்ற தொகுதியில் நடைபயணம் மேற்கொண்டார்.

    இன்று (சனிக்கிழமை) நாமக்கல் சட்டமன்ற தொகுதியில் மதியம் 2 மணி அளவில் நடைபயணம் மேற்கொள்ள உள்ளார். நாமக்கல்லில் இருந்து சேலம் செல்லும் சாலையில் உள்ள எல்.எம்.ஆர். தியேட்டர் அருகே நடைபயணத்தை தொடங்குகிறார்.

    பின்னர் சேலம் ரோடு கார்னர், நேதாஜி சிலை, பலபட்டறை மாரியம்மன் கோவில், சிங்கப்பூர் பிளாசா மற்றும் மணிக்கூண்டு வழியாக பரமத்தி சாலையில் தில்லைபுரம் வரை நடந்து செல்ல உள்ளார்.

    பின்னர் அங்கு மாலை 6 மணி அளவில் வாகனத்தில் நின்றவாறு பொதுமக்கள் மத்தியில் பேசுகிறார். இதில் மத்திய இணை மந்திரி எல்.முருகன், பா.ஜ.க. மாநில துணை தலைவர்களான சேலம் பெருங்கோட்ட பொறுப்பாளர் கே.பி.ராமலிங்கம், நாமக்கல் மாவட்ட பார்வையாளர் வி.பி.துரைசாமி, ரத யாத்திரையின் மாநில பொறுப்பாளர் நரேந்திரன், கிழக்கு மாவட்ட தலைவர் சத்தியமூர்த்தி, மாவட்ட பொருளாளர் செந்தில்நாதன், மாநில சார்பு அணி நிர்வாகிகள் டாக்டர் ஷியாம் சுந்தர், லோகேந்திரன், மாநில மாவட்ட, நகர, ஒன்றிய மற்றும் பேரூர் நிர்வாகிகள் உள்பட பலர் பங்கேற்க உள்ளனர்.

    அதன் பிறகு நாமக்கல்லில் இருந்து புறப்பட்டு திருச்செங்கோட்டிற்கு சென்று நடைபயணம் மேற்கொள்ள உள்ளார். அதேபோல் நாளை (ஞாயிற்றுக்கிழமை) மதியம் சேந்தமங்கலத்தில் நடைபயணம் மேற்கொள்ளும் பா.ஜனதா மாநில தலைவர் அண்ணாமலை, பின்னர் மாலையில் ராசிபுரம் தொகுதியில் நடைபயணம் மேற்கொண்டு மக்கள் மத்தியில் பேச உள்ளார். இதையொட்டி கட்சியினர் அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்க உள்ளனர்.

    • பரமத்தி வேலூரில் உள்ள உணவ கங்கள், பாஸ்ட்புட் கடைகள், மற்றும் பலகார கடைகள் பேக்கரிகள் உள்ளிட்ட பல்வேறு கடைகளில் உணவு பாதுகாப்பு அலுவலர் நேற்று ஆய்வு மேற்கொண்டார்.
    • உணவகத்தில் வைத்திருந்த சமையல் எண்ணெய் மற்றும் குளிர்சாதன பெட்டியில் வைத்திருந்த மாமிசங்கள் மற்றும்உணவுப் பொருட்களை ஆய்வு செய்தனர்

    பரமத்திவேலூர்:

    நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூரில் உள்ள உணவ கங்கள், பாஸ்ட்புட் கடைகள், மற்றும் பலகார கடைகள் பேக்கரிகள் உள்ளிட்ட பல்வேறு கடைகளில் உணவு பாதுகாப்பு அலுவலர் நேற்று ஆய்வு மேற்கொண்டார். நாமக்கல் மாவட்ட உணவு பாதுகாப்பு நியமன அலுவலர் டாக்டர் அருண் உத்தரவின் பேரில் பரமத்திவேலூரில் உணவு பாதுகாப்பு அலுவலர் செல்வகுமார் தலைமையிலான குழுவினர் பரமத்திவேலூர் பகுதிகளில் செயல்பட்டு வரும் உணவகங்கள், பாஸ்ட்புட் கடைகள் மற்றும் பலகார கடைகள், பேக்கரிகள், டீக்கடைகள், சிற்றுண்டி கடைகள் உள்ளிட்ட பல்வேறு கடைகளில் ஆய்வு மேற்கொண்டனர்.

    ஆய்வின் போது உணவகத்தில் வைத்திருந்த சமையல் எண்ணெய் மற்றும் குளிர்சாதன பெட்டியில் வைத்திருந்த மாமிசங்கள் மற்றும்உணவுப் பொருட்களை ஆய்வு செய்தனர். குளிர்சாதன பெட்டியில் வைத்திருந்த சாதம் மற்றும் மீதமாகி போன உணவுப் பொருட்களை பறிமுதல் செய்து குப்பையில் கொட்டி அளித்தனர். ஆய்வுக்கு பின்னர் சில உணவகங்களுக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் கொடுத்துள்ளார்.

    • வெற்றிலை ஏல சந்தைக்கு வரத்து அதிகரித்ததால் வெற்றிலை விலை சரிவடைந்துள்ளது.
    • இளம்பயிர் மார் 104 கவுளி கொண்ட சுமை ஒன்று ரூ.7 ஆயிரத்திற்கும், கற்பூரி வெற்றிலை இளம்பயிர் மார் சுமை ஒன்று ரூ.4 ஆயிரத்து 500-க்கும், வெள்ளைக்கொடி வெற்றிலை முதியம் பயிர் மார் சுமை ஒன்று ரூ.3 ஆயிரத்திற்கும், கற்பூரி வெற்றிலை முதியம் பயிர் மார் சுமை

    பரமத்திவேலூர்:

    பரமத்திவேலூர் வெற்றிலை ஏல சந்தைக்கு வரத்து அதிகரித்ததால் வெற்றிலை விலை சரிவடைந்துள்ளது. பரமத்திவேலூர் சுற்று வட்டார பகுதிகளான பாண்டமங்கலம், பொத்தனூர், வேலூர், அனிச்சம்பாளையம், குப்புச்சிப்பாளையம், நன்செய் இடையாறு, பாலப்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஏக்கரில் வெற்றிலை பயிர் செய்யப்பட்டுள்ளது. இங்கு விளையும் வெற்றிலைகள் கர்நாடகா, கேரளா, குஜராத், மகாராஷ்டிரா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களுக்கும், சேலம், கோவை, மதுரை, திருப்பூர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களுக்கும் தினந்தோறும் ஏற்றுமதி செய்யப்படுகிறது. நேற்று நடைபெற்ற ஏலத்தில் வெள்ளைக்கொடி வெற்றிலை இளம்பயிர் மார் 104 கவுளி கொண்ட சுமை ஒன்று ரூ.7 ஆயிரத்திற்கும், கற்பூரி வெற்றிலை இளம்பயிர் மார் சுமை ஒன்று ரூ.4 ஆயிரத்து 500-க்கும், வெள்ளைக்கொடி வெற்றிலை முதியம் பயிர் மார் சுமை ஒன்று ரூ.3 ஆயிரத்திற்கும், கற்பூரி வெற்றிலை முதியம் பயிர் மார் சுமை ஒன்று ரூ.ஆயிரத்து 200- க்கும் ஏலம் போனது. வெற்றிலை வரத்து அதிகரித்ததால் வெற்றிலை விலை விலை சரிவடைந்துள்ளதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.

    • கணவன்-மனைவி இருவரும் ஒரே நேரத்தில் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அந்த கிராமத்தையே சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
    • தரையில் ஜெயமணி வாயில் நுரை தள்ளியபடி இறந்து கிடந்ததை பார்த்து அதிர்ச்சியடைந்தனர்.

    பரமத்திவேலூர்:

    நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் தாலுகா பரமத்தி அருகே கூடச்சேரி பூசாரிபட்டிபுதூரை சேர்ந்தவர் அங்கமுத்து (60). சலூன் கடை வைத்து நடத்தி வந்தார். இவரது மனைவி ஜெயமணி( 57). கூலித் தொழிலாளி. இவர்கள் இருவரும் தனியாக வசித்து வந்தனர். கணவன், மனைவி இருவரும் ஒருவருக்கொருவர் மிகுந்த பாசத்துடன் இருந்து வந்தனர்.

    இந்த நிலையில் அங்கமுத்துவுக்கு உடல்நிலை பாதிக்கப்பட்டு பல்வேறு மருத்துவமனைகளுக்கு சென்று சிகிச்சை பெற்று வந்தார். ஆனால் சிகிச்சை பலனளிக்காமல் தொடர்ந்து அவதிப்பட்டு வந்தார். இதன் காரணமாக கடந்த சில நாட்களாக விரக்தியில் இருந்து வந்ததாக கூறப்படுகிறது.

    இந்நிலையில் நேற்று இரவு சுமார் 10 மணிக்கு மேல் மனைவி ஜெயமணி தூங்கிக் கொண்டிருந்தபோது வீட்டில் உள்ள விட்டதில் தூக்குப்போட்டு அங்கமுத்து தற்கொலை செய்து கொண்டார். திடீரென தூக்கம் விழித்து பார்த்த ஜெயமணி கணவர் தூக்கில் தொங்கி கொண்டிருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார்.

    பின்னர் கணவரை பிரிந்து வாழ விரும்பாத அவர் வீட்டிலிருந்த விஷத்தை குடித்து அவரும் தற்கொலை செய்து கொண்டார். இன்று காலை அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் வீட்டில் விட்டத்தில் அங்கமுத்து தூங்கிக் கொண்டிருந்ததை பார்த்துள்ளனர். இதையடுத்து உள்ளே சென்று பார்த்தபோது அங்கு தரையில் ஜெயமணி வாயில் நுரை தள்ளியபடி இறந்து கிடந்ததை பார்த்து அதிர்ச்சியடைந்தனர். உடனடியாக இதுகுறித்து நல்லூர் போலீசருக்கு தகவல் தெரிவித்தனர்.

    அதன்பேரில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஜவகர் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து ஆம்புலன்ஸ் மூலம் அங்கமுத்து மற்றும் அவரது மனைவி ஜெயமணி ஆகியோரின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக பரமத்திவேலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்கு பதிவு செய்து இருவரும் தற்கொலை செய்து கொண்டது குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கணவன்-மனைவி இருவரும் ஒரே நேரத்தில் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அந்த கிராமத்தையே சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

    • நாமக்கல் மாவட்டத்தில் நாளை (27-ந் தேதி) வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்படவுள்ளது.
    • நவம்பர் மாதம் 4, 5, 18 மற்றும் 19-ந் தேதி ஆகிய 4 நாட்கள் அனைத்து வாக்குச்சாவடி மையங்களிலும் சிறப்பு முகாம்கள் நடைபெற உள்ளது.

    நாமக்கல்:

    நாமக்கல் மாவட்ட கலெக்டர் உமா வெளியிட்ட செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    நாமக்கல் மாவட்டத்தில் நாளை (27-ந் தேதி) வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்படவுள்ளது. அதன் தொடர்ச்சியாக நாளை முதல் டிசம்பர் மாதம் 9-ந் தேதி வரை புதிய வாக்காளர்கள் தங்களது பெயரை வாக்காளர் பட்டியலில் சேர்க்கவும், முகவரி மாற்றம், புகைப்பட மாற்றம் குறித்த சிறப்பு சுருக்கமுறை வாக்காளர் பட்டியல் திருத்தப் பணிகள் நடைபெற உள்ளது.

    தவிர நவம்பர் மாதம் 4, 5, 18 மற்றும் 19-ந் தேதி ஆகிய 4 நாட்கள் அனைத்து வாக்குச்சாவடி மையங்களிலும் சிறப்பு முகாம்கள் நடைபெற உள்ளது. அந்நாட்களில் புதிய வாக்காளர் பெயர் சேர்த்தல், பெயர் நீக்கம் மற்றும் முகவரி திருத்தம் தொடர்பான மனுக்களை அந்தந்த வாக்குசாவடி மையங்களில் பொதுமக்கள் அளிக்கலாம்.

    நாமக்கல் மாவட்டத்தில் 18 வயதுடைய இளம் வாக்காளர்களின் எண்ணிக்கை மிகவும் குறைவாகவே பதிவாகியுள்ளது. எனவே 18 வயது பூர்த்தியடைந்த அனைவரும் இந்த வாய்ப்பை பயன்படுத்தி வாக்காளர்களாக அந்தந்த வாக்குச்சாவடி மையங்கள், வருவாய் ஆர்.டி.ஓ. அலுவலகங்கள் அல்லது தாசில்தார் அலுவலகங்கள், நகராட்சி அலுவலகங்களுக்கு சென்று படிவம் 6-ல் விண்ணப்பம் செய்து வாக்காளர் பட்டியலில் தங்களது பெயர்களை சேர்த்துக் கொள்ளலாம். இவ்வாறு அவர் அதில் தெரிவித்துள்ளார்.

    • குமாரபாளையம், ஈரோடு ஆகிய மாவட்டங்களுக்கு முக்கிய குடிநீர் ஆதாரமாக விளங்கும் காவிரி ஆற்றில் தற்போது நீர்வரத்து குறைந்துள்ளது.
    • காவிரி ஆற்றில் மணல் திருடுவது குறித்து தகவல் அறிந்து வி.ஏ.ஒ. முருகன் உள்ளிட்ட வருவாய்த்துறையினர் நேற்று இரவு காவிரி கரையில் சோதனை நடத்தினர்.

    குமாரபாளையம்:

    நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம், ஈரோடு மாவட்டம் பவானி பகுதியை இணைக்கும் வகையில் காவிரி ஆறு ஓடுகிறது. இந்த இரு மாவட்டங்களுக்கு முக்கிய குடிநீர் ஆதாரமாக விளங்கும் காவிரி ஆற்றில் தற்போது நீர்வரத்து குறைந்துள்ளது.

    இதனை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்தி மணல் திருடும் கும்பல் இரவு நேரங்களில் மாட்டு வண்டிகள் மூலம் விடிய, விடிய காவிரியில் மணல் அள்ளுவதாக வருவாய் துறையினருக்கு தொடர்ந்து புகார் வந்தது.

    இந்த நிலையில் பள்ளிபாளையம் சாலை பத்திரப்பதிவு அலுவலகம் அருகே உள்ள காவிரி ஆற்றில் மணல் திருடுவது குறித்து தகவல் அறிந்து வி.ஏ.ஒ. முருகன் உள்ளிட்ட வருவாய்த்துறையினர் நேற்று இரவு காவிரி கரையில் சோதனை நடத்தினர்.

    அப்போது 2 மாட்டு வண்டிகளில் மணல் ஏற்றி வந்த 3 பேரை பிடித்து விசாரணை நடத்தினர். இதில் அவர்கள் காவிரி ஆற்றிலிருந்து மணல் திருடி வந்தது தெரியவந்தது. இதையடுத்து மணலுடன் 2 மாட்டு வண்டிகளையும் அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

    விசாரணையில் மணல் திருட்டில் ஈடுபட்டவர்கள் ஈரோடு மாவட்டம் பவானி பகுதியை சேர்ந்த மாது, சேகர் மற்றும் அவரது மகன் என்பது தெரியவந்தது. இவர்கள் 3 பேரும் அப்பா, மகன், பேரன் ஆவார்கள். இதனையடுத்து வருவாய்த்துறையினர் 3 பேர் மீதும் குமாரபாளையம் போலீஸ் நிலையத்தில் புகாரளித்தனர். போலீசார் வழக்கு பதிவு செய்து 3 பேரையும் கைது செய்தனர்.

    • முன்னதாக தாங்கள் வாடகைக்கு குடியமர்த்தும் நபர்களின் ரேஷன் கார்டு, ஆதார் அட்டை, வாக்காளர் அடையாள அட்டை போன்றவற்றின் நகல்களை அந்தந்த பகுதியில் உள்ள போலீஸ் நிலைய அதிகாரியிடம் ஒப்படைக்க வேண்டும்.
    • மேலும் வாடகைக்கு குடியிருப்பவர்களின் செயல்பாடுகளில் சந்தேகம் இருப்பின் உடனடியாக போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்க வேண்டும்.

    பரமத்திவேலூர்:

    நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் துணை போலீஸ் சூப்பிரண்டு ராஜ முரளி வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    பரமத்திவேலூர் போலீஸ் உட்கோட்ட எல்லைக்குட்பட்ட வேலகவுண்டன்பட்டி, நல்லூர், பரமத்தி, பரமத்தி வேலூர், ஜேடர்பாளையம் ஆகிய 5 போலீஸ் நிலைய பகுதிகளில் வசிக்கும் பொதுமக்கள் தங்களுக்கு சொந்தமான வீடுகளில் புதிதாக வாடகைக்கு குடியமர்த்தும் நபர்கள் பற்றிய முழு விபரம் அறிந்து, அவர்களது ஆதார்கார்டு, ரேஷன் கார்டு மற்றும் வாக்காளர் அடையாள அட்டை போன்றவற்றை பெற்று முகவர்களை சரிபார்த்து குடியமர்த்த வேண்டும்.

    முன்னதாக தாங்கள் வாடகைக்கு குடியமர்த்தும் நபர்களின் ரேஷன் கார்டு, ஆதார் அட்டை, வாக்காளர் அடையாள அட்டை போன்றவற்றின் நகல்களை கொண்டு வந்து அந்தந்த பகுதியில் உள்ள போலீஸ் நிலைய அதிகாரியிடம் ஒப்படைக்க வேண்டும். போலீசார் வாடகைக்கு குடியிருக்கும் நபர்களின் முழு விபரத்தை சேகரித்து தங்களுக்கு ஒப்புதல் அளித்த பிறகே அவர்களை வாடகைக்கு குடியமர்த்த வேண்டும்.

    மேலும் வாடகைக்கு குடியிருப்பவர்களின் செயல்பாடுகளில் சந்தேகம் இருப்பின் உடனடியாக போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்க வேண்டும். பல்வேறு மாவட்டங்களில் இருந்து குற்றவாளிகள் பரமத்திவேலூர் தாலுகா சுற்றுவட்டார பகுதிகளுக்கு வந்து வாடகைக்கு வீடு மற்றும் தங்கும் விடுதிகளில் அறை எடுத்து தங்கி பகல் மற்றும் இரவு நேரங்களில் வீடுகள், நிதி நிறுவனங்கள், வணிக நிறுவனங்களை ரகசியமாக நோட்டமிட்டு பல்வேறு குற்ற செயல்களில் ஈடுபடும் வாய்ப்பு உள்ளது.

    எனவே பொதுமக்கள் போலீசாருக்கு ஒத்துழைப்பு அளித்து குற்ற நடவடிக்கைகள் குறித்து அந்தந்த பகுதி போலீஸ் நிலையங்களில் தகவல் தெரிவிக்க வேண்டும். இவ்வாறு அவர் அதில் தெரிவித்துள்ளார்.

    • காலை 10.30 மணிக்கு கலெக்டர் அலுவலகக் கூட்ட அரங்கில் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற உள்ளது.
    • மானியத் திட்டங்கள் குறித்து அறிந்து கொள்வதுடன் தங்களது கோரிக்கைகளையும் தெரிவிக்கலாம்.

    நாமக்கல்:

    நாமக்கல் மாவட்டத்தில் உள்ள அனைத்து பகுதி விவசாயிகளும் பயன்பெறும் வகையில் கலெக்டர் தலைமையில் நாளை (வெள்ளிக்கிழமை) காலை 10.30 மணிக்கு கலெக்டர் அலுவலகக் கூட்ட அரங்கில் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற உள்ளது.

    இக்கூட்டத்தில் விவசாயிகள், விவசாய சங்கப் பிரதிநிதிகள் தங்களது பயிர் சாகுபடிக்குத் தேவையான நவீன தொழில்நுட்பங்கள், வேளாண் இடு பொருள் இருப்பு விவரங்கள், வேளாண்மை உழவர் நலத்துறை மற்றும் இதர துறைகளில் செயல்படுத்தப்பட்டு வரும் மானியத் திட்டங்கள் குறித்து அறிந்து கொள்வதுடன் தங்களது கோரிக்கைகளையும் தெரிவிக்கலாம். இந்த தகவலை நாமக்கல் மாவட்ட கலெக்டர் டாக்டர் உமா தெரிவித்துள்ளார்.

    ×