என் மலர்
நாகப்பட்டினம்
இலங்கை யாழ்ப்பாணத்தை சேர்ந்தவர் விஜயமூர்த்தி (வயது 23). இவர் இலங்கை கடல்பகுதியில் மீன் பிடித்து கொண்டிருந்தார். இந்நிலையில் நிவர் புயல் நாளை கரையை கடக்க உள்ளதால் கடல் சீற்றத்துடனும், பயங்கர காற்றும் வீசி வருகிறது.
இதனால் காற்றின் வேகத்தால் விஜயமூர்த்தியின் படகு திசை மாறியது. அதிர்ச்சியடைந்த விஜயமூர்த்தி படகை கட்டுக்குள் கொண்டு வர முயன்றார். ஆனால் காற்றின் வேகம் தொடர்ந்து அதிகரிக்கவே நாகை மாவட்டம் வேதாரண்யம் நாலுவேதபதி கடற்கரையில் படகுடன் விஜயமூர்த்தி கரை ஒதுங்கினார்.
தகவல் அறிந்த வேதாரண்யம் கடலோர காவல்படையினர் விரைந்து சென்று படகு வலையை பறிமுதல் செய்து விஜயமூர்த்தியை கைது செய்தனர்.
காற்றின் வேகத்தில் தான் விஜயமூர்த்தி தமிழக கடற்கரைக்கு வந்தாரா? அல்லது கடத்தலில் ஈடுபட வந்துள்ளாரா? என்ற பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
நாகை மாவட்டம் வேதாரண்யம் தாலுகா அகஸ்தியம்பள்ளி, கோடியக்கரை, கடினல்வயல் ஆகிய 3 இடங்களில் 9 ஆயிரம் ஏக்கரில் உப்பு உற்பத்தி செய்யப்படுகிறது. இங்கு ஆண்டுதோறும் 6 லட்சம் டன் உப்பு உற்பத்தி செய்யப்படுகிறது. இங்கு உற்பத்தி செய்யப்படும் உப்பு ஆந்திரா, கேரளா, கர்நாடகா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களுக்கும், தமிழகத்தில் உள்ள பல்வேறு மாவட்டங்களுக்கும் நாள்தோறும் லாரி மூலம் அனுப்பி வைக்கப்படுகிறது.
இந்த ஆண்டு வேதாரண்யம் பகுதியில் சிறு மற்றும் குறு உப்பு உற்பத்தியாளர்கள் 3 லட்சம் டன் உப்பு உற்பத்தி செய்தனர்.தற்போது 1 லட்சம் டன் உப்பு இருப்பு வைக்கப்பட்டுள்ளது.
கன மழை, சூறாவளி வீசும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளதால் வேதாரண்யம் பகுதியில் உப்பு ஏற்றுமதி பணியில் உற்பத்தியாளர்கள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். இங்கிருந்து தினமும் 50 லாரிகளில் உப்பு ஏற்றுமதி செய்யப்பட்டு வந்தது. தற்போது லாரி வரத்துக்குறைவால் தினமும் 15 முதல் 20 லாரிகளில் மட்டுமே உப்பு ஏற்றுமதி செய்யப்படுகிறது. ஆரம்ப காலகட்டத்தில் ஒரு டன் உப்பு ரூ.400-க்கு விற்பனை ஆனது, தற்போது ஒரு டன் உப்பு ரூ,1,000 வரை விற்பனை ஆகிறது.
வடகிழக்கு பருவ மழையையொட்டி கன மழை மற்றும் சூறாவளி வீசும் என வானிலை மையம் அறிவித்துள்ளதால் உப்பு இருப்பு வைத்துள்ள உற்பத்தியாளர்கள் உப்பை விரைவாக விற்பதில் ஆர்வம் காட்டி வருகின்றனர். இதற்கு காரணம் கஜா புயலின் போது இருப்பு வைக்கப்பட்டிருந்த 1 லட்சம் டன் உப்பு முற்றிலும் சேதமானது. கடந்த 2 நாட்களாக உப்பை பாக்கெட் போட்டு லாரியில் ஏற்றும் பணி நடைபெற்று வருகிறது. மேலும் மழையில் இருந்து பாதுகாக்க உப்பை பிளாஸ்டிக் தார்பாய் மற்றும் பனைமட்டை வைத்து மூடும் பணியில் தொழிலாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.
நாகப்பட்டினம்:
நாகை மாவட்டம், திருக்குவளையில் தி.மு.க. இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் விடியலை நோக்கி ஸ்டாலின் குரல் என்ற தலைப்பில் தேர்தல் பிரசாரத்தை தொடங்கி நடத்தி வருகிறார்.
நேற்று 2-வது நாளாக நாகை மாவட்டம் அக்கரைப்பேட்டை மீன்பிடி துறைமுகத்தில் மீனவர்களிடம் குறைகளை கேட்டறிந்தார். அப்போது அனுமதியின்றி கொரோனா பரவும் விதமாக கூட்டத்தை கூட்டியதாக உதயநிதி ஸ்டாலினை போலீசார் கைது செய்தனர். பின்னர் கைது செய்யப்பட்ட உதயநிதி ஸ்டாலின் மற்றும் தி.மு.க.வினரை போலீசார் இரவு 8 மணிக்கு விடுவித்தனர். விடுதலை செய்யப்படுவதற்கு முன்பாக உதயநிதி ஸ்டாலின் நிருபர்களிடம் கூறியதாவது:-
நேற்று பிரசாரம் தொடங்கியவுடனேயே எங்களை போலீசார் கைது செய்தனர். அது போலவே இன்றும் கைது செய்துள்ளனர். எங்களைப் பார்க்க வேண்டும், பேச்சைக் கேட்க வேண்டும் என மக்கள் ஆவலுடன் எதிர்பார்த்து இருக்கின்றனர். இதைப்பார்த்து சகிக்க முடியாத அ.தி.மு.க. அரசு பிரசாரத்திற்கு இடையூறு செய்து வருகிறது.
கைது நடவடிக்கைகள் எடுத்தாலும் பிரசாரம் தொடரும். தொடர்ந்து இடையூறு செய்தால் தி.மு.க. கண்டிப்பாக நீதிமன்றத்துக்கு செல்லும். சட்டசபை தேர்தலில் அ.தி.மு.க., பா.ஜ.க.வுடன் கூட்டணி வைப்பதாக அறிவித்துள்ளது. இது தேர்தலில் வெற்றிபெற எங்களுக்கு சுலபமாக இருக்கும். அ.தி.மு.க. அரசின் ஊழல் பட்டியல் பா.ஜ.க. கையில் இருக்கிறது. அதற்கு பயந்துதான் அ.தி.மு.க., பா.ஜ.க.வுடன் கூட்டணி வைத்துள்ளது என்றார்.
தொடர்ந்து உதயநிதி ஸ்டாலின் சிக்கல், நாகூர், பால்பண்ணைச்சேரி, பனங்குடி ஆகிய பகுதிகளில் பிரசாரம் செய்தார். இரவு தனது தாயார் ஊரான சீர்காழியை அடுத்த திருவெண்காட்டில் தங்கினார்.
தொடர்ந்து மயிலாடுதுறைக்கு சென்ற அவர் அங்கு தருமபுரம் ஆதீனம் 27-வது குருமகா சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்மந்த பராமாச்சாரிய சுவாமிகளை சந்தித்து ஆசி பெற்றார். அவருக்கு விபூதி பூசி ஆதீனம் ஆசி வழங்கினார். பின்னர் திருக்கயிலாய பரம்பரை தருமபுர ஆதீன 26-வது குருமகா சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ சண்முக தேசிய ஞானசம்மந்த பராமாச்சாரிய சுவாமிகளின் முதலாம் ஆண்டு குருபூஜையை முன்னிட்டு மயிலாடுதுறை ஆன்மீக பேரவை சார்பில் தமிழ்க்கடவுள் சேயோன் என்ற ஆன்மீக நூலை உதயநிதி ஸ்டாலின் வெளியிட்டார்.
மயிலாடுதுறை உள்ள தனியார் திருமண மண்டபத்தில் கல்லூரி மாணவிகளிடம் உதயநிதி ஸ்டாலின் கலந்துரையாடினார். அதனைத்தொடர்ந்து கல்லூரி மாணவிகள் உதயநிதி ஸ்டாலினுடன் ஆர்வமுடன் செல்பி எடுத்துக்கொண்டனர்.
இன்று 3-வது நாளாக கும்பகோணத்தில் பிரசாரம் மேற்கொள்ளும் உதயநிதி ஸ்டாலின் கும்பகோணம் பள்ளி தீவிபத்தில் பலியான குழந்தைகளின் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்துகிறார். பின்னர் திருபுவனத்தில் நெசவாளர்களின் குறைகளை கேட்டறிகிறார். மேலும் கும்பகோணத்தில் பல்வேறு இடங்களுக்கு சென்று பிரசாரம் மேற்கொள்கிறார்.
நாகை மாவட்டம் திருக்குவளையில் நேற்று முன்தினம் தி.மு.க. இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் தேர்தல் பிரசாரத்தை தொடங்கினார். அனுமதியின்றி பிரசாரம் மேற்கொண்டதாக அவரை போலீசார் கைது செய்தனர். நேற்று அவர் தனது 2-வது நாள் பிரசாரத்தை மேற்கொண்டார். நாகை அக்கரைப்பேட்டையில் மீனவர்களை சந்தித்து அவர்களின் குறைகளை கேட்டார்.
இதையடுத்து மீன்பிடி துறைமுகத்தில் ஒரு விசைப்படகில் ஏறி கடல் முகத்துவாரம் வரை பயணம் செய்தார். சிறிது தூரம் விசைப்படகை ஓட்டினார்.
படகில் இருந்து கீழே இறங்கியதும் போலீசார் உதயநிதி ஸ்டாலின் மற்றும் தி.மு.க.வினரை கைது செய்தனர். இதை கண்டித்து போலீசாருடன் தி.மு.க.வினர் வாக்குவாதம் செய்ததுடன் மறியல் போராட்டத்திலும் ஈடுபட்டனர். கைதான அனைவரையும் போலீஸ் வேனில் ஏற்றி அங்குள்ள திருமண மண்டபத்திற்கு போலீசார் அழைத்து சென்றனர்.
கைது செய்யப்பட்ட உதயநிதி ஸ்டாலின் மற்றும் தி.மு..க.வினரை போலீசார் இரவு 8 மணிக்கு விடுவித்தனர்.
அப்போது உதயநிதி ஸ்டாலின் நிருபர்களிடம் கூறியதாவது:-
காவல்துறை எவ்வளவு நெருக்கடி கொடுத்தாலும் எங்களது பிரசாரம் தொடரும். தி.மு.க.வின் பிரசாரத்திற்கு மக்கள் மத்தியில் அதிக அளவில் வரவேற்பு உள்ளது. நான் சென்ற இடம் எல்லாம் மக்கள் நல்ல எழுச்சியோடு வரவேற்றனர். இது ஆட்சி மாற்றத்திற்கான வரவேற்பு. தி.மு.க.வின் பிரசாரத்தை ஒடுக்கவே ஆளும் அரசு இந்த நடவடிக்கையில் இறங்கியுள்ளது.
நேற்றுமுன்தினம் பிரசாரத்தை தொடங்கியபோதும் கைது செய்யப்பட்டு விடுதலை செய்யப்பட்டேன். இன்று உலக மீனவர் தினம் என்பதால் மீன்பிடி துறைமுகத்துக்கு வந்து மீனவர்களை சந்திக்கலாம், அவர்களுடைய குறைகளைக் கேட்கலாம் என்று வந்துள்ளேன். இப்போது 2-வது நாளாக என்னை கைது செய்துள்ளனர். தி.மு.க. பிரசாரத்தை கண்டு அ.தி.மு.க. பயப்படுகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.
நாகை மாவட்டம் சீர்காழி அருகே 7 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கியதாக 4 சிறுவர்கள் கைது செய்யப்பட்டனர்.
வீட்டு வாசலில் விளையாடிக் கொண்டிருந்த சிறுமியை 4 சிறுவர்கள் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கியதாக தகவல் வெளியாகி உள்ளது.
காயமடைந்த சிறுமிக்கு சீர்காழி அரசு மருத்துவமனையில் சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது.






