search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கைது
    X
    கைது

    வேதாரண்யம் கடற்கரையில் படகுடன் கரை ஒதுங்கிய இலங்கை மீனவர் கைது

    வேதாரண்யம் கடற்கரையில் படகுடன் கரை ஒதுங்கிய இலங்கை மீனவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    வேதாரண்யம்:

    இலங்கை யாழ்ப்பாணத்தை சேர்ந்தவர் விஜயமூர்த்தி (வயது 23). இவர் இலங்கை கடல்பகுதியில் மீன் பிடித்து கொண்டிருந்தார். இந்நிலையில் நிவர் புயல் நாளை கரையை கடக்க உள்ளதால் கடல் சீற்றத்துடனும், பயங்கர காற்றும் வீசி வருகிறது.

    இதனால் காற்றின் வேகத்தால் விஜயமூர்த்தியின் படகு திசை மாறியது. அதிர்ச்சியடைந்த விஜயமூர்த்தி படகை கட்டுக்குள் கொண்டு வர முயன்றார். ஆனால் காற்றின் வேகம் தொடர்ந்து அதிகரிக்கவே நாகை மாவட்டம் வேதாரண்யம் நாலுவேதபதி கடற்கரையில் படகுடன் விஜயமூர்த்தி கரை ஒதுங்கினார்.

    தகவல் அறிந்த வேதாரண்யம் கடலோர காவல்படையினர் விரைந்து சென்று படகு வலையை பறிமுதல் செய்து விஜயமூர்த்தியை கைது செய்தனர்.

    காற்றின் வேகத்தில் தான் விஜயமூர்த்தி தமிழக கடற்கரைக்கு வந்தாரா? அல்லது கடத்தலில் ஈடுபட வந்துள்ளாரா? என்ற பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரித்து வருகின்றனர்.


    Next Story
    ×