search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    விபத்து
    X
    விபத்து

    கீழ்வேளூர் அருகே சரக்கு வாகனம் மோதி அரசு பஸ் கண்டக்டர் பலி

    கீழ்வேளூர் அருகே கோவிலுக்கு நடந்து சென்ற அரசு பஸ் கண்டக்டர், சரக்கு வாகனம் மோதி பலியானார்.
    சிக்கல்:

    கீழ்வேளூர் அருகே சிக்கவலம் மெயின்ரோட்டை சேர்ந்தவர் மாரிமுத்து (வயது52). இவர் திருவாரூரில் அரசு போக்குவரத்து கழகத்தில் கண்டக்டராக வேலை பார்த்து வருகிறார். இந்த நிலையில் நேற்று மதியம் மாரிமுத்து வீட்டில் இருந்து அருகில் உள்ள கோவிலில் சாமி தரிசனம் செய்வதற்காக நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது நாகையில் இருந்து திருச்சி நோக்கி சென்ற சரக்கு வாகனம், மாரிமுத்து மீது மோதியது. இதில் படுகாயம் அடைந்த அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

    இதுகுறித்து தகவல் அறிந்த கீழ்வேளூர் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து மாரிமுத்துவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக நாகை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    மேலும் இதுகுறித்த புகாரின் பேரில் போலீசார், விபத்தை ஏற்படுத்திய சரக்கு வாகன டிரைவர் பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    Next Story
    ×