என் மலர்tooltip icon

    நாகப்பட்டினம்

    நாகை மாவட்டத்தில் ஒரே நாளில் ஊரடங்கை மீறியதாக 237 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். மேலும் 226 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
    நாகப்பட்டினம்:

    தமிழகத்தில் கொரோனா 2-வது அலை தீவிரமாக பரவி வருவதால் நாளுக்கு நாள் தொற்று எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே செல்கிறது. நோய் தொற்றின் கோரப்பிடியில் சிக்கி பலியானோர் எண்ணிக்கையும் உயர்ந்து கொண்டே செல்கிறது.

    கொரோனாவை கட்டுப்படுத்த நேற்று முன்தினம் முதல் ஒரு வாரம் தளர்வுகள் இல்லாத முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.பால், மருந்தகம், பெட்ரோல் விற்பனை நிலையம் தவிர மற்ற அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டன. ஓட்டல்களில் குறிப்பிட்ட நேரங்களில் மட்டும் பார்சல் வழங்க அனுமதி அளிக்கப்பட்டது.

    இதனால் நேற்று 2-வது நாளாக நாகை கடைத்தெரு, நீலாவீதிகள், புதிய, பழைய பஸ் நிலையங்கள், பப்ளிக் ஆபீஸ் ரோடு, நாகூர் உள்ளிட்ட பகுதிகளில் அனைத்து கடைகளும் மூடப்பட்டிருந்தன. பஸ், ஆட்டோ, கார் உள்ளிட்டவைகள் இயக்கப்படாததால் சாலைகள் வெறிச்சோடி காணப்பட்டன.

    மாவட்டத்தில் முக்கிய சாலைகளில் தடுப்புகள் அமைத்தும், மாநில எல்லைகளில் சோதனைச்சாவடிகள் அமைக்கப்பட்டும் போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். தேவையின்றி சாலையில் சுற்றித்திரிந்தவர்களின், வாகனங்களை பறிமுதல் சென்றனர். அதன்படி நேற்று முன்தினம் நாகை மாவட்டத்தில் ஊரடங்கு உத்தரவை மீறி 217 மோட்டார் சைக்கிள்களும், 4 சக்கர வாகனங்கள் 9 என மொத்தம் 226 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டது. இதுதொடர்பாக 237 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
    நாகையில் காய்கறி, மளிகை பொருட்களை விற்பனை செய்ய நடமாடும் வாகனங்களை கலெக்டர் பிரவீன் நாயர் தொடங்கி வைத்தார்.
    நாகப்பட்டினம்:

    முழு ஊரடங்கில் பொதுமக்கள் பாதிக்கப்படாத வகையில் வீடுகளுக்கே நேரடியாக மளிகை, காய்கறி, பழம் ஆகியவற்றை விற்பனை செய்ய தமிழக அரசு வழிவகை செய்துள்ளது.

    அதன்படி நாகை நகராட்சி அலுவலகத்தில் காய்கறி, பழங்கள், மளிகை பொருட்களை விற்பனை செய்ய நடமாடும் வாகனங்களை தொடங்கி வைக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு மாவட்ட கலெக்டர் பிரவீன் நாயர் தலைமை தாங்கினார். நகராட்சி ஆணையர் ஏகராஜ் முன்னிலை வகித்தார்.

    பின்னர் கலெக்டர் பிரவீன் நாயர் கூறியதாவது:-

    தமிழக முதல்-அமைச்சர் உத்தரவின் பேரில் கொரோனாவை கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. பொதுமக்கள் தங்களுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்களான

    காய்கறி, மளிகை பொருட்கள், பால் உள்ளிட்டவற்றை காலை 6 மணிமுதல் பகல் 2 மணிவரை உள்ளாட்சி அமைப்புகள் மூலம் அருகாமையில் உள்ள வார்டுகளில் விலை கொடுத்து வாங்கி கொள்ள ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

    இன்று (அதாவது நேற்று) 16 வாகனங்கள் மூலம் நாகை நகராட்சியில் உள்ள அனைத்து வார்டுகளிலும் அத்தியாவசிய பொருட்கள் கிடைக்கும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

    இதை தொடர்ந்து நகராட்சி அலுவலகத்தில் கொரோனா தடுப்பூசி முகாமினை பார்வையிட்டு ஆய்வு செய்தார். இதில் தி.மு.க. மாவட்ட பொருளாளர் கவுதமன், நகராட்சி அலுவலர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
    கீழையூர் ஒன்றியம் சோழவித்யாபுரத்தில் கொரோனா பரிசோதனை முகாம் நடைபெற்றது.
    வேளாங்கண்ணி:

    கீழையூர் ஒன்றியம் சோழவித்யாபுரத்தில் கொரோனா பரிசோதனை முகாம் நடைபெற்றது. முகாமிற்கு ஊராட்சி மன்ற தலைவர் கோமதி தமிழ்ச்செல்வன் தலைமை தாங்கினார். டாக்டர் சுபா முன்னிலை வகித்தார். இதில் சுற்று வட்டார பகுதிகளில் உள்ள பொதுமக்கள் பரிசோதனை செய்து கொண்டனர். இதில் சுகாதார மேற்பார்வையாளர் ராமமூர்த்தி மற்றும் தொழில்நுட்ப செவிலியர் ஷீலாவதி மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.
    நாகையில் தூக்குப்போட்டு இளம் பெண் தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து உதவி கலெக்டர் விசாரணை நடத்தி வருகிறார்.
    நாகப்பட்டினம்:

    திருச்சி மாவட்டம் உறையூர் பகுதியை சேர்ந்தவர் நாகராஜன். இவருடைய மகள் ரேவதி (வயது 30). இவருக்கும் நாகை மறைமலைநகரை சேர்ந்த கணேசன் என்பவருக்கு கடந்த 2015-ம் ஆண்டு திருமணம் நடந்தது. இவர்களுக்கு 2 பெண் குழந்தைகள் உள்ளனர்.

    இந்த நிலையில் சம்பவத்தன்று ரேவதி வீட்டில் மின்விசிறியில் தூக்கில் தொங்கினார். உடனே அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு நாகை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள், ரேவதி ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

    இந்த நிலையில் ரேவதியின் பெற்றோர், வெளிப்பாளையம் போலீசில் புகார் கொடுத்தனர். அதில் தங்கள் மகள் வரதட்சணை கொடுமை காரணமாக தற்கொலை செய்து கொண்டதாக தெரிவித்துள்ளனர். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். ரேவதிக்கு திருமணமாகி 6 ஆண்டுகளே ஆவதால் நாகை உதவி கலெக்டர் மணிவேலன் மேல் விசாரணை நடத்தி வருகிறார்.
    கோடியக்கரை ஊராட்சியில் கொரோனா பரிசோதனை சிறப்பு முகாம் நடைபெற்றது.
    வேதாரண்யம்:

    வேதாரண்யம், கோடியக்கரை, கரியாப்பட்டினம் உள்ளிட்ட அரசு மருத்துவமனைகளில் பொதுமக்களுக்கு நாள்தோறும் கொரோனா தடுப்பூசி மற்றும் பரிசோதனை செய்யப்படுகிறது இந்த நிலையில் கோடியக்கரை ஊராட்சியில் கொரோனா பரிசோதனை சிறப்பு முகாம் நடைபெற்றது. முகாமை வேதாரண்யம் ஊராட்சி ஒன்றிய ஆணையர் ராஜு தொடங்கி வைத்தார்.முகாமில் டாக்டர் பரத், சுகாதார பணியாளர்கள் கொண்ட குழுவினர் பொதுமக்களுக்கு கொரோனா பரிசோதனை செய்தனர்.
    மாணவி தனிஷ்கா, நாகை மாவட்ட கலெக்டர் பிரவீன் நாயரை சந்தித்து குல தெய்வ கோவிலுக்கு குடும்பத்துடன் செல்வதற்கு உண்டியலில் சேமித்து வைத்திருந்த ரூ.7 ஆயிரத்தை கொரோனா நிவாரண நிதிக்காக வழங்கினார்.
    நாகப்பட்டினம்:

    தமிழகத்தில் கொரோனா 2-வது அலை புயல் வேகத்தில் பரவிவருகிறது. இதை கட்டுப்படுத்த கடந்த 10-ந்தேதி முதல் வருகிற 24-ந்தேதி வரை முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.கொரோனா தொற்று பரவல் அதிகரிப்பால் கடும் மருத்துவ நெருக்கடியையும், நிதி நெருக்கடியையும் அரசு சந்தித்து வருகிறது. இதற்கு பொதுமக்கள் தாமாக முன்வந்து முதல்-அமைச்சர் நிவாரண நிதிக்கு நிதியளிக்க வேண்டும் என முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்திருந்தார்.இதையடுத்து தொழில் அதிபர்கள், நடிகர்கள், அரசியல் கட்சியினர் என பல்வேறு தரப்பினர் நிதி அளித்து வருகின்றனர்.

    நாகை மாவட்டம் திருமருகல் வடக்கு ஒன்றியம் அருள்மொழி தேவன் கிராமத்தை சேர்ந்த பாண்டியன், சீதாதேவி ஆகிேயாரின் மகள் தனிஷ்கா(வயது10). இவர் 5-ம் வகுப்பு படித்து வருகிறார். மாணவி தனிஷ்கா, நாகை மாவட்ட கலெக்டர் அலுவலகத்துக்கு நேற்று முன்தினம் வந்தார். பின்னர் அவர், கலெக்டர் பிரவீன் நாயரை சந்தித்து குல தெய்வ கோவிலுக்கு குடும்பத்துடன் செல்வதற்கு உண்டியலில் சேமித்து வைத்திருந்த ரூ.7 ஆயிரத்தை கொரோனா நிவாரண நிதிக்காக வழங்கினார். இதனை பெற்றுக்கொண்ட கலெக்டர் சிறுமியை, பாராட்டி நன்றி தெரிவித்தார்.
    நாகை மாவட்டத்தில் 5 நாட்களில் 100 ஆக்சிஜன் படுக்கைகள் அமைக்கப்படும் என கலெக்டர் பிரவீன் நாயர் தெரிவித்தார்.
    நாகப்பட்டினம்:

    நாகையில் கலெக்டர் பிரவீன் நாயர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    இதை பெற்றுக்கொண்ட கலெக்டர் பிரவீன் நாயர் கூறியதாவது:-

    நாகை அரசு மருத்துவமனையில் 130 படுக்கைகள் ஆக்சிஜன் வசதியுடன் உள்ளது. ஆனால் எல்லா படுக்கையும் நிரம்பியுள்ளது. நாள் ஒன்றுக்கு கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு 600 பேர் சிகிச்சைக்காக வருகின்றனர். இதனால் ஆக்சிஜன் வசதி கொண்ட படுக்கைகள் தேவைப்படுகிறது.

    இதை கருத்தில் ஆக்சிஜன் செறிவூட்டும் கருவி பெறப்பட்டு நாகை மற்றும் வேதாரண்யம் அரசு மருத்துவமனைகளுக்கு அனுப்பி வைக்கப்படுகிறது. டாக்டர்கள் கொண்டு அமைக்கப்பட்ட குழுவில் இன்னும் ஒரு மாத காலத்தில் 100 ஆக்சிஜன் படுக்கை வசதி தேவைப்படும் என தெரிவித்தனர்.

    இதன் அடிப்படையில் ஆக்சிஜன் செறிவூட்டும் கருவி பெறப்பட்டது. எனவே இன்னும் 5 நாட்களில் நாகை மாவட்டத்தில் 100 ஆக்சிஜன் படுக்கைகள் அமைக்கப்படும். இதை தவிர கீழ்வேளூர், திருப்பூண்டி ஆகிய இடங்களில் உள்ள அரசு மருத்துவமனைகளில் கொரோனா சிகிச்சை மையமாக மாற்றப்படும். இதற்கான அனைத்து நடவடிக்கையும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இவ்வாறு அவர் கூறினார்.

    பேட்டியின் போது கூடுதல் கலெக்டர் பிரசாந்த், நாகை மாலி எம்.எல்.ஏ., வேதாரண்யம் அரசு மருத்துவ நிலைய மருத்துவ அதிகாரி முருகப்பன் மற்றும் பலர் உடன் இருந்தனர்.

    முன்னதாக கலெக்டர் பிரவீன் நாயர் கீழ்வேளூர் அரசு மருத்துவமனைக்கு சென்று ஆய்வு செய்தார். அப்போது மருத்துவமனையில் அனைத்து பிரிவுகளுக்கும் சென்று பார்வையிட்டார். மருத்துவமனையில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு வரும் நோயாளிகளுக்கு படுக்கை வசதி, சிகிச்சை அளிக்க உள்ள வசதிகள் குறித்து சுகாதாரத்துறை அதிகாரிகளிடம் கேட்டறிந்தார். பின்னர் மருத்துவமனையில் 50 படுக்கைகள் வசதி கொண்ட தனி சிகிச்சை மையம் அமைக்க செய்யப்பட்டுள்ள ஏற்பாடுகள் குறித்து கேட்டறிந்தார். மேலும் கொரோனா சிகிச்சை மற்றும் பரிசோதனைக்கு வருபவர்களுக்கு தனியாக காத்திருப்பு அறை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் ஏற்படுத்தி தர வேண்டும். என அறிவுறுத்தினார்.

    ஆய்வின் போது சுகாதார பணிகள் துணை இயக்குனர் சண்முகசுந்தரம். துணை இயக்குனர் (காசநோய்,) ராஜா, மாவட்ட கொள்ளை நோய் தடுப்பு அலுவலர் லியாகத் அலி, தொற்றாநோய் ஒருங்கிணைப்பாளர் ராகவன் உள்பட அரசு அலுவலர்கள் உடன் இருந்தனர்.

    வேதாரண்யம் பகுதியில் பலத்த காற்றுடன் கன மழை பெய்தது. இதில் மின்னல் தாக்கியதில் செங்கல் சூளை தொழிலாளி பலியானார்.
    வேதாரண்யம்:

    நாகை மாவட்டம் வேதாரண்யம் தாலுகா நெய்விளக்கு, குரவப்புலம், கரியாப்பட்டினம், அகஸ்தியம்பள்ளி, கோடியக்கரை, கோடியக்காடு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் நேற்று முன்தினம் இரவு இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கனமழை பெய்தது.

    இந்த மழையால் சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. மேலும் தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்கி நின்றது.

    வேதாரண்யம் தாலுகா அவரிக்காட்டில் வைரவன் பேட்டை கிராமத்தில் உள்ள ஒரு செங்கல் சூளையில் தலைஞாயிறு வேளாணி மூந்தல் பகுதியை சேர்ந்த காளிதாஸ்(வயது 55) என்பவர் குடும்பத்துடன் தங்கி வேலை பார்த்து வந்தார்.

    நேற்று முன்தினம் இரவு கனமழை பெய்தபோது அவர் தங்கியிருந்த கொட்டகையின் வாசலில் நின்று கொண்டிருந்த தொழிலாளி காளிதாசை மின்னல் தாக்கியது. இதில் அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். அப்போது அருகில் இருந்த அவரது பேரன் விஸ்வா(4) மின்னல் தாக்கியதில் லேசான காயத்துடன் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினான்.

    இதுகுறித்து தகவல் அறிந்த வேட்டைக்காரனிருப்பு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பக்கிரிசாமி மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து காளிதாஸ் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக வேதாரண்யம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    மேலும் இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    வேளாங்கண்ணி அருகே கடனை திருப்பி கேட்டதால் உருட்டுக் கட்டையால் கொத்தனாரை அடித்துக்கொன்ற வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
    வேளாங்கண்ணி:

    நாகை மாவட்டம் வேளாங்கண்ணி போலீஸ் சரகம் வடவூர் தென்பாதி பகுதியை சேர்ந்தவர் குமார் (வயது 35). இவர் கொத்தனாராக வேலை பார்த்து வந்தார். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு அதே பகுதியை சேர்ந்த பக்கிரிசாமி மற்றும் அவரது குடும்பத்தினர் தனது மூத்த மகன் திருமணத்திற்காக குமாரிடம் ரூ.10 ஆயிரம் கடன் வாங்கியதாக தெரிகிறது. இதில் ரூ.7,300-ஐ திருப்பி கொடுத்து விட்டதாக கூறப்படுகிறது. மீதி தொகையை குமார் கடந்த 13-ந் தேதி பக்கிரிசாமி வீட்டிற்கு சென்று கேட்டுள்ளார். அப்போது வீட்டில் இருந்தவர்கள் தற்போது பணம் இல்லை என்றும், பிறகு தருவதாகவும் தெரிவித்து உள்ளனர்.

    இந்த நிலையில் சம்பவத்தன்று குமார் கடைத்தெருவிற்கு சென்று விட்டு மோட்டார் சைக்கிளில் வீட்டிற்கு திரும்பி வந்து கொண்டிருந்தார். பழைய பிள்ளையார் கோவில் வளைவில் திரும்பியபோது பக்கிரிசாமியின் இளைய மகன் சுந்தரபாண்டியன்(24) என்பவர் மோட்டார் சைக்கிளை வழிமறித்து குமாரிடம், எப்படி எங்களது வீடு தேடி பணம் கேட்க வந்தாய்? என கேட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.

    இந்த வாக்குவாதத்தின்போது சுந்தரபாண்டியன் அருகில் கிடந்த உருட்டுக்கட்டையை எடுத்து குமாரின் தலையில் தாக்கினார். இதில் படுகாயம் அடைந்த அவரை அருகில் இருந்தவர்கள் மீட்டு நாகை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக திருவாரூர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் குமார் பரிதாபமாக இறந்தார்.

    இதுகுறித்து வேளாங்கண்ணி போலீசார் வழக்குப்பதிவு செய்து சுந்தர பாண்டியனை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    நாகூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ரவி தலைமையில் போலீசார் கொரோனா விழிப்புணர்வு கலை நிகழ்ச்சி நடத்தினர்.
    திட்டச்சேரி:

    திட்டச்சேரி போலீஸ் சரகம் திருமருகல் மெயின் ரோட்டில் போலீசார் சார்பில் கொரோனா விழிப்புணர்வு கலை நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் கொரோனா 2-வது அலை தீவிரமாக பரவி வருவதால் பொதுமக்கள் அவசியமின்றி யாரும் வீட்டை விட்டு வெளியே வரவேண்டாம்.

    அத்தியாவசிய தேவைகளுக்கு வெளியில் வரும்போது முக கவசம் கட்டாயம் அணிந்து வரவேண்டும்.கொரோனாவை கட்டுப்படுத்த ஒத்துழைப்பு தரவேண்டும் என போலீசார் கலை நிகழ்ச்சி மூலம் பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தினர். இதில் திட்டச்சேரி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பாலமுருகன் மற்றும் கலைக்குழுவினர், போலீசார் கலந்துகொண்டனர்.

    இதேபோல நாகூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ரவி தலைமையில் போலீசார் கொரோனா விழிப்புணர்வு கலை நிகழ்ச்சி நடத்தினர். நாகூர் கொத்தவால் சாவடி இருந்து தொடங்கிய கொரோனா விழிப்புணர்வு கலைநிகழ்ச்சி பெரிய கடை தெரு, அலங்கார வாசல், நெல்லு கடைதெரு, மெயின் ரோடு மற்றும் முக்கிய வீதிகளுக்கு சென்றது. பொதுமக்கள் கட்டாயம் முக கவசம் அணிய வேண்டும், சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும் என விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
    வேளாங்கண்ணி அருகே கடனை திருப்பி கேட்டதால் உருட்டுக் கட்டையால் கொத்தனாரை அடித்துக்கொன்ற வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
    வேளாங்கண்ணி:

    நாகை மாவட்டம் வேளாங்கண்ணி போலீஸ் சரகம் வடவூர் தென்பாதி பகுதியை சேர்ந்தவர் குமார் (வயது 35). இவர் கொத்தனாராக வேலை பார்த்து வந்தார். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு அதே பகுதியை சேர்ந்த பக்கிரிசாமி மற்றும் அவரது குடும்பத்தினர் தனது மூத்த மகன் திருமணத்திற்காக குமாரிடம் ரூ.10 ஆயிரம் கடன் வாங்கியதாக தெரிகிறது. இதில் ரூ.7,300-ஐ திருப்பி கொடுத்து விட்டதாக கூறப்படுகிறது. மீதி தொகையை குமார் கடந்த 13-ந் தேதி பக்கிரிசாமி வீட்டிற்கு சென்று கேட்டுள்ளார். அப்போது வீட்டில் இருந்தவர்கள் தற்போது பணம் இல்லை என்றும், பிறகு தருவதாகவும் தெரிவித்து உள்ளனர்.

    இந்த நிலையில் சம்பவத்தன்று குமார் கடைத்தெருவிற்கு சென்று விட்டு மோட்டார் சைக்கிளில் வீட்டிற்கு திரும்பி வந்து கொண்டிருந்தார். பழைய பிள்ளையார் கோவில் வளைவில் திரும்பியபோது பக்கிரிசாமியின் இளைய மகன் சுந்தரபாண்டியன்(24) என்பவர் மோட்டார் சைக்கிளை வழிமறித்து குமாரிடம், எப்படி எங்களது வீடு தேடி பணம் கேட்க வந்தாய்? என கேட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.

    இந்த வாக்குவாதத்தின்போது சுந்தரபாண்டியன் அருகில் கிடந்த உருட்டுக்கட்டையை எடுத்து குமாரின் தலையில் தாக்கினார். இதில் படுகாயம் அடைந்த அவரை அருகில் இருந்தவர்கள் மீட்டு நாகை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக திருவாரூர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் குமார் பரிதாபமாக இறந்தார்.

    இதுகுறித்து வேளாங்கண்ணி போலீசார் வழக்குப்பதிவு செய்து சுந்தர பாண்டியனை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    நாகை மாவட்டம் வேதாரண்யம் அருகே மின்னல் தாக்கியதில் தொழிலாளி உயிரிழந்தது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    வேதாரண்யம்:

    நாகை மாவட்டம் தலைஞாயிறு பகுதியை சேர்ந்தவர் காளிதாஸ் (வயது 55) தொழிலாளி.

    இவர் நேற்று இரவு தனது பேரன்களான விஸ்வா, மணிகண்டன் ஆகியோருடன் வேதாரண்யம் அடுத்த அவரி காட்டில் உள்ள ஒரு செங்கல் சூளையில் வேலை பார்த்து கொண்டிருந்தார். அப்போது இடி-மின்னலுடன் கனமழை பெய்ய தொடங்கியது. இதனால் காளிதாஸ் அங்குள்ள கொட்டகைக்கு சென்றார். அப்போது வாசலில் நின்று செங்கல் ஏதும் சேதமாகிறதா? என பார்த்தார். அந்த நேரத்தில் திடீரென காளிதாசை மின்னல் தாக்கியது. இதில் உடல் கருகிய நிலையில் சம்பவ இடத்திலேயே காளிதாஸ் இறந்தார். மேலும் அவரை காப்பாற்ற முயன்ற விஸ்வாவுக்கு காயம் ஏற்பட்டது.

    இதுகுறித்து தகவல் அறிந்த வேட்டைக்காரனிருப்பு சப்-இன்ஸ்பெக்டர் பக்கிரிசாமி மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து காளிதாசின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். காயமடைந்த விஸ்வா சிகிச்சை பெற்று வருகிறார்.

    இது பற்றிய புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×