என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
மின்னல் தாக்கி செங்கல் சூளை தொழிலாளி பலி
Byமாலை மலர்22 May 2021 11:11 AM GMT (Updated: 22 May 2021 11:11 AM GMT)
வேதாரண்யம் பகுதியில் பலத்த காற்றுடன் கன மழை பெய்தது. இதில் மின்னல் தாக்கியதில் செங்கல் சூளை தொழிலாளி பலியானார்.
வேதாரண்யம்:
நாகை மாவட்டம் வேதாரண்யம் தாலுகா நெய்விளக்கு, குரவப்புலம், கரியாப்பட்டினம், அகஸ்தியம்பள்ளி, கோடியக்கரை, கோடியக்காடு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் நேற்று முன்தினம் இரவு இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கனமழை பெய்தது.
இந்த மழையால் சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. மேலும் தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்கி நின்றது.
வேதாரண்யம் தாலுகா அவரிக்காட்டில் வைரவன் பேட்டை கிராமத்தில் உள்ள ஒரு செங்கல் சூளையில் தலைஞாயிறு வேளாணி மூந்தல் பகுதியை சேர்ந்த காளிதாஸ்(வயது 55) என்பவர் குடும்பத்துடன் தங்கி வேலை பார்த்து வந்தார்.
நேற்று முன்தினம் இரவு கனமழை பெய்தபோது அவர் தங்கியிருந்த கொட்டகையின் வாசலில் நின்று கொண்டிருந்த தொழிலாளி காளிதாசை மின்னல் தாக்கியது. இதில் அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். அப்போது அருகில் இருந்த அவரது பேரன் விஸ்வா(4) மின்னல் தாக்கியதில் லேசான காயத்துடன் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினான்.
இதுகுறித்து தகவல் அறிந்த வேட்டைக்காரனிருப்பு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பக்கிரிசாமி மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து காளிதாஸ் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக வேதாரண்யம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
நாகை மாவட்டம் வேதாரண்யம் தாலுகா நெய்விளக்கு, குரவப்புலம், கரியாப்பட்டினம், அகஸ்தியம்பள்ளி, கோடியக்கரை, கோடியக்காடு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் நேற்று முன்தினம் இரவு இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கனமழை பெய்தது.
இந்த மழையால் சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. மேலும் தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்கி நின்றது.
வேதாரண்யம் தாலுகா அவரிக்காட்டில் வைரவன் பேட்டை கிராமத்தில் உள்ள ஒரு செங்கல் சூளையில் தலைஞாயிறு வேளாணி மூந்தல் பகுதியை சேர்ந்த காளிதாஸ்(வயது 55) என்பவர் குடும்பத்துடன் தங்கி வேலை பார்த்து வந்தார்.
நேற்று முன்தினம் இரவு கனமழை பெய்தபோது அவர் தங்கியிருந்த கொட்டகையின் வாசலில் நின்று கொண்டிருந்த தொழிலாளி காளிதாசை மின்னல் தாக்கியது. இதில் அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். அப்போது அருகில் இருந்த அவரது பேரன் விஸ்வா(4) மின்னல் தாக்கியதில் லேசான காயத்துடன் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினான்.
இதுகுறித்து தகவல் அறிந்த வேட்டைக்காரனிருப்பு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பக்கிரிசாமி மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து காளிதாஸ் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக வேதாரண்யம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X