என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
உண்டியலில் சேமித்த ரூ.7 ஆயிரத்தை கொரோனா நிவாரண நிதிக்கு வழங்கிய மாணவி
Byமாலை மலர்22 May 2021 11:21 AM GMT (Updated: 22 May 2021 11:21 AM GMT)
மாணவி தனிஷ்கா, நாகை மாவட்ட கலெக்டர் பிரவீன் நாயரை சந்தித்து குல தெய்வ கோவிலுக்கு குடும்பத்துடன் செல்வதற்கு உண்டியலில் சேமித்து வைத்திருந்த ரூ.7 ஆயிரத்தை கொரோனா நிவாரண நிதிக்காக வழங்கினார்.
நாகப்பட்டினம்:
தமிழகத்தில் கொரோனா 2-வது அலை புயல் வேகத்தில் பரவிவருகிறது. இதை கட்டுப்படுத்த கடந்த 10-ந்தேதி முதல் வருகிற 24-ந்தேதி வரை முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.கொரோனா தொற்று பரவல் அதிகரிப்பால் கடும் மருத்துவ நெருக்கடியையும், நிதி நெருக்கடியையும் அரசு சந்தித்து வருகிறது. இதற்கு பொதுமக்கள் தாமாக முன்வந்து முதல்-அமைச்சர் நிவாரண நிதிக்கு நிதியளிக்க வேண்டும் என முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்திருந்தார்.இதையடுத்து தொழில் அதிபர்கள், நடிகர்கள், அரசியல் கட்சியினர் என பல்வேறு தரப்பினர் நிதி அளித்து வருகின்றனர்.
நாகை மாவட்டம் திருமருகல் வடக்கு ஒன்றியம் அருள்மொழி தேவன் கிராமத்தை சேர்ந்த பாண்டியன், சீதாதேவி ஆகிேயாரின் மகள் தனிஷ்கா(வயது10). இவர் 5-ம் வகுப்பு படித்து வருகிறார். மாணவி தனிஷ்கா, நாகை மாவட்ட கலெக்டர் அலுவலகத்துக்கு நேற்று முன்தினம் வந்தார். பின்னர் அவர், கலெக்டர் பிரவீன் நாயரை சந்தித்து குல தெய்வ கோவிலுக்கு குடும்பத்துடன் செல்வதற்கு உண்டியலில் சேமித்து வைத்திருந்த ரூ.7 ஆயிரத்தை கொரோனா நிவாரண நிதிக்காக வழங்கினார். இதனை பெற்றுக்கொண்ட கலெக்டர் சிறுமியை, பாராட்டி நன்றி தெரிவித்தார்.
தமிழகத்தில் கொரோனா 2-வது அலை புயல் வேகத்தில் பரவிவருகிறது. இதை கட்டுப்படுத்த கடந்த 10-ந்தேதி முதல் வருகிற 24-ந்தேதி வரை முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.கொரோனா தொற்று பரவல் அதிகரிப்பால் கடும் மருத்துவ நெருக்கடியையும், நிதி நெருக்கடியையும் அரசு சந்தித்து வருகிறது. இதற்கு பொதுமக்கள் தாமாக முன்வந்து முதல்-அமைச்சர் நிவாரண நிதிக்கு நிதியளிக்க வேண்டும் என முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்திருந்தார்.இதையடுத்து தொழில் அதிபர்கள், நடிகர்கள், அரசியல் கட்சியினர் என பல்வேறு தரப்பினர் நிதி அளித்து வருகின்றனர்.
நாகை மாவட்டம் திருமருகல் வடக்கு ஒன்றியம் அருள்மொழி தேவன் கிராமத்தை சேர்ந்த பாண்டியன், சீதாதேவி ஆகிேயாரின் மகள் தனிஷ்கா(வயது10). இவர் 5-ம் வகுப்பு படித்து வருகிறார். மாணவி தனிஷ்கா, நாகை மாவட்ட கலெக்டர் அலுவலகத்துக்கு நேற்று முன்தினம் வந்தார். பின்னர் அவர், கலெக்டர் பிரவீன் நாயரை சந்தித்து குல தெய்வ கோவிலுக்கு குடும்பத்துடன் செல்வதற்கு உண்டியலில் சேமித்து வைத்திருந்த ரூ.7 ஆயிரத்தை கொரோனா நிவாரண நிதிக்காக வழங்கினார். இதனை பெற்றுக்கொண்ட கலெக்டர் சிறுமியை, பாராட்டி நன்றி தெரிவித்தார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X