என் மலர்tooltip icon

    நாகப்பட்டினம்

    வேளாங்கண்ணியில் புனித ஆரோக்கிய மாதா பேராலயத்தில் ஆண்டு தோறும் கிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி சிறப்பு திருப்பலி நடைபெறும். இதில் பல்வேறு ஊர்களில் இருந்து திரளானோர் கலந்து கொள்வார்கள்.
    நாகை மாவட்டம் வேளாங்கண்ணியில் புனித ஆரோக்கிய மாதா பேராலயம் அமைந்துள்ளது. இந்த பேராலயம் மத நல்லிணக்கத்திற்கு அடையாளமாகவும், சர்வ மதத்தினரும் வழிபட்டு செல்லும் ஆன்மிக சுற்றுலா தலமாகவும் விளங்குகிறது. பல்வேறு சிறப்பு பெற்ற இந்த பேராலயத்திற்கு தமிழகம் மட்டுமின்றி வெளி மாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளில் இருந்தும் ஏராளமான பக்தர்கள், சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர்.

    இந்த பேராலயத்தில் ஆண்டு தோறும் கிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி சிறப்பு திருப்பலி நடைபெறும். இதில் பல்வேறு ஊர்களில் இருந்து திரளானோர் கலந்து கொள்வார்கள். இதை முன்னிட்டு வேளாங்கண்ணி விண்மீன் ஆலயத்தில் ஏசு பிறப்பை குறிக்கும் விதமாக குடில் அமைக்கப்படுவது வழக்கம்.

    இந்த ஆண்டு வருகிற 25-ந்தேதி (சனிக்கிழமை) கிறிஸ்துமஸ் பண்டிகை கொண்டாடப்படுகிறது. இதையொட்டி வேளாங்கண்ணி பேராலயம் அருகே உள்ள விண்மீன் ஆலயத்தில் குடில் அமைக்கும் பணியில் தொழிலாளர்கள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
    நாகையில் மாவட்ட அளவிலான கபடி போட்டிகளில் வெற்றி பெற்ற அணிகளுக்கு கோப்பை மற்றும் சான்றிதழுடன், ரொக்க பரிசுகளும் வழங்கப்பட்டன.
    வெளிப்பாளையம்:

    நாகையில் ஆண்கள் மற்றும் பெண்களுக்கான மாவட்ட அளவிலான கபடி போட்டி நடைபெற்றது.நிகழ்ச்சிக்கு அமெச்சூர் கபடி கழகம் மாவட்ட தலைவர் ஆனந்த வடிவேல் தலைமை தாங்கினார். மாவட்ட விளையாட்டு அலுவலர் ராஜா, இ.ஜி.எஸ்.பிள்ளை கல்லூரி செயலாளர் பரமேஸ்வரன், பொருளாளர் சந்திரன், தி.மு.க. மாவட்ட துணை செயலாளர் மனோகரன் ஆகியோர் போட்டியை தொடங்கி வைத்தனர்.

    போட்டியில் ஆண்களுக்கான சீனியர், ஜூனியர் 85 கிலோ மற்றும் 70 கிலோ எடை பிரிவில் 50 அணிகள் கலந்து கொண்டன. பெண்களுக்கான சீனியர், ஜூனியர் 75 கிலோ மற்றும் 60 கிலோ எடை பிரிவில் 10 அணிகள் கலந்து கொண்டன.

    பெண்களுக்கான ஜூனியர் பிரிவில் நடந்த இறுதி போட்டியில் நாகை கீச்சாங்குப்பம் அணியும், திருப்பூண்டி அணியும் மோதின. இதில் கீச்சாங்குப்பம் அணி அதிக புள்ளிகளை பெற்று வெற்றி பெற்றது. இதேபோல ஆண்கள் ஜூனியர் பிரிவில் ஆற்காட்டுதுறை அணியும், சோழவித்யாபுரம் அணியும் மோதின. இதில் ஆறுகாட்டுத்துறை அணி வெற்றி பெற்றது.

    போட்டிகளில் வெற்றி பெற்ற அணிகளுக்கு கோப்பை மற்றும் சான்றிதழுடன், ரொக்க பரிசுகளும் வழங்கப்பட்டன. இந்த போட்டியில் வெற்றி பெற்ற அணிகள் மாநில அளவிலான போட்டியில் விளையாட தகுதி பெற்றன.

    கீழ்வேளூர் கடைத்தெருவில் மயங்கி கிடந்த அடையாளம் தெரியாத முதியவர் சிகிச்சை பலனின்றி பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    சிக்கல்:

    கீழ்வேளூர் கடைத்தெருவில் கடந்த சில நாட்களுக்கு முன்பு 60 வயது மதிக்கத்தக்க அடையாளம் தெரியாத முதியவர் ஒருவர் மயங்கி கிடந்தார். இதுகுறித்து தகவல் அறிந்த கீழ்வேளூர் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து மயங்கி கிடந்த முதியவரை மீட்டு சிகிச்சைக்காக 108 ஆம்புலன்ஸ் மூலம் திருவாரூர் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி அந்த முதியவர் உயிரிழந்தார்.இதுகுறித்து கீழ்வேளூர் கிராம நிர்வாக அலுவலர் அருண் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து உயிரிழந்த முதியவர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்? என விசாரணை நடத்தி வருகின்றனர்.
    வேளாங்கண்ணிக்கு சுற்றுலா வந்த பெங்களூருவை சேர்ந்த சிறுவன் கடலில் மூழ்கி உயிரிழந்தான். இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    வேளாங்கண்ணி:

    கர்நாடக மாநிலம் பெங்களூரு ஹரமாவு ராமமூர்த்தி நகர் பகுதியை சேர்ந்த தயாளன் மகன் கெல்வின்(வயது 12). இவன் அங்கு உள்ள பள்ளியில் 6-ம் வகுப்பு படித்து வந்தான். இவன் தனது தாய் ஞானமணி மற்றும் உறவினர்களுடன் நேற்று முன்தினம் நாகை மாவட்டம் வேளாங்கண்ணிக்கு சுற்றுலா வந்தான்.

    பின்னர் வேளாங்கண்ணி வெள்ளையாற்றின் முகத்துவாரத்தில் கெல்வின் குளித்தபோது ஆற்றில் தண்ணீரின் வேகத்தில் கடலுக்குள் இழுத்து செல்லப்பட்டு மூழ்கினான். இதை பார்த்த உறவினர்கள் சத்தம் போட்டனர். உடனே அருகில் இருந்த போலீசார் மற்றும் பொதுமக்கள் கடலில் இறங்கி தேடினர். ஆனாலும் அவன் கிடைக்கவில்லை.

    இந்த நிலையில் பிரதாபராமபுரம் கடற்கரையில் கெல்வின் உடல் கரை ஒதுங்கியது. இதுகுறித்து தகவல் அறிந்த கீழையூர் கடலோர காவல் படை போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து கெல்வின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக நாகை அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    மேலும் இதுதொடர்பான புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.
    வேளாங்கண்ணி அருகே ரூ.1 லட்சம் திருடிய டிரைவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    வேளாங்கண்ணி:

    வேளாங்கண்ணி அருகே பிரதாபராமபுரம் தெற்குதெரு பகுதியை சேர்ந்தவர் பக்கிரிசாமி. இவருடைய மகன் ரமேஷ் (வயது 30). இவர் திருப்பூண்டி கிழக்கு கடற்கரை சாலை அருகே பிராய்லர் கோழி கடை நடத்தி வருகிறார். இங்கிருந்து சிக்கல், நாகை, நாகூர் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள சில்லறை கடைகளுக்கு சரக்கு வேன் மூலம் கோழிகளை விற்பனை செய்வது வழக்கம். இவரிடம் திருப்பூண்டி அருகே உள்ள சிந்தாமணி மெயின்ரோடு பகுதியை சேர்ந்த ராஜேந்திரன் மகன் மணிகண்டன் (33) என்பவர் சரக்கு வேன் டிரைவராக பணிபுரிந்து வருகிறார். மேலும், முருகானந்தம், சிவானந்தம், கார்த்திகேயன் ஆகியோர் கோழிகளை வேனில் ஏற்றி இறக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் கடந்த 12-ந்தேதி வழக்கம் போல் கோழிகளை கடைகளில் இறக்கி விட்டுவிட்டு, அதற்கான தொகை ரூ. 1 லட்சத்து 2 ஆயிரத்து 420-ஐ வசூல் செய்து கொண்டு சரக்குவேனில் வந்துள்ளனர். இவர்கள் பரவை கடைத்தெரு அருகே வேனை நிறுத்தி விட்டு டீ குடிக்க சென்றுள்ளனர். பின்னர் திரும்பி வந்து பார்த்தபோது வேனில் வைக்கப்பட்டிருந்த ரூ.1 லட்சத்தை காணவில்லை. இதுகுறித்து ரமேஷ் கொடுத்த புகாரின் பேரில் வேளாங்கண்ணி போலீசார் வழக்குப்பதிவு செய்து சம்பவம் நடந்த இடத்தில் இருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்தனர். இதில் டிரைவர் மணிகண்டன், பணத்தை எடுத்துச் சென்று அருகில் மண்ணில் புதைத்து வைக்கும் காட்சி பதிவாகி இருந்தது. இதை தொடர்ந்து மணிகண்டனை போலீசார் கைது செய்தனர். மேலும் அவர் திருடிய ரூ.1 லட்சத்தை பறிமுதல் செய்தனர்.
    நாகையில் நண்பர்களுடன் குளிக்கச்சென்ற பள்ளி மாணவன் குளத்தில் மூழ்கி பரிதாபமாக இறந்தான்.
    நாகப்பட்டினம்:

    நாகை சால்ட் ரோடு பகுதியை சேர்ந்த செல்வமணி மகன் செல்வராகவன்(வயது 15). நாகையில் உள்ள தனியார் பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வந்தான். செல்வராகவன் மற்றும் அவனுடைய நண்பர்கள் சிலர் நேற்று முன்தினம் வெளிப்பாளையம் பகுதியில் உள்ள அக்கரை குளத்திற்கு குளிப்பதற்காக சென்றனர்.

    அப்போது நண்பர்களுடன் செல்வராகவன் குளத்தின் ஒரு கரையில் இருந்து மற்றொரு கரைக்கு நீந்தி சென்றான். பாதி தூரம் சென்றபோது தொடர்ந்து செல்வராகவனால் நீந்த முடியாததால் குளத்தில் மூழ்கினான்.

    இதையடுத்து நண்பர்கள் மற்றும் அங்கு குளித்து கொண்டிருந்தவர்கள் செல்வராகவனை தேடினர். ஆனால் அவனை காணவில்லை. இதுகுறித்து தகவல் அறிந்த நாகை தீயணைப்பு படை வீரர்கள் குளத்தில் மூழ்கிய செல்வராகவனை தீவிரமாக தேடினர்.

    நீண்ட நேரத்துக்குப் பிறகு செல்வராகவன் இறந்த நிலையில் மீட்கப்பட்டான். அவனுடைய உடல் பிரேத பரிசோதனைக்காக நாகை அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இது குறித்து நாகை டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். பள்ளி மாணவன் குளத்தில் மூழ்கி இறந்தது அந்த பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியது.
    வேளாங்கண்ணியில் மூதாட்டியிடம் 10 பவுன் சங்கிலியை பறித்து சென்ற மர்ம நபர்கனை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
    வேளாங்கண்ணி:

    நாகை மாவட்டம் புத்தூர் தெற்குதெரு பகுதியை சேர்ந்தவர் பேபி (வயது 64). இவர் தனது மகன் அறிவொளி மற்றும் மருமகள், பேரக்குழந்தைகளுடன் கடந்த 12-ந்தேதி வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்தனர்.

    பின்னர் இவர்கள் இரவு 7 மணியளவில் கடற்கரையில் நடந்து சென்று கொண்டிருந்தனர். கண்காணிப்பு கோபுரம் அருகே சென்று கொண்டிருந்தபோது மறைந்திருந்த மர்ம நபர்கள் திடீரென பேபியின் கழுத்தில் கிடந்த 13½ பவுன் சங்கிலியை பறித்து சென்றனர். இதனால் அதிர்ச்சி அடைந்த அவர், திருடன், திருடன் என சத்தமிட்டுள்ளார். இந்த சத்தத்தை கேட்டு அக்கம் பக்கத்தினர் அங்கு ஓடி வந்தனர். அதற்குள் மர்ம நபர்கள் தப்பி ஓடி விட்டனர்.

    இதுகுறித்து தகவல் அறிந்த வேளாங்கண்ணி போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினர். அப்போது கடற்கரை மணலில் பேபி அணிந்திருந்த சங்கிலியில் இருந்த தாலி, குண்டு, காசு உள்ளிட்ட 3½ பவுன் நகை கீழே கிடந்துள்ளது.

    பேபியிடம் மர்ம நபர்கள் சங்கிலியை பறித்த போது இவைகள் சங்கிலியில் இருந்து கீழே விழுந்துள்ளது. மீதமிருந்த 10 பவுன் சங்கிலியுடன் மர்ம நபர்கள் தப்பி ஓடி உள்ளனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து 10 பவுன் சங்கிலியை பறித்து சென்ற மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.
    கீழ்வேளூர் பகுதியில் சாராயம் விற்ற பெண் உள்பட 4 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    சிக்கல்:

    கீழ்வேளூர் அருகே தேவூர், காக்கழனி, ராதாமங்கலம் பகுதிகளில் கீழ்வேளூர் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது தேவூர்- இரட்டைமதகடி சாலை கடுவையாறு பகுதியில் சந்தேகப்படும் வகையில் நின்று கொண்டிருந்த ஒருவரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தினர். இதில் அவர், தேவூர் பிடாரி கோவில் தெருவை சேர்ந்த சங்கர் மகன் பிரபு (வயது 33) என்பதும். இவர் சாராயம் விற்றதும் தெரிய வந்ததது. இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனர். மேலும் அவரிடம் இருந்து 110 லிட்டர் சாராயத்தை பறிமுதல் செய்தனர். இதே போல காக்கழனி தோப்பு தெருவில் சாராயம் விற்ற அதே பகுதியை சேர்ந்த துரைசாமி மகன் தங்கபாண்டியன் ( 27), ராதாமங்கலம் எறும்புகன்னி மெயின்ரோட்டில் சாராயம் விற்ற அதே பகுதியை சேர்ந்த நாகப்பன் மகன் கண்ணதாசன் (52), கீழகாவலக்குடி காளவாய்கரை பகுதியில் சாராயம் விற்ற நாகை வெளிப்பாளையம், தென்கரை பகுதியை சேர்ந்த செல்வராஜ் மனைவி அமிர்தம் (54) ஆகிய 3 பேரையும் போலீசார் கைது செய்தனர். மேலும் அவர்களிடம் இருந்து தலா 110 லிட்டர் சாராயத்தை பறிமுதல் செய்தனர்.
    வேதாரண்யம் பகுதியில் ஆடுகளை திருடி விற்பனை செய்து வந்த 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
    வேதாரண்யம்:

    வேதாரண்யம் தாலுகா தென்னம்புலம் பிராந்தியங்கரை மூலக்கரை வடமழைமணக்காடு கத்திரிப்புலம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் கடந்த சில நாட்களாக 100-க்கும் மேற்பட்ட ஆடுகளை மர்ம நபர்கள் திருடி சென்றனர். இதுகுறித்து கரியாப்பட்டினம் போலீசில் புகார் அளித்தனர். ஆடு திருடர்களை பிடிக்க வேதாரண்யம் துணை போலீஸ் சூப்பிரண்டு முருகவேல் தலைமையில் கரியாப்பட்டினம் போலீஸ் இன்ஸ்பெக்டர் நாகலட்சுமி மற்றும் போலீசார் அடங்கிய தனிப்படை அமைக்கப்பட்டது. தனிப்படை போலீசார் விசாரணை நடத்தி வந்தனர்.

    இந்த நிலையில் நேற்று செட்டிபுலம் பகுதியில் ஆடு திருடி சென்ற காட்சி சமூக வலைதளங்களில் வைரல் ஆனது. தொடர்ந்து தனிப்படை போலீசார் வேதாரண்யம் செங்காதலை பாலம் அருகே நின்று கொண்டிருந்த 2 பேரை பிடித்து விசாரணை நடத்தினர்.

    இதில் அவர்கள், திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி மீனாட்சி வாய்க்கால் பகுதியை சேர்ந்த ஆனஸ்ட்ராஜ்(வயது19), திருத்துறைபூண்டி பெரிய சிங்களாந்தியை சேர்ந்த ஆனந்த் (19) ஆகிய 2 பேர் என்பதும், இவர்கள் கரியாப்பட்டினம் பகுதியில் ஆடுகளை திருடி விற்பனை செய்து வந்ததும் தெரிய வந்தது. இதை  தொடர்ந்து 2 பேரையும் போலீசார் கைது செய்தனர்.
    வேதாரண்யம் அருகே மோட்டார் சைக்கிள் திருட்டு சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    வேதாரண்யம்:

    வேதாரண்யம் அடுத்த கருப்பம்புலம் கீழக்காடு பகுதியைச் சேர்ந்தவர் துரைமுருகன் (வயது 29). இவர் தனது மோட்டார் சைக்கிளில் கோடியக்காட்டில் உள்ள தனது உறவினர் வீட்டுக்கு சென்றுள்ளார். பின்னர் திரும்பி வந்து பார்த்தபோது வீட்டு வாசலில் நிறுத்தியிருந்த மோட்டார் சைக்கிளை காணவில்லை.

    அதிர்ச்சியடைந்த துரைமுருகன் பல இடங்களில் தேடி பார்த்தும் கிடைக்காததால் வேதாரண்யம் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். புகாரின் பேரில் சப்-இன்ஸ்பெக்டர் தனிக்கொடி வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

    பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து விவசாய தொழிலாளர்கள் சாலையில் வாகனத்தை நிறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
    சிக்கல்:

    கீழ்வேளூரில், கச்சனம் சாலை சந்திப்பில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் விவசாய தொழிலாளர்கள் சங்கம் சார்பில் பெட்ரோல், டீசல் மற்றும் கியாஸ் விலை உயர்வை கண்டித்தும், விலை உயர்வை குறைக்கக்கோரியும் சாலையில் வாகனம் நிறுத்தும் போராட்டம் நடைபெற்றது.

    போராட்டத்தில் அகில இந்திய விவசாய தொழிலாளர்கள் சங்க மாவட்ட குழு உறுப்பினர் ஜோதிபாஸ், அகில இந்திய விவசாய தொழிலாளர்கள் சங்க ஒன்றிய செயலாளர் கிருஷ்ணமூர்த்தி, துணை தலைவர் சுந்தரமூர்த்தி மற்றும் விவசாய தொழிலாளர்கள் சங்கத்தினர் உள்பட பலர் கலந்து கொண்டு பெட்ரோல், டீசல் மற்றும் கியாஸ் விலை உயர்வை கண்டித்தும், விலை உயர்வை குறைக்க வலியுறுத்தியும் கோஷங்கள் எழுப்பினர்.

    இதேபோல பெட்ரோல், டீசல் மற்றும் கியாஸ் விலை உயர்வை கண்டித்து திருமருகல் பஸ்நிலையம் எதிரே சி.ஐ.டி.யூ. தொழிற் சங்கம் சார்பில் சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது. போராட்டத்திற்கு சி.ஐ.டி.யூ. தொழிற்சங்க மாவட்ட குழு உறுப்பினர் லெனின் தலைமை தாங்கினார். ஜனநாயக வாலிபர் சங்க ஒன்றிய செயலாளர் பாலு முன்னிலை வகித்தார்.

    இதில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் ஒன்றியக்குழு உறுப்பினர்கள் மார்க்ஸ், பிரபாகரன், கஸ்தூரி, வாலிபர் சங்க கிளை செயலாளர் ராஜ்குமார் மற்றும் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டு பெட்ரோல், டீசல் மற்றும் கியாஸ் விலை உயர்வை கண்டித்து கோஷங்கள் எழுப்பினர்.
    நாகையில் லாட்டரி சீட்டு விற்ற 2 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    நாகப்பட்டினம்:

    நாகை வெளிப்பாளையத்துக்கு உட்பட்ட பகுதிகளில் போலீஸ் இன்ஸ்பெக்டர் தியாகராஜன் தலைமையில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். அப்போது சந்தேகத்துக்கு இடமாக நின்று கொண்டிருந்த ஒருவரை பிடித்து விசாரணை நடத்தினர். அதில் அவர் செல்லூர் சுனாமி குடியிருப்பை சேர்ந்த ரீகன் (வயது36) என்பதும், தடைசெய்யப்பட்ட லாட்டரி சீட்டுக்களை விற்பனை செய்து வந்ததும் தெரியவந்தது. இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து ரீகனை கைது செய்தனர்.

    இதேபோல, ரெயிலடி தெருவில் லாட்டரி சீட்டு விற்று கொண்டிருந்த அதே பகுதியை சேர்ந்த பரமன் (50) என்பவரை போலீசார் கைது செய்தனர்.
    ×