என் மலர்
நாகப்பட்டினம்
வேதாரண்யம் கடற்பகுதியில் இறந்து ஆலிவர் ரெட்லி ஆமைகள் கரை ஒதுங்குகின்றன.
வேதாரண்யம்:
வேதாரண்யம் தாலுக்கா கோடியக்கரை, ஆறுகாட்டுத்துறை, புஷ்பவனம், வெள்ளப்பள்ளம் உள்ளிட்ட கடற்கரைப் பகுதிகளில் ஆண்டுதோறும் டிசம்பர் முதல் மார்ச் வரை அழிந்து வரும் இனமாக ஆலிவர் ரெட்லி ஆமைகள் கடற்கரைக்கு வந்து முட்டையிட்டு செல்லும்.
இந்த ஆமை முட்டைகளை வனத்துறையினர் சேகரித்து குஞ்சு பொறிப்பகத்தில் வைத்து பாதுகாத்து 55 முதல் 60 நாளில் முட்டை வெளிவந்தவுடன் கடலில் விடுவார்கள்.
அவ்வாறு கடலில் விடப்பட்ட ஆமைக் குஞ்சுகள் வளர்ந்து 25 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் அதே கடற்கரைக்கு அந்த ஆமைகள் முட்டையிடுவதற்கு வரும்.
1982-ம் ஆண்டு முதல் கோடியக்கரை, வேதாரண்யம் கடற்கரை பகுதியில் சுமார் 3 லட்சம் ஆமை முட்டைகள் எடுத்து சேகரித்து வனத்துறையின் மூலம் கடலில் விடப்பட்டுள்ளது.
இந்நிலையில் தற்போது புஷ்பவனம், ஆறுகாட்டுத்துறை கடற்கரை பகுதியில் சுமார் 3 கிலோமீட்டர் தூரத்திற்கு கடலின் உள்ளேயும் வெளியேயும் சேறு நிறைந்திருப்பதால் இந்த கடற்கரை பகுதிக்குக்கு முட்டையிட வரும் ஆலிவர் ரெட்லி ஆமைகள் சேற்றில் சிக்கி இறந்து கரை ஒதுங்கி கிடக்கின்றன.
நேற்று மாலையில் வேதாரண்யம் புஷ்பவனம் கடற்கரையில் 25-க்கும் மேற்பட்ட ஆமைகள் இறந்து கரை ஓதுங்கின. இறந்த ஆமைகளை கோடியக்கரை வனச்சரக அலுவலர் அயூப்கான் தலைமையில் வனத்துறையினர் புதைக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டனர்.
ஒரே நாளில் 25-க்கும் மேற்பட்ட ஆமைகள் இறந்து கரை ஒதுங்கியதால் இயற்கை ஆர்வலர்கள் மிகுந்த வேதனை அடைந்தனர்.
வேதாரண்யத்தில் 9 ஆயிரம் ஏக்கரில் உப்பு உற்பத்தி பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
வேதாரண்யம்:
நாகை மாவட்டம், வேதாரண்யம் அடுத்த அகஸ்தியன்பள்ளி, கோடியக்காடு, கடினல்வயல் ஆகிய பகுதிகளில் 9 ஆயிரம் ஏக்கரில்
உப்பு உற்பத்தி செய்யப்படுகிறது.
தூத்துக்குடிக்கு அடுத்த படியாக உப்பு உற்பத்தியில் 2-ம் இடம் வகிக்கிறது.
இத்தொழில் நேரடியாகவும், மறைமுகமாகவும்
10 ஆயிரம் தொழிலாளர்கள் ஈடுபட்டுள்ளனர்.
வடகிழக்கு பருவமழை காரணமாக பாத்திகளில் தண்ணீர் தேங்கி உப்பு
உற்பத்தி நிறுத்தப்பட்டது. இந்த ஆண்டும் மழையால் நிறுத்தப்பட்டிருந்த உப்பு உற்பத்தி கடந்த மாதம் மழை ஓய்ந்து பாத்திகளில் தேங்கிய
மழைநீர் வடிந்தது.
மழையால் பாதிக்கப்பட்ட உப்பு பாத்திகளை சரி செய்யும் பணி முழு வீச்சில் நடைபெற்றது. இந்த நிலையில் கடந்த 3 நாட்களாக திடீரென்று பெய்த கனமழையால் உப்பு பாத்திகளில் மீண்டும் மழை நீர் தேங்கி கடல்போல் காட்சியளிக்கிறது.
இந்தாண்டு உப்பு உற்பத்திக்கான முதற்கட்ட பணிகள்
நிறைவேறும் தருவாயில் இருந்த நிலையில் இந்த
திடீர் மழையால் உப்பு பாத்திகள் முழுமையாக சேதமடைந்துள்ளது.
பாத்திகளில் தேங்கியுள்ள மழைநீர் வடிந்து மீண்டும் உப்பு உற்பத்தி
தொடங்க ஒரு மாத காலம் ஆகும் என உற்பத்தியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
ஏக்கர் ஒன்றுக்கு சுமார் ரூ.20 ஆயிரத்துக்கு மேல் செலவான நிலையில் மழை
பாதிப்பால் கடும் நஷ்டம் அடைந்துள்ளனர்.
குறைந்த அளவு இருப்பு உள்ள உப்பை மழையில் இருந்து பாதுகாக்க தார்ப்பாய் மற்றும் பனை ஓலைகளைக் கொண்டு பாதுகாப்பாக மூடி வைத்துள்ளனர்.
நாகை அக்கரைப்பேட்டை கல்லார் கிராமத்தில் 500 மீட்டர் தூரத்திற்கு கற்களை கொட்டி கடல் நீர் உட் புகுவதை தடுக்க நடவடிக்கை வேண்டும்
நாகப்பட்டினம்:
நாகப்பட்டினம் மாவட்டம் அக்கரைப் பேட்டை ஊராட்சி கல்லார் கிராமத்தில் 500-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர் இங்குள்ளவர்கள்
100-க்கும் மேற்பட்ட பைபர் படகுகள் மூலம் மீன்பிடி தொழில் செய்து வருகின்றனர்.
இங்கு மீன்பிடியே பிரதான தொழிலாக இருப்பதால் கடற்கரையில் பைபர் படகுகளை நிறுத்தி சீர் செய்தல், வளை பின்னுதல் ஆகியவற்றை செய்து வருகின்றனர்.
மேலும் கடற்கரையில் இருந்து சிறிது தூரத்தில் வீடுகள் உள்ளது.
இந்நிலையில் கடந்த சில தினங்களாக கல்லார் கிராமத்தில் கடல் சீற்றம் காரணமாக கடலரிப்பு ஏற்பட்டுள்ளது. கல்லார் கிராமத்தில் கடற்கரையில் கொட்டப்பட்டுள்ள கற்களில் இருந்து 50 அடி தூரம் தள்ளி கடல் இருந்தது.
ஆனால் தற்போது கொட்டப்பட்டுள்ள கற்களை 100 அடி தாண்டி கடல் நீர் வந்துள்ளது. அதாவது 150 அடிக்கு கடல் நீர் உள்ளே புகுந்துள்ளது. இப்படி நாளுக்குநாள் கடல்நீர் உள்புகுவதால் கல்லார் கிராமத்தில் விரைவில்
கடல்நீர் குடியிருப்புக்குள் புகும் அபாயம் உள்ளது.
எனவே தற்போது கடற்கரையை ஒட்டி கொட்டப்பட்டுள்ள கற்களில் இருந்து
500 மீட்டர் தூரத்திற்கு கற்களை கொட்டி கல்லார் கிராமத்தில் கடல் நீர்
உட்புகுவதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
வேளாங்கண்ணி மாதா பேராலயத்தில் புத்தாண்டையொட்டி சிறப்பு திருப்பலி நடந்தது.
நாகப்பட்டினம்:
நாகை மாவட்டம், வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய மாதா பேராலயத்தில் நள்ளிரவு 12 மணிக்கு பேராலய வளாகத்தில் உள்ள திறந்தவெளி கலையரங்கமான சேவியர் திடலில் தஞ்சை மறைமாவட்ட ஆயர் தேவதாஸ்அம்புரோஸ் தலைமையில் புத்தாண்டு சிறப்பு திருப்பலி நடந்தது.
தொடர்ந்து புத்தாண்டை வரவேற்கும் விதமாக வாணவேடிக்கை நடந்தது. பின்னர் 2021-ம் ஆண்டில் நடந்த நல்ல நிகழ்வுகளை நினைவு கூர்ந்து தீய நிகழ்வுகள் புதிய ஆண்டில் நடைபெறாமல் இருக்க பிரார்த்தனை செய்து கொண்டனர்.
பின்னர் புத்தாண்டை வரவேற்று ஒருவரையொருவர் புத்தாண்டு வாழ்த்துக்களை பரிமாறி கொண்டனர். இதன்பின்னர் பேராலயம் சார்பில் புத்தாண்டை வரவேற்றனர். பேராலய அதிபர் இருதயராஜ், பங்குதந்தை அற்புதராஜ் மற்றும் உதவி பங்கு தந்தையர்கள் கலந்து கொண்டனர்.
தஞ்சையை சேர்ந்த ஒருவரது வங்கி லாக்கரில் திருக்குவளையில் திருடப்பட்ட மரகதலிங்கம் கண்டுபிடிக்கப்பட்டது. பல நூறு ஆண்டுகள் பழமை வாய்ந்த இந்த லிங்கம் அவனிவிடங்கர் என்று அழைக்கப்படுகிறது.
சீர்காழி:
தஞ்சையில் மீட்கப்பட்ட மரகதலிங்கம் தொடர்பாக மயிலாடுதுறையில் தர்மபுரம் ஆதீனம் 26-வது குருமகாசந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிகர் ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள் அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது:-
முசுகுந்த சக்கரவர்த்தியால் பெறப்பட்ட சப்த விடங்க தலங்கள் லிங்கங்கள் எனப்படும் ஏழு லிங்கங்கள் திருக்குவளை, நாகப்பட்டினம், வேதாரண்யம், திருநள்ளாறு உள்ளிட்ட கோவில்களில் வைத்து பூஜை செய்யப்பட்டு வருகிறது. கடந்த 2016-ம் ஆண்டு திருக்குவளையில் வைத்து பூஜிக்கப்பட்ட மரகதலிங்கம் திருடப்பட்டது. இதுகுறித்து சிலை தடுப்பு போலீசார் தீவிர புலன் விசாரணை செய்யப்பட்டதில், தஞ்சையைச் சேர்ந்த ஒருவரது வங்கி லாக்கரில் மரகதலிங்கம் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இது திருக்குவளையில் திருடப்பட்ட மரகதலிங்கம் என்று கண்டுபிடிக்கப்பட்டது. இது தொடர்பாக தங்களிடம் போலீசார் விசாரித்து உறுதி செய்து கொண்டனர்.
பல நூறு ஆண்டுகள் பழமை வாய்ந்த இந்த லிங்கம் அவனிவிடங்கர் என்று அழைக்கப்படுகிறது. தர்மபுரம் ஆதீனத்திற்கு சொந்தமான திருக்குவளை கோவிலில் இருந்து திருடப்பட்ட இந்த லிங்கத்தை மீண்டும் திருக்குவளை கோவிலுக்கு வழங்க வேண்டும்.
சிலைய மீட்க நடவடிக்கை மேற்கொள்ள உத்தரவிட்ட முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு, காவல்துறை இயக்குனர் சைலேந்திரபாபு, ஏ.டி.ஜி.பி ஜெய்ந்த் முரளி, போலீஸ் சூப்பிரண்டு (சிலைகடத்தல் தடுப்பு பிரிவு) பொன்னி, காவல் துறை கூடுதல் கண்காணிப்பாளர் ராஜாராமன், அசோக் நடராஜன் ஆகியோருக்கு நன்றி.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
தஞ்சையில் மீட்கப்பட்ட மரகதலிங்கம் தொடர்பாக மயிலாடுதுறையில் தர்மபுரம் ஆதீனம் 26-வது குருமகாசந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிகர் ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள் அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது:-
முசுகுந்த சக்கரவர்த்தியால் பெறப்பட்ட சப்த விடங்க தலங்கள் லிங்கங்கள் எனப்படும் ஏழு லிங்கங்கள் திருக்குவளை, நாகப்பட்டினம், வேதாரண்யம், திருநள்ளாறு உள்ளிட்ட கோவில்களில் வைத்து பூஜை செய்யப்பட்டு வருகிறது. கடந்த 2016-ம் ஆண்டு திருக்குவளையில் வைத்து பூஜிக்கப்பட்ட மரகதலிங்கம் திருடப்பட்டது. இதுகுறித்து சிலை தடுப்பு போலீசார் தீவிர புலன் விசாரணை செய்யப்பட்டதில், தஞ்சையைச் சேர்ந்த ஒருவரது வங்கி லாக்கரில் மரகதலிங்கம் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இது திருக்குவளையில் திருடப்பட்ட மரகதலிங்கம் என்று கண்டுபிடிக்கப்பட்டது. இது தொடர்பாக தங்களிடம் போலீசார் விசாரித்து உறுதி செய்து கொண்டனர்.
பல நூறு ஆண்டுகள் பழமை வாய்ந்த இந்த லிங்கம் அவனிவிடங்கர் என்று அழைக்கப்படுகிறது. தர்மபுரம் ஆதீனத்திற்கு சொந்தமான திருக்குவளை கோவிலில் இருந்து திருடப்பட்ட இந்த லிங்கத்தை மீண்டும் திருக்குவளை கோவிலுக்கு வழங்க வேண்டும்.
சிலைய மீட்க நடவடிக்கை மேற்கொள்ள உத்தரவிட்ட முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு, காவல்துறை இயக்குனர் சைலேந்திரபாபு, ஏ.டி.ஜி.பி ஜெய்ந்த் முரளி, போலீஸ் சூப்பிரண்டு (சிலைகடத்தல் தடுப்பு பிரிவு) பொன்னி, காவல் துறை கூடுதல் கண்காணிப்பாளர் ராஜாராமன், அசோக் நடராஜன் ஆகியோருக்கு நன்றி.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
கடந்த ஆண்டை காட்டிலும் இந்த ஆண்டு கரும்புகள் நன்கு செழித்து வளர்ந்துள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
தேவூர்:
தேவூர் அருகே உள்ள சென்றாயனூர், செட்டிபட்டி, குள்ளம்பட்டி, பழக்காரன்காடு, மீனுவாயன்காடு, மேட்டுபாளையம், தண்ணிதாசனூர், பொன்னம்பாளையம், நல்லங்கியூர், கொட்டாயூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் விவசாயிகள் அதிகளவில் கரும்பு பயிரிட்டுள்ளனர். தற்போது அந்த கரும்புகள் நன்கு வளர்ந்து அறுவடைக்கு தயாராக உள்ளன.
இந்தநிலையில் ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு தேவூர் பகுதியில் கரும்பு அறுவடை பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. விவசாயிகள், கூலி தொழிலாளர்களை பயன்படுத்தி கரும்புகளை அறுவடை செய்து வருகின்றனர். வெளியூர் வியாபாரிகள் அங்கு முகாமிட்டு கரும்புகளை வாங்கி செல்கின்றனர்.
இதுகுறித்து கரும்பு பயிரிட்டுள்ள விவசாயிகள் கூறியதாவது:-
தேவூர் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் இந்த ஆண்டு 500 ஏக்கர் பரப்பளவில் கரும்பு பயிரிடப்பட்டது. கிணற்று பாசனத்தை பயன்படுத்தி கரும்புகளுக்கு தண்ணீர் பாய்ச்சப்பட்டது. 8 மாதங்கள் நிறைவடைந்த நிலையில் தற்போது கரும்புகள் நன்கு செழித்து வளர்ந்துள்ளன. அவற்றை அறுவடை செய்யும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.
இந்த கரும்புகள் சேலம், ஈரோடு, திருப்பூர் போன்ற நகரங்களுக்கு கொண்டு செல்லப்பட்டு ரூ.20 முதல் ரூ.30 வரை விற்பனை செய்யப்படுகின்றன. சில வியாபாரிகள் தேவூரில் முகாமிட்டு, பொங்கல் பண்டிகையை முன்னிட்டு கரும்பு அறுவடை செய்ய விவசாயிகளை வலியுறுத்தி உள்ளனர். இதனால் சில விவசாயிகள் தங்களது வயல்களில் கரும்புகளை அப்படியே விட்டு வைத்துள்ளனர்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
கடந்த ஆண்டை காட்டிலும் இந்த ஆண்டு கரும்புகள் நன்கு செழித்து வளர்ந்துள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
தேவூர் அருகே உள்ள சென்றாயனூர், செட்டிபட்டி, குள்ளம்பட்டி, பழக்காரன்காடு, மீனுவாயன்காடு, மேட்டுபாளையம், தண்ணிதாசனூர், பொன்னம்பாளையம், நல்லங்கியூர், கொட்டாயூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் விவசாயிகள் அதிகளவில் கரும்பு பயிரிட்டுள்ளனர். தற்போது அந்த கரும்புகள் நன்கு வளர்ந்து அறுவடைக்கு தயாராக உள்ளன.
இந்தநிலையில் ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு தேவூர் பகுதியில் கரும்பு அறுவடை பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. விவசாயிகள், கூலி தொழிலாளர்களை பயன்படுத்தி கரும்புகளை அறுவடை செய்து வருகின்றனர். வெளியூர் வியாபாரிகள் அங்கு முகாமிட்டு கரும்புகளை வாங்கி செல்கின்றனர்.
இதுகுறித்து கரும்பு பயிரிட்டுள்ள விவசாயிகள் கூறியதாவது:-
தேவூர் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் இந்த ஆண்டு 500 ஏக்கர் பரப்பளவில் கரும்பு பயிரிடப்பட்டது. கிணற்று பாசனத்தை பயன்படுத்தி கரும்புகளுக்கு தண்ணீர் பாய்ச்சப்பட்டது. 8 மாதங்கள் நிறைவடைந்த நிலையில் தற்போது கரும்புகள் நன்கு செழித்து வளர்ந்துள்ளன. அவற்றை அறுவடை செய்யும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.
இந்த கரும்புகள் சேலம், ஈரோடு, திருப்பூர் போன்ற நகரங்களுக்கு கொண்டு செல்லப்பட்டு ரூ.20 முதல் ரூ.30 வரை விற்பனை செய்யப்படுகின்றன. சில வியாபாரிகள் தேவூரில் முகாமிட்டு, பொங்கல் பண்டிகையை முன்னிட்டு கரும்பு அறுவடை செய்ய விவசாயிகளை வலியுறுத்தி உள்ளனர். இதனால் சில விவசாயிகள் தங்களது வயல்களில் கரும்புகளை அப்படியே விட்டு வைத்துள்ளனர்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
கடந்த ஆண்டை காட்டிலும் இந்த ஆண்டு கரும்புகள் நன்கு செழித்து வளர்ந்துள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
நாகை மாவட்டம் வேதாரண்யம் அருகே நகை திருடியது தொடர்பாக 3 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.
வேதாரண்யம்:
வேதாரண்யம் அடுத்த தோப்புத்துறை வடக்கு வீதியில் வசிப்பவர் ஷேக் அகமத்துல்லா. இவர் கடந்த செப்டம்பர் மாதம் வீட்டை பூட்டிவிட்டு வெளியில் சென்றபோது காரில் வந்த மர்மநபர்கள் வீட்டின் பூட்டை உடைத்து பீரோவில் இருந்த 4 பவுன் தங்க காசுகளை திருடி சென்றுவிட்டனர்.
இது குறித்து வேதாரண்யம் போலீசார் வழக்கு பதிவு செய்து அங்குள்ள சி.சி.டி.வி கேமராவின் பதிவுகளை கொண்டு திருடர்களை தேடி வந்தனர். இந்நிலையில் வேதாரண்யம் இன்ஸ்பெக்டர் சுப்ரியா தேத்தாகுடி தெற்கு சோதனை சாவடியில் வாகன சோதனையில் ஈடுபட்டு இருந்து போது திருட்டு வழக்கில் சம்பந்தபட்ட அதே கார் வந்துள்ளது. அதனை மறித்து விசாரணை செய்தனர்.
விசாரணையில் தோப்புத்துறையில் கடந்த இரண்டு மாதத்திற்கு முன்பு ஷேக்அகமத்துல்லா வீட்டில் திருட்டில் பயன்படுத்திய கார் என்பதும், அதில் இருந்தவர்கள் திருட்டு கும்பல் என்பதும் தெரியவந்தது.
வேதாரண்யம் போலீசார் வழக்குபதிவு செய்து இரண்டு மாதமாக தேடிவந்த நிலையில் திருட்டில் ஈடுபட்ட மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலத்தை சேர்ந்த தமிழ் செல்வன் (வயது 31), கும்மிடிபூண்டி மணிகண்டன் (33), சுரேஷ் (36) ஆகியோர் என்பதும் தெரியவந்தது.
இதையடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து 3 பேரையும் கைது செய்து காரையும் பறிமுதல் செய்தனர். அவர்களிடம் இருந்து 4 பவுன் காசுகள் மீட்கப்பட்டது.
வேதாரண்யம் அடுத்த தோப்புத்துறை வடக்கு வீதியில் வசிப்பவர் ஷேக் அகமத்துல்லா. இவர் கடந்த செப்டம்பர் மாதம் வீட்டை பூட்டிவிட்டு வெளியில் சென்றபோது காரில் வந்த மர்மநபர்கள் வீட்டின் பூட்டை உடைத்து பீரோவில் இருந்த 4 பவுன் தங்க காசுகளை திருடி சென்றுவிட்டனர்.
இது குறித்து வேதாரண்யம் போலீசார் வழக்கு பதிவு செய்து அங்குள்ள சி.சி.டி.வி கேமராவின் பதிவுகளை கொண்டு திருடர்களை தேடி வந்தனர். இந்நிலையில் வேதாரண்யம் இன்ஸ்பெக்டர் சுப்ரியா தேத்தாகுடி தெற்கு சோதனை சாவடியில் வாகன சோதனையில் ஈடுபட்டு இருந்து போது திருட்டு வழக்கில் சம்பந்தபட்ட அதே கார் வந்துள்ளது. அதனை மறித்து விசாரணை செய்தனர்.
விசாரணையில் தோப்புத்துறையில் கடந்த இரண்டு மாதத்திற்கு முன்பு ஷேக்அகமத்துல்லா வீட்டில் திருட்டில் பயன்படுத்திய கார் என்பதும், அதில் இருந்தவர்கள் திருட்டு கும்பல் என்பதும் தெரியவந்தது.
வேதாரண்யம் போலீசார் வழக்குபதிவு செய்து இரண்டு மாதமாக தேடிவந்த நிலையில் திருட்டில் ஈடுபட்ட மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலத்தை சேர்ந்த தமிழ் செல்வன் (வயது 31), கும்மிடிபூண்டி மணிகண்டன் (33), சுரேஷ் (36) ஆகியோர் என்பதும் தெரியவந்தது.
இதையடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து 3 பேரையும் கைது செய்து காரையும் பறிமுதல் செய்தனர். அவர்களிடம் இருந்து 4 பவுன் காசுகள் மீட்கப்பட்டது.
சுனாமி நினைவு தினத்தையொட்டி நாகையில் என்ஜினீயர் ஒருவர் சுனாமியின் சோகத்தை விளக்கும் ஓவியம் வரைந்து சாதனை படைத்தார்.
நாகப்பட்டினம்:
நாகை மாவட்டம் தலைஞாயிறு பகுதியை சேர்ந்தவர் கார்த்திக்ராஜா (வயது30). என்ஜினீயரான இவர் சுனாமி நினைவு தினத்தையொட்டி நாகையில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் சுனாமியின் போது மக்கள் அடைந்த துன்பங்கள், உயிர் மற்றும் உடமைகள் இழப்பு, சுனாமி காலத்தில் நடந்த மீட்பு பணிகள் ஆகியவற்றை தத்ரூபமாக மார்க்கர் போனா மூலம் வரைந்துள்ளார்.
இது குறித்து கார்த்திக்ராஜா கூறியதாவது:-
சிறு வயதில் இருந்து எனக்கு சிறந்த ஓவியங்களை வரைய வேண்டும் என்ற ஆசை உள்ளது. இதனால பல ஓவியங்களை வரைந்துள்ளேன். இந்தநிலையில் இத்தாலி நாட்டில் 6ஆயிரத்து 118 சதுர அடியில்
தனி நபர் ஓவியத்தை 5 நாட்கள் வரைந்து ஒருவர் கின்னஸ் சாதனை படைத்து உள்ளார். இதை படித்து நானும் கின்னஸ் சாதனை படைக்க வேண்டும் என்பதற்காக சுனாமி நினைவு நாளில் சுனாமியின் சுவடுகளை வெளிப்படுத்தும் வகையில் நாகையில் உள்ள தனியார் கல்லூரியில் உள்ள கலையரங்கத்தில் ஓவியம் வரைய ஆசைப்பட்டேன். அதன்படி சுனாமி அலை எழுந்து வந்து பேரழிவை ஏற்படுத்தியதை ஓவியமாக வரைந்து உள்ளேன்.
இதற்காக கலெக்டர் அருண்தம்புராஜ் உதவியை பெற்று ஓவியம் வரைய தொடங்கினேன். சிவகாசியில் இருந்து சற்று கடினதன்மை கொண்ட சார்ட் பேப்பரை வரவழைத்து அதை தரையில் ஒட்டினேன். அதில் மார்க்கர் பேனா மூலம் சுனாமியின் சோகத்தை விளக்கும் ஓவியத்தை தனி மனிதனாக 10 மணி நேரம் 17 நிமிடத்தில் ஓவியத்தை வரைந்து முடித்துள்ளேன். இந்த ஓவியம் முழுக்க முழுக்க சுனாமியின் சோகச்சுவடுகளை வெளிப்படுத்தும் வகையில் உள்ளது. இவ்வாறு அவர் கூறினார். இந்த ஓவியத்தை நாகை மாவட்ட கலெக்டர் அருண் தம்புராஜ் நேரில் சென்று பார்வையிட்டு கார்த்திக் ராஜாவுக்கு பாராட்டு தெரிவித்தார்.
நாகை மாவட்டம் வேதாரண்யத்தில் 9 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்தது தொடர்பாக வாலிபரை போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளனர்.
வேதாரண்யம்:
வேதாரண்யம் தாலுக்கா தலைஞாயிறு அடுத்துள்ள வெண்மணச்சேரியை சேர்ந்தவர் அஜித்குமார் (வயது 26).
இவர் மூன்றாம் வகுப்பு படிக்கும் 9 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்தார். இதுகுறித்த புகாரின் பேரில் வேதாரண்யம் அனைத்து மகளிர் போலீசார் வழக்குப்பதிவு செய்து அஜித்குமாரை போக்சோ சட்டத்தில் கைது செய்தனர்.
வேதாரண்யம் தாலுக்கா தலைஞாயிறு அடுத்துள்ள வெண்மணச்சேரியை சேர்ந்தவர் அஜித்குமார் (வயது 26).
இவர் மூன்றாம் வகுப்பு படிக்கும் 9 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்தார். இதுகுறித்த புகாரின் பேரில் வேதாரண்யம் அனைத்து மகளிர் போலீசார் வழக்குப்பதிவு செய்து அஜித்குமாரை போக்சோ சட்டத்தில் கைது செய்தனர்.
நாகையில் மீனவர்கள் வலையில் அதிசய முதலை மீன் சிக்கியது. இதுகுறித்து தகவல் அறிந்த சக மீனவர்கள் மற்றும் பொதுமக்கள் கடற்கரையில் குவிந்து இந்த மீனை ஆச்சரியத்துடன் பார்த்து சென்றனர்.
நாகப்பட்டினம்:
நாகை அக்கரைப்பேட்டை மீன்பிடி துறைமுகத்தில் இருந்து ஆயிரத்துக்கும் மேற்பட்ட மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க சென்று வருகின்றனர். இந்த நிலையில் நேற்று மீன்பிடித்து விட்டு கரை திரும்பிய ஒரு நாட்டு படகு மீனவர் வலையில் அதிசய முதலை மீன் ஒன்று சிக்கியது. இந்த மீனின் தலை, பற்கள் அச்சு அசலாக முதலை போன்றும், உடல் முதலையின் கடினமான தோல் போன்றும் இருந்தது. வால் பகுதி கொடுவா மீன் போல இருந்தது.
இதுகுறித்து தகவல் அறிந்த சக மீனவர்கள் மற்றும் பொதுமக்கள் கடற்கரையில் குவிந்து இந்த மீனை ஆச்சரியத்துடன் பார்த்து சென்றனர். இதில் ஒருசிலர் இது மீனே கிடையாது என்றும் கூறினர். இதனால் இந்த மீனையாரும் வாங்க முன்வரவில்லை. அப்போது அங்கிருந்த ஒருவர் இந்த மீனின் சுவை எப்படி இருக்கும் என தெரிந்து கொள்வதற்காக முதலை மீனை வாங்கி சென்றார்.
தரைப்பகுதியில் இருந்து சுமார் 100 மீட்டர் தொலைவில் மீனவர்கள் வலையில் சிக்கிய இந்த முதலை மீன் 3 அடி நீளமும், 10 கிலோ எடையும் இருந்தது. கரைக்கு கொண்டு வந்து இந்த மீனை வலையில் இருந்து எடுத்தபோது உயிரோடு இருந்ததாகவும், பின்னர் அது இறந்து விட்டதாகவும் மீனவர்கள் தெரிவித்தனர்.
நாகையில் கஞ்சா விற்ற வாலிபரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
வெளிப்பாளையம்:
நாகையை அடுத்த பாப்பாகோவில், சின்னப்பாலம் அருகே கஞ்சா விற்பதாக நாகை டவுன் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.அதன் பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் பெரியசாமி மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று சோதனை நடத்தினர். அப்போது அங்கு சந்தேகப்படும் வகையில் நின்று கொண்டிருந்த வாலிபரை பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர், பாப்பா கோவில் பள்ளிவாசல் தெருவை சேர்ந்த ஆகாஷ் (வயது25) என்பதும், அவர் கஞ்சா விற்பனை செய்ததும் தெரியவந்தது. இதையடுத்து அவரிடமிருந்து 1 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து ஆகாசை கைது செய்தனர். ஆகாசுக்கு கஞ்சா பொட்டலங்கள் வழங்கிய நபரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
தமிழக மீனவர்கள் பிரச்சினைக்கு தீர்வு காண மத்திய அரசுக்கு தமிழக அரசு அழுத்தம் கொடுக்க வேண்டும் என நாகையில், சீமான் கூறினார்.
நாகப்பட்டினம்:
20 ஆண்டுகளுக்கும் மேலாக சிறையில் தண்டனை அனுபவித்து வரும் இஸ்லாமியர்களை விடுதலை செய்ய மறுப்பதை கண்டித்தும்,161-வது சட்டப்பிரிவை பயன்படுத்தி பேரறிவாளன் உள்பட 7 பேரை விடுதலை செய்ய மறுத்து வரும் மத்திய, மாநில அரசுகளை கண்டித்தும், நாகை அவுரித்திடலில் நாம் தமிழர் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
ஆர்ப்பாட்டத்துக்கு கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தலைமை தாங்கினார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
குஜராத்தில் ஒரு மீனவரை பாகிஸ்தான் ராணுவம் சுட்டுக் கொன்றபோது, அந்த ராணுவத்தின் மீது வழக்கு தொடர்ந் தவர் மோடி. ஆனால் தமிழக மீனவர்கள் 480 பேர் இலங்கை ராணுவத்தால் சுட்டுக் கொல்லப்பட்டு இருக்கிறார்கள். நூற்றுக்கணக்கான மீனவர்கள் சிறையில் வாடி கொண்டிருக்கிறார்கள்.
பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள வலைகளையும், படகுகளையும் பறி கொடுத்திருக்கிறார்கள். மத்திய அரசு மீனவர்களின் உயிருக்கு மதிப்பளிக்காமலும், உணர்வை பற்றி கவலைப்படாமலும் உள்ளது. தமிழக மீனவர்கள் பிரச்சினைக்கு தீர்வு காண மத்திய அரசுக்கு தமிழக அரசு அழுத்தம் உரிய அழுத்தம் கொடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.






