என் மலர்
நாகப்பட்டினம்
கருங்கண்ணியில் உள்ள புனித அந்தோணியார் ஆலயத்தில் தேர்ப்பவனி விழா நடைபெற்றது.
நாகப்பட்டினம்:
நாகப்பட்டினம் மாவட்டம், வேளாங்கண்ணியை அடுத்த கருங்கண்ணி
புனித அந்தோணியார் ஆலயத்தில் கொரோனா நோயிலிருந்து அனைவரையும் காத்திட வேண்டி சிறப்பு நவநாள் கூட்டுப்பாடல்
திருப்பலி பங்குத்தந்தை சவரிமுத்து அடிகளார்
தலைமையில் நடைபெற்றது.
தொடர்ந்து மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட சப்பரத்தில் எழுந்தருளிய அந்தோணியார் சொரூபம் தாங்கிய தேர் புனித நீர் தெளிக்கப்பட்டு முக்கிய வீதிகள் வழியாக சென்றது. தொடர்ந்து கண்கவர்
வானவேடிக்கை நடைபெற்றது.
விழா ஏற்பாடுகளை கருங்கண்ணி கிறிஸ்தவ சமுதாய பெருந்தலைவர் பிரான்சிஸ், ஊர் பொறுப்பாளர்கள், இறைமக்கள் செய்தனர்.
நாகை மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் மோட்டார் சைக்கிள்கள் திருடிய 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
நாகப்பட்டினம்:
நாகை மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் கடந்த சில நாட்களாக மோட்டார் சைக்கிள்கள் தொடர்ந்து திருட்டு போனது.
இதையடுத்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜவஹர் உத்தரவின் பேரில் தனிப்படை அமைத்து சமூக விரோதிகளை கண்காணித்து வந்த நிலையில் வெளிப்பாளையம் நாடார் தெருவில் ஒரு குடோனில் திருடப்பட்ட வாகனங்களை பதுக்கி வைத்திருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
அதன்பேரில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜவஹர் உத்தரவுப்படி வெளிப்பாளையம் இன்ஸ்பெக்டர் தியாகராஜன் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று சிவன் செட்டிதெருவை சேர்ந்த ரமணன், செல்லூர் சுனாமி குடியிருப்பை சேர்ந்த செல்சன் உள்ளிட்ட 3 பேரை போலீசார் கைது செய்து
10-க்கும் மேற்பட்ட விலையுயர்ந்த மோட்டார் சைக்கிள்களை பறிமுதல் செய்தனர்.
வேதாரண்யம் பகுதியில் வயலில் தேங்கியுள்ள மழைநீர் வடியாததால் சம்பா அறுவடை பாதிக்கப்பட்டுள்ளது.
வேதாரண்யம்:
நாகை மாவட்டம் வேதாரண்யம், கரியாப்பட்டினம் மற்றும் அதனை சுற்றியுள்ள இடங்களில் கடந்த வாரம் பெய்த கன மழையால் அறுவடைக்கு தயாராக இருந்த ஆயிரகணக்கான ஏக்கர் சம்பா நெற்பயிர்கள் மூழ்கி சேதமடைந்தன.
பல இடங்களில் பயிர்கள் முளைவிட தொடங்கி உள்ளது-.
தற்போது மழை நின்றும் தண்ணீர் வடியவில்லை.
இதனால் விவசாயிகள் அறுவடை செய்ய முடியாமல் அவதிப்படுகின்றனர்.
இது குறித்து விவசாயிகள் கூறும்போது, இந்த ஆண்டு சம்பா பயிரிட்டுள்ள விவசாயிகளுக்கு திடீர் கனமழையால் ஆள் கூலி கூட கொடுக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் நஷ்டம் அடைந்துள்ளோம்.
சில இடங்களில் மூழ்கிய பயிர்களை ஆட்கள் மூலம் அறுவடை செய்கிறோம்.
வேளாண்மை துறை அதிகாரிகள் உடனடியாக மூழ்கிய நெற்கதிர்களை பார்வையிட்டு நிவாரண தொகை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.
சிலிண்டர் கரை ஒதுங்கியது
வேதாரண்யம்:
வேதாரண்யத்தை அடுத்த வெள்ளப்பள்ளம் கடற்கரையில் சிலிண்டர் ஒன்று கரை ஒதுங்கியது. தகவலறிந்த கீழையூர் கடலோர காவல் குழும போலீசார் சிலிண்டரை கைப்பற்றி எடுத்துச் சென்று விசாரித்து வருகிறார்கள்.
மூழ்கிய சம்பா பயிர்கள் முற்றிலும் சேதமானது.
நாகப்பட்டினம்:
திருமருகல் வட்டார பகுதியில் தொடர் மழையால் ஆயிரம் ஏக்கர் சம்பா நெற்பயிர்கள் நீரில் மூழ்கின.நிவாரணம் வழங்க கோரி விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
திருமருகல் வட்டாரத்தில் சுமார் 25 ஆயிரம் ஏக்கர் நிலப்பரப்பில் சம்பா சாகுபடி செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில் கடந்த 2 நாட்களாக பெய்த தொடர் மழையால் கீழப்பூதனூர், திருச்செங்காட்டங்குடி, திருமருகல், திருக்கண்ண புரம், திருப்புகலூர், வடகரை, கோட்டூர், விற்குடி, கீழத்தஞ்சாவூர், எரவாஞ்சேரி, திட்டச்சேரி, குத்தாலம், நரிமணம், கோபுராஜபுரம் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள வயல் மழைநீர் சூழ்ந்தது.
நடவு செய்யப்பட்டு அறுவடைக்கு தயாராக இருந்த கோ.46,1009,பிபிடி நெல் ரகங்கள் ஆயிரம் ஏக்கர் சம்பா நெற்பயிர்கள் மழை நீரில் மூழ்கி அழுகிய நிலையில் உள்ளது.தற்போது மழை நீர் வடிய தொடங்கி வருகிறது. இந்த நிலையில் பாதிக்கப்பட்ட சம்பா பயிர்கள் அழுகி துர்நாற்றம் வீசி வருகிறது.
இதுகுறித்து விவசாயிகள் கூறுகையில் கடந்த மாதம் ஏற்பட்ட வெள்ளம் மழையினால் பாதிக்கப்பட்டிருந்த விவசாயிகள், மீண்டும் பெய்த கனமழையால் பாதிப்புக் குள்ளாகி உள்ளோம்.
ஏக்கருக்கு 25 ஆயிரத்திற்கு மேல் செலவு செய்து நன்கு வளர்ந்த நெற்பயிர்கள் இப்படி ஆகி விட்டது என்றும் தொடர் மழையால் பாதிக்கப்பட்ட விளைநிலங்களை முறைப்படி கணக்கெடுத்து பாதிக்கப்பட்ட அனைத்து விவசாயிகளுக்கும் உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.
நாகூர் தர்காவில் கந்தூரி விழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. வருகிற 13-ந் தேதி(வியாழக்கிழமை) சந்தனக்கூடு ஊர்வலம் நடைபெறுகிறது.
நாகை மாவட்டம் நாகூரில் உலக பிரசித்தி பெற்ற ஆண்டவர் தர்கா உள்ளது. இந்த தர்காவில் ஆண்டுதோறும் கந்தூரி விழா நடைபெறுவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டு கந்தூரி விழா நேற்று இரவு கொடியேற்றத்துடன் தொடங்கியது.
இதை முன்னிட்டு நாகை மீரா பள்ளிவாசலில் இருந்து வழக்கமாக 10-க்கும் மேற்பட்ட கப்பல்களில் கொடி ஊர்வலம் நடைபெறும். ஆனால் இந்த ஆண்டு ஒமைக்ரான் பரவல் காரணமாக மந்திரி கப்பல், செட்டி பல்லக்கு, சின்னரதம், உள்ளிட்ட 8 கப்பல்களில் மட்டுமே கொடி ஊர்வலம் நடந்தது.
மின்னொளியில் அலங்கரிக்கப்பட்ட கப்பல்கள் நாகை நகரில் முக்கிய வீதிகள் வழியாக ஊர்வலமாக சென்று நாகூர் அலங்கார வாசல் வந்ததைடந்தது. தொடர்ந்து கொடிகள் நாகூர் தர்காவின் 5 மினராக்களுக்கும் கொண்டு செல்லப்பட்டது. பின்னர் தர்கா பரம்பரை கலிபா மஸ்தான் சாஹிப் துவா ஒதினார்.
மின்னொளியில் ஜொலித்த தர்காவின் 5 மினராக்களிலும் ஒரே நேரத்தில் கொடியேற்றப்பட்டது. அப்போது வாணவேடிக்கை நடந்தது. இதில் தமிழகம், ஆந்திரா, கர்நாடகா உள்ளிட்ட இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஆயிரக்காணக்கானோர் கலந்து கொண்டனர்.
விழாவின் முக்கிய நிகழ்ச்சியான சந்தனக்கூடு ஊர்வலம் வருகிற 13-ந் தேதி(வியாழக்கிழமை) நடைக்கிறது. பெரிய ஆண்டவர் சமாதிக்கு.சந்தனம் பூசும் நிகழ்ச்சி 14-ந் தேதி(வெள்ளிக்கிழமை) அதிகாலையில் நடக்கிறது.
கொடியேற்ற விழாவையொட்டி தஞ்சை சரக டி.ஐ.ஜி பிரேவேஷ் குமார், நாகை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜவஹர் தலைமையில் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
இதை முன்னிட்டு நாகை மீரா பள்ளிவாசலில் இருந்து வழக்கமாக 10-க்கும் மேற்பட்ட கப்பல்களில் கொடி ஊர்வலம் நடைபெறும். ஆனால் இந்த ஆண்டு ஒமைக்ரான் பரவல் காரணமாக மந்திரி கப்பல், செட்டி பல்லக்கு, சின்னரதம், உள்ளிட்ட 8 கப்பல்களில் மட்டுமே கொடி ஊர்வலம் நடந்தது.
மின்னொளியில் அலங்கரிக்கப்பட்ட கப்பல்கள் நாகை நகரில் முக்கிய வீதிகள் வழியாக ஊர்வலமாக சென்று நாகூர் அலங்கார வாசல் வந்ததைடந்தது. தொடர்ந்து கொடிகள் நாகூர் தர்காவின் 5 மினராக்களுக்கும் கொண்டு செல்லப்பட்டது. பின்னர் தர்கா பரம்பரை கலிபா மஸ்தான் சாஹிப் துவா ஒதினார்.
மின்னொளியில் ஜொலித்த தர்காவின் 5 மினராக்களிலும் ஒரே நேரத்தில் கொடியேற்றப்பட்டது. அப்போது வாணவேடிக்கை நடந்தது. இதில் தமிழகம், ஆந்திரா, கர்நாடகா உள்ளிட்ட இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஆயிரக்காணக்கானோர் கலந்து கொண்டனர்.
விழாவின் முக்கிய நிகழ்ச்சியான சந்தனக்கூடு ஊர்வலம் வருகிற 13-ந் தேதி(வியாழக்கிழமை) நடைக்கிறது. பெரிய ஆண்டவர் சமாதிக்கு.சந்தனம் பூசும் நிகழ்ச்சி 14-ந் தேதி(வெள்ளிக்கிழமை) அதிகாலையில் நடக்கிறது.
கொடியேற்ற விழாவையொட்டி தஞ்சை சரக டி.ஐ.ஜி பிரேவேஷ் குமார், நாகை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜவஹர் தலைமையில் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
தர்காவில் உள்ள 5 மினராக்களில் ஏற்றப்படும் கொடிகளை அலங்கரிக்கப்பட்ட 5 கப்பல்களிலும், ஒரு செட்டி பல்லாக்கு, சாம்பிராணி பல்லாக்கு ஆகிய 5 பல்லாக்கு மட்டும் கொண்டு வர நாகை மாவட்டம் நிர்வாகம் அனுமதி அளித்துள்ளது.
நாகை மாவட்டம் நாகூரில் பிரசித்தி பெற்ற ஆண்டவர் தர்கா உள்ளது. இந்த தர்காவிற்கு நாள்தோறும் வெளியூர், வெளிமாநிலம் மற்றும் வெளிநாடுகளில் இருந்து ஆயிரக்கணக்கானோர் வந்து செல்கின்றனர். தர்காவில் ஆண்டுதோறும் கந்தூரி விழா நடைபெறும் வழக்கம். அதன்படி இந்த ஆண்டு கந்தூரி விழா இன்று (செவ்வாய்க்கிழமை) கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.
ஒமைக்ரான் வைரஸ் பரவல் காரணமாக ஊர்வலம் அதிக அளவில் நடத்த வேண்டாம் என்று தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இதனால் நாகை ஜமாத்தில் இருந்து தர்காவில் உள்ள 5 மினராக்களில் ஏற்றப்படும் கொடிகளை அலங்கரிக்கப்பட்ட 5 கப்பல்களிலும், ஒரு செட்டி பல்லாக்கு, சாம்பிராணி பல்லாக்கு ஆகிய 5 பல்லாக்கு மட்டும் கொண்டு வர நாகை மாவட்டம் நிர்வாகம் அனுமதி அளித்துள்ளது.
இதையடுத்து மாலை 4 மணி அளவில் நாகையில் இருந்து கொடி ஊர்வலம் புறப்பட்டு முக்கிய வீதிகள் வழியாக நாகூரை சென்றடையும். நாகூரில் முக்கிய வீதிகளுக்கு ஊர்வலம் சொல்லாமல் அலங்கார வாசலோடு ஊர்வலம் நிறைவு பெறுகிறது.
கப்பலில் இருந்து கொடிகள் இறக்கப்பட்டு தர்கா கலிபா மஸ்தான் சாஹிப் ஓதிய பிறகு 5 மினாரக்களில் ஒரே நேரத்தில் கொடியேற்றப்படுகிறது.
விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக சந்தனக்கூடு ஊர்வலம் 13-ந்தேதி(வியாழக்கிழமை) நடைபெறுகிறது.
ஒமைக்ரான் வைரஸ் பரவல் காரணமாக ஊர்வலம் அதிக அளவில் நடத்த வேண்டாம் என்று தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இதனால் நாகை ஜமாத்தில் இருந்து தர்காவில் உள்ள 5 மினராக்களில் ஏற்றப்படும் கொடிகளை அலங்கரிக்கப்பட்ட 5 கப்பல்களிலும், ஒரு செட்டி பல்லாக்கு, சாம்பிராணி பல்லாக்கு ஆகிய 5 பல்லாக்கு மட்டும் கொண்டு வர நாகை மாவட்டம் நிர்வாகம் அனுமதி அளித்துள்ளது.
இதையடுத்து மாலை 4 மணி அளவில் நாகையில் இருந்து கொடி ஊர்வலம் புறப்பட்டு முக்கிய வீதிகள் வழியாக நாகூரை சென்றடையும். நாகூரில் முக்கிய வீதிகளுக்கு ஊர்வலம் சொல்லாமல் அலங்கார வாசலோடு ஊர்வலம் நிறைவு பெறுகிறது.
கப்பலில் இருந்து கொடிகள் இறக்கப்பட்டு தர்கா கலிபா மஸ்தான் சாஹிப் ஓதிய பிறகு 5 மினாரக்களில் ஒரே நேரத்தில் கொடியேற்றப்படுகிறது.
விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக சந்தனக்கூடு ஊர்வலம் 13-ந்தேதி(வியாழக்கிழமை) நடைபெறுகிறது.
வேதாரண்யம் கடற்பகுதியில் இறந்து ஆலிவர் ரெட்லி ஆமைகள் கரை ஒதுங்குகின்றன.
வேதாரண்யம்:
வேதாரண்யம் தாலுக்கா கோடியக்கரை, ஆறுகாட்டுத்துறை, புஷ்பவனம், வெள்ளப்பள்ளம் உள்ளிட்ட கடற்கரைப் பகுதிகளில் ஆண்டுதோறும் டிசம்பர் முதல் மார்ச் வரை அழிந்து வரும் இனமாக ஆலிவர் ரெட்லி ஆமைகள் கடற்கரைக்கு வந்து முட்டையிட்டு செல்லும்.
இந்த ஆமை முட்டைகளை வனத்துறையினர் சேகரித்து குஞ்சு பொறிப்பகத்தில் வைத்து பாதுகாத்து 55 முதல் 60 நாளில் முட்டை வெளிவந்தவுடன் கடலில் விடுவார்கள்.
அவ்வாறு கடலில் விடப்பட்ட ஆமைக் குஞ்சுகள் வளர்ந்து 25 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் அதே கடற்கரைக்கு அந்த ஆமைகள் முட்டையிடுவதற்கு வரும்.
1982-ம் ஆண்டு முதல் கோடியக்கரை, வேதாரண்யம் கடற்கரை பகுதியில் சுமார் 3 லட்சம் ஆமை முட்டைகள் எடுத்து சேகரித்து வனத்துறையின் மூலம் கடலில் விடப்பட்டுள்ளது.
இந்நிலையில் தற்போது புஷ்பவனம், ஆறுகாட்டுத்துறை கடற்கரை பகுதியில் சுமார் 3 கிலோமீட்டர் தூரத்திற்கு கடலின் உள்ளேயும் வெளியேயும் சேறு நிறைந்திருப்பதால் இந்த கடற்கரை பகுதிக்குக்கு முட்டையிட வரும் ஆலிவர் ரெட்லி ஆமைகள் சேற்றில் சிக்கி இறந்து கரை ஒதுங்கி கிடக்கின்றன.
நேற்று மாலையில் வேதாரண்யம் புஷ்பவனம் கடற்கரையில் 25-க்கும் மேற்பட்ட ஆமைகள் இறந்து கரை ஓதுங்கின. இறந்த ஆமைகளை கோடியக்கரை வனச்சரக அலுவலர் அயூப்கான் தலைமையில் வனத்துறையினர் புதைக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டனர்.
ஒரே நாளில் 25-க்கும் மேற்பட்ட ஆமைகள் இறந்து கரை ஒதுங்கியதால் இயற்கை ஆர்வலர்கள் மிகுந்த வேதனை அடைந்தனர்.
வேதாரண்யத்தில் 9 ஆயிரம் ஏக்கரில் உப்பு உற்பத்தி பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
வேதாரண்யம்:
நாகை மாவட்டம், வேதாரண்யம் அடுத்த அகஸ்தியன்பள்ளி, கோடியக்காடு, கடினல்வயல் ஆகிய பகுதிகளில் 9 ஆயிரம் ஏக்கரில்
உப்பு உற்பத்தி செய்யப்படுகிறது.
தூத்துக்குடிக்கு அடுத்த படியாக உப்பு உற்பத்தியில் 2-ம் இடம் வகிக்கிறது.
இத்தொழில் நேரடியாகவும், மறைமுகமாகவும்
10 ஆயிரம் தொழிலாளர்கள் ஈடுபட்டுள்ளனர்.
வடகிழக்கு பருவமழை காரணமாக பாத்திகளில் தண்ணீர் தேங்கி உப்பு
உற்பத்தி நிறுத்தப்பட்டது. இந்த ஆண்டும் மழையால் நிறுத்தப்பட்டிருந்த உப்பு உற்பத்தி கடந்த மாதம் மழை ஓய்ந்து பாத்திகளில் தேங்கிய
மழைநீர் வடிந்தது.
மழையால் பாதிக்கப்பட்ட உப்பு பாத்திகளை சரி செய்யும் பணி முழு வீச்சில் நடைபெற்றது. இந்த நிலையில் கடந்த 3 நாட்களாக திடீரென்று பெய்த கனமழையால் உப்பு பாத்திகளில் மீண்டும் மழை நீர் தேங்கி கடல்போல் காட்சியளிக்கிறது.
இந்தாண்டு உப்பு உற்பத்திக்கான முதற்கட்ட பணிகள்
நிறைவேறும் தருவாயில் இருந்த நிலையில் இந்த
திடீர் மழையால் உப்பு பாத்திகள் முழுமையாக சேதமடைந்துள்ளது.
பாத்திகளில் தேங்கியுள்ள மழைநீர் வடிந்து மீண்டும் உப்பு உற்பத்தி
தொடங்க ஒரு மாத காலம் ஆகும் என உற்பத்தியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
ஏக்கர் ஒன்றுக்கு சுமார் ரூ.20 ஆயிரத்துக்கு மேல் செலவான நிலையில் மழை
பாதிப்பால் கடும் நஷ்டம் அடைந்துள்ளனர்.
குறைந்த அளவு இருப்பு உள்ள உப்பை மழையில் இருந்து பாதுகாக்க தார்ப்பாய் மற்றும் பனை ஓலைகளைக் கொண்டு பாதுகாப்பாக மூடி வைத்துள்ளனர்.
நாகை அக்கரைப்பேட்டை கல்லார் கிராமத்தில் 500 மீட்டர் தூரத்திற்கு கற்களை கொட்டி கடல் நீர் உட் புகுவதை தடுக்க நடவடிக்கை வேண்டும்
நாகப்பட்டினம்:
நாகப்பட்டினம் மாவட்டம் அக்கரைப் பேட்டை ஊராட்சி கல்லார் கிராமத்தில் 500-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர் இங்குள்ளவர்கள்
100-க்கும் மேற்பட்ட பைபர் படகுகள் மூலம் மீன்பிடி தொழில் செய்து வருகின்றனர்.
இங்கு மீன்பிடியே பிரதான தொழிலாக இருப்பதால் கடற்கரையில் பைபர் படகுகளை நிறுத்தி சீர் செய்தல், வளை பின்னுதல் ஆகியவற்றை செய்து வருகின்றனர்.
மேலும் கடற்கரையில் இருந்து சிறிது தூரத்தில் வீடுகள் உள்ளது.
இந்நிலையில் கடந்த சில தினங்களாக கல்லார் கிராமத்தில் கடல் சீற்றம் காரணமாக கடலரிப்பு ஏற்பட்டுள்ளது. கல்லார் கிராமத்தில் கடற்கரையில் கொட்டப்பட்டுள்ள கற்களில் இருந்து 50 அடி தூரம் தள்ளி கடல் இருந்தது.
ஆனால் தற்போது கொட்டப்பட்டுள்ள கற்களை 100 அடி தாண்டி கடல் நீர் வந்துள்ளது. அதாவது 150 அடிக்கு கடல் நீர் உள்ளே புகுந்துள்ளது. இப்படி நாளுக்குநாள் கடல்நீர் உள்புகுவதால் கல்லார் கிராமத்தில் விரைவில்
கடல்நீர் குடியிருப்புக்குள் புகும் அபாயம் உள்ளது.
எனவே தற்போது கடற்கரையை ஒட்டி கொட்டப்பட்டுள்ள கற்களில் இருந்து
500 மீட்டர் தூரத்திற்கு கற்களை கொட்டி கல்லார் கிராமத்தில் கடல் நீர்
உட்புகுவதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
வேளாங்கண்ணி மாதா பேராலயத்தில் புத்தாண்டையொட்டி சிறப்பு திருப்பலி நடந்தது.
நாகப்பட்டினம்:
நாகை மாவட்டம், வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய மாதா பேராலயத்தில் நள்ளிரவு 12 மணிக்கு பேராலய வளாகத்தில் உள்ள திறந்தவெளி கலையரங்கமான சேவியர் திடலில் தஞ்சை மறைமாவட்ட ஆயர் தேவதாஸ்அம்புரோஸ் தலைமையில் புத்தாண்டு சிறப்பு திருப்பலி நடந்தது.
தொடர்ந்து புத்தாண்டை வரவேற்கும் விதமாக வாணவேடிக்கை நடந்தது. பின்னர் 2021-ம் ஆண்டில் நடந்த நல்ல நிகழ்வுகளை நினைவு கூர்ந்து தீய நிகழ்வுகள் புதிய ஆண்டில் நடைபெறாமல் இருக்க பிரார்த்தனை செய்து கொண்டனர்.
பின்னர் புத்தாண்டை வரவேற்று ஒருவரையொருவர் புத்தாண்டு வாழ்த்துக்களை பரிமாறி கொண்டனர். இதன்பின்னர் பேராலயம் சார்பில் புத்தாண்டை வரவேற்றனர். பேராலய அதிபர் இருதயராஜ், பங்குதந்தை அற்புதராஜ் மற்றும் உதவி பங்கு தந்தையர்கள் கலந்து கொண்டனர்.
தஞ்சையை சேர்ந்த ஒருவரது வங்கி லாக்கரில் திருக்குவளையில் திருடப்பட்ட மரகதலிங்கம் கண்டுபிடிக்கப்பட்டது. பல நூறு ஆண்டுகள் பழமை வாய்ந்த இந்த லிங்கம் அவனிவிடங்கர் என்று அழைக்கப்படுகிறது.
சீர்காழி:
தஞ்சையில் மீட்கப்பட்ட மரகதலிங்கம் தொடர்பாக மயிலாடுதுறையில் தர்மபுரம் ஆதீனம் 26-வது குருமகாசந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிகர் ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள் அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது:-
முசுகுந்த சக்கரவர்த்தியால் பெறப்பட்ட சப்த விடங்க தலங்கள் லிங்கங்கள் எனப்படும் ஏழு லிங்கங்கள் திருக்குவளை, நாகப்பட்டினம், வேதாரண்யம், திருநள்ளாறு உள்ளிட்ட கோவில்களில் வைத்து பூஜை செய்யப்பட்டு வருகிறது. கடந்த 2016-ம் ஆண்டு திருக்குவளையில் வைத்து பூஜிக்கப்பட்ட மரகதலிங்கம் திருடப்பட்டது. இதுகுறித்து சிலை தடுப்பு போலீசார் தீவிர புலன் விசாரணை செய்யப்பட்டதில், தஞ்சையைச் சேர்ந்த ஒருவரது வங்கி லாக்கரில் மரகதலிங்கம் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இது திருக்குவளையில் திருடப்பட்ட மரகதலிங்கம் என்று கண்டுபிடிக்கப்பட்டது. இது தொடர்பாக தங்களிடம் போலீசார் விசாரித்து உறுதி செய்து கொண்டனர்.
பல நூறு ஆண்டுகள் பழமை வாய்ந்த இந்த லிங்கம் அவனிவிடங்கர் என்று அழைக்கப்படுகிறது. தர்மபுரம் ஆதீனத்திற்கு சொந்தமான திருக்குவளை கோவிலில் இருந்து திருடப்பட்ட இந்த லிங்கத்தை மீண்டும் திருக்குவளை கோவிலுக்கு வழங்க வேண்டும்.
சிலைய மீட்க நடவடிக்கை மேற்கொள்ள உத்தரவிட்ட முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு, காவல்துறை இயக்குனர் சைலேந்திரபாபு, ஏ.டி.ஜி.பி ஜெய்ந்த் முரளி, போலீஸ் சூப்பிரண்டு (சிலைகடத்தல் தடுப்பு பிரிவு) பொன்னி, காவல் துறை கூடுதல் கண்காணிப்பாளர் ராஜாராமன், அசோக் நடராஜன் ஆகியோருக்கு நன்றி.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
தஞ்சையில் மீட்கப்பட்ட மரகதலிங்கம் தொடர்பாக மயிலாடுதுறையில் தர்மபுரம் ஆதீனம் 26-வது குருமகாசந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிகர் ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள் அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது:-
முசுகுந்த சக்கரவர்த்தியால் பெறப்பட்ட சப்த விடங்க தலங்கள் லிங்கங்கள் எனப்படும் ஏழு லிங்கங்கள் திருக்குவளை, நாகப்பட்டினம், வேதாரண்யம், திருநள்ளாறு உள்ளிட்ட கோவில்களில் வைத்து பூஜை செய்யப்பட்டு வருகிறது. கடந்த 2016-ம் ஆண்டு திருக்குவளையில் வைத்து பூஜிக்கப்பட்ட மரகதலிங்கம் திருடப்பட்டது. இதுகுறித்து சிலை தடுப்பு போலீசார் தீவிர புலன் விசாரணை செய்யப்பட்டதில், தஞ்சையைச் சேர்ந்த ஒருவரது வங்கி லாக்கரில் மரகதலிங்கம் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இது திருக்குவளையில் திருடப்பட்ட மரகதலிங்கம் என்று கண்டுபிடிக்கப்பட்டது. இது தொடர்பாக தங்களிடம் போலீசார் விசாரித்து உறுதி செய்து கொண்டனர்.
பல நூறு ஆண்டுகள் பழமை வாய்ந்த இந்த லிங்கம் அவனிவிடங்கர் என்று அழைக்கப்படுகிறது. தர்மபுரம் ஆதீனத்திற்கு சொந்தமான திருக்குவளை கோவிலில் இருந்து திருடப்பட்ட இந்த லிங்கத்தை மீண்டும் திருக்குவளை கோவிலுக்கு வழங்க வேண்டும்.
சிலைய மீட்க நடவடிக்கை மேற்கொள்ள உத்தரவிட்ட முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு, காவல்துறை இயக்குனர் சைலேந்திரபாபு, ஏ.டி.ஜி.பி ஜெய்ந்த் முரளி, போலீஸ் சூப்பிரண்டு (சிலைகடத்தல் தடுப்பு பிரிவு) பொன்னி, காவல் துறை கூடுதல் கண்காணிப்பாளர் ராஜாராமன், அசோக் நடராஜன் ஆகியோருக்கு நன்றி.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.






