என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ஆலய தேர்பவனி
    X
    ஆலய தேர்பவனி

    புனித அந்தோணியார் ஆலய தேர்பவனி

    கருங்கண்ணியில் உள்ள புனித அந்தோணியார் ஆலயத்தில் தேர்ப்பவனி விழா நடைபெற்றது.
    நாகப்பட்டினம்:

    நாகப்பட்டினம் மாவட்டம், வேளாங்கண்ணியை அடுத்த கருங்கண்ணி 
    புனித அந்தோணியார் ஆலயத்தில் கொரோனா நோயிலிருந்து அனைவரையும் காத்திட வேண்டி சிறப்பு நவநாள் கூட்டுப்பாடல் 
    திருப்பலி பங்குத்தந்தை சவரிமுத்து அடிகளார் 
    தலைமையில் நடைபெற்றது.

    தொடர்ந்து மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட சப்பரத்தில் எழுந்தருளிய அந்தோணியார் சொரூபம் தாங்கிய தேர் புனித நீர் தெளிக்கப்பட்டு முக்கிய வீதிகள் வழியாக சென்றது. தொடர்ந்து கண்கவர்
     வானவேடிக்கை நடைபெற்றது. 

    விழா ஏற்பாடுகளை கருங்கண்ணி கிறிஸ்தவ சமுதாய பெருந்தலைவர் பிரான்சிஸ், ஊர் பொறுப்பாளர்கள், இறைமக்கள் செய்தனர்.
    Next Story
    ×