search icon
என் மலர்tooltip icon

    இஸ்லாம்

    மின்னொளியில் ஜொலித்த தர்காவின் 5 மினராக்களிலும் கொடியேற்றப்பட்டு கொடிகள் பறப்பதை படத்தில் காணலாம்.
    X
    மின்னொளியில் ஜொலித்த தர்காவின் 5 மினராக்களிலும் கொடியேற்றப்பட்டு கொடிகள் பறப்பதை படத்தில் காணலாம்.

    நாகூர் தர்காவில் கந்தூரி விழா கொடியேற்றத்துடன் தொடங்கியது

    நாகூர் தர்காவில் கந்தூரி விழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. வருகிற 13-ந் தேதி(வியாழக்கிழமை) சந்தனக்கூடு ஊர்வலம் நடைபெறுகிறது.
    நாகை மாவட்டம் நாகூரில் உலக பிரசித்தி பெற்ற ஆண்டவர் தர்கா உள்ளது. இந்த தர்காவில் ஆண்டுதோறும் கந்தூரி விழா நடைபெறுவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டு கந்தூரி விழா நேற்று இரவு கொடியேற்றத்துடன் தொடங்கியது.

    இதை முன்னிட்டு நாகை மீரா பள்ளிவாசலில் இருந்து வழக்கமாக 10-க்கும் மேற்பட்ட கப்பல்களில் கொடி ஊர்வலம் நடைபெறும். ஆனால் இந்த ஆண்டு ஒமைக்ரான் பரவல் காரணமாக மந்திரி கப்பல், செட்டி பல்லக்கு, சின்னரதம், உள்ளிட்ட 8 கப்பல்களில் மட்டுமே கொடி ஊர்வலம் நடந்தது.

    மின்னொளியில் அலங்கரிக்கப்பட்ட கப்பல்கள் நாகை நகரில் முக்கிய வீதிகள் வழியாக ஊர்வலமாக சென்று நாகூர் அலங்கார வாசல் வந்ததைடந்தது. தொடர்ந்து கொடிகள் நாகூர் தர்காவின் 5 மினராக்களுக்கும் கொண்டு செல்லப்பட்டது. பின்னர் தர்கா பரம்பரை கலிபா மஸ்தான் சாஹிப் துவா ஒதினார்.

    மின்னொளியில் ஜொலித்த தர்காவின் 5 மினராக்களிலும் ஒரே நேரத்தில் கொடியேற்றப்பட்டது. அப்போது வாணவேடிக்கை நடந்தது. இதில் தமிழகம், ஆந்திரா, கர்நாடகா உள்ளிட்ட இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஆயிரக்காணக்கானோர் கலந்து கொண்டனர்.

    விழாவின் முக்கிய நிகழ்ச்சியான சந்தனக்கூடு ஊர்வலம் வருகிற 13-ந் தேதி(வியாழக்கிழமை) நடைக்கிறது. பெரிய ஆண்டவர் சமாதிக்கு.சந்தனம் பூசும் நிகழ்ச்சி 14-ந் தேதி(வெள்ளிக்கிழமை) அதிகாலையில் நடக்கிறது.

    கொடியேற்ற விழாவையொட்டி தஞ்சை சரக டி.ஐ.ஜி பிரேவேஷ் குமார், நாகை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜவஹர் தலைமையில் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
    Next Story
    ×