என் மலர்
நாகப்பட்டினம்
வேதாரண்யத்தில் விதை பண்ணை வயலில் வேளாண் துறையினர் ஆய்வு நடத்தினர்.
வேதாரண்யம்:
வேதாரண்யம் தாலுகா குரவப்புலத்தை சேர்ந்தவர் சரவணக்குமார். இவரது மனைவி சிவரஞ்சனி. பொறியியல் பட்டதாரியான இவர் தனது கணவர் துணையோடு இந்தியாவில் உள்ள 1250 வகையான பாரம்பரியமிக்க நெல் விதைகளை சேகரித்து வருகிறார்.
இந்த ஆண்டு தனக்கு சொந்தமான ஒரு ஏக்கர் நிலத்தில் பாரம்பரிய நெல் வகைகளை மீட்டெடுக்கும் வகையில் 100-க்கும் மேற்பட்ட நெல் ரகங்களை சாகுபடி செய்துள்ளார். இந்த வயல்களை வேளாண் துறையினர் ஆய்வு செய்தனர்.
நாகை வேளாண்மை இணை இயக்குனர் அகண்டராவ், வேதாரண்யம் வேளாண்மை அலுவலர் நவீன்குமார், வேளாண்மை அலுவலர்கள் அமுதாதேவி, கலைச்செல்வன், மோகன் மற்றும் வேளாண்மைத்துறை அதிகாரிகள் வயலில் ஆய்வுசெய்தனர்.
பின்னர் சாகுபடி செய்துள்ள நெல் ரகங்கள் குறித்தும் இயற்கை முறையில் சாகுபடி செய்யப்பட்டுள்ள பாரம்பரியமிக்க நெல் ரகங்களின் விளைச்சலையும் சிவரஞ்சனியிடம் கேட்டறிந்தனர்.
இதுகுறித்து நாகை வேளாண்மை இணை இயக்குனர் அகண்ட ராவ் கூறும்போது:-
பாரம்பரியமிக்க நெல் பயிர் சாகுபடி குறித்து நேரடியாக ஆய்வு செய்தோம்.
தமிழகத்தில் உள்ள 37 விதை பண்ணைகளுக்கு சிவரஞ்சனி சாகுபடி செய்த வயல்களில் இருந்து அறுவடை செய்யப்பட்ட நெல் விதைகளை வாங்குவதற்கு அரசுக்கு பரிந்துரை செய்து கொள்முதல் செய்ய உள்ளோம் என்றார்.
வேதாரண்யம் பகுதியில் நாளை சனிக்கிழமை மின்சாரம் நிறுத்தப்படுகிறது.
வேதாரண்யம்:
வேதாரண்யம் தாலுகா வாய்மேடு, ஆயக்காரன்புலம் ஆகிய துணை மின் நிலையங்களில் நாளை (சனிக்கிழமை) பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது.
எனவே நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை இந்த இரு துணைமின் நிலையங்களில் இருந்து மின் வினியோகம் பெறும் வாய்மேடு, ஆலங்காடு, கரியாப்பட்டினம், ஆயக்காரன்புலம், கருப்பம்புலம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் மின் வினியோகம் இருக்காது.
மேற்கண்ட தகவலை வேதாரண்யம் உதவி செயற்பொறியாளர் ரவிக்குமார் தெரிவித்துள்ளார்.
ஈட்டி எறிதல் போட்டியில் தங்கம் வென்ற மாணவியை ஊர்மக்கள் வரவேற்றனர்.
வேதாரண்யம்:
வேதாரண்யம் தாலுகா வாட்டாகுடியை சேர்ந்தவர் கல்லூரி மாணவி ஜெயஸ்ரீ. இவர் நேபாளத்தில் நடைபெற்ற இந்தோ-நேபால் தடகள போட்டி ஈட்டி எறிதல் போட்டியில் முதலிடம் பெற்று தங்க பதக்கம் வென்றார்.
இந்நிலையில் நேபாளில் இருந்து தலைஞாயிறுக்கு வந்த தங்க மங்கை ஜெயஸ்ரீக்கு வாட்டாகுடி கிராம மக்கள் மற்றும் தலைஞாயிறு ஒன்றிய பேரூர் தி.மு.க சார்பில் பேண்ட் வாத்தியங்கள் முழங்க பட்டாசு வெடித்து வரவேற்பு அளிக்கப்பட்டது.
இந்த நிகழ்ச்சியில் மாநில விவசாய குழு உறுப்பினர் மகாகுமார், முன்னாள் பேரூராட்சி தலைவர்கள் சாந்தி சுப்பிரமணியன், ராஜேந்திரன், வாட்டா குடி ஊராட்சி மன்ற தலைவர் கற்பதம் நீலமேகம், கூட்டுறவு சங்க முன்னாள் தலைவர் பிரபாகரன், மற்றும் ஊர் பொதுமக்கள் கலந்துகொண்டனர்.
ஜெயஸ்ரீ இதுவரை பள்ளி, கல்லூரி மற்றும் பல்வேறு விளையாட்டு போட்டிகளில் 77 சான்றிதழ்கள் மற்றும் பதக்கம் பெற்று உள்ளார்.
ஒலிம்பிக் போட்டியில் பங்கு பெற்று தங்கம் வெல்லுவதே எனது லட்சியம் என கூறியுள்ளார்.
மாணவி ஜெயஸ்ரீக்கு சுற்றுசூழல் அமைச்சர் மெய்யநாதன், ஊராட்சி மன்ற தலைவர் கற்பகம் நீலமேகம் ஆகியோர் நிதியுதவி செய்தனர் என்பது குறிப்பிடதக்கது.
வேளாங்கண்ணி புனித செபஸ்தியார் கோவில் பெரிய தேர் பவனி நடைபெற்றது
நாகப்பட்டினம்:
வேளாங்கண்ணி பேராலத்தின் உபகோவிலான பழைமை வாய்ந்த புனித செபஸ்தியார் கோவிலில் ஆண்டுப் பெருவிழா கடந்த 20&ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.
விழாவின் முக்கிய நிகழ்ச்சியான பெரிய தேர்பவனி நடைபெற்றது. முன்னதாக கோவிலில் வேளாங்கண்ணி பேராலய பங்கு தந்தை அற்புதராஜ் அடிகளார் தலைமையில் சிறப்பு திருப்பலி, கூட்டுப்பாடல் பிரார்த்தனை, உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
அதனை தொடர்ந்து மின் விளக்குகளால் அலங்கரிகக்ப்பட்ட சப்பரத்தில் ஆண்டுதோறும் மூன்று சொரூபங்கள் செல்லும் நிலையில் இந்த ஆண்டு கொரோனா பரவல் காரணமாக செபஸ்தியார் 1 சொரூபம் மட்டுமே எழுந்தருளிய தேரை புனித நீர் தெளிக்கப்பட்டு முக்கிய வீதிகள் வழியாக எளிய முறையில் சென்ற தேர்பவனியில் குறைவான பக்தர்களே பங்கேற்று தரிசனம் செய்தனர்.
அதனைதொடர்ந்து தப்பாட்டமும் நடைபெற்றது. எழுச்சி ஏற்பாடுகளை கத்தோலிக்க முக்குலத்தோர் சமூகத்தினர் செய்திருந்தனர்.
நாகை மாவட்ட விளையாட்டு மைதானத்தில் நடைபெற்ற குடியரசு தின விழாவில் கலெக்டர் அருண் தம்புராஜ் தலைமை தாங்கி, தேசிய கொடி ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார்.
நாகப்பட்டினம்
நாகை மாவட்ட விளையாட்டு மைதானத்தில் நடைபெற்ற குடியரசு தின விழாவில் கலெக்டர் அருண் தம்புராஜ் தலைமை தாங்கி, தேசிய கொடி ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார். பின்னர் காவல்துறை, ஊர்க்காவல் படையினரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார்.
விழாவில் சுதந்திர போராட்ட தியாகிகள் கவுரவிக்கப்பட்டனர். அதேபோல் சிறப்பாக பணியாற்றிய காவல்துறை, வேளாண்மைத்துறை அலுவலர்கள், நகராட்சி நிர்வாக அலுவலர்கள் மற்றும் பல்வேறு துறைகளை சேர்ந்த அலுவலர்களுக்கு பாராட்டு சான்றிதழ் வழங்கப்பட்டது.
தொடர்ந்து பல்வேறு துறைகள் சார்பில் 54 பயனாளிகளுக்கு
ரூ.1 கோடியே 2 லட்சத்து 61 மதிப்பீட்டிலான நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
நிகழ்ச்சியில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜவஹர், ஆதிதிராவிடர் வீட்டுவசதி மேம்பாட்டு கழகத் தலைவர் மதிவாணன்
உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
வேதாரண்யம் உப்பு சத்தியாகிரக நினைவு தூணில் துணைவேந்தர் மரியாதை செலுத்தினார்.
வேதாரண்யம்:
வேதாரண்யம் உப்பு சத்தியாகிரக நினைவு கட்டிடத்தில் சுதந்திரதின 75-ம் ஆண்டு விழா நடைபெறுவதை முன்னிட்டு விழாவை திருவாரூர் மத்திய பல்கலைக்கழக துணை வேந்தர் முனைவர் கிருஷ்ணன் தொடங்கி வைத்தார்.
நிகழ்ச்சியில் முன்னாள் எம்.பி. ராஜேந்திரன், சுதந்திர போராட்ட தியாகி வேதரெத்தினம் பேரன் கயிலை மணி வேதாரத்தினம், பல்கலைக்கழக உன்னத பாரத இயக்கம் ஒருங்கிணைப்பாளர் வேல் முருகன், நாகப்பட்டினம் எக்ஸ்னோரா இண்டர் நேஷனல் பன்னீர்செல்வம், ப்ரியம் அறக்கட்டளை நிர்வாக இயக்குநா¢ பிரபு, வேதை சிம்காஸ் பனங்கிழங்கு உணவுகள் உற்பத்தியாளர் கார்த்திகேயன், தியாகி வைரப்பன் மகன் சண்முகம் மற்றும் குருகுல ஆசிரியர்கள் சுதந்திர போராட்ட தியாகிகள் குடும்பத்தினர் கலந்து கொண்டனர்.
விழாவில் உப்பு சத்தியாகிரக நினைவு கட்டிடத்தில் மரக்கன்றுகள் நடப்பட்டது. அங்குள்ள தியாகி சர்தார் வேதரத்தினம், தியாகி வைரப்பன் ஆகியோர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
பின்னர் உப்புத்துறை அலுவலகத்தில் உள்ள ராஜாஜி சிறைவைக்கப்பட்ட இடத்தையும் பின்பு ராஜாஜி உப்பு அள்ளிய இடத்தில் அமைக்கப்பட்ட நினைவு நினைவுத் தூணுக்கு சென்ற தமிழ்நாடு மத்திய பல்கலைக் கழகதுணைவேந்தர் கிருஷ்ணன் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினார்.
தேசபக்தி பாடல்கள் பாடப்பட்டு வந்தே மாதரம் முழக்கங்கள் எழுப்பப்பட்டது. சர்தார் வேதரத்தினம் ஆரம்பிக் கப்பட்ட குருகுலத்திற்கு சென்று சர்தார் வேதரத்தினம் நினைவிடத்தில் மலர் மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தினார். பின்பு அங்குள்ள கோசாலைக்கு சென்று பசு மாடுகளுக்கு கீரை பழங்களை வழங்கினார்.
வேதாரண்யம் அருகே நள்ளிரவில் நடுக்கடலில் மீனவர்களை அரிவாளால் வெட்டி ரூ.3 லட்சம் மதிப்பிலான பொருட்களை இலங்கை கடற்கொள்ளையர்கள் கொள்ளையடித்த சம்பவம் மீனவர்கள் மத்தியில் பதட்டத்தையும், அச்சத்தையும் ஏற்படுத்தி உள்ளது.
வேதாரண்யம்:
நாகை ஆரியநாட்டு தெருவைச் சேர்ந்தவர் சுப்புராஜ். இவருக்கு சொந்தமான பைபர் படகில் அவரது மகன் வசந்தபாலன் (வயது 25) மற்றும் அதே ஊரைச் சேர்ந்த நிர்மல், மணிகண்டன், தில்லைநாதன் ஆகியோர் மீன்பிடிக்க சென்றனர்.
நள்ளிரவில் வேதாரண்யம் அடுத்த கோடியக்கரைக்கு தென்கிழக்கே நடுக்கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்தனர். அப்போது இலங்கை கடற்கொள்ளையர்கள் இரண்டு படகில் வந்தனர்.
திடீரென்று தமிழக மீனவர்கள் படகில் அத்துமீறி ஏறி வசந்தபாலன் உள்ளிட்ட 4 பேரையும் சரமாரியாக அரிவாளால் கண்மூடித்தனமாக வெட்டினர்.
படகில் இருந்த மீன்கள், 2 செல்போன், ஜி.பி.எஸ் கருவி, வலைகள் , படகு இன்ஜின் ஆகிய ரூ.3 லட்சம் மதிப்புள்ள பொருட்களை கொள்ளையடித்தனர். இதையடுத்து தாங்கள் வந்த படகில் ஏறி ரப்பர் குண்டுகளை வீசிவிட்டு தப்பினர்.
இந்த கொடூர தாக்குதலில் 4 மீனவர்களும் பலத்த காயமடைந்தனர். இதனை தொடர்ந்து காய வலியை பொருட்படுத்தாமல் அவசரம் அவசரமாக ஆறுகாட்டுத்துறை கடற்கரைக்கு வந்து சக மீனவர்களின் உதவியோடு வேதாரண்யம் அரசு மருத்துவனையில் சிகிச்சைக்காக சேர்ந்தனர். அங்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு தில்லைநாதன், மணிகண்டன் மேல்சிகிச்சைக்காக மேல் சிகிச்சைக்காக நாகை அரசு மருத்துவமனைக்கும், வசந்தபாலன், நிர்மல் திருவாரூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது.
இது குறித்த புகாரின் பேரில் வேதாரண்யம் கடலோர காவல் குழும போலீஸ் துணை சூப்பிரண்டு குமார், இன்ஸ்பெக்டர் செல்வராஜ் மற்றும் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஏற்கனவே நேற்றுமுன்தினம் இரு வேறு இடங்களில் கடலில் மீன்பிடித்து கொண்டிருந்த வேதாரண்யம் பகுதி மீனவர்களை இலங்கை கடற்கொள்ளையர்கள் தாக்கி பொருட்களை கொள்ளையடித்து சென்றனர். தற்போது இன்றும் அதுபோல் சம்பவம் நடந்துள்ளது மீனவர்கள் மத்தியில் பதட்டத்தையும், அச்சத்தையும் ஏற்படுத்தி உள்ளது.
நாகை ஆரியநாட்டு தெருவைச் சேர்ந்தவர் சுப்புராஜ். இவருக்கு சொந்தமான பைபர் படகில் அவரது மகன் வசந்தபாலன் (வயது 25) மற்றும் அதே ஊரைச் சேர்ந்த நிர்மல், மணிகண்டன், தில்லைநாதன் ஆகியோர் மீன்பிடிக்க சென்றனர்.
நள்ளிரவில் வேதாரண்யம் அடுத்த கோடியக்கரைக்கு தென்கிழக்கே நடுக்கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்தனர். அப்போது இலங்கை கடற்கொள்ளையர்கள் இரண்டு படகில் வந்தனர்.
திடீரென்று தமிழக மீனவர்கள் படகில் அத்துமீறி ஏறி வசந்தபாலன் உள்ளிட்ட 4 பேரையும் சரமாரியாக அரிவாளால் கண்மூடித்தனமாக வெட்டினர்.
படகில் இருந்த மீன்கள், 2 செல்போன், ஜி.பி.எஸ் கருவி, வலைகள் , படகு இன்ஜின் ஆகிய ரூ.3 லட்சம் மதிப்புள்ள பொருட்களை கொள்ளையடித்தனர். இதையடுத்து தாங்கள் வந்த படகில் ஏறி ரப்பர் குண்டுகளை வீசிவிட்டு தப்பினர்.
இந்த கொடூர தாக்குதலில் 4 மீனவர்களும் பலத்த காயமடைந்தனர். இதனை தொடர்ந்து காய வலியை பொருட்படுத்தாமல் அவசரம் அவசரமாக ஆறுகாட்டுத்துறை கடற்கரைக்கு வந்து சக மீனவர்களின் உதவியோடு வேதாரண்யம் அரசு மருத்துவனையில் சிகிச்சைக்காக சேர்ந்தனர். அங்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு தில்லைநாதன், மணிகண்டன் மேல்சிகிச்சைக்காக மேல் சிகிச்சைக்காக நாகை அரசு மருத்துவமனைக்கும், வசந்தபாலன், நிர்மல் திருவாரூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது.
இது குறித்த புகாரின் பேரில் வேதாரண்யம் கடலோர காவல் குழும போலீஸ் துணை சூப்பிரண்டு குமார், இன்ஸ்பெக்டர் செல்வராஜ் மற்றும் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஏற்கனவே நேற்றுமுன்தினம் இரு வேறு இடங்களில் கடலில் மீன்பிடித்து கொண்டிருந்த வேதாரண்யம் பகுதி மீனவர்களை இலங்கை கடற்கொள்ளையர்கள் தாக்கி பொருட்களை கொள்ளையடித்து சென்றனர். தற்போது இன்றும் அதுபோல் சம்பவம் நடந்துள்ளது மீனவர்கள் மத்தியில் பதட்டத்தையும், அச்சத்தையும் ஏற்படுத்தி உள்ளது.
இதையும் படியுங்கள்...இன்று மீண்டும் உயர்ந்த தினசரி பாதிப்பு- இந்தியாவில் 2.85 லட்சம் பேருக்கு கொரோனா
திருமருகல் அருகே வீடு கட்ட இடத்தை அளந்து கொடுக்க வேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
நாகப்பட்டினம்:
நாகை மாவட்டம் திருமருகல் ஒன்றியம் அகரக்கொந்தகை ஊராட்சி வாழ்மங்கலம் மாதாகோவில் தெருவை சேர்ந்த வீடு இல்லாத 11 குடும்பத்தினருக்கு தமிழக அரசின் இலவச வீட்டுமனை வழங்கும் திட்டத்தின் கீழ் கடந்த வருடம் மாவட்ட கலெக்டர் அருண் தம்புராஜ் இலவச வீட்டுமனை பட்டாக்களை வழங்கியுள்ளர்.
அதன்படி கிராம கணக்கில் பதிய வைக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் பட்டா வழங்கி 3 மாதங்கள் கடந்தும் இன்றுவரை இடங்கள் பயனாளிகளுக்கு அளந்து வழங்கப்படாமல் உள்ளது.
இதனால் அனைவருக்கும் பிரதம மந்திரி வீடு கட்டும் திட்டத்தின் கீழ் வீடுகள் கட்ட ஆணை பிறப்பித்து உள்ள நிலையில் அவர்கள் தற்போது வரை வீடு கட்ட முடியவில்லை என தெரிவிக்கின்றனர்.
எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடன் நடவடிக்கை மேற்கொண்டு பயனாளிகளுக்கு இடத்தை அளந்து தர கோரிக்கை விடுத்துள்ளனர்.
நாகை மாவட்ட ஆயுதப்படை வளாகத்தில் மூலிகை பூங்காவை போலீஸ் சூப்பிரண்டு திறந்து வைத்தார்
நாகப்பட்டினம்:
நாகப்பட்டினம், காடம்பாடியில் உள்ள மாவட்ட ஆயுதப்படை வளாகத்தில் 61 வகை மூலிகைகள் கொண்ட மூலிகை பூங்காவை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜவஹர் திறந்து வைத்து பேசும்போது:
தற்போது உள்ள சூழ்நிலையில் காற்று மாசுபடுவதை தவிர்க்கவும் மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பிற்காகவும், இதுபோன்ற பூங்காக்கள் அமைக்கப்பட வேண்டும். காவலர்கள் அனைவரும் தங்களது வாழ்நாளில் அதிக அளவு மரக்கன்றுகளை நட்டு காற்று மாசுபடுவதை தடுக்க நம்மால் முடிந்த அளவு நாம் அனைவரும் உதவிட வேண்டும்.
தேசிய பெண் குழந்தைகள் பாதுகாப்பு தினத்தை முன்னிட்டு பெண் காவலர்களுக்கு நினைவு பரிசினை வழங்கி குழந்தைகள் மற்றும் பெண்களுக்கு ஏற்படும் பாதிப்புகள், அதிலிருந்து எவ்வாறு தற்காத்துக் கொள்வது, போக்சோ வழக்குகள் மற்றும் இலவச தொலைபேசி எண்கள்.181, 1098, ஆகியவை ஆகும் என்றார். முன்னதாக ஆயுதப்படையில் ஆண், பெண் காவலர்களுக்கு ஓய்வு அறை திறந்து வைத்தார்.
வேதாரண்யம் அருகே புஷ்பவனம் கடற்கரையில் பரவியுள்ள சேற்றால் படகில் மீன் பிடிக்க செல்லாமல் முடங்கியுள்ள மீனவர்கள் வாழ்வாதாரம் இழந்து தவித்து வருகின்றனர்.
வேதாரண்யம்:
வேதாரண்யம் தாலுகா கோடியக்கரை, மணியன்தீவு, ஆறுகாட்டுதுறை, புஷ்பவனம், வெள்ளப்பள்ளம், வாணவன் மகாதேவி உள்ளிட்ட 20 மீனவ கிராமங்கள் உள்ளன. இந்த மீனவ கிராமங்களில் 65 விசைபடகுகளும் 1400 பைபர் படகுகளும் உள்ளன. மேலும் கோடியக்கரையில் ஆண்டுதோறும் அக்டோபர் முதல் மார்ச் வரை மீன்பிடி சீசன் காலம் ஆகும்.
இந்த சீசன் காலத்தில் உள்ளூர் படகுகளுடன் வெளிமாவட்ட படகுகளும் சேர்ந்து நாள் ஒன்றுக்கு ஆயிரத்திற்கும் மேற்பட்ட படகுகள் கடலில் மீன் பிடிக்க செல்கின்றனர். ஏற்கனவே நாகை மாவட்ட கடற்கரை பகுதியில் இரட்டைமடி சுருக்கு மடிவலைகளை பயன்படுத்தி மீன்பிடிப்பதால் மீன்வளம் முற்றிலும் பாதிக்கபட்டுள்ளது. நாள்தோறும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட படகுகள் மீன்பிடிக்க செல்வதால் மீன் கிடைக்காததால் பல மீனவர்கள் மீன் பிடிக்க சென்று வெறும் கையோடு கரை திரும்புகின்றனர்.
சில மீனவர்கள் ஏதாவது மீன் கிடைக்குமா என்ற எதிர்பார்பில் இரண்டு நாள் தங்கி மீன்பிடிக்கின்றனர். அவ்வாறு தங்கி மீன்பிடிக்கும்போது இலங்கை கடற்படை, இலங்கை கடற்கொள்ளையர்கள், இலங்கை தமிழ் சிங்கள மீனவர்கள் மற்றும் இலங்கையில் உள்ள சீனா நாட்டு மீனவர்களால் தாக்கபடுகின்றனர். தினந்தோறும் தாக்குதலுக்கு ஆளாகும் மீனவர்கள் அதை வெளியில் கூறுவதில்லை.
அதற்கு காரணம் மீண்டும் மீன் பிடிக்க செல்லவேண்டும் என்ற அச்சம். தூப்பாக்கி சூடு, அரிவாள்வெட்டு பல லட்ச ரூபாய் மதிப்புள்ள பொருட்கள் கொள்ளை போனால் மட்டுமே கடலோரக் காவல் குழுமத்திற்கு தெரிவிக்கின்றனர்.
இவ்வாறு தொடர்ந்து இலங்கை கடற் கொள்ளையர் கள் கடற்படையின் தாக்குதலுக்கு ஆளாகும் மீனவர்களுக்கு மேலும் ஒரு பலத்த சோதனையாக புஷ்பவனம், வெள்ளப்பள்ளம், வாணவன்மகாதேவி உள்ளிட்ட கடற்கரைப் பகுதியில் சேறு தள்ளி உள்ளது.
இதில் அதிகப்படியாக புஷ்பவனம் கடற்கரை பகுதியில் மூன்று கிலோ மீட்டர் தூரத்திற்கு சேறு தள்ளி உள்ளது. அதனால் ஒரு மாத காலமாக மீன்பிடிக்க முடியமால் வாழ்வாதாரம் பாதித்து மிகுந்த அவதிப்படுகின்றனர். மிகுந்த சிரமத்துக்கு இடையே மீன் பிடிக்கச் சென்ற புஷ்பவனம் மீனவர்களின் படகில் இரண்டு தடவை தாக்கப்பட்டு லட்சக்கணக்கான பொருட்களை இலங்கை கடற்கொள்ளையர்கள் கொள்ளையடித்து சென்று உள்ளனர்.
கடற்படையின் தாக்குதலு க்கு ஆளாகும் மீனவர்களுக்கு மேலும் ஒரு பலத்த சோதனையாக புஷ்பவனம் கடற்கரையில் சேறுதள்ளி உள்ளது. அதனால் ஒரு மாத காலமாக பெரும்பாலான மீனவர்கள் மீன் பிடிக்க செல்லவில்லை இதனால் வாழ்வாதாரம் பாதித்து மிகுந்த அவதிப்படுகின்றனர் இந்த நிலையில் மிகுந்த சிரமத்திற்கு இடையே மீன்பிடிக்கச் சென்ற புஷ்பவனம் மீனவர்கள் படகில் இரண்டு தடவை தாக்கப்பட்டு லட்சக்கணக்கான ரூபாய் இலங்கை கடல் கொள்ளையர் களால் கொள்ளை அடிக்கப் பட்டுள்ளது. எனவே மத்திய மாநில அரசுகள் மீனவர்கள் அச்சமின்றி மீன்பிடிக்க நமது இந்திய கடலோர கப்பலை கோடியக்கரைக்கு அருகே நிறுத்தி மீனவர்கள் பாதுகாப்பாக மீன்பிடிக்க தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என மீனவர்கள் தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.
மத்திய அரசு மீனவர்களின் கோரிக் கைக்கு செவிசாய்க்காது, பாதுகாப்பு நடவடிக்கை எடுக்கத் தவறினால் மீனவர்களின் மீன்பிடி தொழில் எதிர்காலத்தில் கேள்விக்குறியாகிவிடும் என்பதில் சந்தேகமில்லை.
நேதாஜி பிறந்தநாளுக்கு பொது விடுமுறை அளிக்க வேண்டும் என்று முக்குலத்து புலிகள் கட்சி நிறுவன தலைவர் ஆறுசரவணதேவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
நாகப்பட்டினம்:
நாகை மாவட்டம் காமேஸ்வரத்தில் சுதந்திர போராட்ட வீரர்
நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் பிறந்தநாளை முன்னிட்டு அவரது
படத்துக்கு முக்குலத்து புலிகள் கட்சியின் நிறுவன தலைவர் ஆறுசரவணத்தேவர் மாலை
அணிவித்து மரியாதை செலுத்தினார்.
அப்போது அவர் கூறியதாவது:-
குடியரசு தின விழாக்கள் வழக்கமாக ஜனவரி 24 ஆம் தேதி
தொடங்கி 26-ம் தேதி வரை மத்திய அரசின் சார்பில் நடைபெறும்.
இந்த ஆண்டு குடியரசு தினவிழா நேதாஜி சுபாஷ் சந்திரபோசின்
பிறந்தநாள் அன்றே தொடங்கி ஜனவரி 26-ந்தேதி வரை
நடைபெறும் என்று அறிவித்துள்ளதை முக்குலத்து புலிகள்
கட்சியின் சார்பில் வரவேற்கிறோம்.
காந்தி ஜெயந்தி அன்று தேசம் முழுவதும் பொது விடுமுறையாக
அளிப்பது போல் நேதாஜியின் பிறந்தநாளுக்கும் தேசம் முழுவதும்
பொது விடுமுறை அளிக்க வேண்டும்.
மேலும் அவரது பிறந்தநாளன்று அவரது படைப்பிரிவில்
இருந்த முன்னாள் ஐ.என்.ஏ வீரர்கள் மற்றும் நேதாஜி
தொடங்கிய பார்வர்டு பிளாக் கட்சியின் முதுபெரும்
தலைவர்கள் கவுரவிக்கப்பட வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
இந்நிகழ்வில் முக்குலத்து புலிகள் கட்சி நிர்வாகிகள்
ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
தமிழக கடல் பகுதிக்குள் இலங்கை கடற்கொள்ளையர்கள் அத்துமீறி நுழைந்து மீனவர்களை தாக்கி பொருட்களை கொள்ளையடித்து செல்லும் சம்பவம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
வேதாரண்யம்:
நாகை மாவட்டம் வேதாரண்யம் அடுத்த புஷ்பவனம் பகுதியை சேர்ந்த நாகமணி என்பவருக்கு சொந்தமான பைபர் படகில் அதே ஊரைச் சேர்ந்த நாகமுத்து (வயது 44), பன்னீர்செல்வம் (48), ராஜேந்திரன் (54) ஆகிய 3 மீனவர்கள் இன்று அதிகாலை வேதாரண்யம் அடுத்த கோடியக்கரைக்கு தென் கிழக்கே மீன்பிடித்து கொண்டிருந்தனர்.
அப்போது அங்கு படகில் வந்த இலங்கை கடற்கொள்ளையர்கள் தமிழக மீனவர்கள் படகில் அத்துமீறி ஏறினர்.
அதிர்ச்சியடைந்த தமிழக மீனவர்கள் படகை விட்டு இறங்குங்கள் என கூறினர். திடீரென இலங்கை கடற்கொள்ளையர்கள் நாகமுத்து, பன்னீர்செல்வம், ராஜேந்திரன் ஆகியோரை கம்பு, இரும்புகம்பியால் சரமாரியாக தாக்கி அவர்களை கடலுக்குள் தூக்கி வீசினர்.
பின்னர் படகில் இருந்த 200 கிலோ வலை, ஜி.பி.எஸ். கருவி, வாக்கிடாக்கி செல்போன், டீசல் உள்ளிட்ட ரூ.1 லட்சம் மதிப்புள்ள பொருட்களை கொள்ளையடித்து தப்பி சென்றனர்.
இதற்கிடையே காயத்துடன் கடலில் தத்தளித்த நாகமுத்து உள்ளிட்ட 3 பேரும் போராடி நீந்தி கொண்டிருந்தனர். இதனை பார்த்த சக மீனவர்கள் உடனடியாக தாங்கள் வந்த படகில் 3 பேரையும் ஏற்றி கொண்டு ஆறுகாட்டுத்துறை கடற்கரைக்கு வந்தனர்.
இதையடுத்து 108 ஆம்புலன்சை வரவழைத்து வேதாரண்யம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இது குறித்த புகாரின் பேரில் வேதாரண்யம் கடலோர காவல் குழும போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
தமிழக கடல்பகுதிக்குள் இலங்கை கடற்கொள்ளையர்கள் அத்துமீறி நுழைந்து மீனவர்களை தாக்கி பொருட்களை கொள்ளையடித்து செல்லும் சம்பவம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இலங்கை கடற்கொள்ளையர்களின் அட்டூழியத்துக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்று தமிழக மீனவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
நாகை மாவட்டம் வேதாரண்யம் அடுத்த புஷ்பவனம் பகுதியை சேர்ந்த நாகமணி என்பவருக்கு சொந்தமான பைபர் படகில் அதே ஊரைச் சேர்ந்த நாகமுத்து (வயது 44), பன்னீர்செல்வம் (48), ராஜேந்திரன் (54) ஆகிய 3 மீனவர்கள் இன்று அதிகாலை வேதாரண்யம் அடுத்த கோடியக்கரைக்கு தென் கிழக்கே மீன்பிடித்து கொண்டிருந்தனர்.
அப்போது அங்கு படகில் வந்த இலங்கை கடற்கொள்ளையர்கள் தமிழக மீனவர்கள் படகில் அத்துமீறி ஏறினர்.
அதிர்ச்சியடைந்த தமிழக மீனவர்கள் படகை விட்டு இறங்குங்கள் என கூறினர். திடீரென இலங்கை கடற்கொள்ளையர்கள் நாகமுத்து, பன்னீர்செல்வம், ராஜேந்திரன் ஆகியோரை கம்பு, இரும்புகம்பியால் சரமாரியாக தாக்கி அவர்களை கடலுக்குள் தூக்கி வீசினர்.
பின்னர் படகில் இருந்த 200 கிலோ வலை, ஜி.பி.எஸ். கருவி, வாக்கிடாக்கி செல்போன், டீசல் உள்ளிட்ட ரூ.1 லட்சம் மதிப்புள்ள பொருட்களை கொள்ளையடித்து தப்பி சென்றனர்.
இதற்கிடையே காயத்துடன் கடலில் தத்தளித்த நாகமுத்து உள்ளிட்ட 3 பேரும் போராடி நீந்தி கொண்டிருந்தனர். இதனை பார்த்த சக மீனவர்கள் உடனடியாக தாங்கள் வந்த படகில் 3 பேரையும் ஏற்றி கொண்டு ஆறுகாட்டுத்துறை கடற்கரைக்கு வந்தனர்.
இதையடுத்து 108 ஆம்புலன்சை வரவழைத்து வேதாரண்யம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இது குறித்த புகாரின் பேரில் வேதாரண்யம் கடலோர காவல் குழும போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
தமிழக கடல்பகுதிக்குள் இலங்கை கடற்கொள்ளையர்கள் அத்துமீறி நுழைந்து மீனவர்களை தாக்கி பொருட்களை கொள்ளையடித்து செல்லும் சம்பவம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இலங்கை கடற்கொள்ளையர்களின் அட்டூழியத்துக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்று தமிழக மீனவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதையும் படியுங்கள்...இந்தியாவில் சமூக தொற்றாக மாறிய ஒமைக்ரான் பாதிப்பு: மத்திய அரசு






