என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    வண்ண விளக்குகளால் ஜொலிக்கும் தலைமை தபால் நிலையம்.
    X
    வண்ண விளக்குகளால் ஜொலிக்கும் தலைமை தபால் நிலையம்.

    வண்ண விளக்குகளால் ஜொலிக்கும் 165 ஆண்டுகள் பழமையான நாகை தலைமை அஞ்சல் நிலையம்

    165 ஆண்டுகள் பழமையான நாகை தலைமை அஞ்சல் நிலையம் வண்ண விளக்குகள் அலங்காரத்தில் ஜொலிக்கிறது.
    நாகப்பட்டினம்:

    நாகப்பட்டினம் தலைமை தபால் நிலையம் 1857&ம் ஆண்டு டச்சுக்காரர்கள் காலத்தில் கட்டப்பட்டது. 

    அப்போது கலையரங்கம் ஆக திகழ்ந்த இடம் ஆங்கிலேயர்கள் ஆட்சிக் காலத்தில் ரெயில்வே துறையின் கட்டுப்பாட்டில் இருந்து வந்த நிலையில் 
    1933-ம் ஆண்டில் நாகப்பட்டினம் தலைமை தலைமை அஞ்சல் நிலையம் 
    ஆக மாற்றப்பட்டது.

    165 ஆண்டுகள் பழமை வாய்ந்த நாகை தலைமை தபால் நிலைய கட்டிடம் விளக்குகளால் ஜொலித்து காணப்படுகிறது. 

    165 ஆண்டு காலத்தை கடந்து கம்பீரமாக நிற்கும் நாகை தலைமை தபால் நிலையத்தில் பணியாற்றும் அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் மகிழ்ச்சியில் இருந்து வருகின்றனர்.

    தேசியக்கொடியின் வண்ணத்தில் தலைமை தபால் நிலையம் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு இரவு நேரங்களில் ஜொலிக்கிறது.
    Next Story
    ×