என் மலர்
உள்ளூர் செய்திகள்

தேர்பவனி
புனித செபஸ்தியார் கோவில் பெரிய தேர் பவனி
வேளாங்கண்ணி புனித செபஸ்தியார் கோவில் பெரிய தேர் பவனி நடைபெற்றது
நாகப்பட்டினம்:
வேளாங்கண்ணி பேராலத்தின் உபகோவிலான பழைமை வாய்ந்த புனித செபஸ்தியார் கோவிலில் ஆண்டுப் பெருவிழா கடந்த 20&ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.
விழாவின் முக்கிய நிகழ்ச்சியான பெரிய தேர்பவனி நடைபெற்றது. முன்னதாக கோவிலில் வேளாங்கண்ணி பேராலய பங்கு தந்தை அற்புதராஜ் அடிகளார் தலைமையில் சிறப்பு திருப்பலி, கூட்டுப்பாடல் பிரார்த்தனை, உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
அதனை தொடர்ந்து மின் விளக்குகளால் அலங்கரிகக்ப்பட்ட சப்பரத்தில் ஆண்டுதோறும் மூன்று சொரூபங்கள் செல்லும் நிலையில் இந்த ஆண்டு கொரோனா பரவல் காரணமாக செபஸ்தியார் 1 சொரூபம் மட்டுமே எழுந்தருளிய தேரை புனித நீர் தெளிக்கப்பட்டு முக்கிய வீதிகள் வழியாக எளிய முறையில் சென்ற தேர்பவனியில் குறைவான பக்தர்களே பங்கேற்று தரிசனம் செய்தனர்.
அதனைதொடர்ந்து தப்பாட்டமும் நடைபெற்றது. எழுச்சி ஏற்பாடுகளை கத்தோலிக்க முக்குலத்தோர் சமூகத்தினர் செய்திருந்தனர்.
Next Story






