என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    விழாவில் கலெக்டர் அருண்தம்புராஜ் தேசியக்கொடி ஏற்றி வைத்து போலீசாரின் அணிவகுப்பை பார்வையிட்டார்.
    X
    விழாவில் கலெக்டர் அருண்தம்புராஜ் தேசியக்கொடி ஏற்றி வைத்து போலீசாரின் அணிவகுப்பை பார்வையிட்டார்.

    நாகப்பட்டினத்தில் 73-வது குடியரசு தினவிழா கொண்டாட்டம்

    நாகை மாவட்ட விளையாட்டு மைதானத்தில் நடைபெற்ற குடியரசு தின விழாவில் கலெக்டர் அருண் தம்புராஜ் தலைமை தாங்கி, தேசிய கொடி ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார்.
    நாகப்பட்டினம்

    நாகை மாவட்ட விளையாட்டு மைதானத்தில் நடைபெற்ற குடியரசு தின விழாவில் கலெக்டர் அருண் தம்புராஜ் தலைமை தாங்கி, தேசிய கொடி ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார். பின்னர் காவல்துறை, ஊர்க்காவல் படையினரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார்.

    விழாவில் சுதந்திர போராட்ட தியாகிகள் கவுரவிக்கப்பட்டனர். அதேபோல் சிறப்பாக பணியாற்றிய காவல்துறை,  வேளாண்மைத்துறை அலுவலர்கள், நகராட்சி நிர்வாக அலுவலர்கள் மற்றும் பல்வேறு துறைகளை சேர்ந்த அலுவலர்களுக்கு பாராட்டு சான்றிதழ் வழங்கப்பட்டது.

    தொடர்ந்து பல்வேறு துறைகள் சார்பில் 54 பயனாளிகளுக்கு   
    ரூ.1 கோடியே 2 லட்சத்து 61  மதிப்பீட்டிலான நலத்திட்ட உதவிகளை வழங்கினார். 

    நிகழ்ச்சியில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜவஹர், ஆதிதிராவிடர் வீட்டுவசதி மேம்பாட்டு கழகத் தலைவர் மதிவாணன் 
    உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
    Next Story
    ×