என் மலர்
உள்ளூர் செய்திகள்

கோப்புப்படம்.
வேதாரண்யம் பகுதியில் நாளை மின் நிறுத்தம்
வேதாரண்யம் பகுதியில் நாளை சனிக்கிழமை மின்சாரம் நிறுத்தப்படுகிறது.
வேதாரண்யம்:
வேதாரண்யம் தாலுகா வாய்மேடு, ஆயக்காரன்புலம் ஆகிய துணை மின் நிலையங்களில் நாளை (சனிக்கிழமை) பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது.
எனவே நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை இந்த இரு துணைமின் நிலையங்களில் இருந்து மின் வினியோகம் பெறும் வாய்மேடு, ஆலங்காடு, கரியாப்பட்டினம், ஆயக்காரன்புலம், கருப்பம்புலம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் மின் வினியோகம் இருக்காது.
மேற்கண்ட தகவலை வேதாரண்யம் உதவி செயற்பொறியாளர் ரவிக்குமார் தெரிவித்துள்ளார்.
Next Story






