என் மலர்
நாகப்பட்டினம்
திருப்புகலூர் ஊராட்சியை சேர்ந்த மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு தேனீ வளர்ப்பு குறித்த பயிற்சி அளிக்கப்பட்டது.
நாகப்பட்டினம்:
நாகை மாவட்டம் திருமருகல் ஒன்றியம் திருப்புகலூர்
ஊராட்சியை சேர்ந்த மகளிர் குழு உறுப்பினர்களுக்கு
தேனீ வளர்ப்பு குறித்து பயிற்சி அளிக்கப்பட்டது.
இதில் 50-க்கும் மேற்பட்ட மகளிர் குழுவினர் கலந்து கொண்டனர்.
பயிற்சிக்கு ஊராட்சி மன்றத் தலைவர் கார்த்திகேயன்
தலைமை வகித்தார்.
திருவாரூர் வனம் தன்னார்வ அமைப்பின் நிறுவனர் கலைமணி
முன்னிலை வகித்தார்.
இதில் புதுச்சேரி யாழ் தேனீ பயிற்சி மைய நிர்வாகிகள் விஜயகுமார், உதயகுமார், திருமருகல் வட்டார வேளாண்மை உதவி இயக்குனர் கலைச்செல்வன் ஆகியோர் ஆலோசனை வழங்கினர்.
இதில் ஊராட்சி மன்ற துணைத் தலைவர் சுந்தரி கிருஷ்ணமூர்த்தி,
ஊராட்சி செயலாளர் ஜெய்சங்கர், திருக்கண்ணபுரம் தொடக்க
வேளாண்மை கூட்டுறவு வங்கி தலைவர் ரவிக்குமார்
உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
வேதாரயண்யத்தில் கிராம நிர்வாக அலுவலர்கள் சங்க பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது.
வேதாரண்யம்:
வேதாரண்யம் அடுத்த தோப்புத்துறையில் தமிழ்நாடு கிராம
நிர்வாக அலுவலர் சங்க பொதுக்குழு கூட்டம், புதிய
நிர்வாகிகளுக்கு பாராட்டு விழா நடைபெற்றது. கூட்டத்திற்கு
சங்க மாநிலத் தலைவர் ராஜேந்திரன் தலைமை வகித்தார்.
நாகை மாவட்ட தலைவர் ரங்கநாதன், செயலாளர் செல்வம்,
மயிலாடுதுறை மாவட்ட தலைவர் பாலச்சந்திரன்,
செயலாளர் மாரிமுத்து, பொருளாளர் ஜெயபிரகாஷ்,
வேதாரண்யம் பகுதி கிராம நிர்வாக அலுவலர்கள்
ரங்கநாதன், ஐயப்பன், உதயகுமார், முன்னாள் அலுவலர்கள் ராதாகிருஷ்ணன், மங்களதாஸ், நாகூரான், சுந்தர்ராஜன்
உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து
பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த கோரியும்,
வருவாய் நிர்வாகம் முழுமையாக கணினி மயமாக்கப்பட்டு
வருவதால் கால சூழ்நிலைக்கு ஏற்ப கிராம நிர்வாக
அலுவலரின் அடிப்படை கல்வித்தகுதி பட்டப்படிப்பு ஆக உயர்த்த வேண்டும்.
மக்கள் தொகைக்கு ஏற்ப கிராமங்களின் எல்லைகளை
வரையறை செய்து புதிய கிராமங்களை உருவாக்க வேண்டும்.
கிராம நிர்வாக அலுவலர்களின் வட்ட தேர்தலை
பிப்ரவரி மாதத்திலும், மாவட்ட தேர்தல் மார்ச் மாதத்திலும்
நடத்தப்படும்.
மே மாதம் வேதாரண்யத்தில் சங்க மாநில மாநாடு நடத்துவது
உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
நாகை அருகே அதிகாரிகளிடம் மனு அளித்தும் நடவடிக்கை எடுக்காததால் கிராம மக்களே சாலையை சீரமைத்தனர்.
நாகப்பட்டினம்:
நாகப்பட்டினம் மாவட்டம், கீழையூர் அடுத்துள்ள ஈசனூர் ஊராட்சி
வழியாக கீழையூர் முதல் திருக்குவளை வரை செல்லும் சாலை உள்ளது.
இந்த சாலையானது கடந்த ஆண்டு அமைக்கப்பட்ட நிலையில்,
கிட்டத்தட்ட 200 மீட்டர் நீளமுள்ள சாலை மட்டும் அமைக்கப்படாமல் அதற்கான நிதி இல்லை என கிடப்பிலேயே போடப்பட்டுள்ளது.
இந்த நிலையில் சாலை மிகவும் பழுதடைந்து குண்டும் குழியுமாக
காட்சி அளிப்பதோடு, ஆபத்து ஏற்படுத்தும் பள்ளங்களும்
நிறைந்து இருந்தன.
இதனால் இவ்வழியே செல்லும் விவசாயிகள் மற்றும் பள்ளி கல்லூரி மாணவர்கள் என பலதரப்பட்டவர்களும் கடுமையாக பாதிப்புக்குள்ளாகி வந்தனர். மேலும் இந்த சாலையை சீரமைக்க வேண்டும் என
இப்பகுதி கிராம மக்கள் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு
பலமுறை மனு அளித்தும் எந்தவித நடவடிக்கையும் இல்லை.
இந்நிலையில் கிராம மக்கள் மற்றும் இளைஞர் மன்றத்தை சேர்ந்த இளைஞர்கள் ஒன்றிணைந்து டிராக்டர் மூலமாக 3 டிப்பர்
சிறு செங்கற்கள் கொண்டு சாலையிலுள்ள பள்ளங்களை மூடி
தற்காலிகமாக சீரமைத்துள்ளனர்.
இந்நிலையில் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நேரடி ஆய்வு
மேற்கொண்டு தார் சாலையாக அமைத்து தரவேண்டும் என்ற கோரிக்கையை பொதுமக்கள் முன் வைத்துள்ளனர்.
உடன் சீரமைக்கப்படாத பட்சத்தில் கிராம மக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட போவதாக கூறியுள்ளனர்.
நாகையில் நெடுஞ்சாலைத்துறை சாலை பணியாளர்கள் சங்க கூட்டம் நடந்தது.
நாகப்பட்டினம்:
தமிழ்நாடு நெடுஞ்சாலைத்துறை சாலைப் பணியாளர்கள் சங்க கூட்டம் நாகையில் மாவட்டத் தலைவர் கணேசன் தலைமையில் நடைபெற்றது. துணைச் செயலாளர் முருகேசன் வரவேற்றார்.
கீழ்வேளூர் வட்டத் தலைவர் பாலமுரளி துவக்கவுரையாற்றினார்.
மாவட்டச் செயலாளர் உதயகுமார் வேலை அறிக்கையும், பொருளாளர் ரவிச்சந்திரன் வரவு செலவு அறிக்கையும் சமர்ப்பித்தனர்.
புள்ளியியல் சார்நிலை அலுவலர் சங்க மாநிலத் தலைவர்
அந்துவன்சேரல், அரசு ஊழியர் சங்க நாகை வட்டத் தலைவர்
ரவிச்சந்திரன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.
மாநிலச் செயலாளர் பழனிசாமி சிறப்புரையாற்றினார்.
புதிய மாவட்ட நிர்வாகிகளாக கணேசன் (தலைவர்), ரவி
மற்றும் ஐயப்பன் (துணைத் தலைவர்கள்), உதயகுமார் (செயலாளர்),
ரஞ்சித் குமார் மற்றும் முருகேசன் (துணைச் செயலாளர்கள்),
ரவிச்சந்திரன் (பொருளாளர்) மற்றும் ராஜேந்திரன்,
அசோக்குமார் (தணிக்கையாளர்கள்) ஆகியோர் தேர்வு
செய்யப்பட்டனர்.
நெடுஞ்சாலைகளை பராமரிக்க 5 கி.மீட்டருக்கு
2 சாலைப் பணியாளர்கள் என பணியிட ஒப்புதல் வழங்கி
கிராமப்புற இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்க வேண்டும்,
சாலைப் பணியாளர்களுக்கு தொழில்நுட்ப கல்வித் திறன் பெறாத ஊழியர்களுக்கு இணையாக வழங்க வேண்டும் என்பது
உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
அரசு ஊழியர் சங்க மாவட்டச் செயலாளர்
அன்பழகன் நிறைவுரையாற்றினார்.
நாகை வட்டச் செயலாளர் ரமேஷ் நன்றி கூறினார்.
வேதாரண்யத்தில் பக்தர்கள் தை அமாவாசைக்கு புனித நீராட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.
வேதாரண்யம்:
வேதாரண்யத்தில் பழமை வாய்ந்த வேதாரண்யேஸ்வரர் கோயில் அமைந்துள்ளது. இந்த கோவில் மூர்த்தி, தலம், தீர்த்தம் ஆகிய மூன்றிலும் சிறப்புடையது.
அகத்திய முனிவருக்கு சிவபெருமான் தம்பதி சமேதரராய் காட்சி கொடுத்த தலம். வேதங்கள் பூஜித்து மூடி கிடந்த கதவை அப்பரும், சம்மந்தரும் தேவார திருப்பதிகங்கள் பாடி கதவை திறந்ததாக வரலாறு.
இந்த திருத்தலத்தில் ஆடி, தை, மகாலய, மகோதய, அர்த்தோதய அமாவாசை போன்ற புண்ணியக் காலங்களில் ஏராளமான பக்தா¢கள் இங்கு வந்து கோடியக்கரை ஆதிசேது சித்தர் கட்டத்தில் புனித நீராடி பின்னர் வேதாரண்யம் சன்னதி கடலுக்கு வந்து புனித நீராடி மறைந்த மூதாதையர்களுக்கு திதி கொடுத்து வழிபாடு செய்வது வழக்கம்.
இந்த ஆண்டு தை அமாவாசை நாளை 31.1.22 வருகிறது. அதனை தொடர்ந்து பக்தர்கள் புனித நீராடவும், சாமி தரிசனம் செய்யவும் வருவாய்த்துறை, நகராட்சி, காவல் துறை, உள்ளாட்சி அமைப்புகள் கொரோனா கட்டுபாட்டை அனுசரித்து பக்தர்கள் சென்று வர விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது.
புனித நீராட வரும் பக்தர்கள் முககவசம் அணிந்து, சமூக இடைவெளி கடைபிடித்து நடக்க வேண்டுமென அனைத்துத் துறை அதிகாரிகளும் அறிவுரை வழங்கி வருகிறார்கள்.
திருவாரூர் அருகே இடப்பிரச்சினையால் சகோதரர்களிடையே ஏற்பட்ட மோதலில் 12 பேர் கைது செய்யப்பட்டனர்.
திருவாரூர்:
திருவாரூர் அருகே மேல எருக்காட்டூரைச் சேர்ந்தவர் அசோகன் (வயது 65). இவர் வேலூரில் உள்ள திருவள்ளுவர் பல்கலைக் கழக பதிவாளராக இருந்து ஓய்வு பெற்றவர். இவரது சகோதரர் அன்பழகன் (61).
இருவரும் எருக்காட்டூரில் விவசாயம் செய்து வருகின்றனர். இவர்களுக்குள் இடப் பிரச்சினை காரணமாக முன்விரோதம் இருந்து வருகிறது.
இந்நிலையில் அசோகன் தனக்கு சொந்தமான இடத்தில் இரும்பு முள்வேலி வைத்துள்ளார். அதனை அன்பழகன் தனது உறவினர்கள் மற்றும் நண்பர்களோடு வந்து சேதப்படுத்தியுள்ளார்.
இதில் இரு தரப்புக்கும் தகராறு தாக்கிக் கொண்டனர். இதுகுறித்து அசோகன் கொரடாச்சேரி போலீசில் புகார் அளித்தார். அதுபோல் அன்பழகனும் புகார் அளித்துள்ளார்.
அவர்களது புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து அசோகன் கொடுத்த புகாரின் பேரில் அன்பழகன் உள்ளிட்ட 12 பேர் மீதும், அன்பழகன் கொடுத்த புகாரின் பேரில் அசோகன் உள்ளிட்ட 7 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்தனர்.
அசோகன் புகாரின் பேரில் அன்பழகன் (61), வீரக்குமார் (52), ராஜசேகர் (56), ராபர்ட் (26), முருகுபாண்டி (22), கண்ணப்பன் (35), ராமன் (22), ஐயப்பன் (41) முனியாண்டி (76), குணா (48) ஆகிய 10 பேரை கைது செய்தனர்.
மேலும் ராகுல்காந்தி, பசுபதி ஆகிய இருவரையும் தேடி வருகின்றனர். அன்பழகன் புகாரின் பேரில் அசோகன் (65), ரமேஷ் (50) ஆகிய இருவரை கைது செய்தனர். முருகேசன், ராஜா, ரேணுகாதேவி, ஹேமா, சுதர்சன் ஆகிய 5 பேரை தேடி வருகின்றனர்.
வேதாரண்யத்தில் சுரங்கபாதை அமைக்கக்கோரி கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.
வேதாரண்யம்:
நாகை மாவட்டம் வேதாரண்யத்தில் இருந்து திருத்துறைப்பூண்டி வரை புதிய அகல ரயில்பாதை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.
அந்த வழியில் செண்பகராயநல்லூர் சனிசந்தை - மருதூர் இணைப்பு சாலையில் சுரங்க பாதை அமைக்க கோரி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இப்பகுதியில் வசிக்கும் விவசாயிகள், விவசாய தொழிலாளர்கள், பள்ளி கல்லூரி மாணவர்கள், பொதுமக்கள் அந்த பாதை வழியாக தான் செல்லவேண்டியுள்ளது. மேலும் இறந்தவர்களின்
உடலை அவ்வழியாக தான் மயானத்திற்கு எடுத்து செல்லவேண்டியுள்ளது.
எனவே பொதுமக்களின் நலன் கருதி அந்த பாதையில் சுரங்கபாதை அமைத்து தரவேண்டும் என அப் பகுதி மக்கள் ரயில்வே நிர்வாகத்திற்கு பலமுறை கோரிக்கை வைத்தும் நாகை மாவட்ட கலெக்டர் அருண் தம்புராஜ் பரிந்துரை செய்தும் இதுவரை சுரங்கபாதை அமைக்கும் பணி துவங்கப்படவில்லை.
இதனை கண்டித்து கரியாப்பட்டினம் ரயில் நிலையம் அருகே செல்வராஜ் எம்.பி தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்திய கம்யூனிஸ்ட் ஒன்றிய செயலாளர் சிவகுரு பாண்டியன் திமுக ஒன்றிய துணைச் செயலாளர் கோவிந்தராஜ், காங்கிரஸ் கருணாநிதி, பஞ். தலைவர் கல்யாணி, முன்னாள் தலைவர் ராஜசிம்மன், மாவட்ட கவுன்சிலர் சோழன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
நாகை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்த உள்ளதாக அரசு ஊழியர் சங்கத்தினர் கூறியுள்ளனர்.
நாகப்பட்டினம்:
தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க நாகப்பட்டினம் மாவட்டச் செயற்குழு நாகப்பட்டினம் அரசு ஊழியர் சங்க கூட்ட அரங்கில் மாவட்டத் தலைவர் ராணி தலைமையில் நடைபெற்றது.
நாகப்பட்டினம், கீழ்வேளூர் மற்றும் வேதாரண்யம் ஆகிய மூன்று வட்டங்களில் இருந்து நிர்வாகிகள் மற்றும் மாவட்ட நிர்வாகிகள் பங்கேற்றனர். மாவட்டச் செயலாளர் அ.தி.அன்பழகன் வேலை அறிக்கையை சமர்ப்பித்தார்.
மாநிலச் செயற்குழு உறுப்பினர் அற்புதராஜ் ரூஸ்வெல்ட் மாநிலச் செயற்குழு நடவடிக்கைகள் மற்றும் முடிவுகள் குறித்து எடுத்துரைத்தார்.
மாநில முடிவின்படி நாகை கலெக்டர் அலுவலக வளாகம், நீதிமன்ற வளாகம் மற்றும் அரசு மருத்துவக கல்லூரி ஆகியவற்றில் வளாக கிளைகள் ஏற்படுத்துவது.
ஊரக வளர்ச்சித்துறை மகளிர் திட்டத்தில் உதவி திட்ட அலுவலர்களாக பணிபுரிபவர்களுக்கு, ஒப்பந்த நீட்டிப்பு செய்யவில்லை.
இதே நிலை ஏனைய மாவட்டங்களில் இருக்கும்போது, அங்கெல்லாம் ஊதியம்
வழங்கப்பட்டு விட்டது என்பது தெரிந்தும், நாகப்பட்டினம் மாவட்ட தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாவட்ட நிர்வாகிகள் மாவட்ட திட்ட இயக்குநரை நேரில் சந்தித்து பேசியும், உதவித் திட்ட அலுவலர்கள் 3 பேருக்கு பணிசெய்த நாட்களுக்கு உரிய ஊதியத்தை 4 மாதங்களுக்கும் மேலாக வழங்கப்படாமல் இருப்பதற்கு கண்டனத்தை தெரிவிப்பது.
மாநில மகளிர் திட்ட இயக்குநர் மற்றும் கலெக்டர் உடனடியாக தலையிட்டு உதவி திட்ட அலுவலர்கள் அனைவருக்கும் பணி செய்த நாட்களுக்கு உரிய ஊதியத்தை வழங்க வேண்டும்.
தவறும்பட்சத்தில் மார்ச் 15-ந்தேதி நாகை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்துவது என்று தீர்மானிக்கப்பட்டது.
மாநிலச் செயலாளர் டேனியல் ஜெயசிங் சிறப்புரையாற்றினார். மாவட்ட மகளிர் துணைக்குழு அமைப்பாளர் சித்திரா நன்றி கூறினார்.
நாகை அருகே கடற்கரை பகுதியில் 5 ஏக்கரில் மாப்பிள்ளை சம்பா சாகுபடி செய்து பட்டதாரி இளைஞர் சாதனை படைத்துள்ளார்.
நாகப்பட்டினம்:
நாகப்பட்டினம் மாவட்டம், வேளாங்கண்ணியை அடுத்த
விழுந்தமாவடி சேர்ந்தவர் வேதையன் இவரது மகன்
அலைஅருண். எம்.பி.ஏ பட்டதாரி.
இவருக்கு காமேஸ்வரம் ஊராட்சி தாண்டவமூர்த்திகாடு
கடலோர பகுதியில் 5 ஏக்கர் நிலம் உள்ளது. சுனாமியால்
அப்பகுதியில் கடல்நீர் உட்புகுந்து உவர் நிலமாக இருந்த
நிலையில் சென்ற ஆண்டு நவீன ரக நெல்லை சோதனை
முறையில் சாகுபடி செய்துள்ளார்.
சரிவர விளைச்சல் இல்லாத நிலையில் தனது தாத்தா
ஆலோசனைப்படி பாரம்பரிய நாட்டுரகமான 180 நாட்கள் கொண்ட
வெள்ளம் வறட்சியைத் தாங்கி வளரக்கூடியதும் ஆளுயர 7 அடி வரை
வளரக் கூடிய மாப்பிள்ளை சம்பா சாகுபடியை உரம், பூச்சிக்கொல்லி
மருந்து தெளிக்காமல் எந்தவித ரசாயனமும் கலக்காமல்
இயற்கையான முறையில் 5 ஏக்கரில் சோதனை முறையில்
சாகுபடி செய்தார். தற்போது அறுவடைக்கு தயாராக உள்ளது.
விவசாயத்தில் ஆர்வம் கொண்ட அலைஅருண் கூறியதாவது:-
பாரம்பரிய நெல் ரகங்களான மாப்பிள்ளை சம்பா, தூயமல்லி,
பனங்காட்டு குடவாழை, நேபாள சீரகசம்பா, வெள்ளைப் பொன்னி, கொத்தமல்லி சம்பா, பிசினி, சீரக சம்பா, அறுபதாம் குறுவை, குழியடிச்சான்.கருப்பு கவுனிஉள்ளிட்ட நெல் ரகங்களை மீட்டெடுக்கும் வகையிலும் இளைஞர்களுக்கு ஒரு முன்னுதாரணமாகவும் இருக்கவேண்டுமென என்பதற்காகவும் பாரம்பரிய நெல் ரகங்களை சேகரித்து வருவதாகவும்.அடுத்த ஆண்டு பல்வேறுநெல் ரகங்களை
சாகுபடி செய்ய உள்ளதாகவும், இது தனக்கு மனமகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளதாகவும் தெரிவித்தார்.
தமிழக அரசு ஊக்குவித்து மானியத்தில் பாரம்பரிய நெல் ரகங்களை விவசாயிகளுக்கு வழங்க வேண்டுமெனவும் விவசாயிகளும்
பாரம்பரிய நெல் ரகங்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து
மேன்மைப்படுத்த வேண்டுமெனவும் அவர் கோரிக்கை விடுத்தார்.
நாகை இ.ஜி.எஸ் பிள்ளை கல்லூரியில் நடந்த வாக்காளர் தின விழிப்புணர்வு நிகழ்ச்சியில் வெற்றி பெற்ற மாணவருக்கு கலெக்டர் பரிசு வழங்கினார்.
நாகப்பட்டினம்:
நாகை இ.ஜி.எஸ். பிள்ளை பொறியியல் கல்லூரியில் 12-வது வாக்காளர் தின விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சியில் பேராசிரியர்கள் வாக்காளர் தின உறுதி மொழி ஏற்றனர்.
கல்லூரியில் நடைபெற்ற போஸ்டர் மேக்கிங் நிகழ்ச்சியில் வெற்றி பெற்ற மாணவருக்கு கலெக்டர் அலுவலகத்தில் கலெக்டர் அருண் தம்புராஜ் பரிசு வழங்கினார்.
இதில் சான்றிதழ் பெற்ற மாணவர் கெ.பிரணேஷை கல்லூரியின் கல்விக் குழுமத் தலைவர் எஸ்.ஜோதிமணி அம்மாள், செயலர் எஸ். பரமேஸ்வரன், அறக்கட்டளை உறுப்பினர் அருள்பிரகாஷம், சங்கர் கணேஷ், முதன்மை செயல் அலுவலர் சந்திரசேகர், இயக்குனர் விஜயசுந்தரம், கல்லூரி முதல்வர் முனைவர் எஸ்.ராமபாலன், தேர்வு நெறியாளர் முனைவர் சின்னதுரை, நாட்டு நலப்பணி திட்ட அலுவலர் முனைவர் வே.சிவராமகிருஷணன், பைன் ஆர்ட்ஸ் ஒருங்கிணைப்பாளர் சி.மல்லிகா, முனைவர் கார்த்திக், முனைவர் வி. சிவராமன் மற்றும் பேராசிரியர்கள் பாராட்டினர்.
திருமருகல் அருகே நேரடி கொள்முதல் நிலையங்களில் ஆன்லைன் முறையை ரத்து செய்யக்கோரி விவசாயிகள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
நாகப்பட்டினம்:
நாகை மாவட்டம் திருமருகல் ஒன்றியம் மேலப்பூதனூர் அரசு கொள்முதல் நிலையங்களில் ஆன்லைன் முறையை ரத்து செய்ய வலியுறுத்தி விவசாயிகள் திருமருகல்-கங்களாஞ்சேரி சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதற்கு முன்னாள் திருமருகல் ஒன்றியக்குழு தலைவர் சந்திரசேகரன் தலைமை வகித்தார்.
இதில் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் ஆன்லைன் முறையை ரத்து செய்துவிட்டு பழைய முறைப்படி நெல்லை கொள்முதல் செய்ய வேண்டும்.
அரசு அறிவித்தபடி நாள் ஒன்றுக்கு 1000 மூட்டைகள் கொள்முதல் செய்யப்பட வேண்டும், வெளி மாவட்ட நெல் கொள்முதல் செய்யபடுவதை தடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.
தகவல் அறிந்து அங்கு வந்த திருக்கண்ணபுரம் போலீஸ் சப்&இன்ஸ்பெக்டர் இங்கர்சால், சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் கண்ணதாசன், மேலப்பூதனூர் கிராம நிர்வாக அலுவலர் வீரகுமார், கீழத்தஞ்சாவூர் கிராம நிர்வாக அலுவலர் ராஜேஸ்குமார் ஆகியோர் மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டு பின்னர் அனைவரும் அங்கிருந்து கலைந்து சென்றனர். இதனால் திருமருகல்-கங்களாஞ்சேரி சாலையில்
சுமார் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
வேதாரண்யத்தில் இல்லம் தேடி கல்வி மைய மாணவர்களுக்கு மாறுவேட போட்டி
வேதாரண்யம்:
தமிழகத்தில் கொரோனா தொற்று பரவல் காரணமாக பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ள நிலையில் மாணவ-மாணவிகள் வீட்டிலிருந்தே கல்வி கற்க தமிழக அரசு இல்லம் தேடி கல்வி மையத்தை தொடங்கியுள்ளது.
இல்லம் தேடி கல்வி மையத்தில் மாணவர்களிடையே புத்துணர்ச்சியை ஏற்படுத்தும் விதமாக குடியரசு தினத்தை முன்னிட்டு வேதாரண்யம் அடுத்த வடமழை ரஸ்தாவில் பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டடது.
மாறுவேடப்போட்டி, திருக்குறள் போட்டி, ஓவிய போட்டி, கலை நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு போட்டிகளில் பங்கு பெற்ற அனைவருக்கும் பரிசுகளை இல்லம் தேடி கல்வி மையத்தின் ஆசிரியை கோகிலா வழங்கினார்.
இதில் மாணவர்கள் மற்றும் பெற்றோர் கலந்து கொண்டனர்.






