search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மாறுவேட போட்டி நடந்தது.
    X
    மாறுவேட போட்டி நடந்தது.

    மாணவர்களுக்கு மாறுவேட போட்டி

    வேதாரண்யத்தில் இல்லம் தேடி கல்வி மைய மாணவர்களுக்கு மாறுவேட போட்டி
    வேதாரண்யம்:

    தமிழகத்தில் கொரோனா தொற்று பரவல் காரணமாக பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ள நிலையில் மாணவ-மாணவிகள் வீட்டிலிருந்தே கல்வி கற்க தமிழக அரசு இல்லம் தேடி கல்வி மையத்தை தொடங்கியுள்ளது. 

    இல்லம் தேடி கல்வி மையத்தில் மாணவர்களிடையே புத்துணர்ச்சியை ஏற்படுத்தும் விதமாக குடியரசு தினத்தை முன்னிட்டு வேதாரண்யம் அடுத்த வடமழை ரஸ்தாவில் பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டடது. 

    மாறுவேடப்போட்டி, திருக்குறள் போட்டி, ஓவிய போட்டி, கலை நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு போட்டிகளில் பங்கு பெற்ற அனைவருக்கும் பரிசுகளை இல்லம் தேடி கல்வி மையத்தின் ஆசிரியை கோகிலா வழங்கினார். 

    இதில் மாணவர்கள் மற்றும் பெற்றோர் கலந்து கொண்டனர்.
    Next Story
    ×