என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    நெடுஞ்சாலைத்துறை சாலை பணியாளர்கள் சங்க கூட்டம் நடந்தது.
    X
    நெடுஞ்சாலைத்துறை சாலை பணியாளர்கள் சங்க கூட்டம் நடந்தது.

    நெடுஞ்சாலைத்துறை சாலை பணியாளர்கள் சங்க கூட்டம்

    நாகையில் நெடுஞ்சாலைத்துறை சாலை பணியாளர்கள் சங்க கூட்டம் நடந்தது.
    நாகப்பட்டினம்:

    தமிழ்நாடு நெடுஞ்சாலைத்துறை சாலைப் பணியாளர்கள் சங்க கூட்டம் நாகையில் மாவட்டத் தலைவர் கணேசன் தலைமையில் நடைபெற்றது. துணைச் செயலாளர் முருகேசன் வரவேற்றார். 

    கீழ்வேளூர் வட்டத் தலைவர் பாலமுரளி துவக்கவுரையாற்றினார். 
    மாவட்டச் செயலாளர் உதயகுமார் வேலை அறிக்கையும், பொருளாளர் ரவிச்சந்திரன் வரவு செலவு அறிக்கையும் சமர்ப்பித்தனர்.

    புள்ளியியல் சார்நிலை அலுவலர் சங்க மாநிலத் தலைவர் 
    அந்துவன்சேரல், அரசு ஊழியர் சங்க நாகை வட்டத் தலைவர் 
    ரவிச்சந்திரன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். 

    மாநிலச் செயலாளர் பழனிசாமி சிறப்புரையாற்றினார். 

    புதிய மாவட்ட நிர்வாகிகளாக கணேசன் (தலைவர்), ரவி 
    மற்றும் ஐயப்பன் (துணைத் தலைவர்கள்), உதயகுமார் (செயலாளர்), 
    ரஞ்சித் குமார் மற்றும் முருகேசன் (துணைச் செயலாளர்கள்), 
    ரவிச்சந்திரன் (பொருளாளர்) மற்றும் ராஜேந்திரன், 
    அசோக்குமார் (தணிக்கையாளர்கள்) ஆகியோர் தேர்வு 
    செய்யப்பட்டனர்.

    நெடுஞ்சாலைகளை பராமரிக்க 5 கி.மீட்டருக்கு 
    2 சாலைப் பணியாளர்கள் என பணியிட ஒப்புதல் வழங்கி 
    கிராமப்புற இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்க வேண்டும், 
    சாலைப் பணியாளர்களுக்கு தொழில்நுட்ப கல்வித் திறன் பெறாத ஊழியர்களுக்கு இணையாக வழங்க வேண்டும் என்பது 
    உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

    அரசு ஊழியர் சங்க மாவட்டச் செயலாளர் 
    அன்பழகன் நிறைவுரையாற்றினார். 

    நாகை வட்டச் செயலாளர் ரமேஷ் நன்றி கூறினார்.
    Next Story
    ×