என் மலர்
உள்ளூர் செய்திகள்

கிராம மக்கள் சாலையை சீரமைத்த காட்சி.
அதிகாரிகள் நடவடிக்கை எடுக்காததால் கிராம மக்களே சாலையை சீரமைப்பு
நாகை அருகே அதிகாரிகளிடம் மனு அளித்தும் நடவடிக்கை எடுக்காததால் கிராம மக்களே சாலையை சீரமைத்தனர்.
நாகப்பட்டினம்:
நாகப்பட்டினம் மாவட்டம், கீழையூர் அடுத்துள்ள ஈசனூர் ஊராட்சி
வழியாக கீழையூர் முதல் திருக்குவளை வரை செல்லும் சாலை உள்ளது.
இந்த சாலையானது கடந்த ஆண்டு அமைக்கப்பட்ட நிலையில்,
கிட்டத்தட்ட 200 மீட்டர் நீளமுள்ள சாலை மட்டும் அமைக்கப்படாமல் அதற்கான நிதி இல்லை என கிடப்பிலேயே போடப்பட்டுள்ளது.
இந்த நிலையில் சாலை மிகவும் பழுதடைந்து குண்டும் குழியுமாக
காட்சி அளிப்பதோடு, ஆபத்து ஏற்படுத்தும் பள்ளங்களும்
நிறைந்து இருந்தன.
இதனால் இவ்வழியே செல்லும் விவசாயிகள் மற்றும் பள்ளி கல்லூரி மாணவர்கள் என பலதரப்பட்டவர்களும் கடுமையாக பாதிப்புக்குள்ளாகி வந்தனர். மேலும் இந்த சாலையை சீரமைக்க வேண்டும் என
இப்பகுதி கிராம மக்கள் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு
பலமுறை மனு அளித்தும் எந்தவித நடவடிக்கையும் இல்லை.
இந்நிலையில் கிராம மக்கள் மற்றும் இளைஞர் மன்றத்தை சேர்ந்த இளைஞர்கள் ஒன்றிணைந்து டிராக்டர் மூலமாக 3 டிப்பர்
சிறு செங்கற்கள் கொண்டு சாலையிலுள்ள பள்ளங்களை மூடி
தற்காலிகமாக சீரமைத்துள்ளனர்.
இந்நிலையில் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நேரடி ஆய்வு
மேற்கொண்டு தார் சாலையாக அமைத்து தரவேண்டும் என்ற கோரிக்கையை பொதுமக்கள் முன் வைத்துள்ளனர்.
உடன் சீரமைக்கப்படாத பட்சத்தில் கிராம மக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட போவதாக கூறியுள்ளனர்.
Next Story






