என் மலர்
உள்ளூர் செய்திகள்

சாலை மறியலில் ஈடுபட்ட விவசாயிகள்
ஆன்லைன் முறையை ரத்து செய்யக்கோரி விவசாயிகள் சாலை மறியல்
திருமருகல் அருகே நேரடி கொள்முதல் நிலையங்களில் ஆன்லைன் முறையை ரத்து செய்யக்கோரி விவசாயிகள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
நாகப்பட்டினம்:
நாகை மாவட்டம் திருமருகல் ஒன்றியம் மேலப்பூதனூர் அரசு கொள்முதல் நிலையங்களில் ஆன்லைன் முறையை ரத்து செய்ய வலியுறுத்தி விவசாயிகள் திருமருகல்-கங்களாஞ்சேரி சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதற்கு முன்னாள் திருமருகல் ஒன்றியக்குழு தலைவர் சந்திரசேகரன் தலைமை வகித்தார்.
இதில் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் ஆன்லைன் முறையை ரத்து செய்துவிட்டு பழைய முறைப்படி நெல்லை கொள்முதல் செய்ய வேண்டும்.
அரசு அறிவித்தபடி நாள் ஒன்றுக்கு 1000 மூட்டைகள் கொள்முதல் செய்யப்பட வேண்டும், வெளி மாவட்ட நெல் கொள்முதல் செய்யபடுவதை தடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.
தகவல் அறிந்து அங்கு வந்த திருக்கண்ணபுரம் போலீஸ் சப்&இன்ஸ்பெக்டர் இங்கர்சால், சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் கண்ணதாசன், மேலப்பூதனூர் கிராம நிர்வாக அலுவலர் வீரகுமார், கீழத்தஞ்சாவூர் கிராம நிர்வாக அலுவலர் ராஜேஸ்குமார் ஆகியோர் மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டு பின்னர் அனைவரும் அங்கிருந்து கலைந்து சென்றனர். இதனால் திருமருகல்-கங்களாஞ்சேரி சாலையில்
சுமார் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
Next Story






