என் மலர்
உள்ளூர் செய்திகள்

கோடியக்கரை பறவைகள் சரணாலயத்திற்கு வந்து குவிந்துள்ள பூநாரை பறவைகள்.
கோடியக்கரை சரணாலயத்தில் பறவைகள் கணக்கெடுக்கும் பணி
கோடியக்கரை சரணாலயத்தில் பறவைகள் கணக்கெடுக்கும் பணி 2 நாட்கள் நடைபெறுகிறது.
வேதாரண்யம்:
வேதாரண்யம் தாலுக்கா கோடியக்கரை பறவைகள் சரணாலயத்தில் பறவைகள் கணக்கெடுப்பு பணி துவங்கி இரு நாட்கள் நடைபெறுகிறது.
கோடியக்கரை பறவைகள் சரணாலயத்திற்கு ஆண்டுதோறும் அக்டோபர் முதல் மார்ச் வரை 242 வெளிநாட்டுப் பறவைகள் வந்து தங்கிச் செல்வது வழக்கம்.
அவ்வாறு வரும் பறவைகள் காலில் வளையம் இடப்பட்டு
பறவைகள் செல்லும் தூரம் வந்து செல்லும் நாடு குறித்து கணக்கிடப்படுகிறது.
பறவைகள் வந்து செல்லும் இந்த சீசன் காலத்தில் ஜனவரி கடைசி வாரத்தில் பறவை கணக்கெடுக்கும் பணி கோடியக்கரை வனத்துறையின் மூலம் நடத்தப்படுகிறது.
வழக்கம் போல இந்த ஆண்டு நாளை, நாளை மறுநாள் இரு தினங்களிலும் பறவைகள் கணக்கெடுக்கும் பணி நடைபெற உள்ளது.
இதில் ஏ. வி.சி கல்லூரி மாணவர்கள் மற்றும் தன்னார்வளர்கள் மற்றும் வனத்துறை பணியாளர்கள், கல்லூரி உதவி பேராசிரியர்கள் மித்ரா
குழுவினர் கலந்து கொள்கின்றனர்.
இன்று காலை பறவைகள் இனம் கண்டறிய பயிற்சி வகுப்புகளும், தொடர்ந்து மாலை பறவைகள் கணக்கெடுக்கும் பணி தொடங்கப்பட உள்ளது.
மறுநாள் 29-ந் தேதி காலை முதன்மை தலைமை வனஉயிரிக் காப்பாளர் சென்னை சேகர் குமார் நிரோஜ் திருச்சி மண்டல தலைமை வனப்பாது காவலர் சதிஷ் மற்றும் நாகை வனஉயிரினக் காப்பாளர் யோகேஸ்குமார் மீனா ஆகியோர் கணக்கெடுக்கும் பணியில் கலந்து கொள்கிறார்கள் என கோடிக்கரை வனச்சரக அலுவலர் அயூப் கான் தெரிவித்துள்ளார்.
Next Story






