search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "நினைவு தூண்"

    • மகிபாலன்பட்டியில் கணியன் பூங்குன்றனார் நினைவு தூண் விரைவில் திறக்கப்படும்.
    • இந்த தகவலை அமைச்சர் சாமிநாதன் தெரிவித்துள்ளார்.

    சிவகங்கை

    சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகே உள்ள மகிபாலன்பட்டியில் சங்க கால புலவர் கணியன் பூங்குன்றனார் நினைவு தூண் அமைக்கப்பட்டுள்ளது. "யாதும் ஊரே யாவரும் கேளிர்" என்ற பிரபலமான வரிகளால் அறியப்படுபவர் கணியன் பூங்குன்றனார்.

    இவர் மகிபாலன்பட்டி கிராமத்தில் வாழ்ந்ததாக வரலாற்று ஆவணங்கள் கூறுகின்றன. இந்தநிலையில் தமிழ் வளர்ச்சித் துறை சார்பில் கணியன் பூங்குன்ற னாருக்கு மகிபாலன் பட்டியில் ரூ.21.02 லட்சம் மதிப்பீட்டில் நினைவுத்தூண் அமைக்கும் பணி முடிந்துள் ளது.

    இந்த நிலையில் அமைச்சர்கள் பெரிய கருப்பன், சாமிநாதன், தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறை செயலாளர் செல்வ ராஜ், கலெக்டர் ஆஷா அஜீத் ஆகியோர் முடிவுற்ற பணிகளை ஆய்வு செய்தனர்.

    பின்னர் அமைச்சர் சாமிநாதன் நிருபர்களிடம் கூறியதாவது:-

    தமிழ் வளர்ச்சித்துறை சார்பில் மகிபாலன்பட்டியில் அமைக்கப்பட்டுள்ள நினைவுத்தூண் விரைவில் திறக்கப்பட்டு பயன்பாட்டிற்கு ெகாண்டு வரப்படும். சுங்கச்சாவடியில் பத்திரிகையாளர்கள் கட்டணமின்றி பயணிக்க மத்திய அரசிடம் பேசி நடவடிக்கை எடுக்கப்படும்.

    பத்திரிக்கையாளர் நல வாரியத்தில் அறிவிக்கப் பட்ட நலத்திட்டங்களை நடைமுறைக்கு கொண்டு வரவும் நடவடிக்கை எடுக்கப்படும். சிவகங்கை மாவட்டத்தில் வாளுக்கு வேலி அம்பலத்திற்கு சிலை அமைப்பதற்கு தகுந்த இடம் தேர்வு செய்யப்பட்டு விரைவில் நிறுவப்படும்

    இவ்வாறு அவர் கூறினார்.

    இந்தநிகழ்ச்சியில், தி.மு.க. மாவட்ட துணைச்செயலாளர் சேங்கைமாறன், ஒன்றிய செயலாளர் மாணிக்கம், நெற்குப்பை சேர்மன் பழனியப்பன், கூட்டமைப்பு தலைவர் மாணிக்கவாசகம், ஊராட்சி தலைவர் பாஸ்கரன், தமிழ் வளர்ச்சி உதவி இயக்குநர் நாகராசன், திருப்பத்தூர் வட்டாட்சியர் வெங்கடேசன், மகிபாலன்பட்டி ஊராட்சி மன்றத் தலைவர் விஜய பாஸ்கர், காஞ்சிரங்கால் ஊராட்சி மன்றத்தலைவர் மணிமுத்து உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • அரசுநூற்றாண்டு விழா சிறப்பு நிதியாக 48.87 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்தது.
    • பூங்கா உள்ளிட்ட பணி மேற்கொள்ளப்படும்.

    உடுமலை :

    உடுமலை நகராட்சி 1918 ஜனவரி 1ல், மூன்றாம் நிலை நகராட்சியாக தோற்றுவிக்கப்பட்டு 1970ல் இரண்டாம் நிலை நகராட்சியாகவும், 1979ம் ஆண்டு முதல் நிலை நகராட்சியாகவும், 1984ம் ஆண்டு முதல் தேர்வு நிலை நகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டு,100ஆண்டுகளை கடத்துள்ளது.

    நகராட்சியாக 104 ஆண்டுகளான நிலையில், நூற்றாண்டு நினைவாக உட்கட்டமைப்பு மற்றும் பல்வேறு அடிப்படை வசதிகளை மேம்படுத்தும் வகையில் கடந்தாண்டு, அரசுநூற்றாண்டு விழா சிறப்பு நிதியாக 48.87 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்தது.இந்நிதியின் கீழ் ரூ. 3.75 கோடி செலவில், பஸ் நிலையம் விரிவாக்கம், 12.97 கோடி ரூபாய் செலவில் தங்கம்மாள் ஓடை பகுதியில் நடை பாதை மற்றும் தடுப்புச்சுவர், ரூ.15.98 கோடி செலவில் கழுத்தறுத்தான் பள்ளம் பகுதியில்மழை நீர் வடிகால், சந்தை வளாகம், பூங்கா புதுப்பிப்பு உள்ளிட்ட பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

    இத்திட்டத்தின் கீழ் நகராட்சி புதிய அலுவலகத்தில், உட் கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்தவும், நூற்றாண்டு விழாவை சிறப்பிக்கும் வகையில் நூற்றாண்டு நினைவுத்தூண் அமைக்க ஒரு கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டது.அதன் அடிப்படையில் தற்போது நகராட்சி அலுவலகம் முன் அழகாக வடிவமைக்கப்பட்ட நினைவு தூண் நிறுவப்பட்டுள்ளது. தொடர்ந்து சுற்றிலும் பூங்கா உள்ளிட்ட பணி மேற்கொள்ளப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

    ×