search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Muncipality Office"

    • புதிய வணிக வளாகம் கட்ட நகராட்சி நிர்வாகம் ஏற்பாடு செய்து வருகிறது.
    • தினசரி மார்க்கெட் கடைகளை இடித்து புதுப்பிப்பதற்காக காய்கறி வியாபாரிகளை காலி செய்யச் சொல்லி உள்ளனர்.

    தாராபுரம் :

    தாராபுரம் உடுமலை ரோட்டில் உள்ள பழைய பஸ் நிலையத்தில் தினசரி காய்கறி மார்க்கெட் செயல்பட்டு வருகிறது.சுமார் 100 ஆண்டு பழமை வாய்ந்த இந்த காய்கறி மார்க்கெட்டை இடித்து புதிய வணிக வளாகம் கட்ட நகராட்சி நிர்வாகம் ஏற்பாடு செய்து வருகிறது. இந்நிலையில் சுமார் 100க்கும் மேற்பட்ட காய்கறி வியாபாரிகள் நகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.

    பின்னர் ஆணையரிடம் தினசரி மார்க்கெட் வியாபாரிகள் தரப்பில் வைக்கப்பட்ட கோரிக்கை விவரம் வருமாறு:-

    தாராபுரம் நகராட்சி பழைய பஸ் நிலையம் தினசரி மார்க்கெட் கடைகளை இடித்துபுதுப்பிப்பதற்காக காய்கறி வியாபாரிகளைகாலி செய்யச் சொல்லி உள்ளனர். மாற்று ஏற்பாடாக பாதுகாக்கப்பட்ட இடம் காய்கறி வியாபாரிகளுக்கு ஒதுக்கவேண்டும். மின் வசதி மற்றும் அடிப்படை வசதிகள் செய்து தரவேண்டும். புதிய வணிக வளாகம் கட்டிய பிறகு தற்போது கடையை நடத்தி வருபவருக்கே முன்னுரிமை அளித்து பழைய வாடகைக்கு கடையை ஒதுக்கவேண்டும் .இவ்வாறு காய்கறி மார்க்கெட் வியாபாரிகள் கோரிக்கை வைத்தனர். காய்கறி மார்க்கெட் வியாபாரிகள் நியாயமான கோரிக்கைகள் பரிசீலிக்கப்படும் என நகராட்சி ஆணையர் உறுதியளித்தார்.எனினும்கடைகளை காலிசெய்யும்படிவத்தில்கையெழுத்திட மறுத்து காய்கறி வியாபாரிகள் சென்றனர்.

    • அரசுநூற்றாண்டு விழா சிறப்பு நிதியாக 48.87 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்தது.
    • பூங்கா உள்ளிட்ட பணி மேற்கொள்ளப்படும்.

    உடுமலை :

    உடுமலை நகராட்சி 1918 ஜனவரி 1ல், மூன்றாம் நிலை நகராட்சியாக தோற்றுவிக்கப்பட்டு 1970ல் இரண்டாம் நிலை நகராட்சியாகவும், 1979ம் ஆண்டு முதல் நிலை நகராட்சியாகவும், 1984ம் ஆண்டு முதல் தேர்வு நிலை நகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டு,100ஆண்டுகளை கடத்துள்ளது.

    நகராட்சியாக 104 ஆண்டுகளான நிலையில், நூற்றாண்டு நினைவாக உட்கட்டமைப்பு மற்றும் பல்வேறு அடிப்படை வசதிகளை மேம்படுத்தும் வகையில் கடந்தாண்டு, அரசுநூற்றாண்டு விழா சிறப்பு நிதியாக 48.87 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்தது.இந்நிதியின் கீழ் ரூ. 3.75 கோடி செலவில், பஸ் நிலையம் விரிவாக்கம், 12.97 கோடி ரூபாய் செலவில் தங்கம்மாள் ஓடை பகுதியில் நடை பாதை மற்றும் தடுப்புச்சுவர், ரூ.15.98 கோடி செலவில் கழுத்தறுத்தான் பள்ளம் பகுதியில்மழை நீர் வடிகால், சந்தை வளாகம், பூங்கா புதுப்பிப்பு உள்ளிட்ட பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

    இத்திட்டத்தின் கீழ் நகராட்சி புதிய அலுவலகத்தில், உட் கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்தவும், நூற்றாண்டு விழாவை சிறப்பிக்கும் வகையில் நூற்றாண்டு நினைவுத்தூண் அமைக்க ஒரு கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டது.அதன் அடிப்படையில் தற்போது நகராட்சி அலுவலகம் முன் அழகாக வடிவமைக்கப்பட்ட நினைவு தூண் நிறுவப்பட்டுள்ளது. தொடர்ந்து சுற்றிலும் பூங்கா உள்ளிட்ட பணி மேற்கொள்ளப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

    • பல்லடம் நகராட்சியில் மக்கள் தொகையும் அதிகரித்து வருகிறது.
    • கோவை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையை விரிவாக்கம் செய்திட வேண்டும்.

    பல்லடம்,

    தமிழக சட்டமன்ற பொதுகணக்கு குழு தலைவர் செல்வபெருந்தகை தலைமையில் குழு உறுப்பினர்கள் சுதர்சனம் எம்.எல்.ஏ, மாரிமுத்து எம்.எல்.ஏ, ராஜ முத்து எம்.எல்.ஏ., சரஸ்வதி எம்.எல்.ஏ., ஆகியோர் பல்லடம் நகராட்சி அலுவலகத்தில் ஆய்வு நடத்தினர். அப்போது அவர்களிடம் நகராட்சி தலைவர் கவிதாமணி ராஜேந்திரகுமார் கூறியதாவது:- பல்லடம் நகராட்சிக்கு பழைய மக்கள் தொகை கணக்குபடி தினசரி 46 லட்சம் லிட்டர் குடிநீர் வழங்க வேண்டும். ஆனால் தற்போது 36 லட்சம் லிட்டருக்கும் மேலாக குறைவாக தண்ணீர் வருகிறது. இதனை தான் 18 வார்டு பகுதிக்கும் வழங்கப்பட்டு வருகிறது. மேலும் பல்லடம் நகராட்சியில் மக்கள் தொகையும் அதிகரித்து வருகிறது. அதற்கேற்ப குடிநீர் வழங்க வேண்டும். கோவை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் உள்ள பல்லடத்தில் அண்ணா நகர் முதல் பணப்பாளையம் வரை 2 கிலோ மீட்டர் தூரத்திற்கு கடும் போக்குவரத்து நெருக்கடி நிலவுகிறது. எனவே மேம்பாலம் அமைத்து தர வேண்டும்.

    மேலும் கோவை - திருச்சி தேசிய நெடுஞ்சாலை விரிவாக்கம் செய்திட வேண்டும் என்றார். இதற்கு பதில் அளித்த அவர், முதல்வரின் கவனத்திற்கு கொண்டு சென்று நடவடிக்கை எடுக்கப்படும் என்று குழு தலைவர் செல்வபெருந்தகை தெரிவித்தார். இதைத்தொடர்ந்து பல்லடம் அருகே உள்ள அய்யம்பாளையத்தில் தனியார் முட்டை கோழிப்பண்ணையை பார்வையிட்டனர். தொடர்ந்து பல்லடம் வட்டாட்சியர் அலுவலகத்தில் இ - சேவை மையத்தின் செயல்பாடுகளை கேட்டறிந்தனர். பல்லடம் - பொள்ளாச்சி சாலை தரம் உயர்த்தி அகலப்படுத்தி இருக்கும் பணிகள் நிறைவடைந்திருப்பதை ஆய்வு செய்தனர் . இந்த ஆய்வின் போது மாவட்ட கலெக்டர் வினீத், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் லட்சுமணன், திருப்பூர் தெற்கு சட்டமன்ற உறுப்பினர் செல்வராஜ், திருப்பூர் மாநகராட்சி 4வது மண்டல தலைவர் பத்மநாபன், நகராட்சி தலைவர் கவிதாமணி ராஜேந்திரகுமார், நகராட்சி ஆணையாளர் விநாயகம், பல்லடம் தாசில்தார் நந்தகோபால்,நெடுஞ்சாலை துறை கோட்ட பொறியாளர் ரமேஷ்கண்ணன், உதவி செயற்பொறியாளர் தனலட்சுமி, உதவி பொறியாளர் பாபு உள்பட பலர் உடனிருந்தனர்.

    ×