என் மலர்
மயிலாடுதுறை
- மீன் மார்க்கெட்டை வேறு இடத்திற்கு மாற்றி அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
- சிமெண்ட் சாலையில் தண்ணீர் தேங்காத வகையில் சீரமைக்க வேண்டும்.
தரங்கம்பாடி:
செம்பனார்கோயில் ஊராட்சி ஒன்றியக்குழு கூட்டம் நடைபெற்றது. ஒன்றியக்குழு தலைவர் நந்தினி ஸ்ரீதர் தலைமை தாங்கினார். ஒன்றியக்குழு துணை தலைவர் மைனர் பாஸ்கர், ஒன்றிய ஆணையர் மீனா முன்னிலை வகித்தனர். ஒன்றிய மேலாளர் கோவிந்தராஜ் வரவேற்றார்.
இந்த கூட்டத்தில் ஒன்றியக்குழு உறுப்பினர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பேசியதாவது.
ரஜினி: செம்பனார்கோயில் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட அண்ணா திருமண மண்டபத்தில் பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்துவதற்கு பயன்படும் வகையில் மேம்படுத்த வேண்டும். பாகசாலை ஊராட்சியில் பகுதிநேர அங்காடி கட்ட வேண்டும்.
தேவிகா: புத்தகரத்தில் மயான சாலை மற்றும் தார் சாலை அமைத்து, அங்கு சேதமடைந்த பாலத்தை புதிதாக கட்டித் தர வேண்டும். முத்துலட்சுமி: ஆறுபாதி ஊராட்சியில் புதிதாக பகுதிநேர அங்காடி அமைக்க அனுமதி பெறப்பட்டும், இதுவரை அமைக்கப்படவில்லை. அதனை பொதுமக்களின் நலன் கருதி விரைந்து கட்டித்தர நடவடிக்கை எடுக்க வேண்டும். கிருபாவதி: கொத்தங்குடி ஊராட்சி பனங்குடி பயணிகள் நிழலகம் அருகில் சிமெண்ட் சாலையில் தண்ணீர் தேங்காத வகையில் சீரமைக்க வேண்டும்.
ஷகிலா அஜீஸ்: சங்கரன்பந்தல் கடைவீதியில் போக்குவரத்து இடையூராக உள்ள மீன் மார்க்கெட்டை வேறு இடத்திற்கு மாற்றி அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். செல்வம்: சந்திரபாடி ஊராட்சியில் பழுதடைந்த துணை சுகாதார நிலையத்தை புதிதாக கட்டித் தர வேண்டும்.
மோகன்தாஸ்: செம்பனார்கோயில் கடைவீதியில் முத்தமிழ் அறிஞர் கருணாநிதிக்கு சிலை அமைக்க வேண்டும். கலைஞரின் பெயரில் நூலகம் அமைக்க வேண்டும். லெனின்தாஸ்:-டி.மணல்மேடு ஊராட்சி நட்சத்திரமாலை கிராமத்தில் சுடுகாடு அமைத்து தர வேண்டும்.
இதனை தொடர்ந்து ஒன்றியக்குழு தலைவர் பேசுகையில், தற்போது உறுப்பினர்கள் விடுத்துள்ள கோரிக்கைகள் தொடர்பாக உரிய பரிசீலனை செய்து நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறினார். இக்கூட்டத்தில் ஒன்றிய உதவி பொறியாளர் முத்துக்குமார் சுகாதார துறையினர் உள்பட அரசு அலுவலர்கள் திரளாக கலந்து கொண்டனர்.
- கொரோனா காலங்களில் பணியாற்றிய செவிலியர்களுக்கு ஊக்கத்தொகை வழங்க வேண்டும்.
- ஆர்ப்பாட்டத்தில் 14 அம்ச கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.
தரங்கம்பாடி:
மயிலாடுதுறையில் தமிழ்நாடு அரசு அனைத்து சுகாதார செவிலியர்கள் சங்கம் சார்பில் 14 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் அலுவ லகம் முன்பு நடை பெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட தலைவர் கீதா தலைமை வகித்தார்.
துணைத் தலைவர் தமிழ்ச்செல்வி செயலாளர் நிர்மலா, பொருளாளர் ஜெயசுதா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
ஆர்ப்பாட்டத்தில் டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி மகப்பேறு நிதி உதவி திட்டத்தில் செவிலியர்களுக்கு பணிச்சுமையை குறைக்க வேண்டும், முற்றிலும் பழுதடைந்த துணை மைய கட்டிடத்தில் தங்கியுள்ள செவிலியர்களுக்கு வாடகை பிடித்தம் செய்வதை நிறுத்தவும், ஏற்கனவே பிடித்தம் செய்த தொகையை திரும்ப தரவும் வலியுறுத்தியும், ஐந்து வருடங்கள் பணி முடித்தவர்களுக்கு கிரேட் 2 மற்றும் 10 ஆண்டுகள் பணி முடித்தவர்களுக்கு கிரேடு 1 ஆகவும் அடுத்த கட்ட ஊதிய விகிதத்தில் நிர்ணயம் செய்திட போடப்பட்ட அரசாணையை அமல்படுத்த வேண்டும்.
கொரோனா காலங்களில் பணிபுரிந்த செவிலியர்களுக்கு ஊக்கத்தொகை வழங்க வலியுறுத்தி உள்ளிட்ட 14 அம்ச கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.
இந்த ஆர்ப்பாட்டத்தில் கிராமப்புற சுகாதார செவிலியர்கள், துணை செவிலியர்கள், பகுதி சுகாதார செவிலியர்கள், சமுதாய சுகாதார செவிலியர்கள் என சுமார் 100 பேர் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினர்.
- வேளாண் வளர்ச்சி திட்டத்தின் கீழ் கூட்டம் நடந்தது.
- உழவன் செயலி, மண்வளம் குறித்து பயிற்சி அளிக்கப்பட்டது.
சீர்காழி:
சீர்காழி அடுத்த திருநகரி கிராமத்தில் கலைஞரின் அணைத்து கிராம ஒருங்கிணைத்த வேளாண் வளர்ச்சி திட்டத்தின் கீழ் கிராம வேளாண் முன்னேற்ற குழு கூட்டம் நடைபெற்றது.
கூட்டத்திற்கு வேளா ண்மை இணை இயக்குனர் ஜெ. சேகர் தலைமை வகித்தார். உதவி இயக்குனர் ராஜராஜன்,ஊராட்சி மன்ற தலைவர் சுந்தரராஜன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
விவசாயிகளுக்கு வேளா ண்மை துறை மூலம் செயல்படுத்தப்படும் திட்டங்கள், உழவன் செயலி, மண்வளம் ஆகியவை குறித்து பயிற்சி அளித்து விளக்க ப்பட்டது.
துணை வேளா ண்மை அலுவலர் ரவிச்சந்தி ரன், உதவி வேளாண் அலுவலர்கள் வேதயராஜன், விஜய் அமிர்தராஜ், அலெக்சாண்டர், உதவி தோட்டக்கலை அலுவலர் சிவாஜி, அட்மா திட்ட வட்டார தொழில்நுட்ப மேலாளர் பார்கவி, உதவி தொழில்நுட்ப மேலாளர் செளந்தரராஜன் மற்றும் விவசாயிகள் திரளாக பங்கேற்றனர்.
இதேபோல் செம்பனிருப்பு கிராமத்திலும் வேளாண் முன்னேற்ற குழு கூட்டம் வேளாண்மை துணை இயக்குனர் மதியரசன் தலைமையில் நடைபெற்றது.
- வாகனத்தின் இயக்கத்தை கலெக்டர் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
- பொதுமக்களிடையே உணவுப் பொருட்கள் தொடர்பான விழிப்புணர்வு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட உள்ளன.
மயிலாடுதுறை:
மயிலாடுதுறை மாவட்டத்தில் உணவு பாதுகாப்புத் துறை சார்பில், உணவு தர பரிசோதனை மேற்கொள்வதற்கான நடமாடும் உணவு பகுப்பாய்வு வாகனத்தின் செயல்பாடு நேற்று தொடங்கி வைக்கப்பட்டது.
ஆட்சியர் அலுவலக வளாகத்தில் நேற்று நடைபெற்ற நிகழ்ச்சியில், வாகனத்தின் இயக்கத்தை கொடியசைத்து தொடங்கி வைத்த கலெக்டர் மகாபாரதி, பின்னர் பேசியதாவது:-
உணவுகளின் தரம் குறித்து மக்கள் அறிந்துகொள்ளும் வகையில், உணவகங்களில் உணவு வகைகள் கலப்படமின்றி தயாரிக்க ப்படுகின்றனவா, கடைகளி ல் விற்கப்படும் உணவு பண்டங்கள் தரமாக உள்ளனவா என்பன குறித்து நேரில் கண்டறிவதற்காக, நடமாடும் உணவு பகுப்பாய்வு கூட வாகன திட்டத்தை தமிழக அரசு செயல்படுத்தி உள்ளது.
அதன்படி, இந்த வாக னத்தின் இயக்கம் தொடங்கி வைக்கப்பட்டுள்ளது.
இதன் மூலம் இந்த மாதம் முழுவதும் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளுக்குச் சென்று, பொதுமக்களிடையே உணவுப் பொருட்கள் தொடர்பான விழிப்புணர்வு நடவடிக்கைகள் மேற்கொ ள்ளப்பட உள்ளன.
எனவே, பொது மக்கள் மற்றும் உணவுப் பொருள் விற்பனை செய்வோர் தங்கள் பகுதிக்கு இந்த வாகனம் வரும் போது, உணவுப் பொருட்கள் தொடர்பான தங்களின் சந்தேகங்களைக் கேட்டும், பரிசோதித்தும் தெரிந்து கொள்ளலாம் என் தெரிவித்தார். நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் மணிமேகலை, உணவு பாதுகாப்பு அலுவலர் சீனிவாசன் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
- சீர்காழி காவல் துறை சார்பில் போதை விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.
- போதை பொருளால் ஏற்படும் மனபாதிப்பு, உடல்பாதிப்பு ஆகிய தீமைகள் குறித்து எடுத்துரைத்தார்.
சீர்காழி:
சீர்காழி காவல் துறை சார்பில் சபாநாயக முதலியார் இந்து நடுநிலைப்பள்ளியில் போதை விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு பள்ளி தலைமை ஆசிரியர் பால முருகன் தலைமை வகித்தார். சீர்காழி காவல் உதவி ஆய்வாளர் ஜெயகிருபா, தலைமை காவலர் செல்வ முருகன், தனிப்பிரிவு போலீஸ்சார் சார்லஸ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
தொடர்ந்து சீர்காழி காவல்ஆய்வாளர் சிவக்குமார் பங்கேற்று போதை பொருளால் ஏற்படும் மனபாதிப்பு, உடல்பாதிப்பு ஆகிய தீமைகள் குறித்து எடுத்துரைத்தார்.
தொடர்ந்து விழிப்புணர்வு பேரணியை தொடங்கிவைத்தார். இதில் மாணவ-மாணவிகள் பங்கேற்று போதை பொருள்களுக்கு எதிராக முழக்கங்கள் எழுப்பி முக்கிய வீதிகளின் வழியாக சென்று பள்ளியை வந்தடைந்தனர்.
இதேபோல் சீர்காழி நகராட்சி மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்ற போதை பொருள் விழிப்புணர்வு நிகழ்ச்சிக்கு தலைமை ஆசிரியர் கார்த்திகேயன் தலைமை வகித்தார்.போலீஸ் இன்ஸ்பெக்டர் சிவக்குமார் பங்கேற்று பேசினார்.
- ஒரிரு நாட்களில் அறுவடை செய்ய இருந்த நிலையில் திடீர் மழை எங்களை புரட்டி போட்டுள்ளது.
- அதிகாரிகள் பாதிப்பு பயிர்களை கணக்கீட்டு உரிய இழப்பீடு வழங்க வேண்டும்.
தரங்கம்பாடி:
தஞ்சை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை உள்பட காவிரி டெல்டா மாவட்டங்களில் குறுவை பாசனத்துக்காக கடந்த ஜூன் மாதம் 12-ந் தேதி மேட்டூர் அணை திறக்கப்பட்டது. இந்த ஆண்டு 5 லட்சம் ஏக்கரில் குறுவை சாகுபடி மேற்கொள்ள இலக்கு நிர்ணயிக்கபட்டது.
இதில் மயிலாடுதுறை மாவட்டத்தில் தற்போது வரை 90 ஆயிரம் ஏக்கரில் முன்பட்ட குறுவை சாகுபடி செய்யப்பட்டுள்ளன. இதில் மயிலாடுதுறை, குத்தாலம், தரங்கம்பாடி, சீர்காழி ஆகிய 4 தாலுகாவில் பல பகுதிகளில் பம்புசெட் நீரை கொண்டு முன்பட்ட குறுவை சாகுபடி செய்யப்பட்டிருந்தது. பல இடங்களில் பயிர்கள் அறுவடைக்கு தயாராக இருந்தன. விவசாயிகளும் அறுவடை ஆயத்த பணிகளில் ஈடுபட்டு வந்தனர்.
இந்நிலையில் மயிலாடுதுறை மாவட்டத்தில் இரவு நேரங்களில் கடந்த சில நாட்களாக விட்டு விட்டு மழை பெய்து வந்தது. ஆனால் நேற்று மாலை மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் கனமழை பெய்ய தொடங்கியது. நேரம் செல்ல செல்ல மழையின் அளவு அதிகரித்தன. மயிலாடுதுறை, மணல்மேடு, சீர்காழி, கொள்ளிடம், தரங்கம்பாடி உள்பட மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் கனமழை கொட்டியது. நள்ளிரவு முழுவதும் இடைவிடாமல் கனமழை பெய்தது. அதிகபட்சமாக மயிலாடுதுறையில் 65.6 மி.மீ. மழை பதிவானது.
இந்த கனமழையால் மங்கைநல்லூர், மணல்மேடு, திருஇந்தளூர், நல்லத்துக்குடி, மணக்குடி, சேமங்கலம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் அறுவடைக்கு தயராக இருந்த வயல்களில் தண்ணீர் புகுந்தன. தொடர் மழையால் வயல் முழுவதும் வெள்ளக்காடாகி அறுவடைக்கு தயாரான பயிர்கள் தண்ணீரில் சாய்ந்தன. சுமார் 10 ஆயிரம் ஏக்கரில் பயிர்கள் சாய்ந்து பாதிக்கப்பட்டுள்ளதாக விவசாயிகள் வேதனை தெரிவித்தனர். இன்னும் 3 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளதால் பயிர்கள் பாதிப்பு மேலும் அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது.
இது குறித்து விவசாயிகள் கூறும்போது :-
ஏக்கருக்கு ரூ.30 அயிரம் வரை செலவு செய்து பயிரிட்டோம். பலர் கடன் வாங்கி தான் சாகுபடி செய்திருந்தனர். திடீர் கனமழையால் அறுவடைக்கு தயாராக இருந்த முன்பட்ட குறுவை பயிர்கள் பாதிக்கப்பட்டுள்ளது. இன்னும் ஒரிரு நாட்களில் அறுவடை செய்ய இருந்த நிலையில் திடீர் மழை எங்களை புரட்டி போட்டுள்ளது. வயல்களில் தேங்கிய தண்ணீர் வடிய ஒரிரு நாட்கள் ஆகும்.
அப்படியே வடிந்தாலும் பயிர்கள் பாதிப்பு கண்டிப்பாக இருக்கும். தற்போது வரை 10 ஆயிரம் ஏக்கர் வரை பயிர் பாதிப்பு உள்ளது. தொடர்ந்து மழை பெய்தால் பாதிப்பு இதைவிட அதிகரிக்கும். எனவே அதிகாரிகள் பாதிப்பு பயிர்களை கணக்கீட்டு உரிய இழப்பீடு வழங்க வேண்டும். அப்படி செய்தால் மட்டுமே பயிருக்காக நாங்கள் வாங்கிய கடனை ஒரளாவது அடைக்க முடியும் என்றனர்.
- அனிமேசன் சம்பந்தப்பட்ட பயிற்சியை பெற 18 முதல் 28 வயது வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.
- முன்னனி ஐ.டி. நிறுவனங்களில் வேலை வாய்ப்பு பெற வழிவகை செய்யப்பட உள்ளது.
தரங்கம்பாடி:
மயிலாடுதுறை மாவட்ட கலெக்டர் மகாபாரதி வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-
தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டு கழகம் (தாட்கோ), TCS iON நிறுவனத்துடன் இணைந்து 12-ம் வகுப்பு, பட்டப்படிப்பு, பட்டயப்ப டிப்பு முடித்த ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மாணவர்களுக்கு தகவல் தொழில்நுட்பம் சம்பந்தப்பட்ட பயிற்சிகள் மற்றும் அனிமேசன் சம்பந்த ப்பட்ட பயிற்சிகள் இணை யதளம் வழியாக கற்றுத்தந்து முன்னனி ஐ.டி. நிறுவனங்களில் வேலை வாய்ப்பு பெற வழிவகை செய்யப்பட உள்ளது.
தகவல் தொழில்நுட்பம் சம்பந்தப்பட்ட பயிற்சிகளை பெற பி.இ., பி.டெக்., பி.சி.ஏ., பி.எஸ்.சி. (சி.எஸ்)., பி.எஸ்.சி. (சி.எஸ் & ஐ.டி)., எம்.சி.ஏ., எம்.எஸ்.சி., (சி.எஸ்)., எம்.எஸ்.சி (சி.எஸ் & ஐ.டி)., ஏதேனும் ஒரு பட்டப்படிப்பு முடித்த மாணவர்கள் அல்லது கல்லூரிகளில் இறுதியாண்டு படிக்கும் மாணவர்கள், 18 முதல் 28 வயது வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.
அனிமேசன் சம்பந்தப்பட்ட பயிற்சியை பெற 12-ம் வகுப்பு அல்லது ஐ.டி.ஐ தேர்ச்சி பெற்ற 18 முதல் 28 வயது வரை உள்ள வர்கள் விண்ணப்பிக்கலாம்.
மேலும், TCS iON நிறுவனத்தால் நடத்தப்படும் தகுதி தேர்வில் என்.க்யூ.டி. தேர்ச்சி பெற வேண்டும்.
இத்தேர்வு முறையானது ஆங்கில வழியில் TCS iON நிறுவனத்தால் அங்கீகரிக்கப்பட்ட தேர்வு மையங்களான சென்னை, கோயம்புத்தூர், மதுரை, சேலம் மற்றும் திருநெல்வேலி ஆகிய தேர்வு மையங்களில் நடைபெறும்.
இதில் தேர்ச்சி பெறும் பட்சத்தில் TCS iON நிறுவனத்தால் வழங்கப்படும் தகவல் தொழில்நுட்பம் மற்றும் அனிமேஷன் சம்பந்தப்பட்ட பயிற்சியில் ஏதேனும் ஒரு பாடப்பிரிவில் சேர்ந்து பயிற்சி பெறலாம்.
இப்பயிற்சியை பெற www.tahdco.com (http://www.tahdco.com) என்ற இணையதளத்தில் பதிவு செய்து கொள்ளலாம். பயிற்சிக்கான கட்டணம் தாட்கோ வழங்கும்.
மேலும் விபரங்களுக்கு மாவட்ட கலெக்டர் அலவலகத்தில் உள்ள தாட்கோ மேலாளர் அலுவலகத்தை அணுகலாம்.
அல்லது 04364-211 217 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- வைத்தீஸ்வரன் கோவில் துணை மின் நிலையம் உயர்மின்னழுத்த பாதையில் பணிகள்.
- நாளை காலை 9 மணி முதல் மாலை 3 மணி வரை மின்விநியோகம் இருக்காது.
சீர்காழி:
சீர்காழி வைத்தீஸ்வரன் கோவில் துணை மின் நிலையம் உயர் மின்னழுத்த பாதையில் கூட்டு பராம ரிப்பு பணிகள் காரணமாக நாளை வியாழக்கிழமை காலை 9மணி முதல் மாலை 3மணி வரை சீர்காழி சபரிநகர், தென்பாதி, விஎன்எஸ்.நகர், அரசு மருத்துவமனை சாலை, பயணியர் விடுதி சாலை, புதிய பேருந்து நிலையம், தேர்மேலவீதி, கீழவீதி, தெற்குவீதி, வடக்குவீதி, பிடாரிவடக்கு வீதி, தெற்குவீதி, கீழவீதி, மேலவீதி, பழைய பேருந்து நிலையம், கடைவீதி, கீழதென்பாதி, கற்பகம்நகர் மற்றும் தெட்சிணாமூர்த்தி நகர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகள் மின் வினியோகம் இருக்காது.
இத்தகவலை மின்வாரிய உதவி செயற்பொறியாளர் விஸ்வநாதன் தெரி வித்துள்ளார்.
- கடைக்கு பிளாஸ்டிக் பைப் வாங்குவது போல் ஒரு வாலிபர் வந்துள்ளார்.
- கல்லாவில் வைத்திருந்த ரூ.20 ஆயிரத்தை திருடி விட்டு தப்பி சென்றார்.
சீர்காழி:
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி விளந்திடசமுத்திரம் பகுதியை சேர்ந்தவர் சேகர் (61). இவர் சிதம்பரம் - சீர்காழி பிரதான சாலையில் இரும்பு கடை நடத்தி வருகிறார்.
இந்நிலையில் இன்று இவர் கடைக்கு பிளாஸ்டிக் பைப் வாங்குவது போல் ஒரு டிப்டாப் வாலிபர் வந்துள்ளார் பொருளின் விலையை கேட்டு கடையில் அமர்ந்து உள்ளார்.
அப்போது சேகர் வியாபாரம் வியா பாரம் செய்து கொண்டி ருந்தார். விற்பனை செய்த ரூ 20 ஆயிரத்து கல்லாவில் வைத்துவிட்டு, சிமெண்டு மூட்டை வாகனத்தில் ஏற்றுவதை சென்று கண்கா ணித்து கொண்டிருந்தார்.
அப்போது பொருள் வாங்குவது போல் கடையில் அமர்ந்திருந்த டிப்டாப் வாலிபர் கல்லாப்பெட்டியில் வைத்திருந்த ரூபாய் 20 ஆயிரத்தை திருடிக் கொண்டு தான் வந்த மோட்டார் சைக்கிளில் தப்பிச் சென்றார்.
சேகர் சிமெண்ட் மூட்டை எடுத்துக் கொடுத்துவிட்டு கடைக்கு வந்தபோது டிப் டாப் வாலிபரை காணவில்லை.
உள்ளே சென்று பார்த்த போது கல்லாப்பெட்டி திறந்து கிடந்தது அதிலிருந்து பணம் இல்லாததை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
இது குறித்து தகவல் அறிந்த சீர்காழி போலீசார் விரைந்து வந்து சம்பவ இடத்தில் விசாரணை நடத்தி வருகின்றனர்.
- மோட்டார் சைக்கிளில் 5 மூட்டை ரேசன் அரிசி மூட்டைகளை கடத்தி சென்றனர்.
- ரேசன் அரிசி மூட்டைகள் நுகர்பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு போலீசாரிடம் ஒப்படைத்தார்.
தரங்கம்பாடி:
மயிலாடுதுறை மாவட்ட த்தின் பல்வேறு இடங்களில் உள்ள ரேசன் கடைகளில் நுகர்வோருக்கு இலவசமாக விநியோகிப்பதற்காக வழங்கப்பட்ட அரிசி மற்றும் குறைந்த விலையில் விற்பனை செய்வதற்காக வழங்கப்படும் சர்க்கரை, பாமாயில் உள்ளிட்ட அத்தியாவசிய பொருள்கள் வெளிச்சந்தைக்கு விற்பனை செய்யப்படுவதாக மாவட்ட நிர்வாகத்திற்கு புகார் வந்தது.
இதையடுத்து பறக்கும் படை தனி தாசில்தார் ஜெனிட்டா மேரி தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தார்.
தொடர்ந்து, நல்லத்துக்குடி ரேசன் கடையில் உள்ள அரிசி கள்ளச்சந்தையில் விற்பனை செய்யப்படுவதாக அவருக்கு ரகசிய தகவல் கிடைத்ததை தொடர்ந்து அங்கு விரைந்தார்.
பின்னர், கடையின் அருகில் 2 நபர்கள் தனித்தனி மோட்டார் சைக்கிளில் 5 மூட்டை ரேசன் அரிசி மூட்டைகளை கடத்தி சென்றது கண்டறியப்பட்டது.
விசாரணையில் அந்த அரிசி மூட்டைகள் நல்லத்துக்குடி ரேசன் கடையில் இருந்து வாங்கி சென்றது என்பது உறுதியானது.
இதையடுத்து ரேசன் அரிசி மூட்டைகள் மற்றும் மோட்டார் சைக்கிளை தனி தாசில்தார் ஜெனிட்டாமேரி பறிமுதல் செய்து அவற்றை நுகர்பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு போலீசாரிடம் ஒப்படைத்தார்.
இதையடுத்து போலீசார் வழக்குபதிவு செய்து கடத்தலில் ஈடுபட்டவர்களை கைது செய்தனர்.
மேலும், இதுகுறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- கல்லாவில் இருந்த ரூ.70 ஆயிரத்தை மர்மநபர்கள் திருடி சென்றனர்.
- ஜவுளி கடையில் இருந்த சி.சி.டி.வி. கேமராவை உடைத்து விட்டு தப்பி சென்றனர்.
சீர்காழி:
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியின் பிரதான பகுதியான கடைவீதியில் காய்கறி மார்க்கெட் அமைந்துள்ளது. இந்த மார்க்கெட்டில் வாழைப்பழம் கடை வைத்து நடத்தி வருபவர் நல்லமுத்து.
நேற்று வழக்கம்போல் தனது கடையை பூட்டிவிட்டு சென்றுள்ளார்.இன்று காலை கடையை திறக்க வந்தார்.அப்போது கடையின் பூட்டு உடைக்கப்பட்டு கிடந்தது.
உள்ளே சென்று பார்த்த போது கல்லாப்பெட்டியில் இருந்த ரூபாய் 70 ஆயிரத்தை மர்ம நபர்கள் திருடி சென்றது தெரிய வந்தது. மேலும் அதே மார்க்கெட் பகுதியில் உள்ள பாஸ்கரன் என்பவரது பூக்கடை கதவினை உடைத்து மர்ம நபர்கள் திருட்டு முயற்சியில் ஈடுபட்டனர்.
அருகில் காமராஜர் வீதி உள்ள ராகுல் பழக்கடையில் புகுந்த மர்ம நபர்கள் அங்கே கல்லாப்பெட்டியில் இருந்த ரூபாய் 8000 யை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றனர்.
அருகில் இருந்த நாராயணன் பூக்கடையில் இருந்த கல்லாப்பெட்டி எடுத்து சென்று சில மீட்டர் தூரத்தில் வீசிவிட்டு அதில் இருந்து செல்போனை திருடிய நபர்கள் அதன் அருகாமையில் இருந்த பேன்சி கடையில் புகுந்து திருட்டு முயற்சியில் ஈடுபட்டனர்.
இதைப்போல் கடைவீதியில் இருந்த மற்றொரு பழக்கடையிலும் கல்லாப் பெட்டியில் இருந்த பணத்தையும் அருகில் இருந்த துணிக்கடையில் இருந்த சிசிடிவி கேமராவை உடைத்தும் தப்பிச் சென்றனர்.
இது குறித்து தகவல் அறிந்த சீர்காழி இன்ஸ்பெக்டர் சிவக்குமார் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று திருட்டு நடைபெற்ற கடைகளில் விசாரணை நடத்தினார்.
மேலும் அப்பகுதியில் இருந்த சி சி டிவி கேமரா காட்சி பதிவுகளை ஆய்வு செய்து போலீசார் கொள்ளை சம்பவத்தில் ஈடுப்பட்ட மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.
சீர்காழியின் பிரதான மக்கள் அதிகம் கூடும் மையப் பகுதியில் அடுத்தடுத்து 6 கடைகளில் மர்ம நபர்கள் திருடிச் சென்ற சம்பவம் வணிகர்கள் இடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது. இரவு நேர ரோந்து பணியை போலீசார் தீவிரப்படுத்தி கண்காணிக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
- கருணாநிதி படத்துக்கு மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது.
- கருப்பு பேட்ஜ் அணிந்து மூவலூரில் இருந்து சித்தர்காடு அண்ணா சிலை வரை மவுன ஊர்வலம் சென்றனர்.
தரங்கம்பாடி:
மயிலாடுதுறை திமுக மேற்கு ஒன்றிய செயலாளர் மூவலூர் மூர்த்தி தலைமை யில் மூவலூர் கடைத்தெருவில் வைக்கப்பட்டிருந்த முன்னாள் முதல்வரும், திமுக தலைவருமான கருணாநி தியின் 5-ம் ஆண்டு நினைவு அஞ்சலி முன்னிட்டு அவருடைய படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
இதனைத் தொடர்ந்து கருப்பு பேஜ் அணிந்து அமைதி பேரணையாக மூவலூரில் இருந்து புறப்பட்டு சித்தர்காடு அண்ணா சிலை வரை மவுன ஊர்வலம் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் முன்னால் எம்.எல்.ஏ. பாலஅருட்ச்செல்வன், வழக்கறிஞ்சர் அணி சேசோன், ஒன்றிய அவைத் தலைவர் வழக்கறிஞர் பாலு, ஒன்றிய குழு தலைவர் காமாட்சி மூர்த்தி, ஒன்றிய கவுன்சிலர்கள் மாப்படுகை சிவக்குமார், வில்லியநல்லூர் காமராஜ், நீடூர் ஏ.கே .எஸ். பதர்நிஷா நஜிம், கங்கனபுத்தூர் மும்தாஜ் இப்ராஹிம்,அருள்மொழி தேவன் ஊராட்சி மன்ற தலைவர் கோமதி தமிழரசன், சித்தர்காடு ஊராட்சி மன்ற தலைவர் ரத்தினவேல், உள்ளீட்ட ஏராளமான திமுக வினர் கலந்து கொண்டனர்.






