search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மயிலாடுதுறையில், செவிலியர்கள் ஆர்ப்பாட்டம்
    X

    மயிலாடுதுறையில் செவிலியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

    மயிலாடுதுறையில், செவிலியர்கள் ஆர்ப்பாட்டம்

    • கொரோனா காலங்களில் பணியாற்றிய செவிலியர்களுக்கு ஊக்கத்தொகை வழங்க வேண்டும்.
    • ஆர்ப்பாட்டத்தில் 14 அம்ச கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.

    தரங்கம்பாடி:

    மயிலாடுதுறையில் தமிழ்நாடு அரசு அனைத்து சுகாதார செவிலியர்கள் சங்கம் சார்பில் 14 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் அலுவ லகம் முன்பு நடை பெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட தலைவர் கீதா தலைமை வகித்தார்.

    துணைத் தலைவர் தமிழ்ச்செல்வி செயலாளர் நிர்மலா, பொருளாளர் ஜெயசுதா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    ஆர்ப்பாட்டத்தில் டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி மகப்பேறு நிதி உதவி திட்டத்தில் செவிலியர்களுக்கு பணிச்சுமையை குறைக்க வேண்டும், முற்றிலும் பழுதடைந்த துணை மைய கட்டிடத்தில் தங்கியுள்ள செவிலியர்களுக்கு வாடகை பிடித்தம் செய்வதை நிறுத்தவும், ஏற்கனவே பிடித்தம் செய்த தொகையை திரும்ப தரவும் வலியுறுத்தியும், ஐந்து வருடங்கள் பணி முடித்தவர்களுக்கு கிரேட் 2 மற்றும் 10 ஆண்டுகள் பணி முடித்தவர்களுக்கு கிரேடு 1 ஆகவும் அடுத்த கட்ட ஊதிய விகிதத்தில் நிர்ணயம் செய்திட போடப்பட்ட அரசாணையை அமல்படுத்த வேண்டும்.

    கொரோனா காலங்களில் பணிபுரிந்த செவிலியர்களுக்கு ஊக்கத்தொகை வழங்க வலியுறுத்தி உள்ளிட்ட 14 அம்ச கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.

    இந்த ஆர்ப்பாட்டத்தில் கிராமப்புற சுகாதார செவிலியர்கள், துணை செவிலியர்கள், பகுதி சுகாதார செவிலியர்கள், சமுதாய சுகாதார செவிலியர்கள் என சுமார் 100 பேர் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினர்.

    Next Story
    ×