என் மலர்
மயிலாடுதுறை
இந்நிலையில் இக்கோவிலில் தருமபுரம் ஆதீனம் 27-வது குருமகாசந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள் அருளாசியின்படி, வைத்தியநாதர்சுவாமி சன்னதி நேர் எதிரே உள்ள கொடிமரத்திற்கு தங்க தகடுகள் பதிக்கும் பணி தொடங்கியது.
கோவிலுக்கு 5 கிலோ தங்க கட்டிகள் காணிக்கையாக வரப்பெற்றதையடுத்து இதனை தகடுகளாக மாற்றும் வகையிலான பணிகள் தொடங்கி நடைபெற்று வந்தது. இந்நிலையில் கொடிமரத்திற்கு தங்க ரேக்குகள், அடி பகுதி தாமரை வடிவிலான பத்ம பீடம் ஆகியவை தயார் செய்யப்பட்டு அவற்றை கொடிமரத்தில் பிரதிஷ்டை செய்யப்பட்டது. முழுவதுமாக தங்கத்தால் கொடிமரம் பொருத்தப்பட்டு இன்று கும்பாபிஷேக விழா நடந்தது.
முன்னதாக 2 கால யாகசாலை பூஜைகள் நேற்று தொடங்கியது. இன்று 2-ம் கால யாகசாலை பூஜைகள் முடிவடைந்து, பூர்ணாஹூதி, தீபாராதனை நடந்தது தொடர்ந்து புனிதநீர் அடங்கிய கடங்கள் மேள, தாளங்களுடன் புறப்பட்டு கோவிலை வலம் வந்து கொடிமரத்தில் புனித நீர் ஊற்றப்பட்டு கும்பாபிஷேகம் நடந்தது.
இந்த விழாவில் தருமபுரம் ஆதீனம் 27-வது குருமகாசந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள், கோவில் கட்டளைத் திருநாவுக்கரசு தம்பிரான் சுவாமிகள், சீர்காழி கட்டளை விசாரணை சொக்கலிங்கம் தம்பிரான் சுவாமிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். இதில் பக்தர்கள் அனுமதிக்கப்படவில்லை.
மணல்மேட்டை அடுத்த இளந்தோப்பு ஊராட்சியில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தை தரம் உயர்த்த வேண்டும். இங்கு 24 மணி நேரமும் மருத்துவர், செவிலியரை பணியாற்றிட நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சார்பில் இளந்தோப்பு கடைவீதியில் நேற்று சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது. போராட்டத்திற்கு கிளை செயலாளர் மகேந்திரன் தலைமை தாங்கினார்.
இதில் மாவட்ட செயற்குழு உறுப்பினர் மாரியப்பன், வட்ட செயலாளர் மேகநாதன், மாவட்டக்குழு உறுப்பினர் ரவீந்திரன், வட்டக்குழு உறுப்பினர் ராஜேஷ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
தலைஞாயிறு என்.பி.கே.ஆர்.ஆர். கூட்டுறவு சர்க்கரை ஆலையை உடனடியாக திறக்க வேண்டும், இளந்தோப்பு ஊராட்சியில் 30 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட தொகுப்பு வீடுகளை இடித்துவிட்டு, புதிய வீடுகள் கட்டித்தர வேண்டும். இளந்தோப்பு-பட்டவர்த்தி சுடுகாட்டு சாலையை செப்பனிட வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டத்தில் கோஷங்கள் எழுப்பப்பட்டன.
இதுகுறித்து தகவல் அறிந்த மயிலாடுதுறை தாசில்தார் ராகவன், வட்டார வளர்ச்சி அலுவலர் விஜயலெட்சுமி, வட்டார சுகாதார கண்காணிப்பாளர் பாஸ்கரன் மற்றும் மணல்மேடு போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில், சர்க்கரை ஆலையை திறப்பது அரசின் கொள்கை முடிவு என்பதால் இதுகுறித்து அரசின் கவனத்துக்கு கொண்டு செல்வது என்றும், மற்ற பிரச்சி்னைகளுக்கு விரைவில் நிரந்தர தீர்வு ஏற்பட நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
இதை தொடர்ந்து மறியலை கைவிட்டு அங்கிருந்து அவர்கள் கலைந்து சென்றனர்.
சத்குரு சித்தர் சுவாமிகளின் 58-வது ஆண்டு சித்தி தினத்தை முன்னிட்டு, சுவாமி ஓங்காரநந்தா என்பவர், தனது சீடர்களுடன் மயிலாடுதுறை அருகே மாப்படுகை சுடுகாட்டில் விநோத வழிபாடு மற்றும் சிறப்பு பூஜை நடத்தினார்.
சுடுகாட்டில் உள்ள ஒவ்வொரு சமாதிக்கும், பழங்கள், வெற்றிலைப்பாக்கு, இனிப்பு பண்டங்கள் வைத்து வழிபாடு செய்யப்பட்டது. இதனை தொடர்த்து 50கிலோ அரிசி கொண்டு சாதம் படைக்கப்பட்டு, ஒரே இடத்தில் குவியலாக வைத்து, அதில், சாம்பார், மோர், ரசம், அப்பளம், வடை, பாயாசம், பழங்கள், இனிப்புப் பொருட்கள் கொண்டு மகா படையல் செய்யப்பட்டது.
தொடர்ந்து மகா படையலுக்கு தீபாராதனை காட்டப்பட்டது. சுடுகாட்டில் உள்ள ஒவ்வொரு சமாதிக்கும் தனித்தனியே தீபாராதனை காட்டப்பட்டது. கொரோனா நீங்க வேண்டி சிவாய மந்திரத்தை 108 முறை கூறி கூட்டுப்பிரார்த்தனை செய்தனர். பொதுமக்களுக்கு படையல் செய்யப்பட்ட உணவுப்பண்டங்கள் அங்கேயே வழங்கப்பட்டது. அவற்றை சுடுகாட்டிலேயே உண்டனர்.
இது குறித்து சுவாமி ஓங்காரநந்தா கூறும்போது, சுடுகாடு என்பது புனிதமான இடமாகும். இங்கு கண்ணுக்குத் தெரியாத சூட்சும ரூபத்தில், லட்சக்கணக்கான ஆன்மாக்கள் வசிக்கின்றன. இறந்தவர்களின் ஆன்மா சாந்தியடைந்தால் நோய்கள் நீங்கும். அவர்கள் அமைதி அடைய வேண்டும். அவர்கள் அமைதி அடைந்தால், இயற்கை சீற்றங்கள், விபத்துக்கள் ஏற்படாது. இந்தியாவில் உள்ள மயானங்களை தூய்மைபடுத்தவேண்டும் என்றார்.
சீர்காழி:
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே கீழமூவர்கரை கிராமத்தை சேர்ந்த மீனவர்களான கர்ணன், மாதவன் உள்ளிட்ட ஆறு குடும்பத்தினரை மீனவ கிராமம் தலைவர் ஊரைவிட்டு ஒதுக்கி வைத்துள்ளார். இதனால் அவர்கள் மளிகை கடை, கோவிலுக்கு செல்லகூடாது. கிராம மக்கள் யாரிடனும் பேசக்கூடாது, எந்த ஒரு பொருளும் கொடுத்து வாங்க கூடாது என கட்டுபாடுகள் விதிக்கப்பட்டன.
இதுகுறித்து பாதிக்கப்பட்டவர்கள் சீர்காழி தாசில்தார் சண்முகத்திடம் புகார் மனு அளித்தனர். அதன்பேரில் தாசில்தார் சண்முகம், துணை போலீஸ் சூப்பிரண்டு லாமெக் தலைமையில் சமாதான கூட்டம் நேற்று நடைபெற்றது. இதில் கிராம பொறுப்பாளர்கள் கிராம மக்களை அழைத்து பேசி முடிவு தெரிவிப்பதாக தெரிவித்து சென்றனர்.
இந்நிலையில் ஊரை விட்டு ஒதுக்கி வைத்த குடும்பத்தினரை சேர்ந்த 5 பேர் கீழமூவர்கரை கிராமத்துக்குள் வந்தனர். இதனையறிந்த சிலர் அவர்களை கட்டையால் சரமாரியாக தாக்கி விட்டு தப்பி ஓடினர். இந்த தாக்குதலில் 5 பேரும் பலத்த காயமடைந்தனர்.
இதையடுத்து அவர்கள் சீர்காழி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த சம்பவத்தால் கீழமூவர்கரை கிராமத்தில் தொடர்ந்து பதட்டம் நிலவுகிறது. பாதுகாப்புக்காக ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். இது பற்றி திருவெண்காடு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதற்கிடையே பாதிக்கப்பட்ட மீனவ குடும்பத்தினர் ஊரை காலி செய்து குழந்தைகளுடன் அரசு மருத்துவமனையில் குடும்பம் குடும்பமாக தஞ்சமடைந்துள்ளனர்.
மூன்று தளங்களில் அமைந்துள்ள இந்த கோவில் முதல் தளத்தில் பிரம்மபுரீஸ்வரரும், இரண்டாவது தளத்தில் மலை மீது சிவன்-பார்வதி கயிலாயக் காட்சியை உணர்த்தும் தோணியப்பர் உமாமகேஸ்வரர் கோலத்திலும், அதற்கு மேல் உள்ள மூன்றாவது தளத்தில் முத்து சட்டைநாதர் எனவும் மூன்று விதமாக சிவன் ஒரே கோவிலில் அருள்பாலிக்கிறார்.
அஷ்ட பைரவர்களுக்கும் தனி சன்னதியாக உள்ள இந்த கோவில் பைரவ ஷேத்திரம் என்று கூறப்படுகிறது. சமயக் குரவர்களால் தேவாரம் பாடப்பெற்ற இந்த கோவிலில் 1991-ம் ஆண்டு குடமுழுக்கு நடைபெற்றது. அதன் பின்னர் 30 ஆண்டுகளுக்கு பிறகு தருமபுரம் ஆதீன 27-வது மடாதிபதி மாசிலாமணி தேசிகர் ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள் ஏற்பாட்டின்படி குடமுழுக்கிற்கான திருப்பணிகள் நேற்று ெதாடங்கின.
இதனை முன்னிட்டு நேற்று முன்தினம் இரண்டு கால யாகசாலை பூஜைகள் தொடங்கின. தொடர்ந்து நேற்று காலை சிறப்பு வழிபாடு பூர்ணாஹுதி மற்றும் மகாதீபாராதனை நடைபெற்றது. தொடர்ந்து கோவிலின் ஈசானிய மூலையான வடகிழக்கு மூலையில் சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு 27-வது மடாதிபதி மாசிலாமணி தேசிகர் ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள் அடிக்கல் நாட்டினார்.
விழாவில் மதுரை ஆதீனம் ஹரிஹர தேசிகர் ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள், திருப்பனந்தாள் காறு பாறு சபாபதி தம்பிரான் சுவாமிகள், சீர்காழி கட்டளை விசாரணை சொக்கலிங்கம் தம்பிரான் சுவாமிகள், மாணிக்கவாசகர் தம்பிரான் சுவாமிகள் மற்றும் திரளான முக்கிய பிரமுகர்கள் பொதுமக்கள் பங்கேற்றனர். 30 ஆண்டுகளுக்கு பிறகு சீர்காழி சட்டநாதர் கோவில் குடமுழுக்கு பணிகள் தொடங்கி இருப்பதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.






