என் மலர்tooltip icon

    செய்திகள்

    இளந்தோப்பு கடைவீதியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் சாலை மறியலில் ஈடுபட்ட போது எடுத்த படம்.
    X
    இளந்தோப்பு கடைவீதியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் சாலை மறியலில் ஈடுபட்ட போது எடுத்த படம்.

    மணல்மேடு அருகே மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் சாலை மறியல்

    மணல்மேடு அருகே சுகாதார நிலையத்தை தரம் உயர்த்தக்கோரி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
    மணல்மேடு:

    மணல்மேட்டை அடுத்த இளந்தோப்பு ஊராட்சியில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தை தரம் உயர்த்த வேண்டும். இங்கு 24 மணி நேரமும் மருத்துவர், செவிலியரை பணியாற்றிட நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சார்பில் இளந்தோப்பு கடைவீதியில் நேற்று சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது. போராட்டத்திற்கு கிளை செயலாளர் மகேந்திரன் தலைமை தாங்கினார்.

    இதில் மாவட்ட செயற்குழு உறுப்பினர் மாரியப்பன், வட்ட செயலாளர் மேகநாதன், மாவட்டக்குழு உறுப்பினர் ரவீந்திரன், வட்டக்குழு உறுப்பினர் ராஜேஷ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    தலைஞாயிறு என்.பி.கே.ஆர்.ஆர். கூட்டுறவு சர்க்கரை ஆலையை உடனடியாக திறக்க வேண்டும், இளந்தோப்பு ஊராட்சியில் 30 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட தொகுப்பு வீடுகளை இடித்துவிட்டு, புதிய வீடுகள் கட்டித்தர வேண்டும். இளந்தோப்பு-பட்டவர்த்தி சுடுகாட்டு சாலையை செப்பனிட வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டத்தில் கோஷங்கள் எழுப்பப்பட்டன.

    இதுகுறித்து தகவல் அறிந்த மயிலாடுதுறை தாசில்தார் ராகவன், வட்டார வளர்ச்சி அலுவலர் விஜயலெட்சுமி, வட்டார சுகாதார கண்காணிப்பாளர் பாஸ்கரன் மற்றும் மணல்மேடு போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில், சர்க்கரை ஆலையை திறப்பது அரசின் கொள்கை முடிவு என்பதால் இதுகுறித்து அரசின் கவனத்துக்கு கொண்டு செல்வது என்றும், மற்ற பிரச்சி்னைகளுக்கு விரைவில் நிரந்தர தீர்வு ஏற்பட நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

    இதை தொடர்ந்து மறியலை கைவிட்டு அங்கிருந்து அவர்கள் கலைந்து சென்றனர்.
    Next Story
    ×