என் மலர்
செய்திகள்

கோப்பு படம்
சீர்காழி பகுதியில் கொரோனா தடுப்பூசி முகாம்
சீர்காழி ஒன்றியம் திட்டை ஊராட்சியில் இரண்டாம் கட்ட கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெற்றது.
சீர்காழி:
சீர்காழி ஒன்றியம் திட்டை ஊராட்சியில் இரண்டாம் கட்ட கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெற்றது. முகாமிற்கு ஊராட்சி மன்ற தலைவர் பெரியசாமி தலைமை தாங்கினார். வட்டார மருத்துவ அலுவலர் ராஜ்மோகன் வரவேற்று பேசினார். முகாமில் நூற்றுக்கும் மேற்பட்ட பொதுமக்களுக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டது. முன்னதாக கொரோனா பரிசோதனை முகாம் நடைபெற்றது. இதில் மருத்துவர்கள், செவிலியர்கள், ஊராட்சி மன்ற துணை தலைவர், ஊராட்சி மன்ற உறுப்பினர்கள், அங்கன்வாடி பணியாளர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர். இதேபோல் சீர்காழி அருகே சட்டநாதபுரம் ஊராட்சியில் தடுப்பூசி முகாம் நடைபெற்றது. முகாமிற்கு ஊராட்சி மன்ற தலைவர் தட்சிணாமூர்த்தி தலைமை தாங்கி முகாமை தொடங்கி வைத்தார். இதில் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு தடுப்பூசி போட்டுக்கொண்டனர். முடிவில் ஊராட்சி செயலாளர் அன்பரசன் நன்றி கூறினார். இதேபோல் சீர்காழி நகர் பகுதியில் நகராட்சி ஆணையர் தமிழ்ச்செல்வி தலைமையில் கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெற்றது. இதில் ஏராளமானோர் கலந்துகொண்டு தடுப்பு ஊசி போட்டுக்கொண்டனர்.
Next Story






