என் மலர்tooltip icon

    மதுரை

    • மதுரை மெட்ரோ ெரயில் திட்டத்திற்கு அறிக்கை தயாரிக்கும் பணி மும்முரமாக நடந்து வருகிறது.
    • 75 நாட்களுக்குள் தயாரித்து முடிக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டு உள்ளது.

    மதுரை

    தமிழ்நாட்டில் மக்கள் தொகை அதிகம் உள்ள நகரங்களில் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில் மெட்ரோ ெரயில் சேவைகளை தொடங்க மத்திய-மாநில அரசுகள் நடவடிக்கை எடுத்து வருகின்றன.

    அந்த வகையில் மதுரை யில் திருமங்கலம் முதல் ஒத்தக்கடை வரை 31 கி.மீ. தொலைவுக்கு, 18 ெரயில் நிலையங்களுடன் மெட்ரோ ரயில் சேவை செயல்படுத்துவதற்கான பணிகள் நடந்து வருகின்றன. இதற்கான விரிவான திட்ட அறிக்கை தயாரிப்பதற்கான டெண்டர் அறிவிப்பு கடந்த பிப்ரவரி மாதம் வெளியிடப்பட்டது. இந்த டெண்டரில் 4 நிறுவனங்கள் கலந்து கொண்டன. அதில் ஒரு நிறுவனத்துக்கு 1.35 கோடி ரூபாய் மதிப்பீட்டில் டெண்டர் ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது. அவர்கள் இது தொடர்பாக மதுரை மாவட்டம் முழுவதி லும் ஆய்வு நடத்தினார்கள்.

    இதன் அடிப்படையில் மதுரை மெட்ரோ ெரயில் திட்டத்திற்கான விரிவான சாத்தியக்கூறு அறிக்கை தயார் செய்யப்பட்டது. இதற்கிடையே மதுரை மெட்ரோ ெரயில் திட்டத்திற்கு விரிவான திட்ட அறிக்கை தயாரிப்பதற்கான ஆலோசகராக இன்னொரு பொறியியல் நிறுவனத்துக்கு ஒப்பந்தம் வழங்கப்பட்டு உள்ளது.

    • மதுரை ராம நவமியையொட்டி கோவில்களில் சிறப்பு வழிபாடு நடந்தது.
    • இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    மதுரை

    ராமபிரான் அவதரித்த தாக நாளாக கருதப்படும் ராமநவமி தினம் இன்று கொண்டாடப்படுகிறது. பஞ்சாங்க குறிப்புகளின் படி நவமி திதி என்பது நேற்று 29-ந் தேதி இரவு 11.49 மணிக்கு தொடங்கி நாளை (31-ந் தேதி) அதி காலை 1.40 மணி வரை ஆகும்.

    நாடு முழுவதும் ராமநவமி வழிபாடு இன்று நடந்தது. ஜோதிட சாஸ்திரப்படி ராமர் பிறப்பதற்கு முன்பு உள்ள 9 நாட்கள் ஒரு விரத முறையாகவும், அதன் பிறகு வரும் 9 நாட்கள் ஒரு விரத முறையாகவும் அனுசரிக்கப் பட்டு வருகிறது. அதாவது சித்திரை மாதம் சுக்லபட்ச பிரதமை திதியில் இருந்து நவமி திதி வரை உள்ள 9 நாள் 'கர்ப்போஸ்தவம்' விரத காலமாகும். அடுத்த படியாக சித்திரை மாத சுக்லபட்ச நவமி திதி யில் இருந்து அடுத்து வரும் 9 நாட்கள் 'ஜன்மோதீஸவம்' விரத காலமாகும்.

    ராமநவமியின்போது காலை முதல் உணவு அருந்தாமல் விரதம் இருந்து ராமபிரானை வணங்கி வழிபடுபவர்களுக்கு ஆஞ்ச நேயரின் அருள் கிடைக்கும். குடும்பத்தை விட்டுப் பிரிந்த வர்கள் ஒன்று சேருவர். குடும்ப நலம் பெருகி, வறுமை, பிணி அகலும் என்பது நம்பிக்கை.

    இன்று ராமநவமியை யொட்டி மதுரை கூடலழகர் பெருமாள் கோவில் தென்மாட வீதி கமல ஜெயவீர ஆஞ்சநேயர் கோவில், மதனகோபால சுவாமி கோவில், மணி நகரம் இஸ்கான் கோவில் கூடலழகர் பெருமாள் கோவில், திருமோகூர் காளமேகப்பெருமாள் கோவில், ஒத்தக்கடை யோக நரசிம்மர் கோவில், தெற்கு கிருஷ்ணன் கோவில், தல்லாகுளம் பிரசன்ன வெங்கடாஜலபதி கோவில், மதுரை மேலமடை தாசில்தார் நகர் சவுபாக்கியா கோவில், சோழவந்தான் சந்தானகிருஷ்ணன் கோபால்சாமி கோவில், திருப்பரங்குன்றம் வீர ஆஞ்சநேயர் கோவில் உள்ளிட்ட கோவில்களில் ராமநவமி விழா கடந்த 10 நாட்களாக நடந்து வருகிறது.

    இதில் முக்கிய நிகழ்ச்சியான ராமநவமி விழா இன்று கொண்டா டப்படுகிறது. இன்று கோவில் கொடிமரத்தின் முன்பு ராமர், சீதை, லட்சுமணன், அனுமனுடன் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலித்தனர். திருமஞ்சனம் நடந்தது. லட்சுமி நாராயணர், சஞ்சீவி ஆஞ்ச நேயர், யோக நரசிம்மருக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனை நடந்தது. பின்னர் பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    • பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்டார்.
    • அ.தி.மு.க.வினர் இனிப்பு வழங்கி கொண்டாடினர்.

    திருமங்கலம்

    அ.தி.மு.க பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிசாமி போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார். இதையடுத்து மதுரை புறநகர் மேற்கு மாவட்டம் திருமங்கலம் தேவர் திடலில் அ.தி.மு.க.வினர் பட்டாசுகளை வெடித்தும், பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கியும் கொண்டாடினர்.

    மாவட்ட துணைச் செயலாளர் வக்கீல் தமிழ்ச்செல்வம், ஒன்றிய செயலாளர் வக்கீல் அன்பழகன், நகர செயலாளர் விஜயன், மாவட்ட பேரவைச் செயலாளர் சாத்தங்குடி தமிழழகன், மாவட்ட மீனவரணி செயலாளர் சவுடார்பட்டி சரவணபாண்டி, வர்த்தகர் பிரிவு செயலாளர் சதீஸ் சண்முகம், மாவட்ட எம்.ஜி.ஆர். மன்ற இணைச் செயலாளர், ஒன்றிய கவுன்சிலர் கரடிக்கல் ஆண்டிச்சாமி, மாவட்ட ஐ.டி. விங் செயலாளர் சிங்கராஜ் பாண்டியன், ஒன்றிய கவுன்சிலர் உச்சப்பட்டி செல்வம்.பொதுக்குழு உறுப்பினர் சுமதி சாமிநாதன், மாவட்ட மாணவரணி இணை செயலாளர் வாகைகுளம் சிவசக்தி, பேரவை பாண்டி, வழக்கறிஞர்கள் முத்துராஜா, வெங்கடேசுவரன், காளி, நிர்வாகிகள் சாமிநாதன் கோடீஸ்வரன் செக்கானூரணி சிவன்காளை, காசி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    • பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்டார்.
    • அ.தி.மு.க.வினர் இனிப்பு வழங்கி கொண்டாடினர்.

    மேலூர்

    அ.தி.மு.க. பொதுச்செயலாளர் தேர்தல் செல்லும் என சென்னை ஐகோர்ட்டு தீர்ப்பு வழங்கியதை தொடர்ந்து அ.தி.மு.க.வின் பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்டார்.

    இதைத்தொடர்ந்து மேலூர் தெற்கு ஒன்றிய அ.தி.மு.க. சார்பில் பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. இதையொட்டி மதுரை புறநகர் கிழக்கு மாவட்ட அம்மா பேரவை செயலாளரும், முன்னாள் எம்.எல்.ஏ.வுமான தமிழரசன் தலைமையில் மேலூர் தெற்கு ஒன்றிய செயலாளரும், மேலூர் யூனியன் சேர்மனுமான பொன்னுச்சாமி கட்சி தொண்டர்களுடன் ஊர்வலமாக சென்று மேலூர் செக்கடி கக்கன் சிலை முன்பு பட்டாசு வெடித்து பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினார்.

    இதில் மேலூர் நகர்மன்ற உறுப்பினர் திவாகர் தமிழரசன், நகர் பொருளாளர் கந்தசாமி, கிடாரிப்பட்டி முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் சுரேஷ், தலைமைக் கழக பேச்சாளர் மலைச்சாமி, பேரவை இணைச் செயலாளர் உதயசங்கர், முன்னாள் ஒன்றிய கவுன்சிலர் அரிசி கண்ணன், முன்னாள் நகர செயலாளர் நாகசுப்பிரமணியன், முன்னாள் நகர் மன்ற உறுப்பினர்கள் ஷாஜஹான், காதர்மைதீன், சக்கரவர்த்தி, பாலகிருஷ்ணன், ராமலிங்கம் மற்றும் நிர்வாகிகள் சீனிவாசன், தவபாண்டி, வழக்கறிஞர்கள் பாண்டிச்செல்வம், கண்ணன், திருமேனி, அமைப்புசாரா ஓட்டுனர் அணி செயலாளர் அர்ச்சுனன், கிடாரிப்பட்டி கூட்டுறவு சங்க தலைவர் ராமகிருஷ்ணன், வட்ட செயலாளர்கள் பாண்டித்துரை, சரவணன், திருநாவுக்கரசு உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • மு.க. ஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு நலத்திட்ட உதவிகள்- மருத்துவ முகாம் நடந்தது.
    • 500-க்கும் மேற்பட்ட ஏழை எளியவர்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கி பேசினார்.

    திருமங்கலம்

    தமிழகம் முழுவதும் முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு திருமங்கலம் தொகுதி டி.கல்லுப்பட்டி ஊராட்சி ஒன்றியத்திற் குட்பட்ட முத்தப்பன் பட்டியில் மதுரை தெற்கு மாவட்ட செயலாளர் மணி மாறன் 70 அடி கொடிக் கம்பத்தில் கட்சி கொடியை ஏற்றி வைத்து பொது மக்களுக்கு இனிப்பு வழங்கி னார்.

    இதனைத் தொடர்ந்து முத்தப்பன்பட்டி மற்றும் சுற்றுவட்டார பகுதியைச் சேர்ந்த 500-க்கும் மேற்பட்ட ஏழை எளியவர்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கி பேசினார். தொடர்ந்து டி. குன்னத்தூரில் மதுரை தனியார் மருத்துவமனை சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த சிறப்பு மருத்துவ முகாமினை மாவட்ட செயலாளர் மணி மாறன் தொடங்கி வைத்தார். இதனைத் தொடர்ந்து நல்ல மரம் கிராமத்தில் நடை பெற்ற மருத்துவ முகாமை யும் தொடங்கி வைத்தார்

    இந்நிகழ்ச்சியில் ஒன்றிய செயலாளர் பாண்டியன், நாகராஜ், தனசேகரன், சண்முகம், மதன்குமார் மற்றும் மாவட்ட மாணவ ரணி அமைப்பாளர் பாண்டி முருகன் மற்றும் கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்

    • 9-ந் தேதி மகா தேரோட்டம் நடக்கிறது.
    • திருப்பரங்குன்றம் கோவிலின் தேரில் எண்ணற்ற அழகிய சிற்பங்கள் உள்ளன.

    திருப்பரங்குன்றம் முருகன் கோவிலில் கடந்த 26-ந் தேதி கொடியேற்றத்துடன் பங்குனி பெருவிழா தொடங்கி நடைபெற்று வருகிறது. திருவிழாவின் சிகர நிகழ்ச்சியாக வருகின்ற 9-ந் தேதி மகா தேரோட்டம் நடக்கிறது. இதனையொட்டி முகூர்த்த கால் ஊன்றப்பட்டு கோவில் வாசல் முன்பு நிலை நிறுத்தப்பட்டுள்ள பெரிய தேர் தயார்படுத்தும் பணி தொடங்கியது. 3 கி.மீ. சுற்றளவு கொண்ட கிரிவலப்பாதையில் மகாதேர் வலம் வரும். லட்சக்கணக்கான பக்தர்கள் தேரினைவடம் பிடித்து இழுத்து தரிசனம் செய்கிறார்கள். அரிச்சந்திர மகராஜா வழங்கியதாக செவிவழி செய்தி கூறும் இந்த தேரினை வடம்பிடித்து இழுப்பதற்கு கோவில் உருவான காலம் தொட்டு இன்றுவரை பாரம்பரிய பழக்க வழக்கங்கள் கடைபிடிக்கப்படுகிறது.

    அதன்படி திருப்பரங்குன்றம் அருகே உள்ளபெருங்குடி, பரம்புபட்டி, வலையப்பட்டி, சம்பக்குளம், நிலையூர், கூத்தியார்குண்டு, தோப்பூர், வேடர் புளியங்குளம், தனக்கன்குளம், வடிவேல்கரை, கீழக்குயில்குடி, மேலக்குயில்குடி ஆகிய கிராமங்களுக்கு சென்று தேரினை இழுப்பதற்காக கிராம மக்களுக்கு வெற்றிலை, பாக்கு கொடுத்து அழைப்பு விடுவது நடைமுறையில் உள்ளது. அதன்படி வருகின்ற 2 -ந்தேதி கோவிலில் இருந்து கோவில் முதல் ஸ்தானிகரும், முன்னாள் பேரூராட்சி தலைவருமான சுவாமிநாதன் தலைமையில் வைராவி, கணக்குப்பிள்ளை, நாட்டாண்மைகள், காவல்காரர்கள் ஆகியோர் அந்த கிராமங்களுக்கு நேரடியாக சென்று முக்கியஸ்தர்கள், நாட்டாண்மைகள் மற்றும் முதன்மைக்காரர்களை சந்தித்து வெற்றிலை, பாக்கு மற்றும் திருவிழா பத்திரிக்கை ஆகியவை தட்டில் வைத்து தேரினை இழுக்க வாருங்கள் என்று அழைப்பு விடுக்கிறார்கள்.

    திருப்பரங்குன்றம் கோவிலின் தேரில் எண்ணற்ற அழகிய சிற்பங்கள் உள்ளன. அதில் ஆறுமுகப்பெருமான் தனது திருக்கரத்தில் வேலுக்கு பதிலாக தராசு பிடித்து இருப்பது போன்று ஒரு சிற்பம் உள்ளது. இது நீதி, நேர்மை, நியாயத்தின் அடையாளமாக அமைந்து உள்ளதாகவும், இதனால் ்திருப்பரங்குன்றத்தை தராசுக்கார பூமி என்று அழைப்பதாகவும் கூறுகிறார்கள்.

    • தகவல்அறிந்த போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து போராட்டக்காரர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
    • கால் நடைகளுக்கான தீவனம், மருத்துவ மற்றும் பராமரிப்பு செலவுகள் அதிகரித்து வருகிறது.

    உசிலம்பட்டி:

    தமிழகம் முழுவதும் ஆவின் பால் கொள்முதல் விலையை உயர்த்தி தரவேண்டும் என பால் உற்பத்தியாளர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

    இதே கோரிக்கையை வலியுறுத்தி மதுரை மாவட்டத்திலும் கடந்த 2 வாரங்களாக உசிலம்பட்டி, மேலூர், திருமங்கலம் உள்ளிட்ட பகுதிகளில் பால் உற்பத்தியாளர்கள் சாலையில் பாலை கொட்டி போராட்டம் நடத்தி வருகின்றனர்.

    அதன்படி இன்று காலை உசிலம்பட்டி அருகே உள்ள கருமாத்தூர் சாலையில் பெண்கள் உள்பட 50-க்கும் மேற்பட்ட பால் உற்பத்தியாளர்கள் திரண்டனர். கறவை மாடுகளுடன் வந்த அவர்கள் சாலையில் பாலை கொட்டி திடீரென மறியலில் ஈடுபட்டனர்.

    அப்போது தமிழக அரசு பால் கொள்முதல் விலையை ரூ. 7 முதல் ரூ. 10 வரை உயர்த்தி தரவேண்டும் என வலியுறுத்தி கோஷமிட்டனர். இதில் பால் உற்பத்தியாளர்கள் சங்க மாவட்ட தலைவர் வெண்மணி சந்திரன், செயலாளர் முத்துப்பாண்டி, பொருளாளர் சாமிநாதன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

    இந்த போராட்டம் காரணமாக அந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தகவல்அறிந்த போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து போராட்டக்காரர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அதன்பின் மறியல் கைவிடப்பட்டது.

    இது தொடர்பாக பால் உற்பத்தியாளர்கள் கூறுகையில், கால் நடைகளுக்கான தீவனம், மருத்துவ மற்றும் பராமரிப்பு செலவுகள் அதிகரித்து வருகிறது. இதனால் மாடு உள்ளிட்ட கால்நடைகளை வளர்ப்போர் கடும் சிரமத்தில் உள்ளனர். எனவே தனியார் பால் நிறுவனங்களுக்கு இணையாக ஆவின் நிறுவனம் பால் கொள்முதல் விலையை உயர்த்தி தர வேண்டும்.

    இதுதொடர்பாக அரசு உடனடியாக பேச்சுவார்த்தை நடத்தி தீர்வு காணவேண்டும் என்றனர். 

    • சென்னைக்கு சென்று பார்த்தபோது காரில் இருந்த பணம், துப்பாக்கி உள்ளிட்டவை மாயமாகி இருந்தது.
    • திருடு போன துப்பாக்கி உரிய உரிமம் பெறப்பட்டுள்ளதா? என்பது தொடர்பாக போலீசார் விசாரணை நடந்தி வருகின்றனர்.

    மதுரை:

    கன்னியாகுமரி மாவட்டம் அரசுவிளையை சேர்ந்தவர் பிளாட்பின் (வயது44). பல் டாக்டரான இவர் நேற்று தனது நண்பர்கள் 3 பேருடன் வேலை நிமித்தமாக காரில் சென்னைக்கு புறப்பட்டார். காரில் ரூ.2.40 லட்சம் ரொக்கம், 10 குண்டுகளுடன் கூடிய துப்பாக்கி, செல்போன் ஆகியவை இருந்தது.

    மதியம் மதுரை சிந்தாமணி டோல்கேட் அருகே வந்தபோது, அசதி காரணமாக சாலையோரத்தில் பிளாட்பின் காரை நிறுத்தியுள்ளார். பின்னர் நண்பர்கள் உள்பட 4 பேரும் சில மணிநேரம் தூங்கிவிட்டு பின்னர் சென்னைக்கு சென்றனர்.

    சென்னைக்கு சென்று பார்த்தபோது காரில் இருந்த பணம், துப்பாக்கி உள்ளிட்டவை மாயமாகி இருந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த பிளாட்பின், மதுரை சிந்தாமணி டோல்கேட் பகுதியில் தூங்கியிருந்தபோது மர்ம நபர்கள் காரில் இருந்த பணம், துப்பாக்கிகளை திருடியிருக்கலாம் என சந்தேகித்தார்.

    இது தொடர்பாக உடனடியாக மதுரை வந்த பிளாட்பின் கீரைத்துறை போலீசில் புகார் அளித்தார். அதில், சிந்தாமணி ரிங்ரோட்டில் காரை நிறுத்தி தூங்கியிருந்தபோது, மர்ம நபர்கள் காரில் இருந்த பணம், குண்டுகளுடன் கூடிய துப்பாக்கி, செல்போன், 16 ஏ.டி.எம். கார்டுகள், டிரைவிங் லைசென்ஸ் ஆகியவற்றை திருடிச்சென்றதாக குறிப்பிட்டுள்ளார்.

    இந்த புகாரின் அடிப்படையில் கீரைத்துறை போலீசார் வழக்குப்பதிவு செய்து துப்பாக்கி, பணத்தை திருடிய மர்ம நபர்களை தேடி வருகின்றனர். திருடு போன துப்பாக்கி உரிய உரிமம் பெறப்பட்டுள்ளதா? என்பது தொடர்பாகவும் விசாரணை நடந்து வருகிறது.

    • தமிழுக்கு முன்னுரிமை கொடுத்து வேலைவாய்ப்பில் முன்னுரிமை அளிக்க வேண்டும்.
    • தமிழ் வழியில் பயின்றவர்களை புறக்கணிப்பது ஏற்புடையது அல்ல.

    திருமங்கலம்:

    மதுரை திருமங்கலத்தில் நடந்த நிகழ்ச்சியில் முன்னாள் ஐ.ஏ.எஸ். அதிகாரி சகாயம் கலந்து கொண்டு பேசியதாவது:-

    நான் மதுரை மாவட்ட கலெக்டராக பணியாற்றிய போது மேலூர் அருகே உள்ள கிரானைட் மலையை உடைத்து தமிழக அரசுக்கு ரூ.14 ஆயிரம் கோடி இழப்பு ஏற்படுத்தியதை கண்டுபிடித்தேன். இதற்காக என்னை சென்னைக்கு அழைத்தார்கள். அங்கு எனது பணியை தலைமை செயலர் உள்பட அனைவரும் பாராட்டினார்கள். தொடர்ந்து சென்னையில் இருந்து மதுரைக்கு புறப்பட்டேன்.

    மதுரை விமான நிலையத்தில் இறங்குவதற்கு முன்பே என்னை கலெக்டர் பதவியில் இருந்து மாற்றியதாக தகவல் கிடைத்தது. இதுகுறித்து யோசித்தபோது நேர்மையாக இருந்ததால் பதவி பறிபோய் விட்டதாக நினைத்தேன். 200 கோடி ஆண்டு பழமை வாய்ந்த கிரானைட் மலையை 20 ஆண்டுகளில் உடைத்து எறிந்துவிட்டனர்.

    அதை தடுத்து நிறுத்தியவன் நான், என் சமூகம் என்னை உருவாக்கியிருக்கிறது. அவர்களுக்கு நான் திருப்பி கொடுக்க வேண்டும் என்பதால்தான் நேர்மையாக செயல்பட்டேன். இன்றைக்கு அரசு தேர்வில் வெற்றி பெற்று அதிகாரத்தை பெறுபவர்கள் நேர்மையாக பணியாற்றி ஏழை, எளிய மக்களுக்கு நன்மை செய்ய வேண்டும்.

    ஏழை மாணவர்கள் தான் தமிழ் வழியில் பயின்று வருகிறார்கள். எனவே தமிழுக்கு முன்னுரிமை கொடுத்து வேலைவாய்ப்பில் முன்னுரிமை அளிக்க வேண்டும். தமிழ் வழியில் பயின்றவர்களை புறக்கணிப்பது ஏற்புடையது அல்ல.

    இவ்வாறு அவர் பேசினார்.

    • திடக்கழிவு மேலாண்மை பணிகளுக்கு ரூ1.40 கோடியில் வாங்கப்பட்ட ஹைடெக் மண் அகற்றும் வாகனங்கள் மேயர் தொடங்கி வைத்தார்.
    • பாதாள சாக்கடைகளில் அடிக்கடி அடைப்பு கள் ஏற்படுவதை உடனடியாக சரிசெய்வதற்கு வாங்கப்பட்டுள்ளது.

    மதுரை

    மதுரை மாநகராட்சி பகுதிகளில் பல்வேறு வளர்ச்சிதிட்ட பணியின் கீழ் சாலைகள் அமைத்தல், மழைநீர் வடிகால்கள், பாதா ளச்சாக் கடை பணிகள், தெருவிளக்குகள் பராமரித்தல், தூய்மை பணிகள், கால்வாய்கள் தூர்வாருதல், மழைநீர் சேகரிப்பு கட்ட மைப்பு ஏற்படுத்துதல் உள்ளிட்ட பல்வேறு பணி கள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

    மதுரை மாநகராட்சிக்கு உட்பட்ட வார்டு பகுதிகளில் உள்ள பாதாள சாக்கடைகளில் அடிக்கடி அடைப்பு கள் ஏற்படுவதை உடனடியாக சரிசெய்வதற்கு மாநகராட்சியில் கழிவுநீர் உறிஞ்சு வாகனங்கள் வாங்கப்பட்டு பயன்படுத்தப்பட்டு வருகிறது.

    தற்போது பாதாள சாக்கடை யில் ஏற்படும் மணல்களை மட்டும் பிரித்து உடனுக்குடன் எடுத்து அகற்றுவதற்கு 15 சி.எப்.சி. திட்டத்தின் கீழ் ரூ1.40கோடி மதிப்பீட்டில் 12 புதிய வாகனங்கள் வாங்கப்பட்டு உள்ளது. அந்த வாகனங் களை மேயர் இந்திராணி பொன்வசந்த், ஆணையாளர் சிம்ரன்ஜித் சிங் ஆகியோர் பயன்பாட்டிற்கு கொடி யசைத்து பயன்பாட்டிற்கு தொடங்கி வைத்தனர்.

    இந்த புதிய வாகனத்தின் மூலம் மதுரை மாநகராட்சி பகுதிகளில் உள்ள பாதாள சாக்கடைகளில் ஏற்படும் மணல் அடைப்புகள் உடனுக்குடன் விரைந்து சரி செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இந்த நிகழ்ச்சியில் மண்டலத்தலைவர்கள், நகர பொறியாளர் அரசு, மக்கள் தொடர்பு அலுவலர் மகேஷ்வரன் மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

    • ரோட்டில் கிடந்த பணத்தை போலீஸ் நிலையத்தில் ஏட்டு ஒப்படைத்தார்.
    • தல்லாகுளம் போலீஸ் உதவி கமிஷனர் ஜெகன்நாதன் பாராட்டினார்.

    மதுரை

    மதுரை தல்லாகுளத்தைச் சேர்ந்தவர் நவநீதகிருஷ்ணன். இவர் கடந்த 26-ந்தேதி மோட்டார் சைக்கிளில் வெளியே சென்றார். அப்போது தபால்தந்தி நகருக்கு செல்லும் வழியில் அவர் வைத்திருந்த பணப்பையில் இருந்து ரூ.36 ஆயிரத்து 500 தவறி விழுந்துவிட்டது. இதுபற்றிஅறிந்த நவநீதகிருஷ்ணன் அவர் சென்ற வழியில் தேடிப்பார்த்தார். ஆனால் கிடைக்கவில்லை. இதுபற்றி அவர் தல்லாகுளம் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

    இந்தநிலையில் ஓய்வு பெற்ற போலீஸ் ஏட்டு பொன்னுராஜ் என்பவர் ரோட்டில் கிடந்த பணக்கட்டை கண்டெடுத்தார். அதில் ரூ.36 ஆயிரத்து 500 இருந்தது. அதனை அவர் தல்லாகுளம் போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தார். அது நவநீதகிருஷ்ணன் தவற விட்ட பணம் என்பது தெரியவந்ததால் அவரிடம் ஒப்படைக்கப்பட்டது. தவற விட்ட பணத்தை கண்டெடுத்து ஒப்படைத்த பொன்னுராஜை, தல்லாகுளம் போலீஸ் உதவி கமிஷனர் ஜெகன்நாதன் பாராட்டினார்.

    • குழந்தை தொழிலாளர் ஒழிப்பு மண்டல பயிலரங்கம் நாளை நடக்கிறது.
    • காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறும்.

    மதுரை

    மதுரை தொழிலாளர் துறை இணை ஆணையர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    குழந்தை மற்றும் வளரிளம் பருவ தொழிலாளர்கள் (தடுத்தல் மற்றும் முறைப்படுத்துதல்) சட்டம் 1986-ன் கீழ் குழந்தை தொழிலாளர் முறையினை அகற்றுவதற்கான மாநில செயல் திட்டத்தினை செயல் படுத்துதல் தொடர்பாக ஒருநாள் பயிலரங்கம் நாளை 30-ந்தேதி மதுரை தங்கம் கிராண்ட் ஓட்டலில் நடைபெறுகிறது. மாவட்ட கலெக்டர் அனீஷ் சேகர் தலைமை வகிக்கிறார். காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை பயி லரங்கம் நடைபெறும். இந்தப் பயிலரங்கத்தில் மதுரை மற்றும் திருநெல் வேலி மண்டலத்தில் உள்ள அனைத்து தொழிலாளர் உதவி ஆணையர்கள் (அம லாக்கம்) மற்றும் மதுரை மற்றும் திருநெல்வேலி மண்டலத்தில் உள்ள பிறதுறைகளான தொழிலக பாதுகாப்பு மற்றும் சுகாதார இயக்குனரகம், வேலை வாய்ப்பு மற்றும் பயிற்சி இயக்குனரகம், ஊரக மேம்பாடு, காவல் துறை, சமூகநலத்துறை, கல்வித்துறை, வருவாய் துறை, சமூக பாதுகாப்பு துறை, என்.ஜி.ஓ.க்கள் மற்றும் இதர அமைப்புகளை சார்ந்த அலுவலர்களும் கலந்து கொள்ள உள்ளனர்.

    இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

    ×