என் மலர்tooltip icon

    கிருஷ்ணகிரி

    முகில் செல்லப்பன் இயக்கத்தில் பிரபுதேவா, நிவேதா பெத்துராஜ் நடிப்பில் வெளியாகி இருக்கும் ‘பொன் மாணிக்கவேல்’ படத்தின் விமர்சனம்.
    சென்னையில் தொடர் படுகொலைகள் அதிகமாகி வருகிறது. நீதிபதி, மருத்துவர் என்று பிரபலமான நபர்கள் இதில் கொல்லப்படுகிறார்கள். சரியான சாட்சியம் கிடைக்காமல் காவல்துறை திணறுகிறது. இதனால் காவல்துறையிலிருந்து தண்டிக்கப்பட்ட நேர்மையான அதிகாரியான பிரபுதேவாவை மீண்டும் பணியில் சேர அழைக்கிறார்கள். 

    வேண்டா வெறுப்பாக பணியில் சேரும் பிரபுதேவா ஒரு கட்டத்தில் கொலைக்கான காரணத்தையும் அதன் பின்னால் யார் இருக்கிறார்கள் என்பதையும் கண்டுபிடித்ததோடு மட்டுமல்லாமல் அந்த கும்பலோடு நெருக்கமாகி மேலும் சிலரைக் கண்டுபிடிக்கிறார்.
    ஆனால் அதற்கு மேலும் ஒரு வில்லன் இருக்கிறார். அவர் யார் என்பது தெரிந்து திகைத்து நிற்கிறார் பிரபுதேவா. இறுதியில் அவரை கண்டுபிடித்தாரா? இல்லையா? என்பதை படத்தின் மீதிக்கதை.

    விமர்சனம்

    பிரபுதேவா மிடுக்காக வருகிறார். காவல்துறை மீது இருக்கும் வெறுப்பைக் காட்டுவதும், மனைவி நிவேதா பெத்துராஜ் மீது அன்பைப் பொழிவதுமாக இருக்கிறார். வில்லன் கும்பலோடு அமைதியாக மோதும் அவரது நடிப்பு ரசிக்க வைக்கிறது.

    நிவேதா பெத்துராஜ் மனைவியாக வந்து முத்தங்களை நினைவாக வைத்துத் தேர்வு எழுதுகிறார். டூயட் பாடுகிறார். பிரபுதேவாவுக்காக வில்லன்களிடம் சண்டை போடுகிறார். மற்ற கதாபாத்திரங்கள் எதுவும் மனதில் நிற்கவில்லை.

    விமர்சனம்

    ஒரு நேர்மையான அதிகாரியான பிரபுதேவாவிற்குக் காவல் துறையில் நடக்கும் இக்கட்டான சூழலை படமாக இயக்கி இருக்கிறார் இயக்குனர் முகில் செல்லப்பன். இந்த மாதிரி கதைகள் 90களில் அதிகம் வந்திருப்பதால் பெரியதாக இப்படம் கவரவில்லை. புதிய கற்பனையும் காட்சிகளும் இல்லாததால் மெதுவாக திரைக்கதை நகர்கிறது. நகைச்சுவைக்காக வரும் கான்ஸ்டபிள், ஏன் வருகிறார் என்றே தெரியவில்லை. சஸ்பென்ஸ் என்று நினைத்து கதையை மறைப்பதில் எந்தவித சுவாரஸ்யமும் வரவில்லை.

    டி,இமானின்  இசையில் பின்னணி இசை படம் முடிந்த பிறகும் காதில் ஒலித்துக்கொண்டே இருக்கிறது. கே.ஜி.வெங்கடேஷின் ஒளிப்பதிவு நிறைவு. 

    மொத்தத்தில் ‘பொன் மாணிக்கவேல்’ கம்பீரம் குறைவு.
    ஓசூர் கெலவரப்பள்ளி அணைக்கு நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்தவாறு உள்ளது. இன்று காலை, அணைக்கு வினாடிக்கு 2,563 கன அடி நீர் வந்தது.
    ஓசூர்:

    கர்நாடக மாநிலத்தின் நீர்பிடிப்பு பகுதிகளில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இதேபோல் கிருஷ்ணகிரி மாவட்டத்திலும் நாள்தோறும் தொடர்ந்து பலத்த மழை பெய்து வருகிறது.

    இதனையடுத்து ஓசூர் கெலவரப்பள்ளி அணைக்கு நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்தவாறு உள்ளது. இன்று காலை, அணைக்கு வினாடிக்கு 2,563 கன அடி நீர் வந்தது. அணையின் முழு கொள்ளளவு 44.28 அடி ஆகும். அணையில் 41.33 அடி நீர் இருப்பு இருந்த நிலையில், அணையின் பாதுகாப்பு கருதி வினாடிக்கு 3,060 கனஅடி நீர் தென்பெண்ணை ஆற்றில் வெளியேற்றப்பட்டது. அணையில் அதிகளவு நீர் வரத்து அதிகரித்து ஆற்றில் அதிகளவில் நீர் வெளியேற்றப்படுவதாலும், கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

    இந்தநிலையில் அணையில் ரசாயன கழிவுகள் கலந்து மலை போல் நுரை குவிந்ததால், தரைப்பாலம் வழியாக செல்லும் பொதுமக்கள் மிகவும் அவதியடைந்தனர்.

    தரைப்பாலத்தில் குவிந்த நுரையை, தீயணைப்பு வீரர்கள், தண்ணீரை பீய்ச்சி படித்து சுத்தம் செய்தனர். இதனிடையே, நுரை பொங்கி பார்ப்பதற்கு ரம்மியமாக காட்சியளித்ததால், அந்த வழியாக செல்லும் பொதுமக்கள், நுரை பொங்கி காணப்படுவதை ஆர்வத்துடன் செல்போனில் போட்டோ எடுத்தனர்.
    மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் நடைபெற்று வரும் திருக்கார்த்திகை திருவிழாவில் தங்க ரிஷப வாகனத்தில் சுந்தரேசுவரர்-பிரியாவிடை. வெள்ளி ரிஷப வாகனத்தில் மீனாட்சி அம்மன் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.
    மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் 12 மாதங்களும் திருவிழா நடைபெறும். இதில் கார்த்திகை திருவிழா கடந்த 14-ந் தேதி தொடங்கி நடந்து வருகிறது.

    விழா நாட்களில் காலை-மாலையில் மீனாட்சி, சுந்தரேசுவரர் பஞ்ச மூர்த்திகளுடன் புறப்பாடாகி ஆடி வீதிகளில் வலம் வந்து பக்தர்களுக்கு காட்சி அளித்து வருகிறார்கள்.

    பெரியகார்த்திகையான நேற்று கோவிலில் பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருந்தது. மாலை 6 மணிக்கு பொற்றாமரைகுளம், அம்மன் சன்னதி, சுவாமி சன்னதி, பிரகாரங்கள் உள்ளிட்ட பல்வேறு பகுதியில் லட்ச தீபம் ஏற்றப்பட்டது. மீனாட்சி, சுந்தரேசுவர் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி காட்சி அளித்தனர்.

    பின்னர் அவர்கள் பஞ்ச மூர்த்திகளுடன் புறப்பாடாகி கிழக்கு சித்திரை வீதியில் அம்மன் சன்னதி, சுவாமி சன்னதி முன்பு எழுந்தருளினார்கள். அங்கு இரவு 7 மணிக்கு சொக்கப்பனை தீபம் ஏற்றப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் கோவில் இணை கமிஷனர் செல்லத்துரை மற்றும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.

    மதுரை நேதாஜி ரோட்டில் உள்ள தண்டாயுதபாணி முருகன் கோவிலில் நேற்று காலையில் இருந்தே பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருந்தது. சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது., தங்க கவசத்தில் பக்தர்களுக்கு காட்சி அளித்தார். மாலை 6 மணிக்கு கோவிலில் தீபம் ஏற்பட்டது. பின்னர் சொக்கப்பனை ஏற்றும் நிகழ்வு நடந்து. ஏராளமானோர் தரிசனம் செய்தனர்.
    கிருஷ்ணகிரி அருகே லாட்டரி விற்ற 4 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கிருஷ்ணகிரி பழையபேட்டை பகுதியில் லாட்டரி விற்றதாக ஜாகிர் உசேன் (வயது 50), சுரேஷ் (27) ஆகிய இருவரையும் டவுன் போலீசார் கைதுசெய்தனர். மேலும் பர்கூடர் போலீசார் முருகேசன் என்பவரையும், போச்சம்பள்ளி போலீசார் வடமலம்பட்டி ரவி என்பவரையும் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து லாட்டரி சீட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன.
    ஒருவருக்கு கையில் பலத்த காயம் ஏற்பட்டு ரத்தம் கொட்டியது. அவரது அலறல் கேட்டு அக்கம் பக்கம் உள்ள பொதுமக்கள் ஓடிச்சென்று அவர்களை தடுத்து சமாதானம் செய்தனர்.
    பல்லடம்:

    பல்லடம் பஸ் நிலையத்தில் நேற்று பஸ்சுக்காக பொதுமக்கள் காத்திருந்தனர். அப்போது சுமார் 35-40 வயது மதிக்கத்தக்க இரண்டு வாலிபர்கள் ஒருவரை ஒருவர் சராமரியாக திட்டிக் கொண்டிருந்தனர். 

    இது திடீரென கை கலப்பாக மாறியது. பஸ் நிலையத்தில் உள்ள அரசுப் போக்குவரத்துக் கழக நேரக் காப்பாளர் அலுவலக அறை முன்பு நடைபெற்ற சண்டையானது அங்கு யாரும் இல்லாததால் அலுவலகத்திற்குள் புகுந்து இருவரும் ஒருவரை ஒருவர் மாறி மாறி தாக்கி கொண்டனர் .

    இதில் ஒருவருக்கு கையில் பலத்த காயம் ஏற்பட்டு ரத்தம் கொட்டியது. அவரது அலறல் கேட்டு அக்கம் பக்கம் உள்ள பொதுமக்கள் ஓடிச்சென்று அவர்களை தடுத்து சமாதானம் செய்தனர். பின்னர் அதில் ஒருவர் பஸ்சில் ஏறி சென்றுவிட்டார். 

    காயம் அடைந்த வாலிபரை பல்லடம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவத்தால் பஸ் நிலையத்தில் பரபரப்பு ஏற்பட்டது. 

    பயணிகளுக்கு தகவல் சொல்லக்கூடிய நேரக் காப்பாளர் அலுவலகத்தை திறந்து போட்டுவிட்டு சென்றவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் பஸ் நிலையத்தில் இதுபோன்ற குற்றச்செயல்கள் நடைபெறாது இருக்க பல்லடம் போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் தெரிவித்தனர்.
    பாகலூர் அருகே வாலிபர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    பாகலூர் அருகே குட்லபள்ளி கிராமத்தை சேர்ந்த நாகராஜ் மகன் சாகர் (வயது 21). பெங்களூருவில் உள்ள தனியார் நிறுவனத்தில் தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார். இவர் அதே பகுதியைச் சேர்ந்த உறவுக்கார பெண்ணை காதலித்து வந்தார். இவரது காதலுக்கு பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இதில் மனம் உடைந்த சாகர், விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்த புகாரின் பேரில் பாகலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
    ஏரியை சுற்றிள்ள பகுதிகளிலிருந்து மழை நீர் தொடர்ந்து வந்துகொண்டிருப்பதால் செம்பரம்பாக்கம் ஏரியை அதிகாரிகள் தொடர்ந்து கண்காணித்து வருகிறார்கள்.




    பூந்தமல்லி:

    சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் பெய்து வரும் கனமழை காரணமாக சென்னைக்கு குடிநீர் வழங்கும் முக்கிய ஏரிகளில் ஒன்றான செம்பரம்பாக்கம் ஏரியின் நீர்மட்டம் அதிகரித்து வருகிறது.

    இதனால் பாதுகாப்பு கருதி 7-ந் தேதி 5 கண் மதகு வழியாக முதற்கட்டாக 500 கன அடி நீர் திறக்கப்பட்டது. பின்னர் ஏரிக்கு நீர்வரத்து அதிகளவில் வந்துகொண்டிருந்தால் உபரி நீர் வெளியேற்றம் படிப்படியாக உயர்ந்த்தப்பட்டது.

    செம்பரம்பாக்கம் ஏரியின் மொத்த கொள்ளளவான 3645 மில்லியன் கனஅடியில் தற்போது 2717 மில்லியன் கனஅடி தண்ணீர் உள்ளது. ஏரியின் மொத்த உயரம் 24 அடி. இதில் 20.46 அடிக்கு தண்ணீர் நிரம்பி இருக்கிறது.

    சென்னையில் பலத்த மழை பெய்யும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டதால் ஏரியில் இருந்து நேற்று 3 ஆயிரம் கன அடி தண்ணீர் வெளியேற்றப்பட்டது.

    ஆனால் எதிர்பார்த்த அளவுக்கு கன மழை இல்லாததால் செம்பரம்பாக்கம் ஏரிக்கு நீர் வரத்து குறைந்துள்ளது. இன்று காலை நிலவரப்படி ஏரிக்கு 2700 கனஅடி தண்ணீர் வருகிறது. இதையடுத்து ஏரியில் இருந்து உபரி நீர் வெளியேற்றம் குறைக்கப்பட்டுள்ளது. 651 கனஅடி தண்ணீர் வெளியேறி வருகிறது. எனினும் ஏரியை சுற்றிள்ள பகுதிகளிலிருந்து மழை நீர் தொடர்ந்து வந்துகொண்டிருப்பதால் செம்பரம்பாக்கம் ஏரியை அதிகாரிகள் தொடர்ந்து கண்காணித்து வருகிறார்கள்.

    கிருஷ்ணகிரி அருகே குட்கா விற்ற 5 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கிருஷ்ணகிரி மாவட்டம் மகராஜகடை, ஓசூர், மத்திகிரி, சூளகிரி பகுதியில் போலீசார் பெட்டிக் கடைகளில் குட்கா பொருட்கள் விற்கப்படுகிறதா என சோதனை நடத்தினர். அப்போது சுபேதார்மேடு ராமநாதன் (வயது 43), பெத்தனப்பள்ளி அருள்ராஜ் (29), ஓசூர் ராயக்கோட்டை ஹவுசிங் போர்டு பகுதி அமீர் (55), மத்திகிரி சத்யன் ராவ் (40), சூளகிரி கலீல் (26) ஆகிய 5 பேரையும் போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து குட்கா பொருட்கள், ரூ.800-ம் பறிமுதல் செய்யப்பட்டது.
    திருப்பதி கோவிலில் கார்த்திகை தீப உற்சவத்தை முன்னிட்டு புதிய பானைகளில் தீபம் ஏற்றி மங்கள வாத்தியங்கள் இசைக்க ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு விமான கோபுரத்தை வலம் வந்து மூல மூர்த்திக்கு ஆரத்தி கொடுக்கப்பட்டது.
    திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நேற்று மாலை கார்த்திகை தீப உற்சவம் நடந்தது. புதிய பானைகளில் தீபம் ஏற்றி மங்கள வாத்தியங்கள் இசைக்க ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு விமான கோபுரத்தை வலம் வந்து மூல மூர்த்திக்கு ஆரத்தி கொடுக்கப்பட்டது.

    அதன்பிறகு கருவறையில் அகண்டம், குலசேகரபடி, ராமுலவாரி மேடை, துவார பாலகர்கள், கருடாழ்வார் சன்னதி, வரதராஜசாமி சன்னதி, வகுளமாதா சன்னதி, பங்காருபாவி, கல்யாண மண்டபம், பாஷ்யங்கார்ல சன்னதி, யோக நரசிம்மர் சன்னதி, விஷ்வக்சேனர் சன்னதி, தங்க வாசல், தங்கக் கொடிமரம், பலிபீடம், ரெங்கநாயகர் மண்டபம், பேடி ஆஞ்சநேயர் கோவில், வராஹசாமி கோவில் உள்பட பல இடங்களில் நெய்தீபம் ஏற்றப்பட்டது.

    கார்த்திகை தீப உற்சவத்தில் பெரிய ஜீயர், கோவில் துணை அதிகாரி ரமேஷ்பாபு, பேஷ்கார் ஸ்ரீஹரி மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
    கிருஷ்ணகிரியில் நடந்த 68-வது கூட்டுறவு வார விழாவில் 869 பயனாளிகளுக்கு ரூ.5.20 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை அமைச்சர் காந்தி வழங்கினார்.
    கிருஷ்ணகிரி:

    கிருஷ்ணகிரி தேவராஜ் மகாலில், மாவட்ட அளவிலான 68-வது கூட்டுறவு வார விழா நடந்தது. இந்த விழாவிற்கு கலெக்டர் ஜெயசந்திரபானு ரெட்டி தலைமை தாங்கினார். எம்.எல்.ஏ.க்கள் ஓசூர் பிரகாஷ், பர்கூர் மதியழகன், தளி ராமச்சந்திரன், மாவட்ட ஊராட்சி குழு தலைவர் மணிமேகலை நாகராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டுறவு துறை மண்டல இணைப் பதிவாளர் ஏகாம்பரம் வரவேற்று பேசினார்.

    விழாவில், தமிழக கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் காந்தி பங்கேற்று, கூட்டுறவு கொடியேற்றி வைத்தார். தொடர்ந்து சிறந்த கூட்டுறவு சங்கங்களுக்கு கேடயம், கோப்பைகள் மற்றும் 869 பயனாளிகளுக்கு ரூ.5 கோடியே 19 லட்சத்து 93 ஆயிரம் மதிப்பில் பல்வேறு நலத்திட்ட உதவிகளை அவர் வழங்கினார்.

    அப்போது அவர் பேசியதாவது:-

    மக்கள் நேரடியாக பயனடையும் மிக முக்கியமான துறை கூட்டுறவு துறை. கடந்த 10 ஆண்டுகளாக இந்த கூட்டுறவு துறை சரியாக செயல்படவில்லை என்றாலும், தமிழக முதல்-அமைச்சராக மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்று 6 மாதத்திற்குள் கூட்டுறவு துறை மட்டுமல்லாமல், அனைத்து துறைகளும் உலகமே பாராட்டும் வகையில் செயல்படுத்தி வருகிறார்.

    இந்த மாவட்டத்தில் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள் 120-ம், இதர கூட்டுறவு நிறுவனங்கள் 57-ம், மத்திய கூட்டுறவு வங்கிகள் 22-ம் உள்ளன. 2006-ம் ஆண்டு ரூ.7 ஆயிரம் கோடி கடனை தள்ளுபடி செய்யப்பட்டது. அப்போது கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 64,102 பேருக்கு ரூ.244 கோடி தள்ளுபடி செய்யப்பட்டது. 2021-ம் ஆண்டு 120 சங்கங்கள் மூலமாக 28,400 பேருக்கு ரூ230.79 கோடி தள்ளுபடி செய்யப்பட்டது. தற்போது ரூ.376 கோடி நகை கடன் தள்ளுபடி செய்ய உள்ளது.

    இந்த மாவட்டத்தில் மகளிர் சுய உதவிக்குழுக்கு ரூ.57.90 கோடி தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பல்வேறு திட்டங்களை அறிவித்து செயல்படுத்தி வருகிறார். தற்போது மழை, வெள்ளம் பகுதிகளுக்கு தினமும் சென்று மீட்பு பணிகளில் ஈடுபட்டு வருகிறார். அவர் பொறுப்பேற்ற பிறகு அதிகாரிகளும் சிறப்பாக செயல்படுகிறார். தேர்தலின் போது அறிவித்த அனைத்து வாக்குறுதிகளும் ஒவ்வொன்றாக முதல்-அமைச்சர் செயல்படுத்தி வருகிறார். எனவே, தமிழகத்தை ஒரு முன்மாதிரி மாநிலமாக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மாற்றுவார் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை.

    இவ்வாறு இவ்வாறு அவர் பேசினார்.

    விழாவின் போது, ரூ.1 கோடி மதிப்பில் தளி, உத்தனப்பள்ளி, நல்லராலப்பள்ளி, அஞ்செட்டி ஆகிய கூட்டுறவு சங்கங்களின் அலுவலகங்களை அமைச்சர் திறந்து வைத்தார். விழாவில் கிழக்கு மாவட்ட தி.மு.க. பொறுப்பாளர் செங்குட்டுவன், முன்னாள் எம.்பி. வெற்றிச்செல்வன், முன்னாள் எம்.எல்.ஏ. முருகன் மற்றும் கட்சி நிர்வாகிகள் உள்பட பலர் கலந்துகொண்டனர். முடிவில், கிருஷ்ணகிரி சரக கூட்டுறவு சங்கங்களின் துணைப்பதிவாளர் செல்வம் நன்றி கூறினார். முன்னதாக பள்ளி மாணவ, மாணவிகளின் கலை நிகழ்ச்சி நடந்தது.
    சூலூர் அருகே விபத்து நடந்த நேரம் மழை கொட்டியதால் பெரும் சேதம் தவிர்க்கப்பட்டது. இல்லாவிட்டால் லாரியில் இருந்த அனைத்து டயர்களும், லாரியும் எரிந்து சேதம் ஆகி இருக்கும்.

    சூலூர்:

    கேரள மாநிலம் கொச்சி துறைமுகத்தில் இருந்து மத்திய பிரதேச மாநிலம் இந்தூருக்கு நேற்று சுமார் 150 டயர்களை ஏற்றிக்கொண்டு ஒரு லாரி சென்று கொண்டிருந்தது.

    சூலூர் அருகே எல்என்டி புறவழிச்சாலையில் அந்த லாரி இரவு சுமார் 9 மணியளவில் வந்து கொண்டிருந்தது. லாரியை மத்திய பிரதேச மாநிலம் இந்தூரைச் சேர்ந்த கண்சாம்நாத் ஓட்டி வந்தார். இந்நிலையில் சிந்தாமணிப்புதூர் அருகே சுங்கச்சாவடி பகுதிக்கு வந்தபோது திடீரென லாரி தீப்பற்றிக் கொண்டது.

    உடனடியாக அருகில் இருந்தவர்கள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். லாரி தீ பற்றிய செய்தியை அறிந்த சூலூர் தீயணைப்பு படையினர் தீயணைப்பு அலுவலர் கோபால் தலைமையில் அப்பகுதிக்கு வந்து சேர்ந்தனர். ஆனால் அதற்குள்ளாக லாரியின் முன்பகுதி முழுவதுமாக எரிந்து சேதமடைந்தது.

    தீயணைப்பு படையினர் லாரியின் பின் கதவை உடைத்து திறந்து அதில் இருந்த டயர்களை கீழே இறக்கினர். பின்னர் பற்றி எரிந்த தீயை அணைத்தனர். இதில் சுமார் இருபது டயர்கள் தீயினால் சேதமடைந்தன. தீயணைப்பு படையினரின் முயற்சியால் மற்ற டயர்கள் சேதமின்றி தப்பின. லாரியில் ஏற்பட்ட மின் கசிவின் காரணமாக தீப்பிடித்து இருக்கலாம் என கூறப்படுகிறது.

    விபத்து நடந்த நேரம் மழை கொட்டியதால் பெரும் சேதம் தவிர்க்கப்பட்டது. இல்லாவிட்டால் லாரியில் இருந்த அனைத்து டயர்களும், லாரியும் எரிந்து சேதம் ஆகி இருக்கும்.

    மத்தூர் அருகே லாட்டரி சீட்டு விற்ற 2 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    மத்தூர்:

    போச்சம்பள்ளி போலீசார் பஸ் நிலையம், கொடமாண்டப்பட்டி பகுதியில் ரோந்து சென்றனர். அங்கு தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகள் விற்றதாக வேல்முருகன் (வயது 44), பெரியசாமி (50) ஆகிய 2 பேரையும் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து பணம் மற்றும் லாட்டரி சீட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன.
    ×