என் மலர்tooltip icon

    செய்திகள்

    கைது
    X
    கைது

    கிருஷ்ணகிரி அருகே குட்கா விற்ற 5 பேர் கைது

    கிருஷ்ணகிரி அருகே குட்கா விற்ற 5 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கிருஷ்ணகிரி மாவட்டம் மகராஜகடை, ஓசூர், மத்திகிரி, சூளகிரி பகுதியில் போலீசார் பெட்டிக் கடைகளில் குட்கா பொருட்கள் விற்கப்படுகிறதா என சோதனை நடத்தினர். அப்போது சுபேதார்மேடு ராமநாதன் (வயது 43), பெத்தனப்பள்ளி அருள்ராஜ் (29), ஓசூர் ராயக்கோட்டை ஹவுசிங் போர்டு பகுதி அமீர் (55), மத்திகிரி சத்யன் ராவ் (40), சூளகிரி கலீல் (26) ஆகிய 5 பேரையும் போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து குட்கா பொருட்கள், ரூ.800-ம் பறிமுதல் செய்யப்பட்டது.
    Next Story
    ×