என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
ஓசூர் கெலவரப்பள்ளி அணைக்கு 2563 கனஅடி நீர்வரத்து
Byமாலை மலர்20 Nov 2021 6:22 AM GMT (Updated: 20 Nov 2021 6:22 AM GMT)
ஓசூர் கெலவரப்பள்ளி அணைக்கு நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்தவாறு உள்ளது. இன்று காலை, அணைக்கு வினாடிக்கு 2,563 கன அடி நீர் வந்தது.
ஓசூர்:
கர்நாடக மாநிலத்தின் நீர்பிடிப்பு பகுதிகளில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இதேபோல் கிருஷ்ணகிரி மாவட்டத்திலும் நாள்தோறும் தொடர்ந்து பலத்த மழை பெய்து வருகிறது.
இதனையடுத்து ஓசூர் கெலவரப்பள்ளி அணைக்கு நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்தவாறு உள்ளது. இன்று காலை, அணைக்கு வினாடிக்கு 2,563 கன அடி நீர் வந்தது. அணையின் முழு கொள்ளளவு 44.28 அடி ஆகும். அணையில் 41.33 அடி நீர் இருப்பு இருந்த நிலையில், அணையின் பாதுகாப்பு கருதி வினாடிக்கு 3,060 கனஅடி நீர் தென்பெண்ணை ஆற்றில் வெளியேற்றப்பட்டது. அணையில் அதிகளவு நீர் வரத்து அதிகரித்து ஆற்றில் அதிகளவில் நீர் வெளியேற்றப்படுவதாலும், கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.
இந்தநிலையில் அணையில் ரசாயன கழிவுகள் கலந்து மலை போல் நுரை குவிந்ததால், தரைப்பாலம் வழியாக செல்லும் பொதுமக்கள் மிகவும் அவதியடைந்தனர்.
தரைப்பாலத்தில் குவிந்த நுரையை, தீயணைப்பு வீரர்கள், தண்ணீரை பீய்ச்சி படித்து சுத்தம் செய்தனர். இதனிடையே, நுரை பொங்கி பார்ப்பதற்கு ரம்மியமாக காட்சியளித்ததால், அந்த வழியாக செல்லும் பொதுமக்கள், நுரை பொங்கி காணப்படுவதை ஆர்வத்துடன் செல்போனில் போட்டோ எடுத்தனர்.
கர்நாடக மாநிலத்தின் நீர்பிடிப்பு பகுதிகளில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இதேபோல் கிருஷ்ணகிரி மாவட்டத்திலும் நாள்தோறும் தொடர்ந்து பலத்த மழை பெய்து வருகிறது.
இதனையடுத்து ஓசூர் கெலவரப்பள்ளி அணைக்கு நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்தவாறு உள்ளது. இன்று காலை, அணைக்கு வினாடிக்கு 2,563 கன அடி நீர் வந்தது. அணையின் முழு கொள்ளளவு 44.28 அடி ஆகும். அணையில் 41.33 அடி நீர் இருப்பு இருந்த நிலையில், அணையின் பாதுகாப்பு கருதி வினாடிக்கு 3,060 கனஅடி நீர் தென்பெண்ணை ஆற்றில் வெளியேற்றப்பட்டது. அணையில் அதிகளவு நீர் வரத்து அதிகரித்து ஆற்றில் அதிகளவில் நீர் வெளியேற்றப்படுவதாலும், கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.
இந்தநிலையில் அணையில் ரசாயன கழிவுகள் கலந்து மலை போல் நுரை குவிந்ததால், தரைப்பாலம் வழியாக செல்லும் பொதுமக்கள் மிகவும் அவதியடைந்தனர்.
தரைப்பாலத்தில் குவிந்த நுரையை, தீயணைப்பு வீரர்கள், தண்ணீரை பீய்ச்சி படித்து சுத்தம் செய்தனர். இதனிடையே, நுரை பொங்கி பார்ப்பதற்கு ரம்மியமாக காட்சியளித்ததால், அந்த வழியாக செல்லும் பொதுமக்கள், நுரை பொங்கி காணப்படுவதை ஆர்வத்துடன் செல்போனில் போட்டோ எடுத்தனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X