என் மலர்tooltip icon

    கிருஷ்ணகிரி

    • மேயர் எஸ்.ஏ.சத்யா, மாநகராட்சி அதிகாரிகளுடன் நேரில் சென்று கள ஆய்வு மேற்கொண்டார்.
    • குடியிருப்பு மக்களின் குறைகளையும் கேட்டறிந்தார்.

    ஓசூர், 

    ஓசூர் மாநகராட்சி 41-வது வார்டிற்குட்பட்ட பகுதி-10 ஹட்கோ பகுதியில் மாநகராட்சி பொது நிதியிலிருந்து ரூ. 117 லட்சம் மதிப்பீட்டில் நடைபெற்று வரும் வளர்ச்சிப்பணிகளை மாநகராட்சி மேயர் எஸ்.ஏ.சத்யா, மாநகராட்சி அதிகாரிகளுடன் நேரில் சென்று கள ஆய்வு மேற்கொண்டார்.

    அப்பகுதியில் அமைக்கப்பட்டுள்ள சாலை தரம், அதன் உயரம், அகலம் குறித்தும் மக்களுக்கு தேவையான கழிவு நீர் கால்வாய், தெரு விளக்குகள், சாலை வசதிகள், குடிநீர் வசதிகள் சரியான முறையில் செய்து கொடுக்கப்படு கிறதா? எனவும் கேட்ட றிந்தார்.

    பின்னர் குடியிருப்பு மக்களின் குறைகளையும் கேட்டறிந்தார். இந்நிகழ்வில், துணை மேயர் ஆனந்தய்யா மற்றும் குபேரன் உள்ளிட்ட மாநகராட்சி கவுன்சிலர்கள், கட்சியினர் உடன் இருந்தனர்.

    • பரந்தாமனுக்கும், சம்பத்திற்கும் நிலம் தொடர்பாக பிரச்சினை உள்ளது.
    • பரந்தாமன் சிகிச்சை பலன் அளிக்காமல் இறந்து விட்டார்.

    காவேரிப்பட்டணம்,  

    கிருஷ்ணகிரி மாவட்டம் பனகமுட்லு அருகே உள்ள பில்லகொட்டாய் கிராமத்தை சேர்ந்தவர் பரந்தாமன் (வயது 60). விவசாயி. இவரது மகன் வினோத் (27). அதே பகுதியை சேர்ந்தவர் சம்பத் என்கிற சம்பத்குமார் (37). முன்னாள் ராணுவ வீரர். இவரது சகோதரர் சின்னசாமி (34). ரேஷன் கடை விற்பனையாளர். பரந்தாமனுக்கும், சம்பத்திற்கும் நிலம் தொடர்பாக பிரச்சினை உள்ளது. இதன் காரண மாக அவர்களுக்குள் முன்வி ரோதம் இருந்து வந்தது.

    இந்த நிலையில் கடந்த 23-ந் தேதி காலை 8.30 மணி அருகில் பில்லக்கொட்டாய் கிராம மக்கள் இரு தரப்பினரிடமும் சமரச பேச்சு வார்த்தை நடத்தி னார்கள். அந்த நேரம் அவர்களுக்குள் கை கலப்பு ஏற்பட்டது.

    இதில் சம்பத்குமார் மற்றும் அவரது சகோதரர் சின்னசாமி ஆகியோர் சேர்ந்து பரந்தாமனை கல்லால் தாக்கினார்கள். இதில் அவருக்கு தலையில் பின்பகுதியில் பலத்த காயம் ஏற்பட்டது. அவரை அருகில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக கிருஷ்ணகிரி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.

    இது தொடர்பாக காவேரிப்பட்டணம் போலீஸ் இன்ஸ்பெக்டர் பாலாஜி ரமணன் விசார ணை நடத்தி, சம்பத், அவரது சகோதரர் சின்னசாமி ஆகிய 2 பேர் மீதும், ஆபாசமாக பேசுதல், தாக்குதல் கொலை மிரட்டல் விடுத்தல், கொலை முயற்சி ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர். மேலும் சம்பத்தை கைது செய்தனர்.

    இந்த நிலையில் கிருஷ்ணகிரி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த பரந்தாமன் கடந்த 28-ந் தேதி சிகிச்சை பலன் அளிக்காமல் இறந்து விட்டார். இதையடுத்து இந்த வழக்கை கொலை வழக்காக காவேரிப்பட்டணம் போலீசார் மாற்றி உள்ளனர். மேலும் சின்னசாமியை தேடி வருகிறார்கள்.

    • சாலையில் தினமும் ஆயிரக்கணக்கான மக்கள் வந்து செல்கின்றனர்.
    • நடைபாதை சாலையை ஆக்கிரமிப்பு செய்து கடை களை வைத்துள்ளனர்.

    காவேரிப்பட்டணம்,

    கிருஷ்ணகிரி மாவட்டம், காவேரிப்பட்டணம் நகரத்தில் சாலையோ ரங்களில் உள்ள நடைபா தைகளை கடைக்காரர்கள் ஆக்கிரமித்து தங்கள் கடை பொருட்களை வைத்துள்ள தாலும், சாலை யோரங்க ளில் இரண்டு மற்றும் நான்கு சக்கர வாகனங்களை நிறுத்துவதாலும் பொது மக்கள் சாலையில் நடந்து செல்ல முடியாமல் அவதி பட்டு வருகின்றனர். இதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொது மக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோ ரிக்கை விடுத்துள்ளனர்.

    கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள முக்கிய நகரங்களில் ஒன்றாக காவேரிப்பட்ட ணம் நகரம் திகழ்ந்து வருகிறது. இந்நகரை சுற்றி ஏராளமான கிராமங்கள் உள்ளன. இந்நகரில் ஏராள மான அரசு மற்றும் தனியார் அலுவலகங்கள், மருத்துவமனைகள், வங்கிகள், பள்ளிகள், வணிக நிறுவனங்கள், தொழிற்சாலைகள் என ஏராளமானவை உள்ளன. அவற்றிற்கு தினமும் ஆயிரக்கணக்கான மக்கள் வந்து செல்கின்றனர்.

    காவேரிப்பட்டணம் நகரத்தில் முக்கிய சாலை யாக சேலம் மெயின் ரோடு உள்ளது. இந்த மெயின் ரோட்டில் பூக்கடை, பழக்கடை, பூஜைக்கடை, புத்தகக்கடை, மளிகைக் கடை, பாத்திரக்கடை, செருப்புக்கடை, துணிக்க டை, எலக்ட்ரிக்கல் கடை உள்ளிட்ட ஏராளமான கடைகளை நடத்திவரும் கடைக்காரர்கள் அவர்க ளின் கடைக்கு வெளியே சுமார் 5 அடி தூரத்திற்கு நடைபாதை சாலையை ஆக்கிரமிப்பு செய்து தங்களின் கடைக்கு வெளி யே இருபுறமும் தங்கள் கடை பொருட்களை வைத்துள்ளனர்.

    இதனால் பொதுமக்கள் நடைபாதையில் நடந்து செல்ல முடியாமலும், காலை மற்றும் மாலை நேரங்களில் இரு சக்கர வாகனங்களில் செல்ல முடியாமலும்,மேலும் அக்கடைகளுக்கு வருவோர் தங்கள் இரண்டு மற்றும் நான்கு சக்கர வாகனங்களை சாலையில் நிறுத்துவதால் கடும் போக்குவரத்து நெரிசல் மற்றும் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது.

    மேலும் காவேரிப்பட்டணம் நகரின் முக்கிய பகுதியாக சக்தி விநாயகர் கோவில் நான்கு ரோடு சந்திப்பு உள்ளது. இச்சந்திப்பிலிருந்து தான் சேலம் நெடுஞ்சாலை மற்றும் பேருந்து நிலையம் ஆகியவற்றிற்கு பொது மக்கள் செல்ல வேண்டும். இச்சந்திப்பில் கடை வைத்திருப்பவர்கள் நடை பாதை மற்றும் சாலையை ஆக்கிரமித்து கடை வைத்துள்ளனர். இதனால் இரண்டு மற்றும் நான்கு சக்கர வாகனங்களை சாலையில் நிறுத்தி விட்டு செல்வதால் அங்கு மிகுந்த போக்குவரத்து நெருக்கடி ஏற்படுகிறது.

    இது குறித்து பொதுமக்கள் கூறும்போது:-

    பணகல் தெரு மற்றும் அகரம் சாலை ஒரு வழி பாதையாக இருக்கிறது. ஆனால் நெடுஞ்சாலை துறையால் முறையான அறிவிப்பு பலகை இல்லாத தால் இந்த சாலைகளில் வாகனங்கள் வருவதும் போதுமாக உள்ள கார ணத்தினால் போக்குவரத்து கடும் நெரிசல் ஏற்படுகிறது. இது குறித்து பலமுறை புகார் தெரிவித்தும், நெடுஞ்சாலைத் துறையினர் கண்டு கொள்வதில்லை. எனவே வரும் பண்டிகை காலங்களுக்குள் ஒருவழி பாதை அறிவிப்பு பலகை வைக்க வேண்டும்.

    மேலும் இது குறித்து போலீசார் மற்றும் பேரூ ராட்சி நிர்வாகம் தக்க நடவடிக்கை எடுத்து போக்குவரத்து நெருக்கடிக்கு தீர்வு ஏற்படுத்தி பொதுமக்களின் சிரமத்தினை போக்கிட வேண்டுமென பொதுமக்கள் தெரிவித்தனர்.

    • கன்னட சங்கங்கள், கட்சிகள் இதற்கு ஆதரவு அளிக்கவில்லை.
    • கிருஷ்ணகிரி போலீசார் சுங்கச்சாவடி அருகில் இருபுறமும் பாதுகாப்பு பணி களை மேற்கொண்டனர்.

    கிருஷ்ணகிரி, 

    சுப்ரீம் கோர்ட்டு உத்தர வுப்படி கர்நாடக அரசு தமிழகத்திற்கு காவிரி நீரை திறந்துள்ளது. இதை கண்டித்து கர்நாடகாவில் விவசாய சங்கங்கள், கன்னட அமைப்புகள் சார்பில் போராட்டங்கள் நடந்து வருகின்றன. கடந்த 26&ந் தேதி பெங்களூருவில் முழு அடைப்பு நடந்த நிலையில், கன்னட சங்கங்கள், கட்சிகள் இதற்கு ஆதரவு அளிக்கவில்லை.

    அதே நேரத்தில் நேற்று பா.ஜனதா, மத சார்பற்ற ஜனதா தளம் மற்றும் கன்னட அமைப்புகள் சார்பில் கர்நாடகாவில் முழு அடைப்பு போராட்டம் நடந்தது. இதனால் பெங்க ளூரு செல்லும் தமிழக அரசு பஸ்கள் நேற்று முன்தினம் இரவுடன் ஓசூரில் நிறுத்தப்பட்டன. நேற்று பெங்களூருவுக்கு பஸ்கள் இயக்கப்படவில்லை.

    மாநில எல்லையுடன் நிறுத்தப்பட்டன. தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து சரக்கு லாரிகள் ஓசூர் வழியாக பெங்களூரு மற்றும் கர்நாடக மாநிலத்தின் பிற பகுதிகளுக்கும், வட மாநிலங்களுக்கும் செல்கின்றன. நாள்தோறும் ஆயிரக்கணக்கான வாக னங்கள் இவ்வாறு சென்று வருகின்றன. நேற்று கர்நாடகாவில் முழு அடைப்பு காரணமாக லாரிகள் தமிழக எல்லை வழியாக கர்நாடகா செல்ல அனுமதிக்கப்படவில்லை.

    கிருஷ்ணகிரியிலேயே பெரும்பாலான லாரிகள் நிறுத்தப்பட்டன. சாலை யோரம் லாரிகளை நிறுத்திய டிரைவர்கள் இங்கேயே இருந்தனர். மாலைக்கு மேல் லாரிகளை இயக்கினார்கள். இதன் காரணமாக கிருஷ்ண கிரியில் ஓசூர் செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் இரு புறமும் நூற்றுக்க ணக்கான சரக்கு லாரிகள் நிறுத்தப்பட்டி ருந்தன. மேலும் கிருஷ்ணகிரி போலீசாரும், சுங்கச்சாவடி அருகில் இருபுறமும் பாதுகாப்பு பணிகளை மேற்கொண்டனர்.

    • சுய லாபத்திற்கு கொள்கையை விற்று ஆதாயம் தேடும் இரு தலைவர்கள் ஒன்றாக சேர்ந்து உள்ளனர்.
    • தமிழகத்தில் எல்லா கட்சிகளும் ஆட்சிக்கு வர வேண்டும் என்று நினைப்பது இயல்பான ஒன்று.

    கிருஷ்ணகிரி:

    கிருஷ்ணகிரியில் அ.தி.முக. கட்சி அலுவலகத்தில் செய்தியாளர்களை அ.தி.முக. இணைப் பொதுச்செயலாளர் கே.பி. முனுசாமி சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    அண்ணாமலையை முதல்வர் வேட்பாளராக அறிவிக்க பா.ஜ.க. முயன்ற காரணத்தால் தான் தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து அ.தி.மு.க. விலகியது என்று அமைச்சர் கருப்பண்ணன் கூறியுள்ளது உண்மையில்லை. அண்ணாமலை முதல்வர் வேட்பாளர் என்று பா.ஜ.க. ஒருபோதும் சொல்லவில்லை. அப்படி சொல்வது அபத்தமானது.

    30 ஆண்டுகள் ஆட்சியில் இருந்த அ.தி.மு.க. ஆட்சி செய்து பல்வேறு திட்டங்களை நாட்டு மக்களுக்கு வழங்கி உள்ள நிலையில் பா.ஜ.க. தேசிய தலைமை எப்படி தமிழகத்தில் பா.ஜ.க. முதலமைச்சர் பதவி வேண்டும் என கேட்பார்கள் கேட்கமாட்டார்கள் அப்படி எல்லாம் பேசி அ.திமு.க என்ற கட்சியை பலவீனப்படுத்த முடியாது.

    பண்ருட்டி ராமச்சந்திரன் வயதுக்கு ஏற்றவாறு பேசவேண்டும், பதிலுக்கு நாங்களும் பேசலாம் ஆனால் எங்களுக்கு நாகரிகம் உள்ளது. காவிரி பிரச்சனையில் பண்ருட்டி ராமசந்திரன் தி.மு.க., அ.தி.மு.க., தே.மு.தி.க., பா.ம.க. என சென்ற இடங்களில் எங்கும் விசுவாசமாக இல்லை. நம்பிக்கை துரோகத்துக்கு பெயர் போன பண்ருட்டி ராமச்சந்திரன் நம்பிக்கை துரோகியுடன் அமர்ந்துகொண்டு அவரை நம்பிக்கை உரியவர் என கூறுகிறார். அ.தி.மு.க.வை கபளீகரம் செய்த சசிகலா இந்த இயக்கத்தில் இருக்கக்கூடாது என நான் போராடினேன்.

    அந்த சமயம் தர்ம யுத்தம் செய்கிறேன் என என்னுடன் வந்து சசிகலாவை விமர்சனம் செய்தார் ஓபிஎஸ். தற்போது கால சூழல் மாறிய உடன் சசிகலாவை தலைவியாக ஏற்றுக்கொள்ள முயற்சி செய்கிறார். தன்னுடைய சுய லாபத்திற்கு கொள்கையை விற்று ஆதாயம் தேடும் இரு தலைவர்கள் ஒன்றாக சேர்ந்து உள்ளனர். மத்திய அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    காவிரி நதிநீர் பிரச்சினை நீண்டகாலமாக உள்ள பிரச்சினை. இதில் மாநில அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். அப்படி இல்லை எனில் அடுத்த கட்டமாக அ.தி.மு.க. போராட்டம் நடத்துவது குறித்து பொது செயலாளர் எடப்பாடி பழனிசாமி முடிவு செய்வார்.

    தமிழகத்தில் எல்லா கட்சிகளும் ஆட்சிக்கு வர வேண்டும் என்று நினைப்பது இயல்பான ஒன்று. அதே நேரத்தில் தமிழகத்தில் தேசிய கட்சிகள் ஆட்சிக்கு வரமுடியாது. சமுக வலைத்தளங்களில் அ.தி.மு.க.-பா.ஜ.க. கூட்டணி குறித்து தவறாக விமர்சனம் செய்கிறார்கள். இதை பார்த்து கொண்டு அ.தி.மு.க., சும்மா இருக்காது. அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • கிருஷ்ணகிரியில் பருவமழை மாற்றம் குறித்து கருத்தரங்கை கலெக்டர் தொடங்கி வைத்தார்.
    • 25 லட்சம் மரக்கன்றுகள் நடப்பட்டுள்ளது,

    கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில், தமிழ்நாடு காலநிலை மாற்ற இயக்கம் சார்பாக, காலநிலை மாற்றத்தில் பருவநிலை மாற்றம் குறித்து நடைபெற்ற மாவட்ட அளவிலான கருத்தரங்கை கலெக்டர் சரயு தொடங்கி வைத்தார்.

    இதில், கால நிலை மாற்றம் இயக்கம் சார்பாக தமிழ்நாடு ஈரநிலை இயக்க உதவி இயக்குனர் மணிஷ்மீனா பங்கேற்று, காலநிலை மாற்றத்தினால் ஏற்படும் மாற்றம் தொ டர்பான கருத்துக்கள் குறித்து உரையாற்றினார். பூவுலகின் நண்பர்கள் வெற்றிச்செல்வன், அருண்குமார், கிருஷ்ணகிரி தோட்டக்கலைத்துறை உதவி இயக்குநர் சிவக்குமார் ஆகியோர் காலநிலை மாற்றம் குறித்தும், அதனால் ஏற்படும் பாதிப்புகள் மற்றும் காலநிலை மாற்றத்தை எதிர்கொள்ள மேறகொள்ள வேண்டிய நடவடிக்கைகளையும் தெரிவித்து, பயிரிடப்பட வேண்டிய மாற்றுப்பயிர் வகைள் குறித்தும் விளக்கப்படங்கள் மூலம் தெளிவாக விவரித்தனர்.

       இதில் தமிழ்நாடு ஈரநிலை இயக்கம் உதவி இயக்குநர்கள் மணிஷ்மீனா, யோகேஷ்குமார் ஆகியோர், தமிழ்நாடு அளவில் ஏற்பட்டு வரும் காலநிலை மாற்றங்கள் குறித்து விவரித்து, அதனை கையாள மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகளை விளக்கினர். பின்னர் கிருஷ்ணகிரி சமூகக்காடுகள் கோட்ட அலுவலர் சக்தி வேல், கிருஷ்ணகிரி மாவட்டத்தில் காலநிலை மாற்றம் ஏற்படுத்துவற்கான காரணம் குறித்தும், அதனை எதிர்கொள்ள துறை மூலம் நடவு செய்யப்படவுள்ள மரக்கன்றுகள் குறித்தும் விளக்கினார்.

    தொடர்ந்து, 2022-23ம் ஆண்டு பசுமை சாதனையாளர் விருதுகள் பெற்ற அறம் விதை அறக்கட்டளை நிர்வாகி அருண், வனத்துறையுடன் இணைந்த பசுமை போர்வையை அதிகரித்து, பருவநிலை மாற்றத்தை கட்டுப்படுத்தப்படும் நடவடிக்கைகள் குறித்தும், காவேரிப்பட்டணம் அரசு மேல்நிலைப்பள்ளி முதுநிலை ஆசிரியர் அனிதா, பருவ நிலை மாற்றத்தை கட்டுப்படுத்த பள்ளிகளில், மாணவர்கள் உதவியுடன் மேற்கொள்ளப்பட்டு வரும் நடவடிக்கைகள் குறித்தும், மாணவர்களை கொண்டு ஏற்படுத்தப்பட்டு வரும் விழிப்புணர்வு குறித்தும் விளக்கினார்.

     பின்னர், 2022-23ம் ஆண்டு பசுமை சாதனையாளர் விருதுகள் பெற்ற பிரசன்ன வெங்கடேஷ், அனைத்து துறை அலுவலர்கள், தன்னார்வலர்கள் மற்றும் தொழில் நிறுவனத்தினர்களுடன் கலந்துரையாடி, அனைத்து பருவநிலை மாற்றத்தை கையாள மேற்கொள்ளப்பட்டு வரும் நடவடிக்கைகள் குறித்து கலந்துரையாடி கருத்துகளை எடுத்துரைத்தனர்.

    கருத்தரங்கில் பசுமை தமிழ்நாடு இயக்கம் சார்பாக, மாவட்ட அளவிலான பசுமைக்குழு கிருஷ்ணகிரி மாவட்டத்தில் அமைக்கப்பட்டு, மாவட்ட கலெக்டர் தலைவராகவும், வன உயிரின காப்பாளர், உறுப்பினர் செயலாளராகவும் கொண்டு, கடந்த 2022ம் ஆண்டு அனைத்து துறை அலுவலர்களுடன் கூட்டம் நடத்தப்பட்டு,

    2022-23ம் ஆண்டில் 25 லட்சம் மரக்கன்றுகள் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் நடவு செய்ய திட்டமிடப்பட்டு, மரக்கன்றுகள் நடவு செய்யும் பணி நடைபெற்று வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

    முடிவில், மாவட்ட வனஉயிரின காப்பாளர் கார்த்தி கேயனி, பிளாஸ்டிக்கை தவிர்த்து பசுமை போர்வையை ஏற்படுத்த கருத்துரையாற்றினார். இந்த கருத்தரங்கில் அனைத்து துறை அலுவலர்கள், தொண்டு நிறுவன பிரதிநிதிகள், தன்னார்வலர்கள், வனத்துறை அலுவலர்கள் கலந்துகொண்டனர்

    • ஊத்தங்கரையில் சிறுவர் பூங்காவை சீர் செய்ய பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.
    • 1987 ஆம் ஆண்டு ரூ. 78 லட்சம் மதிப்பில் கட்டப்பட்டது.

    கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை கல்லாவி ரோட்டில் உள்ள இந்திரா நகரில் தமிழ்நாடு வீட்டுவசதி வாரிய குடியிருப்புகள் மற்றும் எல்.ஐ.ஜி குடியிருப்புகள் உள்ளது.

    இந்த குடியிருப்புகள் 1987-ம் ஆண்டு ரூ.72 லட்சம் மதிப்பீட்டில் 72 குடியிருப்புகள் கட்டப் பட்டு அப்போதைய முதல்-அமைச்சர் எம்.ஜி.ஆரால் திறப்பு விழா நடத்தப்பட்டது. குடியிருப்புகளை ஒட்டியவாறு மக்கள் பயன்பாட்டிற்கு என சிறுவர் பூங்கா மற்றும் 2 கடைகள் அமைக்கப்பட்டது. அப்பகுதியில் உள்ள மக்கள் தங்கள் ஓய்வு நேரத்தை இந்த பூங்காவில் தான் பயன்படுத்தினார்கள்.

    பூங்காவில் சிறுவர்கள் பொழுதுபோக்கிற்கு பயன்படுத்தும் சாதனங்கள் பழுதாகி சேதமடைந்து உள்ளது. குப்பைகள் கொட்டும் தளமாக காட்சி அளிக்கிறது. பூங்காவில் உள்ள மின்சாதனங்கள் சேதம டைந்துள்ளது. பூங்காவை தன்னுடைய பொறுப்பில் வைத்து பராமரிக்கும் ஊத்தங்கரை தேர்வுநிலை பேரூராட்சி நிர்வாகம் உடனடியாக பூங்காவை சீரமைத்து பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • கிருஷ்ணகிரியில் இடி-மின்னலுடன் கனமழை பெய்ந்தது.
    • அஞ்செட்டியில் 4.மி.மீ பதிவு

    கிருஷ்ணகிரி மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் நேற்று காலை வெயில் அடித்தது. மாலை வானம் மேகமூட்டமாக காணப்பட்டது. மாலை 6.30 மணி அளவில் இடி-மின்னலுடன் பலத்த மழை பெய்தது.

    ஜக்கப்பன் நகர் 8-வது கிராஸ் ராஜகாளியம்மள் கோவில் அருகில் தாழ்வான குடியிருப்பு பகுதிகளுக்குள் மழை நீர் புகுந்தது. மேலும் கடைகளுக்கு சென்ற பொது மக்கள் வீடுகளுக்கு திரும்ப முடியாமல் அவதிக்குள்ளானார்கள். இரு சக்கர வாகன ஓட்டிகளும் செல்ல முடியாமல் சிரமத்திற்கு உள்ளானார்கள். பெங்களூரு சாலையில் 5 ரோடு சந்திக்கும் பகுதியில் மழை நீர் குளம் போல தேங்கியது. இந்த மழையால் இரவில் குளிர்ந்த காற்று வீசியது.

    கிருஷ்ணகிரி மாவட்டத்தில் மொத்தம் 63.7 மி.மீ அளவு பதிவாகி உள்ளது. இதில் அதிகபட்சமாக கிருஷ்ணகிரியில் 28.3 மில்லிமீட்டர் மழை பதிவாகி உள்ளது. மாவட்டத்தில் பெய்த மழை அளவு மி.மீ. வருமாறு: அஞ்செட்டி-4.0 மி.மீ, கிருஷ்ணகிரி-28.3, ராயக்கோட்டை-27, கே.ஆர்.பி அணை-4.4

    • பாகலூரில் வெளிமாநில இளம்பெண்களை வைத்து விபசாரம் பெண் புரோக்கர் உள்பட 2 பேர் கைது
    • ஸ்பா, மசாஜ் சென்டர்களிலும் நடப்பதாக புகார்

    கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் சுற்று வட்டார பகுதிகளில் வீடுகளை வாடகைக்கு எடுத்து வெளிமாநில அழகிகளை வைத்து விபசாரம் நடை பெறுவதாகவும், அதே போல ஸ்பா சென்டர், மசாஜ் சென்டர் என்ற பெயரில் இளம்பெண்களை வைத்து விபசார தொழில் நடப்பதாகவும் போலீஸ் சூப்பிரண்டு சரோஜ்குமார் தாக்கூருக்கு புகார்கள் வந்தன. இதையடுத்து குடியிருப்பு பகுதிகளை கண்காணிக்கவும், ஸ்பா சென்டர்கள், மசாஜ் சென்டர்களின் நடவடிக்கைகளை கண்காணிக்க அவர் உத்தரவிட்டார். அதன் பேரில் போலீசார் தீவிரமாக நடவடிக்கை எடுத்து வருகிறார்கள்.

    இந்த நிலையில் ஓசூர அருகே பாகலூரில் வீடு ஒன்றிற்கு அடிக்கடி ஆண்கள் வந்து செல்வதாக பாகலூர் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து பாகலூர் போலீசார் நேற்று முன்தினம் அந்த வீட்டில் அதிரடியாக சோதனை நடத்தினார்கள்.

    அதில் வீட்டில் வெளி மாநில இளம்பெண்கள் இருந்தது தெரிய வந்தது. விசாரணையில் அந்த இளம்பெண்களை வைத்து விபசார தொழில் நடத்தி வந்தது தெரியவந்தது.

    இதையடுத்து அந்த இளம்பெண்களை மீட்ட போலீசார், அவர்களை விபசாரத்தில் ஈடுபடுத்திய பெண் புரோக்கர் சூளகிரி தாலுகா பேரிகை அருகே உள்ள நரிபுரத்தைச சேர்ந்த நஞ்சப்பா என்பவரின் மனைவி மஞ்சுளா (38), கர்நாடக மாநிலம் மாலூர் அருகே உள்ள வாலாவை சேர்ந்த முனிராஜ் (45) ஆகிய 2 பேரையும் போலீசார் கைது செய்தனர்.

    • கிருஷ்ணகிரி பாம்பாறு அணை முழுக்கொள்ளவை ்எட்டியது
    • 500 கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது

    கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அருகே உள்ள பாம்பாறு நீர்தேக்கம் 1983-ம் ஆண்டு கட்டப்பட்டது. நீர்ப்பிடிப்பு பகுதிகளான திருப்பத்தூர் மாவட்டம் ஜவ்வாதுமலை, அங்குத்தி சுனை பகுதிகளில் இருந்து அணைக்கு தண்ணீர் வருகிறது.

    பாம்பாறு அணையின் மொத்த உயரம் 19.68 அடி. அணையில் திறக்கப்படும் நீர் மூலம் ஊத்தங்கரை வட்டத்தில் மிட்டப்பள்ளி, ஓபகாவலசை, போத்த ராஜன்பட்டி, மூன்றம்பட்டி, கொட்டு–காரம்பட்டி, கரிய பெருமாள் வலசை உட்பட 12 கிராமங்களில் 2501 ஏக்கர் விளை நிலங்களும், தருமபுரி மாவட்டம் அரூர் வட்டம் தா.அம்மாபோட்டை, வேடகட்டமடுவு மேல்செங்கம்பாடி, ஆண்டியூர் உள்ளிட்ட 4 கிராமங்களில் 1499 ஏக்கர் விளைநிலங்கள் உட்பட 4 ஆயிரம் ஏக்கர் விளைநிலங்களும் பாசன வசதி பெறுகிறது. இந்நிலையில் ஜவ்வாது மலையில் பெய்த தொடர் மழையால், பாம்பாறு அணைக்கு நீர்வரத்து படிப்–படியாக உயர்ந்து, அணை முழுக் கொள்ளளவை எட்டியுள்ளது.

    இதனைத் தொடர்ந்து அணையின் பாதுகாப்பு கருதி, அணைக்கு வரும் வினாடிக்கு 500 கனஅடி தண்ணீரும் பொதுப்–பணித்துறை அதிகாரிகளின் உத்தரவின் பேரில் வெளியேற்றப்படுகிறது. மேலும் உபரி நீர் வெளியேறும் பகுதிகளில் ஆற்றில்குளிக்கவும் செல்பி எடுக்கவோ கூடாது என பொதுப்பணித்துறை அதிகாரிகள் அறிவுறுத்தி உள்ளன.

    • பஞ்சாயத்து அலுவலகம் முன்பு வரையப்பட்டு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
    • நெகிழிக்கு மாற்றாக மீண்டும் மஞ்சப்பைவிழிப்புணர்வு பிரச்சாரம் நடத்த வேண்டும்.

    கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளி அடுத்த காட்டகரம் ஊராட்சியில், குப்பை இல்லா இந்தியா, ஊராட்சி அளவில் தூய்மை பாரத இயக்கம் தொடர்பான விழிப்புணர்வு வரைபடங்கள், சந்தூரில் உள்ள பஞ்சாயத்து அலுவலகம் முன்பு வரையப்பட்டு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

    இதில் மண்டல துணை பி.டி.ஓ. சுசேந்திரன், வட்டார ஒருங்கிணைப்பாளர் கோவிந்தம்மாள், மாவட்ட துணை அமைப்பாளர் சண்முகம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    ஊராட்சி மன்ற தலைவர் ரங்கநாதன் பேசுகையில், ஊராட்சி அளவில் பள்ளி மாணவர்களை ஈடுபடுத்தி தூய்மை உறுதிமொழி எடுத்தல், நம்ப ஊரு சூப்பர் பிரசாரத்தின் ஒரு பகுதியாக ஏற்படுத்தப்பட்ட சுகாதார குழு உறுப்பினர்களை சுகாதாரம் குறித்து மாணவர்களிடையே பிரசாரம் செய்து பள்ளியில் சுகாதார வகுப்பு நடத்த வேண்டும்.

    ஊராட்சியில் ஒரு முறை பயன்படுத்தப்படும் நெகிழிக்கு மாற்றாக மீண்டும் மஞ்சப்பைவிழிப்புணர்வு பிரச்சாரம் நடத்த வேண்டும். ஊராட்சியில் பணிபுரியும் அனைத்து தூய்மை பணியாளர்களுக்கும் ஆரம்ப சுகாதார நிலையத்தில் சுகாதார முகாம்கள் நடத்த வேண்டும் என்றார். இறுதியில் ஊராட்சி செயலர் கஜேந்திரன் நன்றி கூறினார்.

    • கர்நாடக மாநிலத்தில் கன்னட அமைப்புகள் மற்றும் விவசாய சங்கங்களின் சார்பில் இன்று முழு அழைப்பு போராட்டம் நடைபெற்றது.
    • கன்னட கூட்டமைப்புகளின் சார்பில் மறியல் போராட்டம் நடைபெற்றது.

    ஓசூர்:

    காவிரி நீர் விவகாரம் தொடர்பாக கர்நாடக மாநிலத்தில் கன்னட அமைப்புகள் மற்றும் விவசாய சங்கங்களின் சார்பில் இன்று முழு அழைப்பு போராட்டம் நடைபெற்றது. இதற்கு பாஜக, மதசார்பற்ற ஜனதா தளம் உள்ளிட்ட கட்சிகளும் ஆதரவு தெரிவித்திருந்தன.

    கர்நாடகத்தில் போராட்டம் தீவிரமடைந்து வரும் நிலையில், ஓசூர் அருகே கர்நாடக எல்லையில் கன்னட அமைப்புகளின் சார்பில் சமீப நாட்களாக போராட்டம் நடைபெற்று வருகிறது. இன்று, கர்நாடக ரக்ஷன வேதிகே (சிவராம் கவுடா அணி) கன்னட ஜாக்ருதி வேதிகே, மற்றும் கன்னட கூட்டமைப்புகளின் சார்பில் மறியல் போராட்டம் நடைபெற்றது.

    முன்னதாக, அத்திப்பள்ளியிலிருந்து மாநில தலைவர் சிவராம் கவுடா, மஞ்சுநாத் தேவா, நாகராஜ் ஆகியோர் தலைமையில் ஊர்வலமாக வந்த கன்னட அமைப்பினர், பின்னர் திடீரென தேசிய நெடுஞ்சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர். இதில், பெண்கள் உள்பட சுமார் 70 பேர் கைது செய்யப்பட்டனர்.

    ×