என் மலர்
உள்ளூர் செய்திகள்

வெளி மாநில இளம்பெண்களை வைத்து விபசாரம்: பெண் புரோக்கர் உள்பட 2 பேர் கைது
- பாகலூரில் வெளிமாநில இளம்பெண்களை வைத்து விபசாரம் பெண் புரோக்கர் உள்பட 2 பேர் கைது
- ஸ்பா, மசாஜ் சென்டர்களிலும் நடப்பதாக புகார்
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் சுற்று வட்டார பகுதிகளில் வீடுகளை வாடகைக்கு எடுத்து வெளிமாநில அழகிகளை வைத்து விபசாரம் நடை பெறுவதாகவும், அதே போல ஸ்பா சென்டர், மசாஜ் சென்டர் என்ற பெயரில் இளம்பெண்களை வைத்து விபசார தொழில் நடப்பதாகவும் போலீஸ் சூப்பிரண்டு சரோஜ்குமார் தாக்கூருக்கு புகார்கள் வந்தன. இதையடுத்து குடியிருப்பு பகுதிகளை கண்காணிக்கவும், ஸ்பா சென்டர்கள், மசாஜ் சென்டர்களின் நடவடிக்கைகளை கண்காணிக்க அவர் உத்தரவிட்டார். அதன் பேரில் போலீசார் தீவிரமாக நடவடிக்கை எடுத்து வருகிறார்கள்.
இந்த நிலையில் ஓசூர அருகே பாகலூரில் வீடு ஒன்றிற்கு அடிக்கடி ஆண்கள் வந்து செல்வதாக பாகலூர் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து பாகலூர் போலீசார் நேற்று முன்தினம் அந்த வீட்டில் அதிரடியாக சோதனை நடத்தினார்கள்.
அதில் வீட்டில் வெளி மாநில இளம்பெண்கள் இருந்தது தெரிய வந்தது. விசாரணையில் அந்த இளம்பெண்களை வைத்து விபசார தொழில் நடத்தி வந்தது தெரியவந்தது.
இதையடுத்து அந்த இளம்பெண்களை மீட்ட போலீசார், அவர்களை விபசாரத்தில் ஈடுபடுத்திய பெண் புரோக்கர் சூளகிரி தாலுகா பேரிகை அருகே உள்ள நரிபுரத்தைச சேர்ந்த நஞ்சப்பா என்பவரின் மனைவி மஞ்சுளா (38), கர்நாடக மாநிலம் மாலூர் அருகே உள்ள வாலாவை சேர்ந்த முனிராஜ் (45) ஆகிய 2 பேரையும் போலீசார் கைது செய்தனர்.






