என் மலர்
உள்ளூர் செய்திகள்

கிருஷ்ணகிரியில் இடி-மின்னலுடன் கன மழை: குடியிருப்புகளுக்குள் தண்ணீர் புகுந்தது
- கிருஷ்ணகிரியில் இடி-மின்னலுடன் கனமழை பெய்ந்தது.
- அஞ்செட்டியில் 4.மி.மீ பதிவு
கிருஷ்ணகிரி மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் நேற்று காலை வெயில் அடித்தது. மாலை வானம் மேகமூட்டமாக காணப்பட்டது. மாலை 6.30 மணி அளவில் இடி-மின்னலுடன் பலத்த மழை பெய்தது.
ஜக்கப்பன் நகர் 8-வது கிராஸ் ராஜகாளியம்மள் கோவில் அருகில் தாழ்வான குடியிருப்பு பகுதிகளுக்குள் மழை நீர் புகுந்தது. மேலும் கடைகளுக்கு சென்ற பொது மக்கள் வீடுகளுக்கு திரும்ப முடியாமல் அவதிக்குள்ளானார்கள். இரு சக்கர வாகன ஓட்டிகளும் செல்ல முடியாமல் சிரமத்திற்கு உள்ளானார்கள். பெங்களூரு சாலையில் 5 ரோடு சந்திக்கும் பகுதியில் மழை நீர் குளம் போல தேங்கியது. இந்த மழையால் இரவில் குளிர்ந்த காற்று வீசியது.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் மொத்தம் 63.7 மி.மீ அளவு பதிவாகி உள்ளது. இதில் அதிகபட்சமாக கிருஷ்ணகிரியில் 28.3 மில்லிமீட்டர் மழை பதிவாகி உள்ளது. மாவட்டத்தில் பெய்த மழை அளவு மி.மீ. வருமாறு: அஞ்செட்டி-4.0 மி.மீ, கிருஷ்ணகிரி-28.3, ராயக்கோட்டை-27, கே.ஆர்.பி அணை-4.4






