என் மலர்
உள்ளூர் செய்திகள்

கருத்தரங்கை கலெக்டர் சரயு தொடங்கி வைத்து பேசிய போது எடுத்த படம்.
பருவநிலை மாற்றம் குறித்து மாவட்ட அளவிலான கருத்தரங்கு
- கிருஷ்ணகிரியில் பருவமழை மாற்றம் குறித்து கருத்தரங்கை கலெக்டர் தொடங்கி வைத்தார்.
- 25 லட்சம் மரக்கன்றுகள் நடப்பட்டுள்ளது,
கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில், தமிழ்நாடு காலநிலை மாற்ற இயக்கம் சார்பாக, காலநிலை மாற்றத்தில் பருவநிலை மாற்றம் குறித்து நடைபெற்ற மாவட்ட அளவிலான கருத்தரங்கை கலெக்டர் சரயு தொடங்கி வைத்தார்.
இதில், கால நிலை மாற்றம் இயக்கம் சார்பாக தமிழ்நாடு ஈரநிலை இயக்க உதவி இயக்குனர் மணிஷ்மீனா பங்கேற்று, காலநிலை மாற்றத்தினால் ஏற்படும் மாற்றம் தொ டர்பான கருத்துக்கள் குறித்து உரையாற்றினார். பூவுலகின் நண்பர்கள் வெற்றிச்செல்வன், அருண்குமார், கிருஷ்ணகிரி தோட்டக்கலைத்துறை உதவி இயக்குநர் சிவக்குமார் ஆகியோர் காலநிலை மாற்றம் குறித்தும், அதனால் ஏற்படும் பாதிப்புகள் மற்றும் காலநிலை மாற்றத்தை எதிர்கொள்ள மேறகொள்ள வேண்டிய நடவடிக்கைகளையும் தெரிவித்து, பயிரிடப்பட வேண்டிய மாற்றுப்பயிர் வகைள் குறித்தும் விளக்கப்படங்கள் மூலம் தெளிவாக விவரித்தனர்.
இதில் தமிழ்நாடு ஈரநிலை இயக்கம் உதவி இயக்குநர்கள் மணிஷ்மீனா, யோகேஷ்குமார் ஆகியோர், தமிழ்நாடு அளவில் ஏற்பட்டு வரும் காலநிலை மாற்றங்கள் குறித்து விவரித்து, அதனை கையாள மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகளை விளக்கினர். பின்னர் கிருஷ்ணகிரி சமூகக்காடுகள் கோட்ட அலுவலர் சக்தி வேல், கிருஷ்ணகிரி மாவட்டத்தில் காலநிலை மாற்றம் ஏற்படுத்துவற்கான காரணம் குறித்தும், அதனை எதிர்கொள்ள துறை மூலம் நடவு செய்யப்படவுள்ள மரக்கன்றுகள் குறித்தும் விளக்கினார்.
தொடர்ந்து, 2022-23ம் ஆண்டு பசுமை சாதனையாளர் விருதுகள் பெற்ற அறம் விதை அறக்கட்டளை நிர்வாகி அருண், வனத்துறையுடன் இணைந்த பசுமை போர்வையை அதிகரித்து, பருவநிலை மாற்றத்தை கட்டுப்படுத்தப்படும் நடவடிக்கைகள் குறித்தும், காவேரிப்பட்டணம் அரசு மேல்நிலைப்பள்ளி முதுநிலை ஆசிரியர் அனிதா, பருவ நிலை மாற்றத்தை கட்டுப்படுத்த பள்ளிகளில், மாணவர்கள் உதவியுடன் மேற்கொள்ளப்பட்டு வரும் நடவடிக்கைகள் குறித்தும், மாணவர்களை கொண்டு ஏற்படுத்தப்பட்டு வரும் விழிப்புணர்வு குறித்தும் விளக்கினார்.
பின்னர், 2022-23ம் ஆண்டு பசுமை சாதனையாளர் விருதுகள் பெற்ற பிரசன்ன வெங்கடேஷ், அனைத்து துறை அலுவலர்கள், தன்னார்வலர்கள் மற்றும் தொழில் நிறுவனத்தினர்களுடன் கலந்துரையாடி, அனைத்து பருவநிலை மாற்றத்தை கையாள மேற்கொள்ளப்பட்டு வரும் நடவடிக்கைகள் குறித்து கலந்துரையாடி கருத்துகளை எடுத்துரைத்தனர்.
கருத்தரங்கில் பசுமை தமிழ்நாடு இயக்கம் சார்பாக, மாவட்ட அளவிலான பசுமைக்குழு கிருஷ்ணகிரி மாவட்டத்தில் அமைக்கப்பட்டு, மாவட்ட கலெக்டர் தலைவராகவும், வன உயிரின காப்பாளர், உறுப்பினர் செயலாளராகவும் கொண்டு, கடந்த 2022ம் ஆண்டு அனைத்து துறை அலுவலர்களுடன் கூட்டம் நடத்தப்பட்டு,
2022-23ம் ஆண்டில் 25 லட்சம் மரக்கன்றுகள் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் நடவு செய்ய திட்டமிடப்பட்டு, மரக்கன்றுகள் நடவு செய்யும் பணி நடைபெற்று வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
முடிவில், மாவட்ட வனஉயிரின காப்பாளர் கார்த்தி கேயனி, பிளாஸ்டிக்கை தவிர்த்து பசுமை போர்வையை ஏற்படுத்த கருத்துரையாற்றினார். இந்த கருத்தரங்கில் அனைத்து துறை அலுவலர்கள், தொண்டு நிறுவன பிரதிநிதிகள், தன்னார்வலர்கள், வனத்துறை அலுவலர்கள் கலந்துகொண்டனர்






