என் மலர்tooltip icon

    கிருஷ்ணகிரி

    • கிருஷ்ணகிரியில் 11.329 பேருக்கு ரூ.20.11 கோடியில் மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டது.
    • முதல் அமைச்சரின் வரிவான மருத்துவ காப்பீட்டில் வழங்கப்பட்டது.

    முதல்-அமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீடு, பிரதம மந்திரி ஜன ஆரோக்கிய யோஜன திட்டத்தின் கீழ் 11 ஆயிரத்து 329 பயனாளிகளுக்கு ரூ.20 கோடியே 11 லட்சத்தில் மருத்துவ சிகிச்சைக்காக வழங்கப்பட்டுள்ளதாக கலெக்டர் கூறினார்.

    நிறைவு விழா

    கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில், முதல்-அமைச்சரின் மருத்துவக் காப்பீடு மற்றும் பிரதம மந்திரி ஜன ஆரோக்கிய யோஜனா திட்டத்தின், 5-ம் ஆண்டு நிறைவு விழா நடந்தது. மாவட்ட கலெக்டர் சரயு தலைமை தாங்கி காப்பீட்டுத் திட்டத்தில் பயனடைந்த பயனாளிகளுக்கு பரிசுகள், சிறப்பாக செயல்பட்ட அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகள், அலுவலர்களுக்கு பாராட்டு சான்றிதழ்களை வழங்கி பேசியதாவது:

    ரூ.20.11 கோடியில் மருத்துவ சிகிச்சைகள்

    கிருஷ்ணகிரி மாவட்டத்தில் முதல் அமைச்சரின் மருத்துவ காப்பீட்டுத் திட்டம் மற்றும் பிரதம மந்திரி மக்கள் ஆரோக்கியத் திட்டத்தின் மூலம், 11,329 பயனாளிகளுக்கு, 20.11 கோடி ரூபாய் மருத்துவ சிகிச்சைக்காக வழங்கப்பட்டுள்ளது. மேலும், 3 லட்சத்து 78 ஆயிரத்து 741 குடும்பங்கள், பதிவு செய்யப்பட்டு காப்பீட்டு அட்டைகள் வழங்கப்பட்டுள்ளன.

    காப்பீட்டுத் திட்ட அட்டை தேவைப்படுவோர் ரேஷன், ஆதார் அட்டை மற்றும் கிராம நிர்வாக அலுவலரிடம் பெறப்பட்ட ஆண்டு வருமானச் சான்று உள்ளிட்ட ஆவணங்களுடன் மாவட்ட கலெக்டர் அலுவலக, அறை எண்.32 -ல் செயல்படும் மையத்தை அணுகி இணையத்தில் பதிவு செய்யலாம். இவ்வாறு அவர் பேசினார்.

    பாராட்டு சான்றிதழ்கள்

    தொடர்ந்து, பிரதம மந்திரி ஜன ஆரோக்கிய யோஜனா மற்றும் மருத்துவக் காப்பீட்டு திட்டத்தில் பயனடைந்த, 5 பயனாளிகளுக்கு நினைவு பரிசுகளும், சிறப்பாக செயல்பட்ட தேன்கனிக்கோட்டை, போச்சம்பள்ளி அரசு மருத்துவமனை, உமாராணி, செயின்ட் பீட்டர்ஸ் மருத்துவக் கல்லூரி ஆகிய தனியார் மருத்துவமனை, 5 வார்டு மேலாளர்கள், 5 தொடர்பு அலுவலர்களுக்கு பாராட்டுச் சான்றிதழ்கள் வழங்கினார்.மேலும் பிரதம மந்திரி மருத்துவக் காப்பீட்டு திட்டத்தில் புதிதாக சேர்க்கப்பட்ட,10 பேருக்கு அடையாள அட்டைகளை வழங்கினார்.

    இதில் நலப்பணிகள் இணை இயக்குனர் பரமசிவம், மாவட்ட காப்பீட்டுத் திட்ட அலுவலர்கள் இளந்தரியன், சையத்அலி, மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

    • சரக அளவிலான தடகள போட்டியில் மத்தூர் குணா மெட்ரிக் பள்ளி மாணவர்கள் சாதனை படைத்துள்ளனர்.
    • வெற்றி மாணவர்களை அனைவரும் பாராட்டினர்

    சரக அளவில் நடைபெற்ற விளையாட்டு போட்டிகளில் மத்தூர் குணா மெட்ரிக் மேல் நிலைப் பள்ளி மாணவ மாணவிகள் கலந்த கொண்டு பதக்கங்களை வென்று சாதனை படைத் துள்ளனர்.

    இதில் மாணவர்க ளுக்கான கால் பந்து போட்டியில் U14 மற்றும் U17 இரண்டு அணிகளும், மாணவர்கள் பந்து வீச்சு போட்டியில் U17 மற்றும் U19 இரு அணிகளும் சரக அளவில் முதலிடமும், U19 மாண விகள் இரண்ட்டா மிடமும் பிடித்தனர்.

    மாணவிகளுக்கான கூடைப்பந்து போட்டியில் U14 மற்றும் U17 வயதுக்கு உட்பட்டவர்களுக்கான போட்டியில் இரண்டாம் இடம் பிடித்துள்ளனர்.

    மாணவிகளுக்கான கோ -கோ போட்டியில் U14 அணிஇரண்டாம் இடம்பிடித்தனர். சரக அளவிலான தடகளப் போட்டியில் தங்கம் வெள்ளி வெண்கலம் என 17 பதக்கங்களை மாணவ மாணவிகள் பெற்று சாதனை படைத்துள்ளனர். வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு பள்ளியின் தாளாளர் குண. வசந்தரசு சான்றிதழ்களையும் பதக்கங்களையும் வழங்கி கௌரவித்தார்.

    உடன் பள்ளியின் முதல்வர் இரவிந்திரன், உடற்கல்வி ஆசிரியர் செந்த மிழ் மற்றும் இருபால் ஆசிரி யர் பெருமக்கள் கலந்து கொண்டு வெற்றி பெற்ற மாணவ மாணவி களை வாழ்த்தினர்.

    • கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பட்டாசு கடைகள் வைக்க விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.
    • 31ந்தேதி வரை விண்ணப்பிக்கலாம்.

    கிருஷ்ணகிரி மாவட்டத்தில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தற்காலிக பட்டாசு கடை வைக்க இணையதளம் மூலம் விண்ணப்பிக்க வருகிற 31-ந் தேதி கடைசி நாளாகும்.

    இது குறித்து கலெக்டர் சரயு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    தீபாவளி பண்டிகை

    கிருஷ்ணகிரி மாவட்டத்தில் வருகிற நவம்பர் மாதம் 12-ந் தேதி தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, தற்காலிக பட்டாசு கடை வைத்து வியாபாரம் செய்ய விரும்புவோர் வெடிபொருள் சட்டம் 1884 மற்றும் வெடிபொருள் விதிகள் 2008-ல் விதி 84-ஐ முறையாக கடைபிடித்து இணையதளத்தின் வாயிலாக எந்தவொரு இ-சேவை, மக்கள் கணினி மையம் மூலம் உரிய ஆவணங்களுடன் வருகிற 31-ந் தேதிக்குள் மாவட்ட வருவாய் அலுவலருக்கு விண்ணப்பிக்க வேண்டும்.

    அதன்படி, சம்பந்தப்பட்ட ஊராட்சி வரி ரசீது. உரிமம் கோரும் இடத்தின் வரைபடம் (2 நகல்கள்). நடப்பு நிதி ஆண்டின் கட்டிட வரி ரசீது. வாடகை கட்டிடமாக இருப்பின் நோட்டரி வழக்கறிஞர் கையொப்பத்துடன் கூடிய ஓராண்டிற்கு குறையாத காலத்திற்கு செய்துகொள்ளப்பட்ட வாடகை ஒப்பந்த பத்திரம் (அசல் மற்றும் 2 நகல்கள்). உரிமம் கட்டணம் ரூ.500 செலுத்தி, அதற்கான அசல் சலான் இணைக்கப்பட வேண்டும். இரண்டு ஸ்டாம் சைஸ் புகைப்படம். ஆதார் அடையாள அட்டை ஆகிய ஆவணங்கள் இருக்க வேண்டும்.

    தகுதிகள்

    மேலும், தற்காலிக பட்டாசு கடைக்கு விண்ணப்பம் செய்வோர், பட்டாசு கடை வைக்கும் கட்டிடம் கல் மற்றும் தார்சு கட்டிடமாக இருக்க வேண்டும். தற்காலிக உரிமம் கோரும் ஒவ்வொரு கடைகளுக்கு இடையே 3 மீட்டர் இடைவெளிவிட்டு இருத்தல் வேண்டும். மேலும், அருகில் குடியிருப்புகள் இருத்தல் கூடாது. எதிர் எதிரே பட்டாசு கடைகள் இருப்பின் உரிமம் வழங்கப்பட மாட்டாது.

    எண்ணெயில் எரியும் விளக்கு, எரிவாயு விளக்கு, மெழுகுவர்த்தி மற்றும் இதர மின்சாரம் இல்லாத விளக்குகள் கடையில் பயன்படுத்தக் கூடாது. மின்சார விளக்குகள் பயன்படுத்தும் போது, மின்சார ஒயர்கள், சுவிட்ச் பெட்டிகள் சுவற்றில் பாதுகாப்புடன் எவ்வித மின்கசிவும் இல்லாமல் பொருத்தப்பட்டிருக்க வேண்டும். உரிமம் பெற்றவர்கள் உரிமத்தின் அனுமதிக்கப்பட்ட அளவுக்கு மேல் பட்டாசு இருப்பு வைத்துக்கொள்ளக் கூடாது.

    தீயணைப்பு கருவிகள்

    அவசர காலத்தில் எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கை குறித்து உரிமதாரரும், அவரது பணியாளர்களும் தெரிந்திருக்க வேண்டும். தணிக்கை அலுவலர் கடையை தணிக்கை செய்து விதிமுறைகளின் படி தெரிவிக்கும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை உரிமம் கோருபவர் மேற்கொள்ள வேண்டும். விபத்துக்கள் ஏதேனும் ஏற்பட்டால் உடனடியாக அருகில் உள்ள காவல் நிலையம், தாசில்தார், தீயணைப்பு அலுவலர் மற்றும் உரிமம் வழங்கிய அலுவலருக்கும் தெரிவிக்க வேண்டும்.

    மேலும், அங்கீகரிக்கப்பட்ட வணிகர்களிடம் மட்டுமே பட்டாசு இனங்கள் வாங்கி விற்பனை செய்தல் வேண்டும். உரிமம் பெற்ற இடத்தில் 2 தீயணைப்புக் கருவிகள், 2 தண்ணீர் வாளிகள், 2 மணல் நிரப்பப்பட்ட வாளியும் எப்போதும் தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும். அல்லது தேவைக்கு ஏற்ப கூடுதலாகவும் முன்னேற்பாடுகள் செய்திருக்க வேண்டும். பட்டாசுகளை ஏற்கனவே அனுபவம் பெற்றவர்களே கையாள வேண்டும்.

    குற்றவியல் நடவடிக்கை

    பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் கடை அருகில் வாகனங்களை நிறுத்தவோ அல்லது சுற்றுப்புறத்தின் சூழலை கெடுக்கும் வகையிலோ வியாபார் செய்யக்கூடாது. உரிமத்தை, தணிக்கை அலுவர்களின் தணிக்கையின் போது பார்வையில் படும்படி வைக்க வேண்டும். இருப்பு பதிவேடு மற்றும் தணிக்கை பதிவேடுகள் முறையாக பராமரிக்க வேண்டும்.

    மேற்கண்ட விதிமுறைகள் கண்டிப்பாக கடைபிடிக்க வேண்டும். தவறும் உரிமைதாரரின் உரிமத்தை ரத்து செய்வதுடன், அவரின் பேரில் குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • மத்தூர் அருகே மோட்டர் சைக்கிள் மோதி பேக்கரி மாஸ்டர் பலியானார்.
    • போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றர்.

    கிருஷ்ணகிரி மாவட்டம் மத்தூர் கொத்தகோட்டை கிராமத்தைச் சேர்ந்தவர் சீனிவாசன். இவரது மகன் கோவிந்தன் (வயது30). இவர் பேக்கரி கடையில் மாஸ்டாராக பணியாற்றி வந்தார். இவருக்கு இன்னும் திருமணமாகவில்லை.

    இந்த நிலையில் நேற்று மதியம் ஹாலோ பிரிக்ஸ் கற்களை வாங்குவதற்காக அதே பகுதியில் உள்ள சமத்துவபுரத்திற்கு வந்தார். அப்போது அவர் அந்த பகுதியில் நடந்து வந்தபோது எதிரே வந்த மோட்டார் சைக்கிள் அவர் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட அவர் படுகாயமடைந்தார். உடனே அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக மத்தூர் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக தருமபுரி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு நேற்று இரவு அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து மத்தூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • கிருஷ்ணகிரியில் கர்நாடக அரசு பஸ்சை மறித்து நாம் தமிழ் கட்சியினர் ஆர்பட்டத்தில் ஈடுபட்டனர்.
    • தண்ணீர் தர மறுத்து கன்னட அமைப்புகள் பந்த் நடத்தியது.

    கிருஷ்ணகிரி புதிய பஸ் நிலையம் அருகில் உள்ள அண்ணா சிலை எதிரில் நாம் தமிழர் கட்சி சார்பில் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. மாவட்ட தலைவர் கரு. பிரபாகரன் தலைமை தாங்கினார். அப்போது காவிரியில் தண்ணீர் திறக்க மறுக்கும் கர்நாடக அரசு, கன்னட அமைப்புகளை கண்டித்து நாம் தமிழர் கட்சியினர் கோஷங்கள் எழுப்பினார்கள்.

    அப்போது கிருஷ்ணகிரி பஸ் நிலையம் வழியாக சென்ற கர்நாடகா அரசு பஸ்சை திடீரென அக்கட்சியினர் மறித்து, சாலையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். காவிரியில் தண்ணீர் திறக்க நடவடிக்கை எடுக்காத தமிழக அரசை கண்டித்தும், தண்ணீர் விட மறுக்கும் கர்நாடக அரசை கண்டித்தும் கோஷங்கள் எழுப்பினர். அப்போது பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் உடனடியாக அவர்களை அப்புறப்படுத்தினார்கள்.

    தொடர்ந்து அங்கிருந்து சாலையில் ஊர்வலமாக நடந்து சென்ற அக்கட்சியினர், கிருஷ்ணகிரி பி.எஸ்.என்.எல்., அலுவலகம் முன் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களிடம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி அப்புறப்படுத்தினார்கள். இதனால் கிருஷ்ணகிரி புதிய பஸ் நிலையம் செல்லும் சாலையில், சுமார் அரை மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

    • மத்தூரில் ஸ்ரீதேவி,பூதேவி சமதே ஸ்ரீனிவாசப் பெருமாள் கோவிலில் திருக்கல்யாணம் நடைபெற்றது.
    • காலை முதல் மாலை வரை பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

    கிருஷ்ணகிரி மாவட்டம் மத்தூரில் இரண்டாம் சனிக்கிழமையொட்டி ஸ்ரீனிவாசா பெருமானுக்கும், ஸ்ரீதேவி, பூதேவி அம்மையாருக்கும் திருக்கல்யாணம் நடை பெற்றது.

    முன்னதாக பெருமாளுக்கு கோ பூஜையுடன் சிறப்பு அபிஷேக ஆராதனையுடன் கோவில் வளாகத்தில் திருவிளக்கேற்றுதல், படி கொடுத்தல் உள்ளிட்ட சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. அதனை தொடர்ந்து ஊர் முக்கியஸ்த்தர்களுக்கு புரோகிதர்களால் முதல் மரியாதை செலுத்தியும், மேள தாளங்களுடன் பெருமாள் கோவிலில் இருந்து பெண்கள் சீர்வரிசையுடன் ஊர்வலமாக ஸ்ரீ சோமேஸ்வர் ஆலயத்திற்கு சென்று அங்கு அம்மையப்பரை சிறப்பு பூஜைகளுடன் கொண்டு வரப்பட்டன. இத்திருக்கல்யாண விழாவில் தம்பதியினருக்கு மாங்கள்ய பூஜையும் நடைபெற்றன.

    திருக்கல்யாண திருமணத்தில் பெண் வீட்டார், மாப்பிள்ளை வீட்டார் என இந்துக்கள் முறைப்படி புரோகிதர்களால் வெற்றிலை தாம்பூலம் மாற்றிக் கொல்லும் நிகழ்ச்சியும் நடைபெற்றன.

    ஸ்ரீனி வாச பெருமாளுக்கும், ஸ்ரீதேவி, பூதேவி தயாரின் திருக்கல்யாண நிறைவுடன் பக்தர்களல் மொய் வழங்கப்பட்டது.

    இதனை தொடர்ந்து காலை முதல் மாலை வரை பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. அதளையடுத்து ஸ்ரீனிவாச பெருள், ஸ்ரீதேவி, பூதேவி வீதி உலா நடைபெற்றன. இதற்கான ஏற்பாடுகளை ஊர் பொதுமக்கள், ஊர் தலைவர் ஊர் பெரியதானக்காரர்கள் உள்ளிட்டோர் செய்திருந்தனர்.

    • அரசு பள்ளியில் பகுதி நேர ஓவிய ஆசிரியராக பணிபுரிந்து வந்தார்.
    • நீண்ட நாட்களாக குடிப்பழக்கம் இருந்து வந்துள்ளது.

    கிருஷ்ணகிரி, 

    கிருஷ்ணகிரி மாவட்டம் ராயக்கோட்டை ரஹ்மத் காலனியைச் சேர்ந்த மணிகண்டன் (வயது41). இவர் சூலகுண்டா பகுதியில் உள்ள அரசு நடுநிலைப் பள்ளியில் பகுதி நேர ஓவிய ஆசிரியராக பணிபுரிந்து வந்தார் இவருக்கு நீண்ட நாட்களாக குடிப்பழக்கம் இருந்து வந்துள்ளது. இதனால் அதிக அளவில் கடன் ஏற்பட்டுள்ளது.

    இதனால் மன வேதனை அடைந்த மணிகண்டன் கடந்த 28 ந்தேதி வீட்டில் தூக்கு போட்டுக் கொண்டார். இதனை அறிந்த அவரது உறவினர்கள் உடனடியாக அவரை மீட்டு ராயக்கோட்டை அரசு மருத்துவமனைகள் சிகிச்சைக்காக கொண்டு சேர்த்தனர்.

    பின்னர் மேல் சிகிச்சைக்காக அரசு மருத்துவமனையில் கொண்டு சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனளிக்காமல் நேற்று இறந்தார். இதுகுறித்து அவரது மனைவி பானுப்பிரியா கொடுத்த புகாரின் பேரில் ராயக்கோட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    • எம்.ஜி.ஆர் கல்லூரி முதல்வர் முத்துமணி தலைமை தாங்கி கருத்தரங்கை தொடங்கி வைத்தார்.
    • பல்வேறு கல்லூரி மாணவர்கள் 342 பேர் கலந்து கொண்டனர்.

    ஓசூர்,  

    ஓசூர் எம்.ஜி.ஆர் கல்லூரி கணினி பயன்பாட்டுவியல் துறை சார்பில், 'வைஃப் 5" என்ற கருத்தரங்கு 2 நாட்கள் நடைபெற்றது.

    நிகழ்ச்சிக்கு, எம்.ஜி.ஆர் கல்லூரி முதல்வர் முத்துமணி தலைமை தாங்கி கருத்தரங்கை தொடங்கி வைத்தார். மேலும், " நாட்டின் வளர்ச்சி என்பது தொழில்நுட்பத்தைச் சார்ந்துதான் இருக்கின்றன.  மக்களின் வாழ்வியலில் அறிவியல் சார்ந்த பொருட்கள் அதிக பயன்பாட்டில் இருந்து வருகின்றன. மாணவர்கள் தொழில்நுட்ப கருவிகளைச் சரியான முறையில் பயன் படுத்த வேண்டும் என்று அவர் அறிவுறுத்தினார்.

    முன்னதாக, கணினி பயன்பாட்டியல் துறைத் தலைவர் சிவராமன் வரவேற்றார். இதில், முத்துராம் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு. தொழில் நுட்பத்தின் மையநோக்க மான மாணவர்களின் புத்திக்கூர்மை, தனித் தன்மை, படைப்பாற்றல் போன்றவை இன்றைய மென்பொருள் துறையின் போக்குக் குறித்தும் பேசினார்.

    மேலும், இன்றைய வளர்ச்சிக்காலத்தில் சாட் ஜி.பி.டி.யின் அவசியம் குறித்தும், ஒவ்வாரு மாண வர்களும் தொழில்நுட்ப வளர்ச்சி ஓட்டத்தில் பின்பற்றி ஓட வேண்டும் என்றும் அறிவுறுத்தினார். மாணவர்களின் செயல்திறனை உலக அரங்கில் கொண்டு செல்ல வும் அவர்களின் திறமை களை வெளிக்கொணரவும் ஒரு முத்தாய்ப்பாக, தனியார் தொலைகாட்சி "கலக்க போவது யாரு" புகழ் பாலா கலந்து கொண்டு, " மாணவர்கள் தங்கள் வாழ்க்கையை அடுத்தக்கட்ட நிலைக்கு எவ்வாறு கொண்டு செல்ல வேண்டும்? எதிர்த்து வரும் போராட் டங்களைச் சமாளிப்பது எப்படி? மாணவர்கள் அனைவரும் சகிப்புத் தன்மையை உருவாக்கிக் கொள்ள வேண்டும் என்று இயல்பாக நகைச்சுவையுடன் பேசினார்.

    கருத்தரங்கின் ஒரு பகுதியாக, தமிழ்நாடு மட்டு மின்றி கர்நாடகா, ஆந்திரா ஆகிய மாநிலங்களைச் சார்ந்த பல்வேறு கல்லூரி மாணவர்கள் 342 பேர் கலந்து கொண்டனர். மேலும் மாணவர்களுக்கான குறும்படம், நடனம், தப்மாஸ், புகைப்படம் போன்ற போட்டிகள் நடைபெற்றன. இவற்றில் வெற்றிப் பெற்றவர்களுக்குப் பரிசும், சான்றிதழும் வழங்கப்பட்டன.

    கருத்தரங்க ஏற்பாடு களை கணினி பயன்பாட்டி யல் துறை பேராசிரியர்களும், மாணவர்களும் ஏற்பாடு செய்திருந்தனர்.

    • மேயர் எஸ்.ஏ.சத்யா, மாநகராட்சி அதிகாரிகளுடன் நேரில் சென்று கள ஆய்வு மேற்கொண்டார்.
    • குடியிருப்பு மக்களின் குறைகளையும் கேட்டறிந்தார்.

    ஓசூர், 

    ஓசூர் மாநகராட்சி 41-வது வார்டிற்குட்பட்ட பகுதி-10 ஹட்கோ பகுதியில் மாநகராட்சி பொது நிதியிலிருந்து ரூ. 117 லட்சம் மதிப்பீட்டில் நடைபெற்று வரும் வளர்ச்சிப்பணிகளை மாநகராட்சி மேயர் எஸ்.ஏ.சத்யா, மாநகராட்சி அதிகாரிகளுடன் நேரில் சென்று கள ஆய்வு மேற்கொண்டார்.

    அப்பகுதியில் அமைக்கப்பட்டுள்ள சாலை தரம், அதன் உயரம், அகலம் குறித்தும் மக்களுக்கு தேவையான கழிவு நீர் கால்வாய், தெரு விளக்குகள், சாலை வசதிகள், குடிநீர் வசதிகள் சரியான முறையில் செய்து கொடுக்கப்படு கிறதா? எனவும் கேட்ட றிந்தார்.

    பின்னர் குடியிருப்பு மக்களின் குறைகளையும் கேட்டறிந்தார். இந்நிகழ்வில், துணை மேயர் ஆனந்தய்யா மற்றும் குபேரன் உள்ளிட்ட மாநகராட்சி கவுன்சிலர்கள், கட்சியினர் உடன் இருந்தனர்.

    • பரந்தாமனுக்கும், சம்பத்திற்கும் நிலம் தொடர்பாக பிரச்சினை உள்ளது.
    • பரந்தாமன் சிகிச்சை பலன் அளிக்காமல் இறந்து விட்டார்.

    காவேரிப்பட்டணம்,  

    கிருஷ்ணகிரி மாவட்டம் பனகமுட்லு அருகே உள்ள பில்லகொட்டாய் கிராமத்தை சேர்ந்தவர் பரந்தாமன் (வயது 60). விவசாயி. இவரது மகன் வினோத் (27). அதே பகுதியை சேர்ந்தவர் சம்பத் என்கிற சம்பத்குமார் (37). முன்னாள் ராணுவ வீரர். இவரது சகோதரர் சின்னசாமி (34). ரேஷன் கடை விற்பனையாளர். பரந்தாமனுக்கும், சம்பத்திற்கும் நிலம் தொடர்பாக பிரச்சினை உள்ளது. இதன் காரண மாக அவர்களுக்குள் முன்வி ரோதம் இருந்து வந்தது.

    இந்த நிலையில் கடந்த 23-ந் தேதி காலை 8.30 மணி அருகில் பில்லக்கொட்டாய் கிராம மக்கள் இரு தரப்பினரிடமும் சமரச பேச்சு வார்த்தை நடத்தி னார்கள். அந்த நேரம் அவர்களுக்குள் கை கலப்பு ஏற்பட்டது.

    இதில் சம்பத்குமார் மற்றும் அவரது சகோதரர் சின்னசாமி ஆகியோர் சேர்ந்து பரந்தாமனை கல்லால் தாக்கினார்கள். இதில் அவருக்கு தலையில் பின்பகுதியில் பலத்த காயம் ஏற்பட்டது. அவரை அருகில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக கிருஷ்ணகிரி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.

    இது தொடர்பாக காவேரிப்பட்டணம் போலீஸ் இன்ஸ்பெக்டர் பாலாஜி ரமணன் விசார ணை நடத்தி, சம்பத், அவரது சகோதரர் சின்னசாமி ஆகிய 2 பேர் மீதும், ஆபாசமாக பேசுதல், தாக்குதல் கொலை மிரட்டல் விடுத்தல், கொலை முயற்சி ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர். மேலும் சம்பத்தை கைது செய்தனர்.

    இந்த நிலையில் கிருஷ்ணகிரி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த பரந்தாமன் கடந்த 28-ந் தேதி சிகிச்சை பலன் அளிக்காமல் இறந்து விட்டார். இதையடுத்து இந்த வழக்கை கொலை வழக்காக காவேரிப்பட்டணம் போலீசார் மாற்றி உள்ளனர். மேலும் சின்னசாமியை தேடி வருகிறார்கள்.

    • சாலையில் தினமும் ஆயிரக்கணக்கான மக்கள் வந்து செல்கின்றனர்.
    • நடைபாதை சாலையை ஆக்கிரமிப்பு செய்து கடை களை வைத்துள்ளனர்.

    காவேரிப்பட்டணம்,

    கிருஷ்ணகிரி மாவட்டம், காவேரிப்பட்டணம் நகரத்தில் சாலையோ ரங்களில் உள்ள நடைபா தைகளை கடைக்காரர்கள் ஆக்கிரமித்து தங்கள் கடை பொருட்களை வைத்துள்ள தாலும், சாலை யோரங்க ளில் இரண்டு மற்றும் நான்கு சக்கர வாகனங்களை நிறுத்துவதாலும் பொது மக்கள் சாலையில் நடந்து செல்ல முடியாமல் அவதி பட்டு வருகின்றனர். இதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொது மக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோ ரிக்கை விடுத்துள்ளனர்.

    கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள முக்கிய நகரங்களில் ஒன்றாக காவேரிப்பட்ட ணம் நகரம் திகழ்ந்து வருகிறது. இந்நகரை சுற்றி ஏராளமான கிராமங்கள் உள்ளன. இந்நகரில் ஏராள மான அரசு மற்றும் தனியார் அலுவலகங்கள், மருத்துவமனைகள், வங்கிகள், பள்ளிகள், வணிக நிறுவனங்கள், தொழிற்சாலைகள் என ஏராளமானவை உள்ளன. அவற்றிற்கு தினமும் ஆயிரக்கணக்கான மக்கள் வந்து செல்கின்றனர்.

    காவேரிப்பட்டணம் நகரத்தில் முக்கிய சாலை யாக சேலம் மெயின் ரோடு உள்ளது. இந்த மெயின் ரோட்டில் பூக்கடை, பழக்கடை, பூஜைக்கடை, புத்தகக்கடை, மளிகைக் கடை, பாத்திரக்கடை, செருப்புக்கடை, துணிக்க டை, எலக்ட்ரிக்கல் கடை உள்ளிட்ட ஏராளமான கடைகளை நடத்திவரும் கடைக்காரர்கள் அவர்க ளின் கடைக்கு வெளியே சுமார் 5 அடி தூரத்திற்கு நடைபாதை சாலையை ஆக்கிரமிப்பு செய்து தங்களின் கடைக்கு வெளி யே இருபுறமும் தங்கள் கடை பொருட்களை வைத்துள்ளனர்.

    இதனால் பொதுமக்கள் நடைபாதையில் நடந்து செல்ல முடியாமலும், காலை மற்றும் மாலை நேரங்களில் இரு சக்கர வாகனங்களில் செல்ல முடியாமலும்,மேலும் அக்கடைகளுக்கு வருவோர் தங்கள் இரண்டு மற்றும் நான்கு சக்கர வாகனங்களை சாலையில் நிறுத்துவதால் கடும் போக்குவரத்து நெரிசல் மற்றும் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது.

    மேலும் காவேரிப்பட்டணம் நகரின் முக்கிய பகுதியாக சக்தி விநாயகர் கோவில் நான்கு ரோடு சந்திப்பு உள்ளது. இச்சந்திப்பிலிருந்து தான் சேலம் நெடுஞ்சாலை மற்றும் பேருந்து நிலையம் ஆகியவற்றிற்கு பொது மக்கள் செல்ல வேண்டும். இச்சந்திப்பில் கடை வைத்திருப்பவர்கள் நடை பாதை மற்றும் சாலையை ஆக்கிரமித்து கடை வைத்துள்ளனர். இதனால் இரண்டு மற்றும் நான்கு சக்கர வாகனங்களை சாலையில் நிறுத்தி விட்டு செல்வதால் அங்கு மிகுந்த போக்குவரத்து நெருக்கடி ஏற்படுகிறது.

    இது குறித்து பொதுமக்கள் கூறும்போது:-

    பணகல் தெரு மற்றும் அகரம் சாலை ஒரு வழி பாதையாக இருக்கிறது. ஆனால் நெடுஞ்சாலை துறையால் முறையான அறிவிப்பு பலகை இல்லாத தால் இந்த சாலைகளில் வாகனங்கள் வருவதும் போதுமாக உள்ள கார ணத்தினால் போக்குவரத்து கடும் நெரிசல் ஏற்படுகிறது. இது குறித்து பலமுறை புகார் தெரிவித்தும், நெடுஞ்சாலைத் துறையினர் கண்டு கொள்வதில்லை. எனவே வரும் பண்டிகை காலங்களுக்குள் ஒருவழி பாதை அறிவிப்பு பலகை வைக்க வேண்டும்.

    மேலும் இது குறித்து போலீசார் மற்றும் பேரூ ராட்சி நிர்வாகம் தக்க நடவடிக்கை எடுத்து போக்குவரத்து நெருக்கடிக்கு தீர்வு ஏற்படுத்தி பொதுமக்களின் சிரமத்தினை போக்கிட வேண்டுமென பொதுமக்கள் தெரிவித்தனர்.

    • கன்னட சங்கங்கள், கட்சிகள் இதற்கு ஆதரவு அளிக்கவில்லை.
    • கிருஷ்ணகிரி போலீசார் சுங்கச்சாவடி அருகில் இருபுறமும் பாதுகாப்பு பணி களை மேற்கொண்டனர்.

    கிருஷ்ணகிரி, 

    சுப்ரீம் கோர்ட்டு உத்தர வுப்படி கர்நாடக அரசு தமிழகத்திற்கு காவிரி நீரை திறந்துள்ளது. இதை கண்டித்து கர்நாடகாவில் விவசாய சங்கங்கள், கன்னட அமைப்புகள் சார்பில் போராட்டங்கள் நடந்து வருகின்றன. கடந்த 26&ந் தேதி பெங்களூருவில் முழு அடைப்பு நடந்த நிலையில், கன்னட சங்கங்கள், கட்சிகள் இதற்கு ஆதரவு அளிக்கவில்லை.

    அதே நேரத்தில் நேற்று பா.ஜனதா, மத சார்பற்ற ஜனதா தளம் மற்றும் கன்னட அமைப்புகள் சார்பில் கர்நாடகாவில் முழு அடைப்பு போராட்டம் நடந்தது. இதனால் பெங்க ளூரு செல்லும் தமிழக அரசு பஸ்கள் நேற்று முன்தினம் இரவுடன் ஓசூரில் நிறுத்தப்பட்டன. நேற்று பெங்களூருவுக்கு பஸ்கள் இயக்கப்படவில்லை.

    மாநில எல்லையுடன் நிறுத்தப்பட்டன. தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து சரக்கு லாரிகள் ஓசூர் வழியாக பெங்களூரு மற்றும் கர்நாடக மாநிலத்தின் பிற பகுதிகளுக்கும், வட மாநிலங்களுக்கும் செல்கின்றன. நாள்தோறும் ஆயிரக்கணக்கான வாக னங்கள் இவ்வாறு சென்று வருகின்றன. நேற்று கர்நாடகாவில் முழு அடைப்பு காரணமாக லாரிகள் தமிழக எல்லை வழியாக கர்நாடகா செல்ல அனுமதிக்கப்படவில்லை.

    கிருஷ்ணகிரியிலேயே பெரும்பாலான லாரிகள் நிறுத்தப்பட்டன. சாலை யோரம் லாரிகளை நிறுத்திய டிரைவர்கள் இங்கேயே இருந்தனர். மாலைக்கு மேல் லாரிகளை இயக்கினார்கள். இதன் காரணமாக கிருஷ்ண கிரியில் ஓசூர் செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் இரு புறமும் நூற்றுக்க ணக்கான சரக்கு லாரிகள் நிறுத்தப்பட்டி ருந்தன. மேலும் கிருஷ்ணகிரி போலீசாரும், சுங்கச்சாவடி அருகில் இருபுறமும் பாதுகாப்பு பணிகளை மேற்கொண்டனர்.

    ×