search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கிருஷ்ணகிரியில் தீக்காயமடைந்த இளம்பெண் சிகிச்சை பலனின்றி சாவு
    X

    கிருஷ்ணகிரியில் தீக்காயமடைந்த இளம்பெண் சிகிச்சை பலனின்றி சாவு

    • தீக்காயமடைந்த இளம்பெண் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
    • கிருஷ்ணகிரியில் தாலுகா போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை

    கிருஷ்ணகிரி அருகே சிட்கோ தொழிற்சாலை பகுதியைச் சேர்ந்தவர் தீபக். இவரது மனைவி சரஸ்வதி (வயது33). இவர் கடந்த மாதம் 19-ந் தேதி வீட்டில் அடுப்பில் சமையல் செய்து கொண்டிருந்தார்.

    அப்போது அடுப்பின் அருகே பாட்டிலில் இருந்த வெள்ளை மண்எண்ணை தவறி கீழே விழுந்தது. அதில் தீப்பொறி பற்றி திடீரென்று தீப்பிடித்தது. அப்போது அங்கு நின்று கொண்டிருந்த சரஸ்வதியின் சேலையில் தீப்பற்றி அவரது உடல் முழுவதும் தீ பரவி பலத்த காயமடைந்தார்.

    உடனே அவை உறவினர்கள் மீட்டு சிகிச்சைக்காக கிருஷ்ணகிரி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று இரவு பரிதாபமாக அவர் உயிரிழந்தார். இதுகுறித்து தீபக் கிருஷ்ணகிரி தாலுகா போலீஸ் நிலையத்தில் புகார் தெரிவித்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×