என் மலர்
உள்ளூர் செய்திகள்

மத்தூர் அருகே பரிதாபம் மோட்டார் சைக்கிள் மோதி பேக்கரி மாஸ்டர் சாவு
- மத்தூர் அருகே மோட்டர் சைக்கிள் மோதி பேக்கரி மாஸ்டர் பலியானார்.
- போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றர்.
கிருஷ்ணகிரி மாவட்டம் மத்தூர் கொத்தகோட்டை கிராமத்தைச் சேர்ந்தவர் சீனிவாசன். இவரது மகன் கோவிந்தன் (வயது30). இவர் பேக்கரி கடையில் மாஸ்டாராக பணியாற்றி வந்தார். இவருக்கு இன்னும் திருமணமாகவில்லை.
இந்த நிலையில் நேற்று மதியம் ஹாலோ பிரிக்ஸ் கற்களை வாங்குவதற்காக அதே பகுதியில் உள்ள சமத்துவபுரத்திற்கு வந்தார். அப்போது அவர் அந்த பகுதியில் நடந்து வந்தபோது எதிரே வந்த மோட்டார் சைக்கிள் அவர் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட அவர் படுகாயமடைந்தார். உடனே அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக மத்தூர் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக தருமபுரி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு நேற்று இரவு அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து மத்தூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.






