search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ஓசூர் 31-வது வார்டு பகுதிகளில் மேயர் சத்யா திடீர் ஆய்வு
    X

    ஓசூர் 31-வது வார்டு பகுதிகளில் மேயர் சத்யா திடீர் ஆய்வு

    • ஓசூர் வார்டு பகுதிகளில் மேயர் சத்யா ஆய்வு மேற்கொண்டார்
    • ரூ. 3.86 லட்சம் மதிப்பில் பணிகள் நடைபெறுகிறது

    ஓசூர் மாநகராட்சி 31-வது வார்டிற்குட்பட்ட இமாம் பாடா, தாசரப்பேட்டை, ஏழு வீதி தெரு, ராஜு வீதி பகுதியில் மாநகராட்சி பொது நிதியிலிருந்து ரூபாய் 3.86 லட்சம் மதிப்பீட்டில், நடைபெற்று வரும் வளர்ச்சிப் பணிகளை மேயர் எஸ்.ஏ.சத்யா மாநகராட்சி அதிகாரிகளுடன் நேரடியாக சென்று கள ஆய்வு மேற்கொண்டார்.

    மேலும் இந்த பகுதியில் அமைக்கப்பட்டுள்ள சாலை தரம், அதன் உயரம், அகலம் குறித்தும் மக்களுக்கு தேவையான கழிவு நீர் கால்வாய், தெரு விளக்குகள், சாலை வசதிகள், குடிநீர் வசதிகள் சரியான முறையில் செய்து கொடுக்கப்படுகிறதா? எனவும் அவர் கேட்டறிந்தார்.

    பின்னர் பொதுமக்களின், குறைகளையும் கேட்ட றிந்தார். இந்நிகழ்ச்சியில் துணை மேயர் ஆனந்தய்யா, மாமன்ற உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×